Search This Blog

Tuesday 19 May 2020

கொரொனோ என்ற மாயை? எதற்காக ? யாருக்காக?



                                         கொரொனோ என்ற மாயை? எதற்காக ? யாருக்காக?

*****************************************************************************************************
வணக்கம் நண்பர்களே, தோழர்களே

கொரொனோ பெயரைக்கொண்ட தொற்று நோய் ''கடந்த மூன்று மாதமாக பல்லாயிரம் உயிர்களை காவுவாங்கி விட்டது. பலகோடிப்பேரை கொல்லக்காத்திருக்கிறது'' என்று உலகளவில் செய்தி நிறுவனங்கள் அரசு அறிக்கைகள் ஒவ்வொரு நிமிடமும் செய்திகளை கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் ஏற்படுத்தப்பட்ட அச்சம் பெரும்பீதி, இரும்பு உலை கொதிகளன் போலவே உள்ளது. இந்த நோய் தாக்குதல் உலக நாடுகள் என்ன நடக்கிறது என்பது குறித்த செய்திகளும் பொய் தோற்றமா ? உண்மையா என அவர்களே விளக்கம் தரமுடியும்.  
இந்திய ஒன்றியத்தில் என்ன நடக்கிறது? என்ன நடக்கும் ? என்பதை பற்றி அரசியல் கட்சிகள் அறிவியல்சார் இயக்கங்களின் அறிக்கைகள், ஆளும் அரசுகளை போலவே உள்ளது. மக்களின் துயரம் சொல்லி அழுக இயலாத ஈழத்துயர் போலவே உள்ளது. 

******************************************************************************************************
 மருத்துவத்துறையினர் என்ன சொல்லுகிறார்கள்?
*****************************************************************************************************
கொரொனோ என்ற தொற்று நோய் ஏற்பட்டால் சளிக்காய்ச்சல் வருவதற்கு முன்பு என்ன அறிகுறி இருக்குமோ அதைப்போலவே தொண்டை வலி, சளி, அதன்பின் இருமலுடன் காய்ச்சல், மூச்சிரைப்பு ஏற்படும் என அறிவித்தார்கள். நோய் தாக்குதல் கண்டவர்களாகக் கருத்தப்பம் நபர்களை காவல் துறை மூலம் பிடித்து மருத்துவமனையை சிறைச்சாலைப்போல் மாற்றி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கொண்டு பாதுகாத்து சிகிச்சை அளிக்கிறார்கள். இந்த நோயாளிகளின் இரத்தம் மற்றும் சளி எச்சில் மாதிரிகளை சோதித்த 100 பேரில் 85 பேருக்கு குறிப்பிட்ட நோய் இருப்பதாக லேப் டெஸ்ட் கொடுத்துள்ளார்களாம். அரசு பரிசோதனை மையம் தவிர தனியார் லேப்களிலும் கொடுத்து டெஸ்ட் செய்யப்பட்திலும் இதே கணக்கைக் கொடுத்துள்ளார்களாம். மருத்துவச் சிறைச்சாலையிலிருந்து பெயில் கிடைத்தவர்கள் போல டிஸ்சார்ச் ஆனவர்கள் வீட்டுக்காவலில் வைப்பது போல வீட்டிற்குள் வைக்கப்பட்டார்கள்.

இது நாள் வரை நோய் தாக்குதல் அல்லது தொற்று ஏற்பட்டு மருத்துவமனைக்கு போய் சிசிக்கை எடுக்கப்போனவர்கள் என்று அரசின் பதிவேட்டினைப் பார்த்தால் விமானத்தில் வந்தவர்கள், இசுலாமிய தப்ளிக் மாநாட்டிற்கு போய் வந்தவர்கள், மாலத்தீவிலிருந்து கப்பலில் வந்தவர்கள் என்ற கணக்குகளே உள்ளன. இக்கணக்குகள் நீடிக்க காரணமாக இருப்பது இந்தக்கணக்கில் தப்பித்தவர்கள் மூலம் பரவியதாக சொன்னார்கள். சென்னை பெருநகர காய்கறி அங்காடியை ''ஒற்றை சோர்ஸ்'' எனச்சொன்னார்கள். அதன் மூலம் சிலருக்கு பரவியதாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வாரச்சந்தையும், சேடபட்டி என்ற கிராமத்தையும் சீல் வைத்து மூடப்பட்டது. மற்ற பகுதியின் நிலை தெரியவில்லை.

******************************************************************************************************
                                                         கொரொனா நோயாளிக்கு என்ன நடந்தது
*****************************************************************************************************
காவல் துறை மூலம் பிடித்து கொரொனோ நோயாளியாக கருத்தப்பட்ட நபரை சிறப்பு வார்டில் வைத்து மருத்துவம் பார்க்கிறார்கள். இந்த நோயாளிகள் யாருக்கும் மருத்துவத்துறை குறிப்பிட்டுள்ள எந்த சிம்டமும் வரவில்லை. 15 நாள் கழித்து அவர்கள் விடுதலை என்ற டிஸ்சார் செய்யப்பட்டார்கள். டிஸ்சார் ஆனாலும் அரசியல் கைதியைப்போல் வீட்டுக்காவலில் வைத்து மருத்துவ கண்காணிப்பில் வைத்தார்கள். அப்போதும் எதுவும் குறிப்பிட்ட எந்த சிம்டமும் இல்லை என்றே தகவல் வந்துள்ளது. 

******************************************************************************************************
                                                                                 விண்டோ ப்பிரிடு
*****************************************************************************************************
ஒரு உயிர் தனது இனப்பெருக்கத்தை செய்வதை விண்டோ ப்பிரிடு என்பார்கள். கொரொனோ கிருமியில் விண்டோ ப்பிரிடு குறித்த ஆய்வு நடத்த இது நாள் வரை எந்தகருவியும் இல்லை. ஆய்வுகளும் நடத்தப்படவில்லை. ஹைச்.ஐ.வி என்ற நோய்கிருமியின் விண்டோ ப்பிரிடு கண்டறியும் கருவி இல்லாமல் பல ஆண்டுகள், பலரை பிடித்து இந்த நோய் தாக்கியுள்ளது என அறிவித்ததில் நூற்றுக்கணக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்ட பதிவுகள் ஏராளம் உள்ளது.

