Search This Blog

Tuesday 29 March 2022

சுளுந்தீ அனுபவம் (பகடு) sulunthee


                                 


                       

                                        சுளுந்தீ அனுபவம் (பகடு)

 

முதற்கண் தோழர் முத்துநாகு அவா்களின் கடும் உழைப்பை பாராட்டியே ஆகவேண்டும்! தரவுகளுக்காக தேனீயாய் பறந்திருக்கிறார்!

 

 

கல்வெட்டுகள் ,கட்டிடங்கள், செப்பேடுகள் , ஆண்ட அரசின் ஆவணங்கள் போன்றவற்றின் மூலம் மட்டுமே வரலாற்றை அறிந்து கொண்டிருந்த நமக்கு, ஏடுஏறாத, மக்களின் வாய்மொழிகளில் இருந்தும் மக்கள் வரலாற்றை வழித்து சுரண்டித் தந்திருக்கிறார்! மக்களின், ஜமீன்களின், மதநிறுவனங்களின் வாய்மொழிகளில் ஒளிந்திருக்கும் வரலாறை பிரித்துத் தருவது என்பது கடுமையான அறிவு உழைப்பை உறிஞ்சும் செயல்! இந்த உழைப்பிற்காக தோழரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

 

 

500ஆண்டுகளுக்கு முன் இருந்த பண்டுவம் எனும் மருத்துவத்தீயை, அரசாட்சியை , மக்களின் வாழ்க்கை முறைமையை, சூழலை,தொழில் உறவுகளை இன்றைய இளைஞர்களுக்கு அணையாமல் சுளுந்தீ குச்சியாக கடத்தி தருகிறது தோழர் முத்துநாகுவின் "சுளுந்தீ"!

 

 

அவரவர் அனுபவங்களை பொறுத்து, புத்தகங்கள் படிப்பவரை தரதரவென்று இழுத்து செல்வதும், சுமந்து செல்வதும், தோள்மேல் கைபோட்டு அழைத்துச்செல்வதும் நடக்கும்! ஏற்கனவே பழைய மருத்துவமுறைகளில் நம்பிக்கை இருப்பவர்களை தோழானாக தோள்மேல் கைபோட்டு பன்றிமலை சித்தரிடம் அறிமுகப்படுத்துகிறது சுளுந்தீ! இதுதிறனாய்வு அல்ல; சுளுந்தீயின் ரசிகனாக என் பகடுகளோடு தொடர்புடையவையே! முடிந்தவரை தனது சொந்த கருத்துகளை வலிய திணிக்கவில்லை என்பதும் , நளினமான உவமை,உருவக, இயற்கை வா்ணணை போன்ற அழகியல் பூச்சுகள் இவரது படைப்பிற்கு தேவைப்படவேயில்லை என்பதும் சுளுந்தீயின் சிறப்பு! .

 

 

' பழங்காலத்தில் என்ன பெரிய அறிவியல் இருந்தது?' என்னும் ஆழ்மன பதிவுகள் உள்ளவர்கள் "டமாஸ்கஸ் ஸ்வோர்டு" தயாரிக்க பயன்பட்ட தமிழக எஃகை பற்றி படித்துவிட்டு "சுளுந்தீ"யில் புகுவது சரியான பார்வையை கொடுக்கும்! 108 தனிமங்களை அறிந்த பின்னும் நவீன அறிவியலால் வணிகரீதியில் செய்யமுடியாத இந்த எஃகு நம் பழையஅறிவியல் நுட்பத்தை பறைசாற்றும்! .

 

 

சிப்பிநூல் ஆடைகளை பற்றி தெரிந்து கொள்வதும், பழைய நுட்பங்களை தரும் "சுளுந்தீ"யை பகடிசெய்யாமல் புரிந்து கொள்ள உதவும்! (மஸில் என்றால் சிப்பி; பண்டைய மஸ்லின் ஒருவகை சிப்பியில் இருந்து எடுக்கப்பட்ட நூல்! இன்று இருக்கும் மஸ்லின் வேறு) சிப்பி உமிழும் சிலந்திவலை போன்ற உறுதியான நூலில் ஆடைநெய்ய அறிந்தவர்கள் இன்று உலகத்திலேயே ஓரிருவர்தான்! இந்தவகை ஆடை தொழிலும் நம் கடற்கரையில் செழித்தோங்கிய ஒன்று!

