Search This Blog

Sunday 31 March 2019

அரசியல் மாற்றமும் முதாளித்துவ எதிர்ப்பும்


                                   அரசியல் மாற்றமும் முதாளித்துவ எதிர்ப்பும்



வணக்கம் ,



மதம் / பவுத்தம் தொடர்பான விவாத்தில் பட்டியல் சாதியினர் கருப்பொருளாக்கப்பட்டது பலரது பதிவுகளில் பார்க்க முடிந்தது இதில் பா.ஜாவால் பட்டியல் சாதிகுழுக்கள் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டும் கடுமையாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக பட்டியல் சாதியினரின் எழுச்சி / குழு ஒருங்கிணைப்பிற்கு பின்புலமாக இருப்பது மைய அரசு. இதில் காங் / பாஜ என பிரித்து பார்க வேண்டிய தேவையில்லை. (முதலாளித்துவத்திற்கு பங்கம் வரக்கூடாது என்பதற்காகவே)

இந்தியா ஒன்றியத்தில் எப்போதெல்லாம் வெகு மக்கள் எழுச்சி எழுகிறதோ அப்போதெல்லாம் சாதிய குழுக்களில் செயல்பாடுகள் ஒருங்கிணைப்பு அதிகரிக்கும் / இதன் நோக்கம் சாதிய பாகுபாடுகளால் ஒடுங்கி இருப்பவர்கள் ''துப்பாக்கி தூக்கும்'' (நக்சல்பாரிகள்) அமைப்பின் பின்னால் சென்று விடக்கூடாது என்பதற்காக கட்டமைக்கப்படுவதே இந்த சாதி / மத குழு அமைப்பு முறை.இவைகள் ஒன்று கூடுவதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் பணத்தை இந்திய ஐ.பி என்றழைக்கப்படும் உளவு பிரிவு மூலமாக கொட்டுகிறார்கள்.(பட்டியல் சாதியினர் இன்றும் பொது வீதியில் தேநீர் கடை நடத்த முடியாத நிலையில் / பள்ளர் அல்லாத பிற பட்டியல் குழுக்களில் பெரும்பான்மையோருக்கு நிலம் கிடையாது இந்த நிலையில் அவர்களுக்காக நடத்தப்படும் கட்சியின் சொத்து மதிப்பு வியக்கத்தக்கதாக இருக்கிறது.
நக்சல்பாரி அமைப்புகளிடமிருந்து மக்களை காக்க வந்த ரச்சகர்கள் தான் தலித் பேந்தர் / பின்னர் விடுதலை சிறுத்தைகள் /அருந்ததியர் முன்னேற்ற முன்னனியான அம்மி,புதிய தமிழகம், தேவேந்திரர் சமீதி... இன்னும் பல பல ....
இந்த அமைப்புகளை முதலில் கட்டமைப்பு பணியைத் துவக்குபவர்கள் முழுக்க முழுக்க தொண்டு நிறுவனங்களே (இன்றும் மதுரை இறையியல் கல்லூரி இதைத்தானே செய்து வருகிறது)

பழங்குடி மக்களை இன்றளவும் இயக்குபவர்கள் இவர்கள் மட்டுமே இதை உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் தேவையை அரசு செய்திடத்தானே மக்கள் பிரதிநிதிகள் /அரசு எந்திர பணியாளர்கள்,இவர்கள் இருக்க எதற்காக தொண்டு நிறுவன தன்னார்வ அமைப்புகள் இந்த கேள்வியை எந்த வாக்காளனும் கேட்கக்கூடாத அளவுக்கு நம்மை பொதுபுத்தி இயக்க வைக்கிறது இயக்குகிறது.

இதே போலவே தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களான பிறமலை கள்ளர், வன்னியர் போன்ற குழுக்களை இவர்களை இயக்குவது முழுக்க முழுக்க உளவு அமைப்புகளே. இவர்களுக்காக தலைவர்களாக அறியப்பட்டவர்கள் மீது நேரடி குற்றமும் குற்றப்பின்னனி இருந்தும் அரசு எந்திரம் இவர்களுக்கு சல்யூட் அடிக்கும்!.

