Search This Blog

Wednesday 23 June 2021

சித்த மருத்துவமும் வனச்சட்டமும்

 

                                                    சித்த மருத்துவமும் வனச்சட்டமும் 

 

வணக்கம் நண்பர்களே தோழர்களே.....

காடுகளில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பல்லாயிரம் மூலிகள் தானாக முளைத்திருக்கும். இதற்கான காரணம் இங்குள்ள கனகனப்பான வெப்பம், மறைவு,  மறைவான சிறு சிறு குத்துகாடுகளான குதுவல் காடுகள், வறட்சியுடன் மாலை, இரவு வேளைகளில் வீசும் இதமான குளிர்ந்த காற்று. 

 

இம்மலைகளிலிருந்து உணவாகவும் மூலிகையாகவும் பயன்படும் மிளகு, ஏலம், கிராம்பூ, மஞ்சள், கரும்பு, இஞ்சி, லவங்கம் இப்படியானவை ஒரு புறம். கழற்சிக்காய், தெள்ளுக்காய், தேத்தாவிதை, கடுக்காய், மச்சக்காய், மாசிக்காய், தாண்றிக்காய், பேய் பீக்கை, பேப்புடல், காட்டு மாங்கொட்டை, காட்டு நொச்சி, கருநொச்சி, காட்டுப் புளிச்சி, குங்கிலியம், காட்டு மல்லி, யானைத்தந்தம், பனை வேர், பனை இலை, பனைப்பூ, வெப்பாளை அரிசி, மூங்கிலரிசி இப்படியான விதைகள், அதிமதுரம் போன்ற மரக்கிளைகள் மரத்தின் பட்டைகள், பாசம் என பலாயிரம் மூலிகளைகள், மயில், பச்சைக்காடை இறகு, விலங்குகளின் நகம், அதன் மண்டை ஓடுகள், சில விலங்குகளின் ஊண், சாரைப்பாம்பின் கொழுப்பு, நல்லபாம்பின் நஞ்சு எனப்பயன்படுகிறது. 

 விந்திய மலை பனியில் விளையும் தேசாவரம், பறங்கிப்பட்டை, கோஷ்டம், நாபி இவைகளையெல்லாம் பிரிட்டீஜ் ஆட்சி துவங்கிய 1857ல் வனச்சட்டம் கொண்டு வந்து தடுத்து விட்டார்கள். அதன் பின்னர் 1882 வன உயிர் சட்டம் என கடுமையான சட்டம் கொண்டு இந்திய ஒன்றியத்தின் மனித அறிவை அழிக்கத்துவங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக அறிவு அழிவு என்பது படிப்படியாக அழித்து தொடைத்து வருகிறார்கள் நமது ஆட்சியாளர்கள்.

 சித்த மருத்துவம் என்ற தமிழ் மருத்துவம் மட்டுமே இந்திய ஒன்றியத்தில் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. பிறமாநிலங்களில் ஆயுள் வேதம் இருக்க தமிழகத்தில் மட்டுமே தனியான மருத்துவத்தை தமிழ் மொழி காத்து வருகிறது. 

 தமிழ் மொழியின் செழுமையை அறியாத திராவிடர் கழத்தார், பொதுவுடமை கட்சியினர் இம் மருத்துவத்தை இழிவாகப் பேசியும், எழுதியும் வருவது அவர்களின் அறியாமை அல்ல. அறிந்து தெளிந்து காட் (GATTE) ஒபந்தக்கைகூலிகள் என்பதை உறுதி செய்வதாகவே கருத முடிகிறது.

சித்த மருத்துவம் தாது பொருள்களாகவும், மூலிகைகளாகவும் மருத்து செய்யப்படுகிறது. பெரும்பாலும் அந்தந்தத்த பகுதியில் கிடைக்கும் பொருள்களை வைத்தே மருந்து கண்டறிந்துள்ளனர் சித்தர்கள். இதில் மைய பங்கு வகிப்பது மான் கொம்பு, தேன், ஆமை ஓடு, பவளம், பாசிகள், கடல்நுரை, முத்து, விளையாத பலகரை என்ற சோவி, சிப்பியின் ஓடு, சங்கு, கடல் நண்டு மண்ணில் புதைந்து உருவாகும் கல்லானது நண்டுக்கல், இவைகளையெல்லாம் வனச்சட்டம் மூலம் தடை செய்துள்ளனர்.