 

 

மேற்குலகம் மனித சிறுநீரை துணி துவைக்க பயன்படுத்திக்கொண்டிருந்த போது நாம் வெள்ளாவி வைக்க கற்றுக்கொண்டிருந்தோம்! இன்றைய நீராவி சலவை முறையின் முன்னோடி அது! இப்படி நிறைய தொழில்கள் குறித்த நுணுக்கங்களை குறுகத்தரித்த குறளாக நாவலெங்கும் தெளித்திருக்கிறார்!

 

 மருத்துவமும் இதற்கு விதிவிலக்கல்ல; அந்தந்த தலைமுறைக்கான சிறந்த மருத்துவ அறிவியல் இருக்கவே செய்யும்!இதையே நாவலிலும் முகநூலிலும் வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்!

சுளுந்தீயில் தோழர் திரு.முத்துநாகுவின் உழைப்பை உணர, உள்வாங்க அவர் எடுத்திருக்கும் அத்தனை அவதாரங்களையும் நாமும் எடுக்க வேண்டி இருக்கிறது!

 

1)காட்டு வாசியாக;

ஆதவன் நுழையாத அடர்காடுகள் என்றாலே நமது படைப்பாளிகளுக்கு எங்கிருந்துதான் குளுமையும், தென்றலும் வந்து தொலையுமோ தெரிவது இல்லை! திரு.முத்துநாகுவின் படைப்பில் கருங்காட்டின் புழுக்கம் உள்ளது உள்ளபடியே பகடுவாக(அனுபவம்) பதிவு செய்யப்பட்டு நமக்கும் வியர்க்கவைக்கிறது!

மலையடிவார கிராமங்களுக்கே உரித்தான வெய்யில்விழும் காலஅளவை சொல்லி நாவலின் உண்மைதன்மையை , அரண்மனை அமைவிடத்தை அழகாக ஒருவரியில் சொல்லுகிறது!

 

 

காடுகளில் வெறும் கண்களை நம்பி மட்டும் நடமாடிவிட முடியாது! விலங்குகளின் வீச்சம் (நெடி) , விலங்குகள் நடக்கும்போது இலைகள் எழுப்பும் ஒலியை வைத்து அவை என்ன விலங்குகள், எந்த பருவத்தில் உள்ள விலங்குகள் என்பதை அறிந்து வைத்திருப்பர் கானுறை மக்கள்! அதை சினைப்புலி(மேப்படியானும் இப்படி வாசனையை தரும்) வெளியிடும் புனுகு போன்ற வாசனையை நுகரும் இராமன் மற்றும் பளியரின் மூலமாக அழகாக சொல்லியிருப்பார்! இது போன்ற நுட்பங்கள் ஆசிரியர் காட்டுக்குள் தொல்குடியினரோடு அலைந்த அலைச்சலை நமக்கு உரைக்கிறது!

 

 2)ஆநிரை மேய்ப்பனாக;

கிடைமாடுகள் வளர்போரிடம் சற்றுநேரம் பேசினால் போதும்! கால்நடை மருத்துவமனைக்கே போகாமல், ஒவ்வொரு இடையருமே டாக்டராக இருப்பதை உணரமுடியும்! மூங்கில் இலை,தும்பைச் சாறு, கற்றாழை, குண்டுமணிச்செடி,துத்தி,மூங்கில் இலை,பூண்டு ,வேம்பு போன்ற தாவரங்கள் மூலம் அவா்கள் கால்நடைகளுக்கு பண்டுவம் பார்ப்பது வியக்க வைக்கும்! வயிறுஉப்பி மேவு எடுக்காத கால்நடைகளின் நாவை இழுத்து குறிப்பிட்ட இரத்தக்குழாயை குத்தி, இரத்தத்தை சிறிது பிதுக்கி எடுத்தபின் கால்நடைகள் இரை எடுப்பது நமக்கு வியப்பளிக்கும்! இன்றும் இத்தகைய தாத்தாக்கள் தமிழகமெங்கும் இருக்கின்றனர்! நாவலில் வரும் இடையர் பாத்திரங்கள் மூலமாகவும், ராமன், சித்தர் மூலமாகவும் இயன்றஅளவு கால்நடை மருத்துவத்தை பதிவு செய்துள்ளார்! எவ்வளவு நாட்கள் இடையர்களுடன் செலவழித்தாரோ ஆசிரியருக்கே வெளிச்சம். கன்றுபோடாமல் மாடில் பால்கறக்கும் முறையாக சித்தர் குரலில் தோழர் சொல்வது பிறருக்கு நம்ப முடியாததாக இருக்கும்; எங்கள் தோட்டத்தில் உண்மையில் நடந்த நிகழ்வு இது; பேறுகாலத்தில் தன்மகளை இரத்தப்போக்கில் இழந்த வயதான பெண்(பாட்டி), தனது பேத்திக்கு தாய் (பாட்டி)பால்கொடுத்து வளர்த்திருக்கிறார்!இது நடந்தது வெறும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு! இப்படி எனக்கு வியப்பாய் இருந்த பலவற்றிற்கு வெளிச்சம் அளித்திருக்கிறார் ஆசிரியர்!