கொரொனா தொற்று குறித்து மாநில மைய அரசு நடத்தும் துறை ரீதியான வீடியோ கன்பரசிங்கில், தமிழக மருத்துவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அத்துறையின் உயர் மருத்துவர்களை விட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான, செயலாளர், ஆணையார், இயக்குனர்கள் பதில் ஏதுவும் சொல்லாமல் ''அடுத்து, அடுத்து, அடுத்து'' எனச்சொல்லி முடிக்கிறார்களாம். ஆனால் அந்தந்த கலெக்டர் மூலம் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர், ஊரக சுகாதாரப்பிரிவு துணை இயக்குனர் மூலம் கேள்வி கேட்ட டாக்டர்களை 'லெப்ட் அண்ட்டுரைட்' வாங்குகிறார்களாம். மொத்தத்தில் ''மேலிட உத்தரவு'' என்ற தொணியில் சொல்லுகிறார்களாம். நான் பேசிய மருத்துவ நண்பர்கள் ''என்னமோ நடக்குறது இதில் ஏதோ உள்குத்து உள்ளதாகவே தெரிகிறது'' என வருத்தப்பட்டார்கள். அவர்களின் 'பொதுவுடமை கட்சியினர் ஆட்சி செய்திடும் கேரளத்தில் கொரான தொற்றுக்கு சிறப்பாக மருத்துவம் பார்க்கிறார்களே' என்ற கேள்விக்கு ''அதைப்பற்றி ஏதும் கேட்க வேண்டாம்' என்கிறார்கள்.
ஏன் இந்த கமுக்கம்! என்பதை கேள்வி எழுப்பி மக்களிடம் தெரிவிக்க வேண்டிய எதிர் கட்சிகள் ஆளும் அரசுடன் கூட்டு வைத்து செயல்படுவதாகவே உணர முடிகிறது.

********************************************************************************************************
                                                                     ஏன் இந்த கமுக்கம்!
*********************************************************************************************************
ஐயப்பாடு 01. 

உலகம் முழுவதும் மரபுசார் அறிவை நிறுவனங்களுக்காகவே முடக்கி வைத்தார்கள். மரபு அறிவியலில் 'விஞ்ஞானம் இல்லை' என்ற மாயத்தை கட்டமைத்து விட்டார்கள் தற்போது மேற்கத்திய நாடுகள் குறிப்பாக ஜெர்மன் போன்ற நாடுகளில் மெய்பித்து வருகிறார்கள். அவகளிடம் மிகத்தாமதமாக இந்திய ஒன்றியத்திற்கு இறக்குமதியானதே இயக்கை வேளாண்மை என்ற கான்செப்ட். இந்த மரபு பரப்புரையால் முதலில் அடிவாங்கியது உரம், பூச்சிக்கொள்ளி மருந்து உற்பத்தி. அரசே பசுமை வேளாண்மையை திட்டமாக அறிவித்து அதற்கு மானியமாக நிதி வழங்க வேண்டிய காட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில் உரம் மருந்து உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி இறக்குமதி இவைகளை கணக்கிட்டால் இதனை உள்வாங்கிக்கொள்ள இயலும். இதேபோலவே மருத்துவத்துறையும்.
இந்த மரபு சிந்தனை என்பது வந்து விட்டால் நிறுவனம் சார்ந்து மனிதன் இருக்கமாட்டான் சுயசார்பிற்கு போய் விடுவான் என்ற அச்சம் நிறுவனங்களுக்கு வந்து வந்து விட்டதன் விளைவு தான் இந்த நோயினை வைத்து மக்களை மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்று என்னத்தோன்றுகிறது.  
ஐயப்பாடு 02.
சிறு குறு நிறுவனங்களை நேரடியாக அழிக்க இயலாது. மறைமுகமாக அழித்திடும் திட்டமே இந்த தொற்று நோய் திட்டம் என்கிறார்கள். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் பேசிய போது ''உலகளவில் சிக்குன்யா காய்ச்சலை வைத்து இது போன்று லாக்டவுன் கட்டமைத்திட முயற்சித்தார்கள். ஏஐடி கொசு சில நாடுகளில் இல்லாமல் போனதால் சில நாடுகள் ஒத்துழைப்பு கொடுக்க முடியாமல் போனது. தற்போது கட்டமைத்து விட்டார்கள். கட்டமைத்த பீதியை தொடர்ந்து நம்ப வைக்கும் முகந்தரமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்த அரசின் வெளியீடுகள். இதை வைத்து பார்க்கும் போது இவர்கள் சொல்லும் கருத்தையோ வாதத்தையோ நாம் மனம் ஏற்க தயாராக இல்லாத மனநிலையே நமக்கு உள்ளது.

ஐயப்பாடு 03

அரபு நாடுகளில் ''இன்னும் ஆறுமாத காலத்திற்கு எண்ணை நிறுவனங்கள் இயங்காது. வேறு வேலை பார்த்துக்கொள்ளவும். உங்களுக்கான உணவு இடம் மட்டுமே தருவோம்'' என அறிவித்துள்ளது அரபு நாடுகள். ஆலைகள் வேலைநிறுத்த போராட்டங்களில் மாதக்கணக்கில் மூடி மீண்டும் இயங்கிய வரலாறு உண்டு. ஆனால் அந்தத்தொழிலாளர்களை 'வேறு வேலைக்கு போயிடுங்கள்' என பிரிட்டீஷார் இயக்கிய ஆலை நிருவாகம் கூட சொன்னதில்லை. ஆனால் இன்றைய அறிவிப்புகள் எதை நோக்கி என்பதை பொருளாதரத்துறை வள்ளுனர்களே தெளிவாக குறிப்பிட இயலும்.

ஐயப்பாடு 4.

கடந்த ஐந்தாண்டுகளில் வடமாநிலத்திலிருந்து கொத்துக்கொத்தாக அனைத்து உடல் உழைப்பு சார்ந்த தொழிலாளர்கள் தென் மாநிலங்களுக்கு வந்து குவிந்துள்ளார்கள் அல்லது குவிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு ஏன் அங்கு வேலை இல்லை. ''ஒரு வரியில் மக்கள் தொகை பெருக்கம்'' என்ற சொல்லால் ஆய்வினை முடித்து விடுவது ஆய்வாகத்தெரியவில்லை. தென் மாநில மக்கள் வட மாநிலத்தவர்கள் போல் ஏன் அப்பணியை செய்ய இயலவில்லை ? என்ற கேள்விக்கு விடை தேட வேண்டியுள்ளது. குறைந்தது அந்தந்த பகுதி இல்லாவிட்டாலும் அந்தந்த மாநிலத்தவர்களுக்கு ஆங்காங்கு வேலை ஏற்படுத்த சூழல் ஏன் உருவாகவில்லை? . 