இந்த மருத்துகள் பெரும்பாலும் பற்பமாக செய்து பயன்படுத்தப்படுகிறது. மனித உடல் உள் உறுப்புகளை சமநிலை கொண்டு வருவதற்கு பயன்பதரக்கூடியது இவை. மூலம், வயிற்றுப்போக்கு, இளப்பு இது போன்ற நோய்களுக்கு பயன்தரக்கூடியது என்பது அனுபமாக அறிந்த ஒன்று.

பச்சஓந்தி தைலம்; சன்னி, வாதம், கைகால் முடக்குதல் இவைகளுக்கு மேல் பூச்சு மருத்தாகப்பயன்படும் பச்ச ஓந்தி தைலம் மிக முக்கியமானது. இந்த நோய்க்கு நவீன மருத்துவத்தில் பெரிதான மருந்துகள் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பஞ்ச ஓந்தியை தடை செய்ததால் இம்மருந்து செய்வது தடைபட்டுப்போனது. பூமியில் உயிரினங்கள் தோன்றிய போது தோன்றியது பஞ்ச ஓந்தி என உயிரியலர் கருதுகின்றனர். இதனால் இந்திய மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இந்த விலங்கை பிடிக்க, கொல்ல தடை  போட்டுள்ளனர். இவ்விலங்கினை யாரும் உணவிற்காக வேட்டையாடுவதில்லை. ஆண்டிற்கு 150க்கும் மேல்பட்ட முட்டைகளை இட்டு மூன்று முதல் நான்கு மாதம் வரை கற்குவியல், குளிர்ச்சியான இடங்களில் உள்ளே தங்கி தனது இனத்தை விருத்தி செய்கிறது. இதன் மருத்துவப்பயன்பாடு என்பது மிகமிகக்குறைவே. ஆனால் தடை போட்டதன் விளைவாக இம்மருந்து ஏட்டளவிலே உள்ளது.சிலர் ஓந்திய வறண்ட பகுதி கரடுகளில் வாழும் கரட்டான் என அறியப்படும் ஓணாணை தைலமாக செய்து வழங்கி வருகிறார்கள்.

மான் கொம்பு பற்பம் + மான் தோல் ; இரத்த அழுத்த அதிகரித்தல், மாரடைப்பு, ஆறாத வயிற்றுப்புண், தோல் நோய்களுக்கு மான் கொம்பு பற்பம் பயன்படுகிறது.

மானின் கொம்பு முற்றினால் தானாக உதிர்ந்து விடும். இக்கொம்பு மண்ணோடு மக்கிட பலநூறு ஆண்டுகள் ஆகும் என்பது விலங்கியல். ஆனால் இதனை தடை செய்ததன் மூலம் இவர்களின்  நோக்கம் என்ன ? என்னபதை நாம் விளங்கிக்கொள்ள இயலவில்லை. கடந்த நூற்றாண்டில் உலகமே கண்டு அச்சப்பட்ட அம்மை நோய் என சூரிக்கு மான் தோல் மஞ்சள் தான் மருத்து என்பதை, பிரிட்டீஷார் ஆட்சியில் கூட்டு வைத்த கூட்டத்தின் வழி வந்த கூட்டத்திற்கு புரியாது ஏனென்றால் இவர்களின் கூட்டு GATTE என்பது அறிந்ததே.

 பவளம்; இது கடலில் உள்ள ஒருவகை மீன் போன்ற பூச்சி கருவுரும் போது வெளியேற்றும் மாசு கடலில் முளைத்துள்ள தாவரங்களில் படியும். இந்தபடிமம் பல்லாண்டுகள் காலம் விளைந்து வருவதே பவளம், இந்த மாசுகள் படிந்துள்ளது பவளப்புற்று. இதுவும் மருத்திற்கு பயன்படும். இதனை தடை செய்து விட்டனர். 