இந்த அமைப்புகளையே அரசு பெரும் திட்டங்கள் செயல்படுத்தும் போது (நியூட்ரினோ/கூடாங்குளம் / தோல் /சாயம் /மற்றும் கழிவுகளால் பாதிப்படையும் இதர திட்டங்கள் ....) இவர்களைப் போராட்டத்திற்கு அரசே தூண்டுவார்கள். மக்களோடு இவர்கள் போராடி கொண்டிருக்கும் போது திடீரென போராட்டத்திலிருந்து வீடு திரும்புவார்கள். இந்த நிகழ்வுகளை போராட்டத்திற்கு சென்ற தோழர்கள் அறிந்திருப்பார்கள்.

இந்தியாவில் சாருமசூம்தார் ... மற்றும் சிலர் துவக்கிய நக்சல்பாரி இயக்கத்தில் சாமானிய மக்கள் சேருவதை தடுக்க சாதிய குழுக்களின் செயல்பாடுகளை அதிகரிக்க மைய அரசு கோடிக்கணக்கில் கொடுத்து மைய உளவு அமைப்புகளையும் தொண்டு நிறுவனங்களையும் முடுக்கி விட்டது. இதில் நல்ல வெற்றி கிடைத்தால் இன்றும் அந்த நடைமுறை தொடர்கிறது.
பா.ம.க ,வி.சி துவக்கப்பட்ட காலத்தில் தமிழகத்தில் தமிழ் தேசிய வாதமும் / நக்சல்பாரி தீவிரவாதம் எழுச்சி் இருந்தது. இதை ஒடுக்க / மக்களிடமிருந்து இந்த தீவிர வாத குழுக்களை அப்புறப்படுத்த 'நக்சல்பாரிகள் என்ன முழக்கங்களை வைத்தார்களோ அதே முழக்கங்களை இந்த சாதிய குழுக்கள் வைத்தது. நக்சல்பாரிகள் பக்கம் ஒடுக்கப்பட்ட / பாதிக்கப்பட்ட / கொள்கை ஏற்புடைய மக்கள் செல்வதை தடுத்து விட்டதற்கான சமிஞ்சை கிடைத்தவுடன் இந்த சாதியக் குழுக்கள் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார்கள். இவர்கள் யாருக்காக முதலில் புரட்சிகர வசனம் பேசி, சுவர் எழுத்துக்களை எழுதினார்கள் , தற்போது யாருக்காக வாக்கு அரசியலுக்குள் தாவினார்கள் என்பதற்கு அவர்கள் கொடுத்த விளக்கத்தை கூட அவ்வமைச்சில் இருப்பவர்களோ அரசியல் நோக்கர்களோ பார்ப்பதில்லை. இவர்களிடமிருந்து விடையைப் பெற்றுதர வேண்டிய முதலாளித்துவ பத்திரிக்கைகள் இடதுசாரி சாயத்தோடு நடமாடும். காரணம் மக்கள் எப்படியோ நக்சல்பாரிகளாக மாறாமல் இருந்தால் நாட்டுக்கும் / நமக்கும் நல்லது முதலாளித்துவத்தை காத்து விடலாம்'' என சாதிய குழு அரசியலை விமர்சனம் இல்லாமல் பொதுவெளியில் முன்னிருத்தும் நிறுத்தியுள்ளது.

சாதி குழுக்கள் /சாதிய கட்சிகளாக அடையாளம் காணப்பட்ட பா.ம.க,விசி,அருந்ததியர் / பு.தமிழகம் .. பாரதீய பார்வர்டு பிளாக் .. இன்னும் பல இவர்களால் அந்த சாதிகளுக்கு என்ன பயன் கிடைத்துள்ளது. இதை அவர்களே ''பேக் பைண்டிங்'' செய்து அறிக்கை கொடுக்க சொல்லுங்கள். / இவர்களால் ஏற்கனவே இருந்த சமூக பாகுபாடு மேலும் மேலும் அதிகரித்தது.பட்டியல் சாதிகுழுக்கள் மீது அடக்கு முறை / பொருளாதர மாற்றம் கிட்டியதா ? மோதல்களும் இட ஒதுக்கீடு தொடர்பான எதிர்வினைகள் அதிகரித்துள்ளன. (இந்த அலசல் இசுலாமிய குழுக்களுக்கு பொறுந்தும்)