வட நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் குறித்து வட நாட்டு பத்திரிக்கையாளர்களிடம் பேசினோம். ''வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மலைகளில் உள்ள கனிம வளங்களை வேதாந்த எல்.&டி போன்ற கம்பெனிகளுக்கு 99 ஆண்டுகால குத்தகை விடப்பட்டுள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த கனிம வளங்களை எடுத்துச்செல்ல அங்கு ஆறு வழிச்சாலை துறைமுகம் வரை போடப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் செயல்பட மக்கள் போராட்டம் தடையாக உள்ளது. அங்கு இயங்கும் தீவிர பொதுவுடமை அமைப்புகளுக்கு மக்கள் ஆதரவாக உள்ளதால் அவர்களை அப்புறப்புறப்படுத்த பெரும் முதலாளிகளுக்கு அரசே திட்டம் வகுத்துக்கொடுத்தது. அத்திட்டத்தின்படி இந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு வட்டியில்லா கடனாக 1 முதல் 5 இலட்சம் வரை கடன் கொடுக்கிறார்கள். அவர்கள் வேலை செய்து கழித்துக்கொள்ள வேண்டும். இப்படித்தான் இடப்பெயர்வு துவங்கியது. வயதானவர்களைத்தவிர இளைஞர்கள் இல்லாத கிராமத்தைதான் பார்க்க முடிந்தது.  இவர்கள் மீண்டும் இங்கு வந்தாலும் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியிலிருந்து தப்பிக்க அவர்களது கைப்பாவையாக இயங்குவார்கள். இது இருக்க தீவிர பொதுவுடமை செயல்பாட்டார்களையும் முடக்கிவிட்டார்கள்.. தற்போது இந்த இளைஞர்கள் வந்தாலும் பெரிதான தொழில் துவங்கவுள்ள கம்பெனிக்கு பெரும் பாதிப்பு இருக்காது'' என்கிறார்கள்.    

ஐயப்பாடு 04. 

 அரசின் நடவடிக்கைகளை பார்க்கும் போது திருமணம் முடிப்பத்தாக இருந்தால் எத்தனை பேர் கூடுவார்கள் என்பதை கணக்கிட்டு அரசிடன் அனுமதி வாங்கவேண்டும் என்ற நிலையே புரிந்து கொள்ள முடிகிறது. இருக்கும் நிலையைப்பார்க்கும் போது கட்டாயம் குறைந்தது 500க்கு மிகையாகமல் கூடலாம் என்ற வழிக்காட்டுதலை அரசு  அறிவிக்கும் என்றே தலைமை செயலக அதிகாரிகள் சொல்லுகிறார்கள். அப்படியானல் உண்ண உணவு   உடுக்க உடை தவிர மற்றவை கடுமையாக பாதிக்கப்படும். மனிதன் தனது வளமையை வளத்தை காட்டுவது இதர செலவினங்களிலே. இவைகள்  சார்ந்தே பல தொழிகள் இயங்குகிறது. இவைகள் முடங்கும் போது மனித குலம் மொத்தமாக அடிமையாக யாரிடமோ அழைத்து செல்ல இந்த தொற்று நோயினை பயன்படுத்துகிறார்களோ ?, என்ற ஐயப்பாடு எழுகிறது.

ஐயப்பாடு 05.

முகக்கவசம் இது சாதாரமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை. பள்ளிக்குழந்தைகள் இதை அணிய இயலுமா ?. கூடி வாழும் வயதில் இருப்பவர்களை எப்படி அனுக இருக்கிறார்கள். அவர்களின் மனநிலை குறித்த தாக்கம் எப்படி இருக்கும்.?. வகுப்பறைகள் எத்தனை பேரை அமர வைப்பது ?. அரசு பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் நிலை என்ன?. 

தற்போது அரசுப்பணியாளர்களை ஒரு மீட்டர் இடைவெளியில் வைத்து பேரூந்தில் அழைத்து சென்றால் நாளை சாமானிய மக்களை எப்படி அழைத்துச் செல்வார்கள். ? இதை துறைவாரியாக கணக்கிட்டால் தலைசுற்றுகிறது.   இப்படியான ஐயப்பாடுகளை கணக்கிட்டு பாருங்கள். எதை நோக்கி இந்த தொற்றால் நகர்த்துகிறார்கள் நகர்கிறோம். யாரோ யாருக்காவோ நகர்த்துகிறார்களோ என்ற ஐயப்பாடு எழுவதை தடுக்க இயலவில்லை. மொத்தத்தில் சிறு குறு நிறுவனங்களை சுகாதாரச் சட்டத்தில் அடைத்து பெரும் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பணியாகவே இந்த நகர்வு நகர்வதாக ஐயம் எழுகிறது. 

இந்தபேரழிவை பொத்தாம் பொதுவாக நிகழ்த்த முடியாது என்பதால் அதற்குமுன்பாக பல மாதங்கள் லாக் டவுன் என்ற யுத்தியை கையாள்கிறார்கள் என்ற பலரது ஐயத்தை போலவே நமது ஐயத்தையும் வைக்கிறோம். மொத்தத்தில் காட் (general agreement on tariffs and trade) ஒப்பந்தந்தத்தின் கரங்கள் நீள்கிறது. இதில் பொதுவுடமை கட்சி முதலாளித்துவ கட்சி என்ற பாகுபாடெல்லாம் இல்லை என்பதாகவே தற்போது வரை உள்ள நிகழ்வு உணர்த்துகிறது.