கொரோரோ என்ற காய்ச்சல் உலகளவில் அச்சப்பட்டுள்ளதற்கு காரணம், ''காய்ச்சல் கண்ட 36 மணி நேரத்தில் மூச்சு இரைச்சல், கடும் உடல் வலியை ஏற்படுத்தி, உடல் குளிர்ந்து நளிர் (சன்னி) உடன் காய்ச்சலை உண்டாக்கும். அதன் பின்னர் மூளைக்கும் முகுலத்திற்குமான செயல்பாடு குறைந்து அறுந்து விடும்''. இந்த நோயிற்கு நவீன மருத்துவத்தில் மருந்தில்லை என்று அறிந்தும் உடல் அறுவை சிசிக்கைக்கு மட்டுமே பயன்பத்தப்படும் டீராய்டு மருந்தினை கொடுக்கிறார்கள். இம்மருந்து நவீன மருத்துவத்துறையினர் ஏற்க மறுத்தது என்பது அவர்கள் அறிவித்ததே. மருந்தில்லாததால்  டீராய்டு கொடுக்கப்படும் நோயாளிகளுக்கு மேக நோய் என்ற தோல் புற்று  (பூஞ்சான்) வருகிறது. பலர் காய்ச்சலிலிருந்து மீண்டாலும் உள்ளுறுப்புகள் பாதிப்பால் மாண்டு விடுகிறார்கள்.

நளிர் காய்ச்சலுக்கு சித்த மருத்துவத்தில் பவளப்பற்பமும் அருமருந்து. பேர்கால சன்னி கண்டால் நாக்கில் இம்மருந்தினை தடவினால் நின்று விடும். உதிரப் போக்கினை உடனே கட்டுக்கொண்டு வந்து பக்கவிளைவுகளற்றதாக செயல்படும். இந்தப்பவளத்தை தடை செய்துள்ளார்கள், ஆனால் பவளம் இந்தோநேசியா, ஐப்பான் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகியது. பவளப்புற்று பூத்துக்கிடைக்கும் நமது மன்னார் வளைகுடாவில் பவளம் எடுக்க தடை என்பதே கேலிக்குறியது.

தேன்;  வனத்தில் புற்றுத்தேன், அடைத்தேன்,கொம்பந்தேன் இவைகளே சித்த மருத்துவத்திற்காக பயன்படுவது. வனத்திற்கு சிறு மகசூல் எடுக்க குத்தகைதாரர்கள் தவிர வனக்குடிகளான பளியர், புலயர், முதுவா, காடர் குடிகள் கூட வனத்திற்குள் அனுமதில்லை. இம்மக்களை 2004 சட்டத்தின் மூலம் அப்புறப்படுத்த வேண்டும். இதனால் மலைத்தேன் என்பது குதிரைக்கொம்பான விசயமே. தாது மருத்துகளான பற்பம் செந்தூரம் இவைகளுக்கு பெரும்பாலும் அனுப்பானம் தேனில் தான் கொடுக்க முடியும். லேகியம், தைலத்திற்கும் கூட்டு மருத்து தேன் தான். இதை விட முக்கியமானது தீ காயத்திற்கு முதலில் தடவ வேண்டிய மருத்து தேன். அடுத்து சுண்ணாம்பின்இளநீரில் விளக்கெண்ணை தேன் கலந்து மேல் பூச்சாக போட வேண்டும். இதனை போட்டால் வடு இல்லாமல் காயம் ஆறும்.

மண்டை ஒடுகள்; மனபிறழ்வு என்ற பைத்தியத்திற்கு நவீன மருத்துவத்தும் மட்டுமல்ல உலகத்திலுள்ள எந்த மருத்துவத்திலும் இன்று வரை மருந்து கண்டுப்பிடிக்கவில்லை. ஆனால் சித்த மருத்துவத்தில் மருந்து உண்டு. கழுதை, மனிதன், நாய் மண்டை ஓடுகளை கொண்டு வீரம் பூரம் போன்ற தாதுப்பொருள்களைச் சேர்த்து பற்பம் செய்து கொடுக்கும் மருத்துவம் பிரிட்டீஷ் ஆட்சியிலே தடை செய்தார்கள். இந்த மருத்துவம் முழுக்க முழுக்க வைணன ஆன்மீக தளங்களிலும், இசுலாமிய மார்க்கத்தளங்களிலும் மருத்தாக கொடுத்தார்கள். இதை தடை செய்ததால் மன நோயாளிகள் சாலைகளில் திரிகிறார்கள்.   