நூலாயுதம் ; நூல் ; ராமநாதபுரம் வரலாற்று குறிப்புகள்


                         நூலாயுதம்

நூல் ; ராமநாதபுரம் வரலாற்று குறிப்புகள்    

ஆசிரியர் = முனைவர் எஸ்.எம்.கமால்
வெளியீடு - காவ்யா

     வரலாற்று தேடுதல் உள்ளவர்களுக்கு எஸ்.எம்.கமால் அறிமுகமானவரே. இவர் தொகுத்த சேதுமன்னர் செப்பேடுகள் தொகுதி வியக்க வைக்கும். அந்த வரிசையில் இவர் எழுதிய ராமநாதபுரம் வரலாற்று குறிப்புகள் நூல் வியக்கவைக்கவில்லை என்றாலும் தகவல் ''பெட்டி'' என்று சொல்லலாம். நூலுக்கு மதிப்புரை வழங்கிய குன்றகுடி அடிகளார் பாராட்டு பத்திரம் வாசித்திருந்தாலும், மதுரை காமராசர் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர். முனைவர் இ. முத்தையா நூலில் ஆழம் இல்லை என தனது வருத்தை 'கொட்டி' மதிப்புரை தந்துள்ளார். இருப்பினும் இந்நூல் புகுமுக வரல்லாற்று தேடலுக்கு சிறந்த ''கைகாட்டி'' என்றே சொல்ல வேண்டும்.

       பாண்டியநாடு என்றவுடன் பலரும் ராமநாதபுரத்தை மறந்து விடுவார்கள். ஆனால் அதுதான் பாண்டிய மண்டலத்தின் கரு என்பதை துவக்கத்திலே முத்திரை பதிக்கும் இந்த நூல், வையை என்ற வைகை பாசனத்தை துவக்குவது ராமநாதரபுரம் எல்லையில் என்பதை குறிப்பிட்டுள்ளார். ராமநாதரபும் வணிக்கத்தால் வளமுற்று இருந்ததால் சோழ சேர வாணதீயார், ஆற்காடு நவாப் வலாஜா மன்னர்கள், நாய்ககர் என பலரும் போர் தொடுத்து பல்லாண்டுகள் கையப்படுத்தி வைத்திருந்ததில் துவங்கும் இந்த நூல் தனது வரலாற்று பயணத்தை மானுடவியல் பக்கமாக திருப்புகிறது.

        இந்தியாவில் முழுவதுமுள்ள 52 சக்திபீடங்களில் தளங்களில் முக்கியமானதானக கருதப்படும் தேவிபட்டினம் குறித்த செய்தி பிரமிக்க வைக்கிறது. பாண்டிய மண்டலத்தை பிடித்த சோழ அரசன் அருள்மொழித்தேவன் (ராஜராஜன்) தனது காமக்கிழத்தியான உலகம்மைதேவியின் பெயரில் பட்டினம் கடற்கரை அருகில் கோவில் அமைத்தான். அது உலகம்மைதேவிபட்டினமாக இருந்து இன்று தேவிபட்டினமாக சுறுங்கி உள்ளது என்பதை சான்று அளிக்கிறது. அதே போல் பட்டினம் என்ற இடம் மிகப்பெரிய கடல்வணிக்கத்தளமாக விளங்கியது. இங்கு கிறித்தவத்தை உலகம் முழுவதும் பரப்பிய காண்டினோண்டோ, உலகப்பயணி மார்கோபோலோ, இசுலாம் மார்க்கத்தை பரப்ப வந்த நபிகளின் ஐந்தாம் வாரிசான ஆபீஸ், காபில் (அடக்கத்தளம்), தில்லி சுல்தான் குர்சத்கான், விஜயநாகர மன்னன் புக்கன், திருப்புல்லானி பெருமாள் கோவில் வரை படையெடுத்து வந்து அக்கோவிலுக்கு தானம் கொடுத்த செய்தி என்பதை உலகலாகவிய குறிப்புகளில் வியப்பூட்டுகிறது. அதே போல் 13ம் நூற்றாண்டில் ஆண்ட பாண்டிய மன்னன் மாறவர்மன் குலசேகரன் அமைச்சரவையில் கடல் வணிகத்திற்காக சீராஸ்ஹுதீன் என்ற இசுலாமிய அமைச்சர் இருந்தார் என்றும் அவர் தொண்டியில் தங்கியிருந்தார் என்ற செய்தி, போர்த்துகீச்சியர்களுக்கு காசர்கோடுக்கு அடுத்து மய்ய தளமாக ராமேசுவரம் தீவு விளங்கியது என்ற தகவல் வியப்பூட்டுகிறது.

      தென்னத்தில் கிறித்தவத்தை பரப்ப வந்தவர்களில் முக்கியமான்வர் டி.நோபிளி, அடுத்து அபேதுபே இவருக்கு அடுத்து ஜான்.டி.பிரிட்டோ. இவர் மதப்பிரச்சாரத்தில் கொள்ளப்பட்டது இந்த மண்ணில் தான்.