Saturday 16 May 2020

தென் கொங்கு நாட்டில் முதல் விடுதலைப்போர்


                                                          நூலதிகாரம்


***********************************************************************************
நூல்; தென் கொங்கு நாட்டில் முதல் விடுதலைப்போர்
ஆசிரியர் ; பேராசிரியர், முனைவர்.மதியழகன்
வெளியீடு ; உடுமலை வரலாற்று மையம்
விலை; 250 உரூ, தொ.எண்; 9944066681
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


உள்ளூர் வரலாறு உலகவராலாற்றோடு இணைந்திருக்கும். உலக வரலாறு உள்ளூர் வரலாற்றோடு இணைந்தால் பல மாற்றங்களுக்கும் புரட்சிக்கு அடிப்படை காரணியாக இருக்கும். அந்தவகையில் வரலாற்று ஆய்வாளர்களால் பொதுவாக அழைக்கப்படும் 'கொங்குநாடு' என அறியப்படும் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், திண்டுகல் கேரள எல்லையில் உள்ள பாலக்காடு இவைகளே. இந்த நிலப்பரப்பினை நொய்யல் நதியே பிரிக்கிறது. இதனால் வடகொங்கு, தென்கொங்கு என நிலத்தின் வாயிலாக பிரிந்து வரலாற்று ரீதிகாகவும் தனித்துள்ளது. 

தென் கொங்கு நாட்டில் வியஜநகர ஆட்சியாளர்கள் பாளையப்பட்டுகள் அமைத்தனர். இதில் வளம்கொண்டுள்ள பகுதியாக இருப்பவற்றில் தளி பாளையமும் ஒன்று. கொடைக்கானல், திருமூர்த்தி மலையில் உற்பத்தியாகும் சின்னாறு, ஆம்புருனை (அமராவதி) நதிக்கரையில் அமைந்திருந்தது இந்த பாளையம். 

        சுமார் 1770ல் துவங்கிய முதல் விடுதலைப்போராகக் கருத்தப்படும் பாஞ்சாலங்குறிச்சி, நெற்கட்டும்சேவல் போருக்கு அடுத்து பிரிட்டீஷாருக்கு அடிபணியாது அழிவை சந்தித்தது தளி பாளையப்பட்டு. அதன் வரலாற்றை கோயில்களாக, கல்வெட்டாக, செப்பேடாக, மக்கள் வழிப்பாட்டு சடங்காக, பிரிட்டீஷ் ஆவணங்களில் இப்பாளையம் தனது பெருமையான வீரசெயல்களின் இருப்பைத் தக்கவைத்துள்ளது. ஆனால் பளையத்தின் கோட்டை கொத்தளத்தை இருந்த இடம் கூட தெரியாமல் பிரிட்டீஷ் பிரங்கிகள் தகர்த்து விட்டது.

மூன்று ஆனை முதுகின் அகளத்தை விட பெரியதான கோட்டை சுவரின் அடிப்பாகம் மட்டுமே சாட்சியாக பார்க்கலாம். இந்த நூலாசிரியர் இவ்வரலாற்றை கடும் சிரத்தை எடுத்து கள ஆய்வில் தொகுத்துள்ளார் என்பதை வாசிப்பாளன் உணர்ந்து கொள்வான்.

  குறிப்பாக திருநெல்வேலி பகுதியில் கரையாளர் என்பது சமூக தகுதியாக பட்டமாக இன்றும் பார்க்கப்படுகிறது. 'ஆற்றை விட சிறியதாகவும், கால்வாயினை விட சற்று பெரியதாகவும்'' உள்ளதே கரை என்பதற்கான பொருள் என்பதற்கான விளக்கம் மிகசரியானது. இக்கரையை வைத்து எல்லை பிரித்து ஆளும் நபராக இருப்பவனே கரையாளர்.

அடுத்து மன்றாடியார் இது சேர அரசர்கள் கொங்கு நாட்டை ஆண்ட போது நிலத்தை உழுதவர்களின் தலைவனுக்கு மன்றாடியார் என்று பொருள். இந்த மன்றாடியார் பட்டம் குடும்பன் என்ற பள்ளர், கோனார், பறையர், வேட்டுவர், குறவர், ப்பிராமணர் போன்ற குலத்தினர் மன்றாடியார்களாக இருந்துள்ளனர் என்பதை சான்றுரைத்து துவக்குகிறது நூல்.

தென் கொங்கு நாட்டில் நாடுகளை குறிப்பிட்டுள்ளதில் கோயம்புத்தூர் என்பது போரூர் நாடாக இருந்ததையும், ஆனைமலையை உப்பற்காடு என்பதை சொல்லுகிறது நூல். அங்கு வசிக்கும் பழங்குடிமக்கள் ஆனைமலையை இன்றும் உப்பற்காடு என்றும், இது சேர நாடு என்றும் சொல்லுவதை கேட்கலாம். ஆனைகள் நிறைந்த மலைப்பகுதிகளை  சங்க இலக்கியத்தில் உப்பற்காடு, கடம்மலை என்று குறிப்புள்ளது. இச்சொல் இன்றும் புழக்கத்தில் உள்ளது வியப்பாக உள்ளது.

இன்று திருப்பூர் நகரமாக அறியப்படும் நல்லூர்நாடு கொங்கு நாட்டின் தலைமையிடமாக அன்று இருந்தது. பொது ஆண்டிற்கு பின்பு 12ம் நூற்றாண்டில் பாண்டியர்கள் ஆட்சியின் போது கம்மாளர்கள் செருப்பு போட, குடை பிடிக்க போராடியும், வேண்டுகோள் விடுத்தும் உரிமையைப் பெற்றுள்ளனர். இதற்கான அரசஆணை திருப்பூர் மேற்கே இருபதாவது கிலோமீட்டர் தூரத்திலுள்ள கொங்கீஸ்வரர் கோயிலில் கல்வெட்டு பதிவிடப்பட்டுள்ளது. இச்செய்தியை தேடி பதிவிட்டுள்ளார். இச்செய்தி ஒவ்வொரு குலங்களும் தங்களது உரிமையை பெற போராட வேண்டுயுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