 

 3)பண்டுவனாக;

பண்டுவம் என்பது இயற்கையானது அல்ல; செடிகளை அப்படியே எடுத்து பிழிந்து கொடுப்பது அல்ல!உலோகமும்,அலோகமும் பயன்படுத்தி, அதில் மூலிகைச் சாரமிறங்கி, செயற்கையாக பலபடிநிலைகளை கொண்டவையே பண்டுவ முறை மருந்துகள்! அதுபோலவே, பண்டுவ உலோக,அலோக மருந்துகளின் பெரும்பகுதி வாழ்வாங்கு வாழ்பவர்களுக்கானதும் அல்ல! இரண்டாம் யுத்தகாலத்தில் வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட நவீன மருந்துகளைப் போன்றது! பக்கவிளைவுகள் உண்டென்றாலும் அது உடனடியாக போர்வீரர்களை களத்தில் நிற்க வைக்கும்! போர்வீரர்களுக்கு வயதாகி சாக வாய்க்காது என்பதால் பக்கவிளைவுகளை கண்டுகொள்ள வேண்டியது இல்லை! பண்டுவம் போர்வீரர்களுக்கான பண்டைய அறிவியல் மருத்துவம் அல்லது இன்றைய ICUவில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு ஒப்பானது போலும்! தாவரங்கள் , பாறை தாதுக்கள் , உயிரினங்கள் போன்றவற்றை பயன்படுத்தி, அதே சித்தர்கள் தயாரித்த பிற மருந்துகள் பெரும்பாலும்,வயதான காலத்தில் பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத , போர்ச்சாவு அடைய தேவையில்லாத பொதுமக்களுக்கான மருந்துகள் போலும்!

 