கஞ்சா அபின்; தடைகள் பல நோய்களுக்கான காரணம் என்பது மருத்துவம் அறிந்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள். இவை இரண்டும் பல மருத்துவத்தின் மூலப்பொருள்கள் என்பது அறிவியலர்கள் ஒத்துக்கொண்டது. தற்போது அதன் தடையை நீக்க ஐக்கிய நாடுகள் சபையில் மூலம் இந்திய ஒன்றியம் ஒப்பதல் தந்துள்ளது பாரட்டத்தக்கது.  

பிரிட்டீஜ் ஆட்சியில் துவக்கி வைத்த சித்தமருத்துவ அறிவின் அழிவு, பிரிட்டீஷாருடன் கூட்டு வைத்த நீதிகட்சி, திமுக, மறைமுக கூட்டு வைத்த  காங்கிரஸ் கட்சி என அனைத்து தரப்பும் சேர்ந்து அழித்து ஒழித்து விட்டார்கள்.  

 

பெயரளவிற்கு கைத்தறி இருப்பது போல சித்த மருத்துவ அறிவை ஆங்காங்கு கண்காட்சியாக வைத்துள்ளது அரசும் அதை நம்பும் மக்களும்.  

     



 

 

     

Friday 18 June 2021

தொழில் புரட்சிக்கு தொற்று நோய்! ; தொழில் நுட்பத்திற்கு கொரோனா காய்ச்சல்!

 

தொழில் புரட்சிக்கு தொற்று நோய்! ;   தொழில் நுட்பத்திற்கு கொரோனா காய்ச்சல்!                               **************************************************************************************

 

புதிய அரசுகள்  உருவாகும் போது கடந்த கால அரசுகளின் நினைவுச் சின்னங்கள், கருத்துக்கள் இவைளை அழித்தொழிப்பது வரலாறு தொற்று நடந்தேறியே வருகிறது. உலகத்தில் எங்கும் இல்லாதளவிற்கு இந்திய ஒன்றியத்திலே அதிக கோட்பாட்டாளர்கள் தோன்றினார்கள். ஆசீவகம், சமணம், பௌத்தம், சைவம் , வைணவம், சீக்கியம் இன்னும் பல. இவைகளில் அனைத்தும் உருமாறி தங்களது எல்லைகளை சுருக்கிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் கோட்பாடுகள் நம்பிக்கை குறியீடுகளாக மாறிவிட்டது எனலாம்.

 

புதிய கோட்பாட்டாளர்கள்  தோன்றும் போதெல்லாம் கருத்துக்கள் மட்டும் மாற்றியமைவதில்லை. அத்துடன் புதிய தொழில் நுட்பங்களை அமுல்படுத்திட முனைவார்கள். ஏற்கனவே இருந்த தொழில்நுட்பம் ஆட்சியாளர்களுக்கு லாபம் தருபவையாக இருந்தாலும், அத்தொழில் நுட்பத்தின் அறிவுசார் முதலாளிகளின் மறைமுக முயற்சியால் ஆட்சியதிகாரத்திற்கு சிக்கல் வரும் என்பதால் கோட்பாட்டளர்களையும், அவர்கள் கண்டெடுத்து வளர்த்த தொழில் நுட்பத்தையும் அழித்தொழிப்பார்கள். புதிய அரசு உருவாக்கி வைத்திருக்கும் நுட்பங்களை புகுத்த கண்டெடுத்த யுத்திதான் தொற்று நோய்கள் என்பது வரலாற்றுப் பக்கங்களில் மறைபொருளாக உள்ளது.