    நாயக்கர் அரசியலில் ஆந்திராம் கருநாடகம் வடபகுதியிலுந்து வந்த மக்கள் முதலில் தங்கவைக்கப்பட்ட இடம் ராமநாதரபுரம் சீமை என்ற நுண்ணிய தகவல். ராமநாதபுர மன்னர்களின் காதலால் புதுக்கோட்டை பிறந்த செய்தி. இதைத்தவிர அந்தப்பகுதியில் நடந்த சாதிய மோதல்கள் குறித்த தகவல், சுந்தரப்போராட்டத்தில் திருவாடனை நீதிமன்ற எரிக்கப்பட்ட செய்தி அதில் பட்டியல் சாதிகளாக அறியப்படும் பள்ளர், குறவர், பறையர் குலத்தில் நூற்றுக்கு மேல்பட்டோர் கலந்து கொண்ட பெயர் பட்டியல். 

        நாயக்கர் ஆட்சியின் கடைசி வாரிசான குமார பங்காரு திருமலை நாயக்கன் சிவகங்கையில் பதுங்கியிருந்த போது அவருக்கும் சிவகங்கையை ஆண்ட வாரிசுகள் உதவியது. மதுரையை மய்யமாக வைத்து மீண்டும் அரசாட்சியை துவக்க திட்டமிட்டுள்ளார்கள். இதற்கு சிவகங்கை சீமை உதவுகிறது என்ற பயத்தால் பிரிட்டீஷார் மிகப்பெரிய போர் தொடுக்கிறார்கள். இதுவே சுதந்தரப்போராட்டத்தின் துவக்கமாக அடித்தளமிடுகிறது. இந்த போரினால் சிதைந்த சிவகங்கை சீமையின் படைதளபதியான மருது சகோதர்களுக்கு அடைக்களம் கொடுத்த கன்னிவாடி, எரியோடு, விருப்பாச்சி பாளையங்களை அழித்து ஒழிக்கிறது பிரிட்டீஷ் அரசு இப்படியான தகவல்கள். 

   இன்று ஆட்சியாளர்கள் ஊர் பெயர்களை மாற்றுகிறார்கள். ஆற்காடு நாவாப் ராமநாதபுரத்தை 'அலி' என்று பெயர் மாற்றிய செய்தி, வியாபாரம் மற்றும் மார்க்கநெறி பரப்ப வந்த  இசுலாமியர்கள் பாண்டியமன்னர்களுடன் போர் புரிந்தது வென்ற செய்தி. இதையெல்லம விட பல சாதிய கூறுகளை பட்டிலிட்டு கொடுத்துள்ளார்.
 
     ஜல்லிக்கட்டி, ஏர்தழுவுதல் மஞ்சுவிரட்டுக்கு 1955ல் தேவகோட்டையை சேர்ந்தவர் நூல் எழுதியது.  
  
    இன்றும் ஏரும் போரும் என்று கிண்டலாக சொல்லுவார்கள் கண்டதேவி கோவில் பிரச்சனையை. இக் கோயில் தேரோட்டம் பள்ளர் மறவர் சாதி மோதலாகவே முடிகிறது. இது சுமார் ஆயிர்ர்ம் ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சனை என்றும், அங்குள்ள கல்வெட்டு 800 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி சாதிய கூறுகள் ஆழமாக இருந்தது என்பதை காட்டுவதை வருத்தப்பட பதிவிட்டுள்ள ஆசிரியர், இது குறித்து வெளி வந்த ''தேரும் போரும்'' என்ற நூல் எழுதிய தகவலையும் விட்டு விடவில்லை.
   
          ராமநாதபுரம் மாவட்ட குறிப்பேடு (கெசட்டியர்) வாசித்தவர்களுக்கு சாதரணமாக இந்த நூல் தெரியலாம் ஆனால் அதில் விடுபட்ட பல சயம, சாதிய தகவல்கள் கொட்டிக்கிடக்கிறது. எளிய எடுதுக்காட்டு கச்சதீவை இந்தியா இலங்கைக்கு கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தை போகிற போக்கில் சொல்லியுள்ளார் ஆசிரியர். நூலில் யார் மனமும் புண்படாமல் மேலோட்டமாக எழுதியுள்ளதால் ஆழமில்லாதது போல் தெரியும். ஆனால் இந்த நூலினை அடிக்குறிப்பாக வைத்துக்கொண்டால் பல தேடல்களுக்கு ஆய்வு வழிகாட்டியாக அமையும் என்பது எனது நம்பிக்கை. 
      