 ஹைதர் அலி காலத்தில் அதன் பின்னர் அவரது மகன் திப்புசுல்தான் காலத்தில் மைசூர் அரசுக்கு கீழ் கொங்கு இருந்துள்ளது. மைசூர் உடையார் பிரிட்டீஷாருடன் இணக்கமான பின்பு திப்புவின் தனி அரசாங்கத்தின் பிடியிலும் கொங்கு மண்டலம் முழுழுவதும் இருந்துள்ளது. கொங்கு நாடு ஹைதர் அலி ஆதிக்கத்தின் கீழிருந்தபோது நிலங்கள் அளவை செய்யப்பட்டது. அவர்கள் காலத்திலே பியூன் என்ற பதவி வந்துள்ளது. பியூன் பதவி இன்று இழிவாக பார்க்கப்படுகிறது. ஆனால் அன்று துப்பாக்கி ஏந்தி வரி வசூல் செய்திடும் அதிகாரம் படைத்தவர்கள் என்பதை தெளிவாக பதிவிட்டுள்ளது நூல். நில வசூல் தமிழ் சாதிகள் இருந்த இடத்தில் பூல் பாண்டி, அம்பலம் என்ற பதிவியினரே வசூல் செய்துள்ளனர். இவர்கள் தமிழர்கள். தெலுங்கு மக்கள் வாழும் இடத்தில் கோடாங்கி நாயக்கர், பூசாரி கோடாங்கி நாயக்கர்கள் வரி வசூல் செய்துள்ளனர். அரிகாரர்கள் என்ற பதவி ஒற்றர்களுக்கானது, இன்றும் புழகத்திலுள்ள கட்டுக்குத்தகை, கட்டுபடி போன்ற செய்திகள், கம்பளம் என்பது சபை தர்பார் என நூலாசிரியரின் தேடி பொருள் தந்தவிதம் மெச்சும்படியாக உள்ளது.

ஹைதர் அலி கொங்கு நாட்டை பிடித்த போது திண்டுக்கல் தான் தலையிடமாக இருந்துள்ளது. அதன் பின்னர் பிரிட்டீஷார் பிடிக்கு வந்த போது மதுரைக்கும் சேர்த்து திண்டுக்கல் தலைமையிடமாக இருந்துள்ளது.

பிரிட்டீஷாரை எதிர்த்த கன்னிவாடி பாளையக்காரர் அப்பயநாயக்கர், அவரது துணைப்படைத்தளபதி தேவதானப்பட்டி பூசாரி கோடாங்கிநாயக்கர் தனது ஆனையூர் கள்ளர் படையுடன் சேர்ந்து பிரிட்டீஷாருடன், ஆனையூர் கண்மாயில் போர் நடந்தது. அங்கு கைது செய்யப்பட்ட கோடாங்கி பூசாரி நாயக்கர், அப்பயநாயக்கர், கள்ளர் படையினர் பலரும் தூக்கில் போடப்பட்டனர். மதுரை மாவட்ட மேலூர், ஆனையூர் கள்ளர்கள் திருநெல்வேலி மாப்பிள்ளை வன்னியன், இராமநாதபுரம் கலியாணித்தேவன், மேலப்பன், சென்னப்ப செட்டி, ரங்கப்ப முதலி, முமகது மண்ஹான், அப்துல்காதார், சோடா முகமது, சுப்பாராவ், பீர் முகமது, போன்ற 160 விடுதலை வீரர்கள் கோவை, தாராபுரம் வீதிகளில் 160 பேர் தூக்கில் போடப்பட்டுள்ளனர்.  இப்படியாக பல நூறு பாத்திரங்கள் விடுதலைக்காக உயிரை மாய்த்த தகவல்களை தேடிதேடி பதிவிட்டுள்ளது நூல்.

தளி பாளைப்பட்டில் பள்ளர்களும், மாதாரிகளும், கம்பளத்து நாயக்கர்களும், வேட்டுவகுல (கவுண்டர்) பெரும்பாலும் படை வீரர்களாக இருந்துள்ளர். போன்ற செய்திகளுக்கு சான்றுகளை தொகுத்துள்ள விதத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.

முதல் விடுதலைப்போரில் பாஞ்சாலங்குறிச்சிக்கு தளியிலிருந்தே பெரும்படை போனது. பாஞ்சாலங்குறிச்சி அழிவிற்கு பின்பு, சிவகங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்களின், திப்பு இவர்களின் கூட்டின் முக்கியமான நிகழ்வுகள் பெரும்பாலும் தளி பாளையப்பட்டு எல்லையில் உள்ள ஆனைமலை காடுகளிலே நடந்தேறியுள்ளதை பிரிட்டீஷார் குறிப்புகள் மூலம் தெளிவுபடுத்துகிறார் ஆசிரியர்.

திப்பு மறைவிற்கு பின் வடகொங்கு நாட்டு பிரிட்டீஷார் வசம் போனது. பேரூர் நாட்டில் பிரிட்டீஷார் பிரிட்டீஷார் ஸ்காட்லாந்த் அதிகாரிகளை வைத்து அளவை செய்துள்ளனர். இவர்களின் முறைக்கு தங்கொவ் ஆகும். இதுவே பின்னாலில் வருவாய்துறை மூலம் இனாம் நிலங்களுக்கு  தர்காஸ் என்று குறிப்பிட்டார்கள் என்ற செய்திகள் வியப்பை ஏற்படுத்துகிறது. கோவையில் நூற்பு தொழிலில் ஏற்பட்ட மாற்றத்திற்கான வித்து இங்கிருந்து தான் துவங்கியது என தெளிவுபடுத்துகிறது நூல்.

                                      ஜம்பு தீவு பிரகடனம்

 பிரிட்டீஷார் எதிர்ப்பினை பலமான கூட்டமைப்பு எந்தளவுக்கு இருந்தது என்பதை இதுவரை எந்த நூலுல் சொல்லாத தரவுகளை சொல்லுகிறது. திப்பு நான்காம் கருநாடகப்போரில் இறந்த பின்பு அவரது படைப்பிரிவினர் பலர் பிரிட்டீஷ் மற்றும் பிரஞ்சுக்காரர் படைகளில் சேர்ந்தார்கள். இதில் விருப்பம் இல்லாத சிலர் குறு நிலப்பரப்பை ஆண்டனர். அவர்களின் மையமானவர்  துண்டாஜிவாக். இவர் திப்புவின் குதிரைப்படை தளபதியாகவும் மெய்காப்பாளனாவும் இருந்தவர். இவர் பிரிட்டீஷாரை எதித்துவந்தார். இவரை கூட்டணியில் சேர்க்க தூது அனுப்பப்பட்டது. அவரது உதவி ஒருமுறை கிடைத்தது. ஆனால் கோவையிலிருந்த பிரிட்டீஷ் படை முகாமினை தாக்க திட்டமிட்ட தகவல் கசிய படைத்தலைவர்கள் பலரும் சிறைப்பட்டனர். படை வீரர்கள் சிதறி ஓடினார்கள்.

