Search This Blog

Showing posts with label political. Show all posts
Showing posts with label political. Show all posts

Monday, 5 September 2022

''வெங்காயம்''


 

                                                           ''வெங்காயம்''

'உலகம் சமநிலை பெறவேண்டும்' என்பது தானே பொதுவுடமை தத்துவம். இதில் ஆன்மீகமே உலக மக்களை முதலில் கட்டமைத்து உற்பத்தி சமூகத்தை ஒருங்கிணைத்து சமநிலை உற்பத்தி சமூகத்தை உருவாக்கி நிலைநிறுத்த முயற்சித்தது. அதனால், 'நாங்களும் அதைத்தானே சொல்லுகிறோம் அதற்காகவே தியானம் செய்கிறோம்' என்பார்கள் ஆன்மீக அன்பர்கள்.  

ஆனால் இவர்களது கொள்கை முடிவாக இருந்த 'உற்பத்தி செய்திட முடியாத மனித குல தேக்கமும்' சுரண்டலும் அதிகரித்ததால் இவர்களால் சமநிலை கொண்டு வரமுடியவில்லை. இதனால் கலகக்குரல்கள் உலகம் முழுவதிலும் தோன்றி ஒன்றுசேர்ந்து கிளர்ந்து ஆட்சி அதிகாரத்தை போராட்டமுனையில் நிலைநாட்டினார்கள். இந்த போராட்டம் வெற்றியை தழுவினாலும் பல நாடுகளில் தோல்வியை சந்தித்தது. இதற்கான காரணம்,.......,

''பொதுவுடனைத்தத்துவத்தை முதலாளிகளின் போட்டிபோட்டு சிதைக்க முனைந்தார்கள். மத நிறுவனங்களும் இந்த முதலாளிகளுக்கு வெளிப்படையாகவே ஆதரவு கொடுத்தது. இந்த நிலையில் மக்களும் இவர்களது வீச்சில் சிக்கினார்கள். தத்துவம் பின்னால் செல்ல நேர்ந்தது. பொதுவுடமை தலைவர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக காரணமாக அமைந்தார்கள் .

 


இந்த காலகட்டத்தில் தத்துவாதிகளாக சீர்திருத்தவாதிகளாக உருவானவர்கள் அல்லது உருவாக்கப்பட்டவர்கள். இவர்கள்  பொதுவுடமை கொள்கையை முன்னிருந்தி அந்தந்த பகுதிவாரியான இன மொழிக்கொள்கையை முன்னிலைப்படுத்தி பரப்புரை செய்தனர். இவர்கள் பரப்புரை பொதுவுடமை கொள்கை கோட்பாட்டிற்குள் இருந்தாலும் தனியாகவே சிந்திக்கும் அளவிற்கு இந்தியாவில் பொதுவுடமை தலைவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகள் அமைந்திருந்தது. அதை சீர்செய்திட வேண்டிய பொதுவுடமை அமைப்பு தலைவர்களும், தனி அமைப்பு தலைவர்களும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு பொதுவுடமை தத்துவத்தை பின்னோக்கி செல்லவைத்தார்கள்.

 


இதன் நீட்சியாக குலவாரியான கட்சிகள் துவக்கியது. இக்குலக்கட்சிகளின் கோரிக்கை என்பது 'பெரும்பான்மை மக்களாகிய எங்களை புறக்கணிக்கிறார்கள்' என்ற நியாமான கோரிக்கைதான். இதை சரிசெய்திட வேண்டிய பெரிய கட்சிகள் செய்திட மறுத்து வருவதற்கு காரணம் '1948 தீட்டப்பட்ட டங்கள் குழுவின் வழிகாட்டு நடைமுறையில் உலகளவில் உள்ள முதலாளின், தொழில் கூட்டுறவு ஒப்பந்தமான காட் (GATTE) மூலம் உலக நாடுகள் அனைத்தையும் இந்த நிறுவனங்களே மறைமுகமாக இயக்கும். இந்த திட்டத்திற்கு வாக்கு அரசியலை ஏற்றுக்கொண்ட பொதுவுடமை கட்சிகள் இந்தியாவில் எதிர்ப்பு கிளப்பினாலும் உலகரங்கில் பொதுவுடமை தத்துவத்தின் பால் புரட்சியை நடத்திய நாடுகளே இந்த ஒப்பந்தத்தை முன்மாதிரியாக ஏற்றுக்கொண்டது.

 

ஆனால் குழுக்களாக இயங்கும் பொதுவுடமை அமைப்புகள் இதற்கு தங்களது எதிர்ப்பினை ஆட்சியாளும் அரசுக்கு ஒத்தாற்போல் இராணுவ தன்மையுடன் எதிர்ப்பு காட்டி வந்தது. இவர்களுக்கு எந்த வகையிலும் மக்களிடன் செல்வாக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக குல வாரியாக இயங்கும் அமைப்புகளை கட்சிகளை கூர்தீட்டி விட்டது காட் ஒப்பந்த முதலாளிகளே.

 

இவர்களது பணம் தான் இன்றை சினிமா வரை பாய்கிறது. இனி சினிமாக்காரர்கள் கொக்கோவத்தை முன்னிருத்தி படம் எடுப்பார்கள். கொக்கோவத்தை 1980 காலங்களில் மறைமுகமாக சிலர் வெளிப்படையாக பேசினார்கள். இதற்கான இலக்கிய கூட்டம் ஒன்று சேர்ந்தாலும் மக்களை வெல்ல முடியாமல் போனது. தற்போது இவர்களை காட் ஒப்பந்த முதலாளிகள் தட்டி எழுப்பினார்கள். இவர்களில் குலவாரியாக செயல்படும் சினிமாக்காரர்கள் முதன்மையாக சிக்கி அம்மக்களை சீரழிக்க துவைக்க வந்துள்ளனர். 

 

இவர்கள் புத்தர் முதல் கீழடி ஆழம் வரை என்னென்ன இருக்கோ அத்தனையும் தோண்டாமல் தோண்டி காட்டி தங்களது கண்கட்டி வித்தை மூலம் மக்களை அலைக்கழிப்பு செய்து கொரோனோ பித்தலாட்டம் போல் பீதிகாட்டி தத்துவதந்தையாக பித்தம் குலைவார்கள். 

இவர்களின் நோக்கம் இலக்கு என்பது கருப்பு, பச்சை, நீலம், மஞ்சள் போல பல வண்ணமாக இருக்குமே தவிர கொள்கையும் இருக்காது ஒரு வெங்காயமும் இருக்காது. 


 

முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

  நூலதிகாரம் நூல் முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு ஆசிரியர் ; தி. சுப்பிரமணியன் வெளியீடு ; அடையாளம்   ‘முந்தி பிறந்தவன் நா...