Search This Blog

Monday 19 July 2021

டங்கள் குழு = #சாதி அமைப்பு #புரட்சி + #பசப்பல்.

 

''தேர்தல் பாதை திருடர் பாதை''  
_______________________________________________________________________________
 
பா.ம.கட்சி உருவான தினத்தை மய்யாமாக வைத்து கடும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. இதில் பட்டியல் குழு செயல்பாட்டாளர்கள் குறிப்பாக ஆதிதிராவிடர் என்று அறியப்படும் பறையர் குலத்தினர் கடும் விமர்சனத்தை வைத்து வருகிறார்கள். 
 
''பா.ம.க ஏன் துவக்கப்பட்டது என்பது என்பதை புரிந்தால் இந்த விமர்சனம் இருக்காது'' என முடிவுக்கு வரலாம். 
 
வட இந்தியாவில் பொதுவுடமையை நிலைநாட்ட பொதுவுடமை புரட்சிக்கான தாக்கம் கிளம்பி மெல்ல மெல்ல தமிழகத்தில் தாக்கியது. வாக்கு அரசியலில் இருந்த பொதுவுடமை கட்சியினர் திராவிடர் கழகத்தினர் புரட்சிகர கூட்டத்தை கட்டமைத்தனர். தஞ்சை, விழுப்புரம், தருமபுரி, கோவை பகுதிகளில் இந்தக்குழுவினர் பரவலாக பரவியிருந்தனர். இவர்களின் செயல்பாடுகள் மக்களிடன் வெகுவான பாராட்டைப் பெற்றது. புரட்சிகர அமைப்பில் மக்கள் நேரடியாக சேராவிட்டாலும் மானசீகமாக ஆதரவு பெருகியது. 
 
வட இந்தியாவில் இருந்த இந்த புரட்சியாளர்களின் தாக்கம் தென் இந்தியாவில் ஆந்திரத்தில் நிலை கொண்டது. கேரள மாநிலத்தில் மழம்புலா, காஷர்கோடு மாவட்டங்களில் பரவலாக பரவியது. அமைப்பில் சேர்ந்த பொதுமக்களே நேரடியாக களத்தில் இயங்கினார்கள். அரசை தீர்மானிக்கும் அளவுக்கு துப்பாக்கிப் பயிற்சிகளை மக்கள் பெற்றார்கள். இதன் தாக்கம் கடந்த பதினைந்து ஆண்டுவரை நீடித்ததை அறிந்திருப்பீர்கள்.
 
தமிழகத்தில் புரட்சிக்கான தாக்கம் வட மாவட்டங்களில் பரவத்துவங்கியது. 1974 வாக்கில் புரட்சி பேசும் மக்களை மக்களிடமிருந்து தூரப்படுத்த அரசு எந்திரம் திட்டமிட்டது. மக்கள் நலத்திட்டங்களில் தி.மு.க, இதில் வெற்றியும் கண்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க புரட்சிகர சிந்தினையாளர்களை ஆயுதத்தால் கையாண்டது. இதனால் தருமபுரி கோவை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பலர் அழித்தொழிக்கப்பட்டனர். மக்கள் செல்வாக்கு அல்லது மானசீக ஆதரவு பெற்றவர்களை மக்களிடமிருந்து பிரிக்க இராஜதந்திர நடவடிக்கையால் அரசு வெற்றியும் பெற்றது. இருப்பினும் மக்கள் ஆதரவு இந்த புரட்சிகர அமைப்பினருகு தொடர்ந்து இருந்தது. இவர்களிடமிருந்து மக்களை தூரப்படுத்துவதை விட உள்ளிழுத்து அழித்தல் திட்டம் துவக்கப்பட்டது. 
 
அதன் தொடர்ச்சியாக காரல் மார்க்ஸ், அம்பேத்கார், பெரியார் படங்களை அச்சிட்ட சுவரொட்டிகளை கொண்ட புதிய அரசியல் கட்சி வட மாவட்டத்தில் உருவானது என்பதை விட உருவாக்கப்பட்டது. அதுதான் பா.ம.க.
பா.ம.க போன்றவர்களுக்கு நோக்கம், இலக்கெல்லாம் கிடையாது. பெயரளவுக்கு புரட்சி சிர்த்திருத்தம் பேசிய தலைவர்களை மக்களிடம் கொண்டு சென்று புரட்சிகர சிந்தனையாளர்களை இவர்கள் மழுங்கடிக்க, மக்களே இந்த புரட்சியாளர்களிடம் எதிர்கேள்வி கேட்க முதலாளித்துவம் சொன்னதை செய்திடும் அமைப்புதான் இவைகள். இந்த அமைப்பினர் கட்சி அல்லது இயக்கம் துவங்கிய காலத்தில் ''தேர்தல் பாதை திருடர் பாதை'' என புரட்சி முழக்கமிட்டார்கள். 
 
புரட்சி பேசியவர்களிடமிருந்த மக்களை இந்த அமைப்புகள் வசப்படுத்தியது. மக்களும் வசப்பட்டார்கள். கொஞ்சநஞ்சமுள்ள புரட்சிகர சிந்தனையை முழுக்க மழுங்கடிக்க குல (சாதி) வாதத்தை முன் வைத்தார்கள். அதுவும் நன்றாக எடுப்பட்டது. அதன் பின்னர் புரட்சி பேசிய இந்த அமைப்பினர் மக்களை தேர்தல் பாதைக்கு மெல்ல இழுத்துப்போனார்கள். ஆக இவர்களின் இலக்கு 1948ல் துவக்கப்பட்ட டக்கள் குழு பரிந்துரையின் மூல கருத்தான முதலாளித்துவ எதிர்ப்பை மக்களிடமிருந்து அப்புரப்படுத்துவதே. இதை இந்த அமைப்பினர் நிறைவேற்றினார்கள், நிறைவேற்றி வருகிறார்கள்.
 
''பா.ம.க இப்படி இருக்க புரட்சிகர சிந்தனையில் பட்டியல் குழுக்கள் அதிகமாக சேருகிறார்கள்'' என்பதை அறிந்த டங்கள் குழு உறுப்பினர்களான இந்தியாவை ஆளும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பட்டியல் குழுக்களை பா.ம.க போன்று கிளம்பி விட்டார்கள். இதில் முளைத்தது தான் தலித் பேந்தர். அதன் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஜான் பாண்டியனின் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு. இவரை தொடர்ந்து மருத்துவர். கிருட்டிணசாமி இன்னும் பலர்.
இவர்களின் நோக்கம் டங்கள் குழுவின் பரிந்துரையை நிறைவேற்றும் பொறுப்பு மட்டுமே கொடுத்துள்ளது இந்திய அரசு. இது போன்ற அமைப்புகளை கட்டிக்காக்கும் வேலையைத்தான் இந்தியாவில் அச்சிடும் ஏடுகள் செய்திடும். ஆக இந்து நாளேடு தனது கொள்கை (முதலாளித்துவ) அடிப்படையிலே தனது பணியை நழுவாமல் செய்துள்ளது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...