 

தக்காளி; தில்லி முகலாயர்கள் துணையோடு தஞ்சையை நாயக்கர் ஆட்சியைப் பிடித்தனர் மராட்டியர்கள். முகலாயர்களுக்கு எதிரி போல் காட்டவேண்டிய தேவை இவர்களுக்கு இருந்ததால் மதுரை நாயக்க அரசு மீது போர் தொடுத்து எட்டு ஆண்டுகாலம் ஆண்டனர். இவர்கள் கொண்டு வந்ததே தக்காளி. இதன் வருகைக்கு முன்பு புளி மட்டுமே நமது குழம்பில் சேர்மானமாக இருந்தது. புளி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருவாய் தரும். தக்காளி வருடம் முழுவதும் வருவாய்தரும் அத்துடன் புஞ்சை, நஞ்சை மேற்குக்தொடர்சி மலைப்பகுதியில் மானாவாரியாக கூட பயிரிட முடியும். தக்காளியை பயிரிட மக்களிடம் வியாபாரிகளிடம் எதிர்ப்பு வராமல் இல்லை. அப்போது பிரிட்டீஷாரின் கைப்பாவையாக மாறிய தஞ்சை மாரட்டிய அரசு கொண்டு வந்தது தான் காய்ச்சல். விவசாயிகள் விரட்டி அடிக்கப்பட்டார்கள். தக்காளி பயிரிடுவது காலப்போக்கில் பரவலாது என்கிறது வரலாறு.

 

நெசவு தறி; கைத்தறி 25 முதல் 30 % தொழில்நுட்பத்துடனும், நேபாளம், திபெத்திய தொழில் நுட்பத்துடன் 40%  எந்திரத்தை ஒத்த தன்மையுடன் 18ம் நூற்றாண்டு இறுதி வரை இந்திய ஒன்றியத்திலிருந்தது. இந்தத் தொழில் நுட்பத்தில் உலகளவிற்கு துணி ஏற்றுமதி செய்தனர். அரசுக்கும் மக்களுக்கும் வருவாய் கிட்டியது என்பது வரலாறு. இதனை அப்படியே அழித்தொழித்து 70% எந்திரத்துடன் 30% மனித அறிவு, உழைப்புடன் கொண்டு வந்ததே தொழில் புரட்சி. இந்த தொழில் புரட்சிக்கு சிக்கலாக இருந்தது சிறுதானியம் என்ற கம்பு சோளம், கேழ்வரகு, சாமை, குதிராவாளி, திரிவரகு, வரகு, திணை. இவைகளை பயிரிட்டவர்கள் பருத்திக்கு மாறிட நிர்பந்திக்க முடியாது. இதனால் வந்தது தான் காலாரா.  விவசாயிகள் விரட்டி அடிக்கப்பட்டார்கள் மிட்டா மிரா(ஷ்)சுககள் உருவானார்கள். இவர்களும் பருத்தி உற்பத்திக்கு ஒத்துழைக்க மறுப்பார்கள் என்பதால் பிரிட்டீஷ் அரசே நேரடியாக களத்தில் இறங்கியது. அது தான் ரயத்வாரி நிலங்கள். பருத்தி பயிரிட்டவர்கள்க்கு முன்னுரிமை அடிப்படையில் பட்டா வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது. இதை துவக்கி வைத்த புன்னியவான் தான் சர் மான்றோ. மற மறுத்த மக்களை அடிபணியவைக்த்தது தான் காலாராவும் காசநோயும்.   

 

சீனி; கரும்பிலிருந்து உற்பத்தி செய்த சக்கரைக்கு பதிலாக மனித மாட்டு எழுபுகளை சேர்த்து கண்டுபிடிக்கப்பட்டது தான் வெள்ளைச்சீனி. இதற்கான தொழில் நுட்பத்தை ஆலைகளாக கொண்டு வந்து உற்பத்தியை பெருக்கிட நெல்பயிரிட்ட பகுதிகளில் கரும்பபு பயிரிட நிர்பந்திக்கப்பட்டார்கள் பிரிட்டீஷ் ஆட்சியில்.  மின்சாரத்திற்கு அணைகள் வந்தது. காடுகள் அழிந்தது. இதற்காக வந்தது தான் பஞ்சம் பட்டினி, அதனால் வந்த நோய்களும்.