இதனால் தளிப்பாளையத்தில் பதுங்கியிருந்து படைக்கு வழிநடத்திய ஊமத்துரை போன்றோர் தளிகாட்டுக்குள் இருப்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்தனர் பிரிட்டீஷார். இவர்கள் படைகள் தழிஞ்சி மலைக்குள் வழி அறிந்து வருவதாலும் பீரங்கி தாக்குதலை எதிர் கொள்ளும் அளவிற்கு இவர்களிடம் பீரங்கி எண்ணிக்கை குறைவானதாலும் படைகள் சிதரியது. பிரிட்டீஷாரின்  பாளைக்காரர்களின் படையிலிருந்தவர்களுக்கு நிலம் கொடுப்பதாக அறிவித்தனர். இதனால் காவல்காரர்கள், அரிகார்கள் கூட்டம் கூட்டமாக பிரிட்டீஷ் படையில் சேர்ந்தனர். இந்தப்பணியை துரிதமாக செய்து கொடுத்தவர் தளியில் பாளையப்பட்டு அனுமதியுடன் தங்கியிருந்த க்ஷ்இதை அறிந்த தளி பாளையத்தலைவர் எத்தலப்பநாயக்கர் பாதிரியாரை தூக்கி தொங்கவிட்டார். இதனால் கடும் கோபமான பிரிட்டிடீஷார் கோட்டை கொத்தளம் அனைத்தையும் பீரங்கியால் நொறுக்கி சாம்பளக்கி ஆனைமலை காடுகளை தீயிட்டனர்.

ஒரு ஆய்வு நூல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முழு தகுதியுள்ள நூல் என்பதைத்தாண்டி பல்கலை கழகத்தில் பாடமாக வைக்க வேண்டிய நூலாகவே நான் நினைக்கிறேன்.



Friday 8 May 2020

மலைகளை பேசவிடுங்கள் 'மௌனத்துக்கு கீழே குமுறல்கள்'

  •                                    நூலதிகாரம்

  • நூல் ; மலைகளை பேசவிடுங்கள்
               'மௌனத்துக்கு கீழே குமுறல்கள்'  

  • ஆசிரியர் ; மல்லியப்புசந்தி திலகர் 

  • ''மனிதர்கள் பண்டங்களைப்போல் மாற்றம் செய்யப்படுவது மன்னர்கள் ஆட்சியில் மட்டுமல்ல மக்களாட்சிலும். இதனால் தான் நாடற்றவர்களை நாடெங்கும் உருவாக்குகிறார்கள்'   - மல்லியப்புசந்தி திலகர் - 


  • நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கோயில் திருவிழாவில் திரைப்பட பாடல் இசைதட்டு போல் வட்ட தட்டுகளில் படம் வரைந்து அதை சுற்றி விடுவார்கள். அதை சுற்றி நிற்பவர்கள் ஒவ்வொரு படத்திற்கும் ஒருவர் பணம் கட்டி இருப்பார். சுற்றிய தட்டு தானாக நிற்கும் இடத்தில் உள்ள படத்திற்கு பணம் கட்டியவர் வெற்றி பெற்றவராக அறிவிப்பார் இசைத்தட்டை சுற்றியவர்.  பணம் கட்டிவர்கள் பணத்தை மொத்தமாக எடுத்து அதில் ஒரு பங்கினை தட்டினை சுற்றி விடுபவர் வைத்துக்கொண்டு வெற்றி பெற்றவருக்க்கு மீதிப்பணத்தைக்கொடுப்பார். 


  • இவர்களை 'பார்மாகாரங்க'. இங்கிருந்து போய் அங்க பிரச்சனையாகி மறுபடியும் நம்மவூருக்கே வந்துட்டாங்க பிழைப்பு தெரியாமல் இப்படி வேலை பார்க்க அரசாங்க அனுமதிச்சிருக்கு' என சொல்லுவார்கள். பின்னாலில் இந்த விளையாட்டை சூதாட்டம் என தடை செய்தனர்.

  •  ''பிரிட்டீஷார் பர்மா இலங்கை போன்ற நாடுகளுக்கு தமிழர்களையும் மிகக்குறைவாக வடமாநிலத்தவர்களை பிடித்து சென்று காபி, தேயிலை இரப்பர் தோட்டங்களில் பணியாட்களாக குடியமர்த்தினர். 1960 காலங்களில் பர்மாவில் ஏற்பட்ட இரணுவ புரட்சி  காரணமாக தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டு அகதிகளாக தமிழகத்தில் வந்தார்கள். இவர்களில் பொருளாதார பலமில்லாதவர்கள் இப்படியான சூதாட்டங்களில் ஈடுபட்டனர்'' என்ற செய்திகள் அறிந்திருப்பீர்கள். இந்த மக்கள் குடியேற்றறப்பட்ட பகுதி ''பர்மா காலனி'' என்று அழைத்தார்கள். கால ஓட்டத்தில் இப்பெயர்கள் மறைந்து விட்டது. அந்த மக்களும் தங்களது உறவுகளை கண்டறிந்து தமிழ் சாதிகளுடன் கலந்து விட்டனர். பர்மாவிலிருந்து வந்த மக்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் பராசக்தி. ஆனால் இந்தப்படத்தில் பர்மா அகதிகளில் வலியை சொல்லவில்லை. அது வேறு வடிவத்தில் பேசியது. 

  •  அதற்கடுத்து 1970ல் துவங்கி 1980 காலங்களில் இலங்கையிலிருந்த  பெருவாரியாக மக்கள் தமிழகமெங்கும் குடியேற்றப்பட்டார்கள். இவர்கள் குடிறேற்றப்பட்ட இடம் 'சிலோன் காலனி'. இவர்கள் ஏன் வந்தார்கள் என்ற கேள்விகளை பள்ளி,கல்லூரிகளில் பாடத்தில் துணைப்பாடமாக வைத்திருந்தால் தமிழக அரசியல் கட்சிகளை நாம் பார்க்கும் பார்வை வேறு விதமாக இருக்கும். அதனால் தான் என்னவோ வரலாற்றை மறைத்து அம்மக்களின் அழுகுரலாக, அவலமாக காட்டி நம்மிடம் இரக்கத்தை மட்டும் காட்டவைத்துள்ளார்கள்.