தாவரங்களில் இருந்து குறிப்பிட்ட நோயிற்கான, குறிப்பிட்ட பகுதிப்பொருளை பிரித்துக் கொடுக்கவும் பண்டுவர்கள் அறிந்திருந்தனர்! இன்று "நேச்சுரல் புராடக்ஸ்" என்ற தனி வேதியல் பிரிவே அதற்கு உண்டு! இந்த பிரிவை படித்திருந்ததாலும், என்வீட்டு பெரியவர்கள் மருத்துவதுறையில் இருந்ததாலும், ஆசிரியரின் உழைப்பை, முன்னோர்களின் அறிவியலை சுளுந்தீயில் உணர முடிகிறது! கிராவிமெட்ரிக் , வாலைவடித்தல் போன்ற முறைகளில் தான் சித்தர்களும் அக்காலத்திலேயே செயற்கை மருந்துகளை உருவாக்கி கொடுத்துள்ளனர் என்பதை சுளுந்தீயில் காணமுடிகிறது! நேரடியாக உண்டால் கடும் விளைவுகளை உண்டாக்கும் கந்தகம் ,பாதரசம்(பூதம்) மற்றும், இதர கன உலோகங்கள் போன்றவற்றை மூலிகைகளின் சாறில் இருக்கும் அமிலங்கள், காரங்கள், அல்கலாய்டுகள் , பீனால் டிரைவேட்டிவ்கள் மூலம் உண்ணத்தகுந்த மருந்தாக பக்குவப்படுத்தி தந்துள்ளனர் என்பதை நாவலில் உணர முடிகிறது! இன்றும் zincக்கும், அயோடினும் , வெள்ளி, குரோமியமும் நோயெதிர்ப்பு மருந்துகளில் ஆற்றும் பணியை நாம் கணலாம்! அதனால் சித்தர்களை ஏதோ முட்டாள்களாக பார்க்காமல், அக்காலத்தில் இருந்த சட்டி, பானை , துணிகளைக் கொண்டே வாலைவடித்தல், பஸ்பமாக்கள் (கிராவிமெட்ரிக்), நேனோ டெக்னாலஜி (பல முறை நுணுக்கி சலித்தல்) போன்றவற்றின் மூலம் மருந்துகளை தயாரித்த "chemist"களாக பார்ப்பதே பொருந்தும்! அதையே தோழரும் வலியுறுத்துகிறார்! பண்டுவத்தை ஏற்றுக்கொண்டு ,அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதே நமது அவாவும்! பிரண்டைஉப்பு , சீந்தில் சர்க்கரை , கடல்பாசி பஸ்பம்( இது அயோடின் கொண்டது! ஆண்டிபயாடிக் குணமுள்ள புண்ணாற்றி! டின்ஞ்சர் அயோடினே!) போன்ற மருந்துகள் எல்லாம் சாதாரண கத்துக்குட்டிகள் செய்வதென்றால் சித்தர்களின் பிரமாண்டத்தை உணர முடிகிறதல்லவா? ஒப்பீட்டளவில் அன்றைய சித்தன் இன்றைய நவீன விஞ்ஞானியாவான்! பழங்கால புரட்சியாளர்கள் மொத்தமும் இன்றைய மதவாதிகளின் கைகளில் தேவதூதர்களாக சிக்கி கதறுவதைப் போல, வெற்றுக் கூச்சல் பழமை விரும்பிகளாலும் , அரைகுறை அறிவியலை தெரிந்து கொண்டு மொத்த மரபையும் புறந்தள்ளும் நவீன விஞ்ஞானிகளாலும் புரிந்து கொள்ள முடியாதவர்கள் பண்டுவ சித்தர்கள்! சுளுந்தீயில் இராமன் பண்டுவன் மூலம் சித்தர் வெளிப்படுத்தும் மருந்துதயாரிப்புகள் மீட்டுஎடுக்கப்பட்டு, தேவைக்கு வளர்க்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவேண்டும்! வழக்கொழிந்த பண்டுவத்தை, ஆசிரியர் நாவலில் அறிமுகபடுத்துவதற்கே எத்தனை உழைத்திருக்கிறார் என்பதை நாவலை படித்துப்பார்த்தால் உணர முடிகிறது!

 

 

ஆனால், தோழர் எழுதியிருக்கும் மருந்துகள் விவரணைகள், செய்முறைகள், நுணுக்கங்கள் நோயாளிகளின் நேரடி பயன்பாட்டிற்கு போதுமானவையா என்பது ஐயமே. இதற்கே பல ஆண்டுகள் உழைப்பை அவர் செலுத்தியிருப்பார் என்றால், நாம் இன்னும் காலத்தில் பின்னோக்கி சென்று முழுமைக்காக ஆராய எத்தனை ஆண்டுகள் வேண்டும்? அத்தகைய ஆய்வுகள் தனிமனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது! ஆனால், காலத்தின் தேவையிது! பண்டுவத்தை மீட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரும் மொத்த பொறுப்பையும் தோழர்.முத்துநாகு அவர்களின் தோள்மேல் ஏற்றுவது பொறுப்பற்ற செயல்! மருத்துவ மரபை மீட்க , அறிவியல் நிரூபணம் செய்ய மரபின் மேல் மையலுள்ள தொழில்முறை வல்லுநர்களின் பெரும் கூட்டுஉழைப்பும், அரசின் ஆதரவும், பெரும் பொருளுதவியும் தேவை! இந்த அவா ஆசிரியரின் அடிமனதில் உறைந்திருப்பதை உணரமுடிகிறது!.

 

 

கஞ்சா, சாராயம் போன்றவற்றை வெறும் போதைப்பொருளாக தள்ளி வைத்து இருப்பவர்களுக்கு, நமது பாட்டிகளின் மகப்பேறின் போது வலிநிவாரணியாகவும் , தூய்மைபடுத்தியாகவும் (சானிட்டைசர்) பயன்பட்டது பலருக்கும் தெரியாது!