 

Thursday 28 March 2019

மொழியை இழந்தால் இனம் அழியும்



                                     
                                                      
                                                                 
                                                               மொழியை இழந்தால் இனம் அழியும்

                                                              











மொழி என்பது ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது பரிமாறிக்கொள்ளும் சமிஞ்கை மட்டும் இல்லை. அதனுள் விஞ்ஞானம், கலை, அறிவு, பண்பாடு என அனைத்தியயும் புதைத்து வைத்து தேவையான போது எடுத்துக்கொடுக்கும்.

ஒரு மொழி அழிந்திடும் போது அல்லது மற்றொரு மொழி மேலாதிக்கம் செழுத்தும் போது நமது மொழியில் உள்ள அனைத்தும் பின்னும் தள்ளப்படும்.

எளிய எடுத்துக்காட்டு

பண்டுவம் (வைத்தியம் = சமற்கிருதம்) தமிழ் மொழியின் கொடை. நாம் மொழியை பின்னுக்கு தள்ளியதால் வேற்று நாட்டு பண்டுவம் நம்மை ஆளுமை செய்கிறது. தமிழ் நாட்டு பண்டுவத்தில் முன்னேற்றம் இல்லாமல் இருக்கலாம். அதற்காக முழுமையாக நிராகரிக்க இயலாது. நிராகரிப்பதாக இருந்தால் உப்பு போட்டு கஞ்சி காய்ச்சுவதிலிருந்து, நல்லெண்ணை ஊத்தி கடுகு போட்டு தாழிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியது தான்.


கட்டிடக்கலை.


தமிழகத்தில் குறிப்பாக திராவிடப்பகுதி, அதனை ஒட்டியுள்ள தென் இந்தியாவில் மட்டுமே கடுக்காய் காசிக்கட்டி, கருப்பட்டி சுண்ணாம்பு சேர்ந்த கலவையில் கட்டிடம் கட்டுயுள்ளார்கள். இந்த விஞ்ஞானத்தை புறம் தள்ளியதால் வந்த வினையே இன்றைய இயற்கை அழிப்பு என்ற பார்வையும் உண்டு. இதை விட மய்யமாக பார்க்க வேண்டியது குசராத் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது சிமிண்டால் கட்டப்பட்ட கட்டிடங்கள் தரைமட்டமானது. ஆனால் கடுக்காய் காசிக்கட்டி, கருப்பட்டி, சுண்ணாம்பு இவைகளால் கட்டப்பட்ட அதாவது மாநகராட்சி அலுவலகம் அலுவர்கள் சோதித்து அனுமதி வாங்காத கொடுக்காத இருநூறு ஆண்டு கால பழைய கட்டிடங்கள் சிறுசிதிலத்தைக்கூட அடையவில்லை. இதனை கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொழில் நுட்ப மய்யம் (IIT) ஆய்வு செய்து வருகிறது. குறிப்பாக புனேயில் உள்ள இந்திய துணைக்கண்ட படைத்துறையின் (ராணுவ) கீழ் இயங்கும் பல்கலைகழகம் செய்த ஆய்வின் ''கடுக்காய் காசிக்கட்டி, கருப்பட்டி சுண்ணாம்பு கலவையைப் பயன்படுத்த வேண்டும்'' என்ற முடிவினை மய்ய அரசுக்கு அனுப்பி உள்ளது.

கலையின் மய்யமான சிலை.

                                                                    



 ஒன்பது 12, 13ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்கு வந்த பிராஞ்சு கலைஞர்கள் தென் இந்திய கோவில்களில் உள்ள சிலை நுட்பங்களையும், சிலைக்காக தேர்வு செய்த கற்கள் குறித்ததை மிரட்சியுடன் பதிவு செய்துள்ளார்கள். இவர்கள் சிலை செய்திட தேர்வு செய்திட என்ன நூல் கையாளப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்றே பதிவிட்டுள்ளார்கள். (சான்று தென் இந்திய கோவில்கள் சந்தியா பதிப்பகம் ஆசிரியர் சீனிவாசன் , இந்திய வரலாறு இரண்டாம் பாகம் ஆசிரியர் - வின்செண்ட் ஸ்மித்) . இந்த சிலை செய்திடும் தென்நூல் தமிழிலிருந்து சமற்கிருதமாக்கப்பட்டு அதில் ஆன்மீக கலப்பு ஏற்ப்பட்டு அவை முடக்கப்பட்டது.