  • ''இந்திய விடுதலைப்போராட்டமாக 1760ல் பிரிட்டீஷாரை எதிர்த்து துப்பாக்கியை தூக்கி மண் தமிழகம். அதில் குறிப்பாக தென் தமிழகத்து பாளையப்பட்டுகள். பிரிட்டீஷார் இப்பாளையங்களை அழித்தனர். பாளையப்பட்டு தலைவர்களை தூக்கில் போட்டாலும் மக்களின் எழுச்சி குறையாமல் இருந்தது. இம்மக்கள் 'மீண்டும் பாளையம் கட்டுவார்கள்' என கணக்கிட்டனர் பிரிட்டீஷார்.
    இந்த மக்களை கைது செய்து அல்லது அதற்கான சூழலை உருவாக்கி பஞ்சம் என்ற பித்தலாட்ட வரலாற்றை கட்டமைத்து தனது ஆட்சி அதிகாரத்திற்குள்பட்ட கடல் தாண்டிய தேசங்களுக்கு பண்டங்களைப்போல் ஏற்றுமதி செய்யப்பட்டனர். 1806 துவங்கிய மனித பண்டமாற்று ஏற்றுமதி 1932 வரை தொடர்ந்தது. இப்படி பண்டமாக ஏற்றுமதியானவர்கள் தான் இந்த சிலோன் காலனி மக்கள். இவர்களுக்கு பின்னால் இந்திய விடுதலை வரலாற்று புதைக்கப்பட்டுள்ளது'' என பதிவிட்டுள்ளது (Subaltern Lives) சப்பால்டன் லைவ் இன் கலோனியல் பிரிடு, மற்றும் சவுத் இந்தியன் ரிபெல்லியன் (South Indian Rebellion - The First War of Independence) என்ற நூல்கள். 
    பிரிட்டீஷ் ஆட்சியில் இலங்கை தேயிலை தோட்ட பணியாளர்களான மலையக தமிழர்களின் வலியை 'மலைகளை பேசவிடுங்கள்' எனற தலைப்பில் மக்களின் வலியை பேசியிருக்கிறார் நூலாசிரியர். இவர் இலங்கை தமிழர்கள் பகுதியின் பாரளுமன்ற உறுப்பினர் என்பதை விட தேயிலை தோட்ட தொழிலாளியின் மகன் என்பதை நூலில் பதிவிட்டுள்ளார்.  
    இலங்கை தமிழர்கள் தனி ஈழம் கேட்டு போராடி மாய்ந்தார்கள். இவர்கள் வலி, துயரம் தமிழக மக்களிடம் நீங்காத வடுவை ஏற்படுத்தி விட்டது. இதனுள் காலனி ஆட்சியில் தமிழகத்திலிருந்து கொண்டு சென்று தேயிலை தோட்டத்தில் குடியேற்றப்பட்ட தமிழர்களின் வலியை நாம் பேசியிருந்தாலும் 'அரசியல் கட்சிகளின் விவாதப்பொருளாகலாக்கபடாதால் நாடற்றவர்களாக அகதிலாக்கப்பட்டனர். காலனி ஆட்சி முடிந்தாலும் 'காலனி' மக்களாக அறியப்படுகிறார்கள்'  என்பதை அடித்துப்பேசுகிறது நூல்.
    இலங்கையில் வளம் தேயிலை, காப்பியால் ஆனது. இந்த செல்வத்தை தங்களது வேர்வையால் உதிரத்தால் கொட்டிக்கொடுத்தவர்கள் இந்திய தமிழகர்கள். இவர்களின் வலியினை மலையகப்பாடல்கள் என்ற தொகுப்பு பல்கலைகழக ஏடுகளாக, ஆய்வாக மட்டுமே உலா வருகிறது. அதே போல் பேராசியர் இரவீந்திரனின்  சாதி தேசம், கோல்டன் டீ என்ற ஆங்கில நூல்கள், நாடற்றவர்கள் என புதினம் போன்வவைகள் பேசினாலும் பொதுவெளியில் பெரிதாக விவாதிக்கப்படவில்லை. இதற்கு பல அரசியல் காரணங்கள் உள்ளன.
    ''தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அரசின் குடிகள் கிடையாது அவர்கள் கம்பெனின் ஆட்கள். அவர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தும் கம்பெனி கோப்புகளே (RECORD) பேசும். இவர்களின் கோரிக்கைகள் நேரடியாக அரசிடம் சொல்லமுடியாது. நமது அருகாமையில் இருக்கும் கொடைக்கானல், நிலகரி, மூணாறு பகுதி தேயிலை தோட்டத்தின் அழுகுரல்கள் தற்போது தான் வெளிவந்துள்ளது. ''மலைக்குள் கத்துபவன் குரல் மலைக்கு அவனுக்கு மட்டுமே கேட்கும்' என்பார்கள். இதில் கடல் கடந்தவர்களின் குரல் மலைகளை பேசவிடுங்கள் என்பதால் கேட்கிறதோ என்று தோன்றுகிறது.
    1800ல் இலங்கை மலைக்குள் குடியேற்றப்பட்டவர்களின் குரல், இந்தியாவிலிருந்து  1900ல் போன நடேசஅய்யர் மீனாட்சியம்மாள் தம்பதியார் புண்ணியத்தில் தொழில் சங்கம் கட்டமைக்கப்பட்டு மெல்ல மெல்ல வெளியுலகத்திற்கு கேட்டுள்ளது. காலனி ஆட்சியின் போது  இலங்கையில் நடந்த தேர்தல்களில் குடியுரிமை நிராகரிக்கப்பட்டதால் மலையக மக்கள் வாக்களிக்க முடியாமல் இருந்தனர். நடேசஅய்யரின் தலைமையிலான தொழில்சங்கத்தின் கோரிக்கையால் வாக்களிக்கும் உரிமை கிடைத்துள்ளது ''.
    இலங்கையில் உருவான இந்திய இலங்கை காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக ஜவர்கர்லால் நேரு அவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் மலையக மக்களுக்கு குடியுரிமை வழங்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தக்கோரிக்கையை இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள் எதிரிப்பு தெரிவித்துள்ளனர். அதையும் மீறி பிரிட்டீஷார் இம்மக்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளனர்.
    இந்த குடியுரிமை இலங்கை விடுதலை அடைந்தவுடன் பரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் திரு. நேருவின் விடா முயற்சியால் கோரிக்கையாக பதிவாகியுள்ளது. ஆனால் குடியுரிமை கிடைக்கவில்லை. நேரு அவர்கள் இறந்த பின்னர் பிரதமராக பதவியேற்ற திரு.லால்பகதூர் சாஸ்திரி - சிறீமா  ஒப்பந்தமே மலையக தமிழர்கள் வாழ்க்கையை அடியோடு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதில் சுமார் பத்து லட்சம் மக்கள் இந்தியாவிற்கு கட்டாயமாக நாடு கடத்தப்பட்டனர்.