 

 

4) வேதியல் மாணவனாக;

சோடியம் குளோரைடு எனும் உப்பை வறுத்து சமையலுக்கு பயன்படுத்தச் சொல்வார் என் தாத்தா!(எனக்கு அந்த உப்பும் கிடையாது)! உப்பானது அதிக நேரம் அதிக சூட்டில் இருக்கும் போது அதிலிருந்து குளோரின் வாயு வெடித்து விடுபட்டு வாயுவாக போய்விடும்! மீதமிருப்பது சோடியம்! இது மக்னீசியம் போல விசித்திரமான ஒரு தனிமம்! நீரினுள் போட்டால் வெடிக்கும்! எப்பொழுதும் ஏதாவது ஹைட்ரோகார்பனான எண்ணெய்யின் உள்ளேயே இருக்க வேண்டும்! சோடியத்தை துளியூண்டு பஞ்சினுள் அல்லது, பன்னாடையினுள் எடுத்து சொட்டுநீரை விட்டு தீப்பற்ற வைக்க முடியும்! வெடியாகவும் , தீப்பெட்டி போலவும் பயன்பட்டதால் உப்பை காய்ச்சுவது பன்னெடுங்காலம் முன்பே தடை செய்யப்பட்டு விட்டது அரசர்களால்! சோடியத்தை இன்றைய "டைம்" பாம் போல பயன்படுத்தி எதிராளிகளின் வைக்கோல், தட்டு ,கடலை பொட்டு போர்களை, குடிசைகளை, விளைந்து காய்ந்த பயிர்களை எரித்து சேதம் உண்டாக்கியதால் சோடியத்திற்கு இந்த தடை! ஏனென்னால், அரசனுக்கும் இது வரிவசூலை பாதிக்கும்! இந்த பழங்காலமுறையை தோழர் முத்துநாகு அழகாக தன் கதைமாந்தர்கள் மூலம் விவரிப்பார்! மீதியை நாவலில் படியுங்கள்! இப்படிப்பட்ட தரவுகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன உள்ளே! கிணற்று ஆசாரிகளுக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த உப்புக்காய்ச்சும் முறை தெரிந்தே வந்திருக்கிறது!

எங்களுக்கு இந்தமுறையில் பாறைஉடைத்து, வற்றாத கிணறுவெட்டிய கிணத்துஆசாரியின் சொத்துப்பிரச்சனையில் தலையிட்டு, அது இரட்டை கொலையில் முடிந்தது!.

 

 5)சூழலியலாளராக;

இருவேறு இனங்களுக்கு இடையில் நெகிழ்வு நிலம் தேவைப்படுவது போலவே(ஒசூர்,பாலக்காடு..) , வனங்களுக்கும்,விவசாய நிலங்களுக்கும் கூட ஒரு நெகிழ்வு நிலம்( buffer zone) பேணப்பட்டு வந்திருக்கிறது! இது கானுயிர்களுக்கும் , கால்நடைகளுக்கும் பொதுவான பகுதி! இந்த buffer zone பகுதியின் இன்றியமையாமையை தோழரைப் போல விவரித்தவர் யாருமில்லை! இன்னும் தெரிய சுளுந்தீயில் நோக்குக!

 

 

6)வரலாற்று ஆய்வாளராக;

விஜயநகரமன்னர்களை ஏதோ இந்துமத காவலர்களைப் போலவும், வேதிமதத்தவரை அண்டவிடாத எல்லைச்சாமிகள் போலவும் பீற்றி திரிபவர்களை கையறுநிலையில் நிறுத்துகிறது நாவல்! நாவலின் காலகட்டத்தில் எப்படி, எதற்காக புறமதங்கள் உள்ளே நுழைந்தன என்பதை பட்டவர்த்தனமாக தோலுரிக்கும் அதேவேளையில் புத்தமும் சமணமும் அழிக்கப்பட்ட விதத்தையும் பேசுகிறது! கோடங்கி, பூம்பூம் மாட்டுக்காரன் போன்றோர் எப்படி மன்னர்களுக்கு வேவுஊழியம் செய்தனர் என்பதையும் நாசூக்காக சொல்லிச்செல்கிறது சுளுந்தீ! நான் சொல்லி இருப்பது கொசுறே!