 

மணிலா கடலை; பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய பகுதி வரை தென்னிந்தியாவில் அதிலும் தமிழகத்தில் புழக்கத்திலிருந்த எண்ணைகள் நல்லெஎண்ணை, விளக்கெண்ணை, இழுப்ப எண்ணை, புன்னை எண்ணை, வேப்ப எண்ணை. இதில் உணவுக்கானது நல்லெண்ணை,  விளக்கு எண்ணை மட்டுமே. மீதம் அனைத்தும் சித்த வைத்திய மருத்திற்கானது. இதில் வெடிமுத்து என்று அழைக்கப்படும் சித்தாமணக்கு தமிழகத்தில் இருந்தது. விஜய நகர ஆட்சியாளர்கள் வருகையால் கொட்டை முத்து என்ற ஆமணக்கு தமிழகத்திற்கு வந்தது. பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் இவைகளுக்கு மாற்றாக கொண்டு வந்தது தான் நிலக்கடலை என்ற மணிலா கொட்டை. முதன் முதலில் தொண்டை மண்டலத்திலுள்ள மணல் சார்ந்த கரிசல் மண்ணில் அறிமுகம் ரயத்வாரி நிலத்தில் பயிரிடப்பட்டது. கடலை எண்ணை ஏற்றுமதிக்காக முதன் முதலாக ரயில் தண்டவாளம் உளுந்தூர் பேட்டை முதல் பாண்டிச்சேரி கடற்கரை வரை அமைத்தார்கள். இதன் பின்னரே உப்பு பருத்தி இதர ஏற்றுமதிக்கும், கண்டோமெண்ட் படையினர் மக்கள் போராட்டத்தை ஒடுக்கவே ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டது. கடலை பயிரிட கொண்டு வந்தது தான் பிளேக், பெரியம்மை.

 

இந்த நோயெல்லாம் தொழில் புரட்சிக்கு மக்கள் எதிரிப்பை சமாளிக்க கொண்டு வந்து பரப்பப்பட்டு மக்களை முடக்கிட கொண்டு வரப்பட்டவை. தற்போது வரவுள்ளது தொழில் நுட்ப புரட்சி இதற்கு சிக்குன்குன்யா,டெங்கு என முயற்சித்தார்கள் பலிக்கவில்லை. நளிர் காய்ச்சல் என்ற கொரோனாவைன கொண்டு வந்துள்ளார்கள். இந்த நளிர் காய்ச்சல் ஒன்றும் உலகத்திற்கு புதிதல்ல என்பது ஆன்மீக, அறிவியல் நம்பிக்கையாளர்களுக்கு தெரியாது அல்ல. வைரஸ் கிருமிக்கு நவீன மருத்துவத்தில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை (அக்கி வைரஸ் தவிர்த்து) என்பது அறிந்தும் தடுப்பு மருத்து போடுவதும் அதை ஆதரித்து குரல் கொடுக்கும் ஆன்மீகநம்பிக்கையாளர்கள் போல் ஆன அறிவியல் நம்பிக்கையாளர்களையும் என்ன சொல்ல.

 

2020, மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்காக 2025 வரை கொரோனா வைரஸ் காய்ச்சலை சொல்லி முடக்குவார்கள். இரண்டாயிரம் பேரை ஏற்றிச்செல்லும் ரயிலுக்கு ஒரு ஓட்டுனர் ஒரு உதவியாளர் போல இனி எட்டு வழி சாலைகளில் பேருந்துகள், சரக்கு உந்துகள் ஓடும். ஆனால் ஓட்டுனர் இருக்க மாட்டார். கல்விக்கூடங்கள் இருக்காது. நுட்ப உதவியுடன் படித்தாக வேண்டும். இந்தியாவில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியது நீதிமன்றமே. இனி ஆர்டிபீசியல் இண்டலிசென்சி மட்டுமே மனிதர்களை இயக்கும். ஏழைக்களுக்கு பதிலாக அங்கீகரிப்பட்ட கொத்தடிமைகள் மட்டுமே இனி இருப்பார்கள் இதை விஞ்ஞான பெயர் கொண்டு அழைப்பார்கள்.

'யார் வருவார், யார் மடிவார்'' என கண்ணதாசன் கவிதையைபோல் 2025 ஆண்டு முடிவெக்கும். என்ன வேண்டுமென்றாலும் செய்து தொலையட்டும் என மக்கள் மனநிலை உருவாகும் வரை நோய்கள் நிலைத்திருக்கும். 