                                      சதிராட்டம்     
                                   


இதை 19ம் நுற்றாண்டின் இறுதியில் பரதநாட்டியம் என பெயரிட அதுவே தற்போது பொது சொல்லாக்கப்பட்டுள்ளது. சதிராட்டம் குறித்து சிலப்பதிகாரத்திலும் அடுத்து வந்த காரைக்கால் அம்மையாரின் பதிகத்திலும் அதி நுட்பமாக உள்ளதாக தமிழ் அறிஞர் பலரும் ஆய்வு செய்துள்ளனர். ஆனால் இந்த சதிராட்டம் அழிவுக்கு காரணம் கோவில்களில் தேவரடியார் தடைசட்டத்தால் என்ற பார்வையை வைக்கிறார்கள். மெய்யாகவே தமிழை பின்னுக்கு தள்ளியதால் வந்த வினையே என்பதை நாம் பார்க்க மறுத்ததாகவே புலப்படுகிறது.


கப்பல் கட்டுமானம் கடல் பயணம்


பல வைணத்தளங்களில் கப்பல், துடுப்பு, படகு, புடை சிற்பங்கள் இருப்பதைப் பார்க்கலாம். இவையெல்லாம் கடலை கைக்குள் வைத்திருந்த முன்னோர்களின் மூலை. இது போன்ற அறிவு மொழியிலே புதைந்து கிடைக்கிறது.

சொற்ப எடுத்துக்காட்டாகச் சொன்னால் பத்து ரூபாய்க்கு ஆங்கில திரைப்பட குறுந்தகடு விற்பது அந்த மொழியை அவர்கள் விதைத்து, காத்து வருதால் என்பதை நாம் உள்வாங்காத வரை தனது சுயத்தை இழந்துகொண்டே போகும்

நூலதிகாரம் ; நூல் ''இந்தியாவில் மட்டும் சாதி இருப்பது ஏன்''




                                                     ''இந்தியாவில் மட்டும் சாதி இருப்பது ஏன்'' 

''கதை - மனிதன் மனதை பக்குவப்படுத்தும், கட்டுரை பக்குவமான மனிதனை கலவரபடுத்தும், ஆய்வு நூல் - புரட்சியாளானாக்கும்'' என நூல்களைப்பற்றி சொல்வார்கள். அந்த வரிசையில் ''இந்தியாவில் மட்டும் சாதி இருப்பது ஏன்'' என்ற நூல். 
                                         


இந்த நூல் திராவிட கழகத்தாரை தவிர வேறு அமைப்புகள் பெரிதாக பேசப்பட்டதாக தெரியவில்லை.
             மன்னர் ஆட்சிகாலம் தொட்டு இருந்த வர்ணாசரம அமைப்பு, கீழ் தட்டு அதாவது உழைக்கும் மக்களை பெரிதும் கவனப்படுத்தவில்லை. சாதிய அமைப்பு முறையின் இருக்கத்தை பிரிட்டீஷார் ஆட்சியிலே பிராமணர்களின் உதவி கொண்டு ஜமீன்கள் துணையோடு கட்டமைத்தனர். அதுவரை இடங்கலை வலங்கலையாகவே மக்கள் பிரிந்து இருந்தனர். சாதி என்பது சமூக கூறு அதை ஆன்மீகத்துடன் இணைத்த பெருமை பிரிட்டீஷ் ஆட்சியாளரையே சேரும் என்பதற்கான சுமார் 800 சான்றுகளுடன் ஆழமாக பதிவிட்டுள்ளார். நூலாசிரியர் இந்தியாவில் சாதி ஏன் இருப்பு கொண்டுள்ளது என்ற நூலின் தலைப்பை தொட்டுப்பார்க்க முயற்சி எடுத்துள்ளார் ஆனால் முழுமை பெறவில்லை.
இந்த நூலினை சமூக இயக்கவாதிகள் குறிப்பாக தலித் இயக்கத்தினர் படிக்க வேண்டிய நூலாகவே கருத முடிகிறது. நூல் ஆசிரியர் திரு. கண்ணுப்பிள்ளை, இவர் குஜராத் அரசின் முன்னால் காவல் துறை இயக்குனராக பணியாற்றியுள்ளார். வெளியீடு அன்னை தமிழ் பதிப்பகம்.
           
             



ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...