    300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக சொந்தங்களை இழந்து நாடு கடத்தப்பட்டவர்கள் இங்கு வந்து தனது சொந்தங்களை தேடுவதைப்பார்த்தவர்கள் மட்டுமே அவர்களின் வேதனையை உணர்ந்து கொள்ள முடியும்.

    இப்படி வந்தவர்கள் தமிழகமெங்கும் சிலோன் காலனி என்ற பெயரில் இருக்கிறார்கள். செங்கல்பட்டு முகாமில் இருந்தவர்கள் ''நாங்கள் குளிர் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். இந்த வெயில் தாங்க முடியவில்லை' என அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை வைத்த போது வயதில் மூத்தவர்கள் வெயில் தாங்காமல் பலர் மாண்டனர் இச்செய்திகளைக்கூட பத்திரிக்கைகள் பதிவு செய்யவில்லை. இம்மக்களின் கோரிக்கையை ஏற்ற அரசு பிரிட்டீஷார் போல் மீண்டும் தோட்ட முதலாளிக்கு பண்டமாற்றம் செய்தனர். கொடைக்கானல் நீலகரி மலையில் உள்ள தோட்ட முதலாளிகள் இவர்களை வாங்கினார்கள். இவர்கள் குடியமர்த்தப்பட்ட இடத்திற்கு கொத்தடிமைகள் கூடாரம் (BONDED LABOUR SHED) என பொதுவெளியில் தைரியமாக பெயர் பலகை வைத்திருந்தனர். இச்செய்திகளை 1984 காலங்களில் வெளி வந்த ஜூவி , இந்து ஆங்கிலம் பத்திரிக்கை படித்தவர்கள் அறிந்திருப்பார்கள்.

     இதன் பின்னர் இந்த மக்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை சிறிதளவு உருவாக்கி கொடுத்தது. அம்மக்களின் கடுமையான உழைப்பால் தற்காத்துக்கொண்டுள்ளனர். இது இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்டவர்களின் நிலை. ஆனால் இலங்கையில் உள்ளவர்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை படம் பிடித்து காட்டியுள்ளார் நூலாசிரியர்.

  • 'மலையகத்தமிழர்களை இந்திய தமிழர்கள் என்றும், பூர்வீக தமிழர்களை இலங்கை தமிழர்கள் என்றும் சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டனர். அதே போல் இந்த வேறுபாட்டை பத்து எடுத்துக்காட்டுகளில் பதிவு செய்து விளக்கி, ஈழ இலக்கியம் , மலையக இலக்கியம் என்ற பதிவுகளை குறிப்பிட்டுள்ளது நூல். 

  • மலையத்தில் பூர்வீகத்தமிழர்கள் எப்படி குடியேறினார்கல். பிரிட்டீஷார் போன பின்பு தேயிலை தோட்டங்கள் கூட்டுறவு ஸ்தாபன மாறியது. அதிலிம் மலையகத்தமிழர்கள் ஏமாற்றப்பட்ட விதம். புகையிலையும் சுருட்டுக்கும் எப்படி? மலையக மக்களின் அங்கமாக மாறியது. இந்த வியாபாரத்தில் குடியேறியவர்கள் யார்?. இந்தியாவில் சாதி கட்டமைக்கப்பட்டது போல் இலங்கையில் இனம் கட்டமைக்கப்பட்ட வரலாறு. அதில் மலையகத்தமிழர்கள் தனி இனமாக பார்க்கப்பட்டது, தனி ஈழம் பேசியவர்கள் மலையக மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காதது. இது குறித்த பாரளுமன்றப் பதிவுகள். ஈழப்போருக்கு முன் மலையக மக்கள்  வன்னிப்பகுதிக்கு வந்த விதம். போரில் நாடற்றவர்களானவர்கள், விடு அற்வர்களாக வன்னியில் இன்னும் பல்லாயிரம் பேர் உள்ளவை, போன்றவற்றை தொப்புள் கொடி உறவான நம்மை கேள்வி கேள்வி கேட்கிறது நூல்.

  • இலங்கை - இந்தியா விடுதலை பெற்ற போது 'மலையகத்தமிழர்களை இந்தியாவுக்கும் அனுப்பலாம் நாங்கள் ஏற்போம்' என ஒற்றை சரத்தை மட்டுமே வைத்து விளையாட்டை துவக்கியது இலங்கை அரசு. இது குறித்த சிறிமா அரசின் அறிக்கை போன்றவை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளாக உள்ளது.

  • பாகிஸ்தான் பிரிந்த போது குடியுரிமை விசயத்தில் கவனம் செலுத்திய இந்திய அரசியல் கட்சிகள் இலங்கை மலையகத்தமிழர்கள் விசயதில் கணக்கில் எடுத்துக்கொள்ளாதன் விளைவு என்ன ?,. பாகிஸ்தானை சேர்ந்தவர் இலங்கையில் அதுவும் தமிழர் பகுதியில் பாரளுமன்ற உறுப்பினராக இருந்தது போன்ற செய்திகள் நாம் அறியாதவை.
    சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தந்தத்தின் 'மலையகத்தமிழர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியாவிற்கு நாடுகடத்தப்படுவார்கள்' என்கிறது சரத்து. 'இருப்பினும் மலையகத்தில் வாழலாம்' என்ற கோரிக்கையும் இலங்கை அரசு ஒப்புதல் கொடுத்து விண்னப்பங்களை வாங்கியது. அதில் பலஆயிரம் நிகாரிக்கப்பட்டலும் ஏற்றவைகள் கிடப்பில் உள்ளது. போர் சூழலில் இலங்கை தமிழர்கள், மலையகத்தமிழர்கள் பலரும் தமிழகத்தில் உள்ளனர் போன்ற செய்திகளை விரிவாக பேசியுள்ளது நூல். அண்டை நாடு மட்டுமல்ல நமது உணர்வோடும் தமிழக அரசிலோடும் கலந்தவர்கள் இலங்கை தமிழர்கள். அவர்கள் குறித்த தகவல்களை அம்மண்ணின் மைந்தனே திரட்டியுள்ளார்.

      
           
    ­

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...