இனி புதிய தொழில் நுட்ப முதலாளிகள் இனி ஆள்வார்கள். வரவேற்போம்.

Saturday 12 June 2021

கருத்தடை தேவையா


 

கருத்தடை தேவையா ? அறிவியல் நம்பிக்கையாளர்கள் கவனத்திற்கு
------------------------------------------------------------------------------------------------------------
 
 

பெண் மாதவிடாய் காலத்தை கணக்கிடுதல் நவீன விஞ்ஞானம் சொல்லிக்கொடுத்ததில்லை. இது மானுடம் எங்கெல்லாம் வாழ்கிறதோ அங்கெல்லாம் அறிந்த ஒன்றே.

இந்த மாதவிடாயினை வைத்தே ஆன்மீகம் முகம் கொண்டு ''தள்ளிவைத்தல் ஒதுக்குபுறமாக இருக்க வைத்தல், சாமி வீட்டுக்குள் நுழையாதிருந்தால், பொதுகிணற்றில் தண்ணீர் எடுக்காமல் இருத்தல், கோயிலுக்கு போகாமல் இருந்தல்'' போன்றவை இன்றும் நடைமுறையில் உள்ளன.

இந்தக் கருமுட்டை காலத்தை 26 முதல் 32 நாள் வரை கணக்கிட்டு வைத்திருப்பார்கள். இந்த காலத்தில் கரு உருவாகுதல், முத்துதல், முதிர்ச்சி அடைவதை காலத்தை அறிவியல் நம்பிக்கையாளர்களான படித்த, அறிவியலை படிக்காத அனைத்து தரப்பு பெண்களும் அறிந்து வைத்திருப்பார்கள்.

கருவுறுதல் ஆண்பெண் இணைத்தல் மூலமாக நடைபெறுவது. கரு முத்திய பருவகாலத்தில் இணை சேர்ந்தால் மட்டுமே கருவுறும். மீதி காலங்களில் கருவுறுதல் நடக்காது. மரபு கூறு தன்மையைப்பொறுத்தி சில பெண்கள்கு கால மாறுபாடு இருக்கும். அவை மிக சொற்பமான எண்ணிக்கை என்பதை விட விதிவிலக்கானவர்கள் பட்டியலில்


சேர்க்கலாம்.

திருமணம் நாள் குறிப்பதற்கு முன்பாக மணப்பெண்ணிடம் போய் சில பெண்கள் காது அருகில் பேசிவிட்டு ''புதனோட புதன் எட்டு அடுத்த புதன் பதினாறு'' இப்படி கணக்கை கூட்டிக்கழித்து கரு முத்தும் நாள்களை கணக்கிட்டு அந்த நாள்களில் திருமணம் நாள் குறிக்க சொல்லி விடுவார்கள். இந்த கணக்கீடு அறிவியல் நம்பிக்கையாளர்களிடமும் உண்டு என்பதை மறந்து விடவேண்டாம்.

கருமூட்டை குறித்த கணக்கு அறிந்த மக்களை நேரம் காலம் பார்க்காமல் சிற்றின்ப காம கூத்தாடிகளைப்போல் மடையனாக்கியவர்கள் நாம் என்பதை யார் சொல்லுவார்.

கரு முத்திய நாள்களான ஐந்து முதல் அதிகபட்டம் ஏழு நாட்கள் ஆண் பெண் இணைந்திடாமல் இருந்தால் கருவுறுதலை தவிர்க்கலாம். இந்த அறிவு மக்களிடம் இருந்ததை கருத்தடை என்ற விஞ்ஞானம் என்ற பித்தலாட்டத்தை நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை என்ன? என்பதை அறிவியல் நம்பிக்கையாளர்கள் என்றாவது கேட்டதுண்டா?

(புரட்சிக்கவி பாரதிதாசனையோ தந்தை பெரியாரையோ இந்தப்பதிவிற்கு ஜவாப்தாரியாக்கி சண்டைக்கு வந்தால் நாங்கள் எதிர்ப்போம்)


ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...