 

 

7)தாவரவியல் மாணவனாக, விலங்கியல் மாணவனாக;

தாவரங்களையும், விலங்குகளையும் வெறுமனே மனப்பாடம் செய்வதல்ல படிப்பு! அவற்றை அன்றாட வாழ்வில் உணவுக்காகவும், மருந்துக்காகவும் எப்படி பயன்படுத்துவது, அவற்றில் ஏற்படும் நோய்களை எப்படி போக்குவது என்பதை அறிவதே படிப்பு என நாவலை படிக்கும்போது உரைக்கிறது! மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ,தாவரங்களுக்கும், பறவைகளுக்கும் இடையே ஒரு உள்ளார்ந்த பன்னெடுங்கால உறவு இருப்பதை படிக்கும் போது உணர முடிகிறது!,

 

😎நிலத்தடி நீரை கண்டுபிடிக்கும் நீரோட்டக்காரனாக, மடாதிபதியாகராவுத்தனாக, முனைவனாக, நாத்திகனாக ,ஆத்திகனாக, வெட்டியானாக, வேர்சொல் காணும் அறிஞராக, பண்டுவனாக, சலவை தொழிலாளியாக, நாவிதராக, பஞ்ச காலம் போன்ற கடினமான சூழ்நிலையிலும் உயிர் பிழைக்கும் வித்தை(Man vs wild) தெரிந்த வித்தகராக நாவலில் வரும் அத்தனை பேரும் அண்ணன் முத்துநாகுவே எனும் போது வியப்பாக இருக்கிறது.

 

சுடுகாட்டுக்கு தீச்சட்டி சுமக்கும் பழக்கம் கூட தீப்பெட்டி இல்லாத காரணத்தால் வந்தது தான்! காரணம் தெரியாமல் இன்னமும் இழவு வீட்டு வாசலில் தீ போட்டு , சுடுகாடு வரையிலும் தீச்சட்டி தூக்குறோம் பொணத்த எரிக்க சாங்கியம் என்ற பெயரில்.

 

 

எங்கள் கோவை பக்கம் சில வில்லங்கமான ஆட்களை முசுடு அல்லது முசுறு என்பர்! முசுறு என்றால் மரத்தின் இலையில் கூடு கட்டி வாழும் சுளுக்கை செவ்வெறும்பு என்பது இந்த நாவலை படித்த பின்புதான் தெரிந்தது! அதேபோல "வெங்கம் பய " என்பதின் பொருளும் இந்த நாவலை படித்த பின்பு தான் தெரிந்தது. கிளியோபாட்ரா இறந்தபின் அவரது பிணத்தை புணர்ந்தனர் என்ற அதிர்ச்சியின் நீட்சி நம் நிலத்திலும் நடந்திருப்பது ஆச்சரியமே.

 

 

சில புத்தகங்கள் நம்விரலை நமக்கு தெரியாமலே பக்கங்களை திருப்ப வைக்கும். மரபு வழியில் தீப்பெட்டியோ , லைட்டரோ இல்லாத காலத்தில், கோயில் குண்ட குழியிலிருந்தோ, மடம் அல்லது, அரண்மனையிலிருந்தோ, அடுப்பெரிக்க வீடுவரை அணையாமல் பந்தம் போல கொண்டுவர சுளுந்தீ குச்சியை பயன்படுத்துவார்கள். சுளுந்தீ குச்சியில் இருக்கும் எண்ணெய்பசை தீயை அணையவிடாது. அய்யகோ! தமிழனுக்கு தீயை உண்டாக்க தெரியலையா? என குமுறக்கூடாது . கடசக்கட்டை (கடைசல் கட்டை), உப்புக்கசடு (சோடியம்) , ஆடி(லென்ஸ்)னுதீயை உற்பத்தி செய்ய முடிஞ்சாலும் செய்வது ராஜகுற்றம்! ஏனா, இரவில் ஒருகுலத்துக்காரன், மறுகுலத்துக்காரனோட விளைஞ்ச (காய்ஞ்ச) வெள்ளாமையிலும், போர்களிலும் (வைக்கோல், சோளத்தட்டு, பயிறு, கடலத்தொலி) வீடுகளிலும் தீயை வச்சுடுவாங்க பழி தீர்க்க! பறிகொடுத்தவனுக்கு மட்டுமில்ல; அரசனுக்கும் வரிவருமானம் போயிடும் இதனால்! அதனால , காலையில கஞ்சி வச்சா பொழுதுழுக கங்குவை சுத்தமா அணைச்சிடணும்! பொழுது விழுந்ததும் யாருக்கும் தீயின் கங்கை இரவல் தரமாட்டார்கள். அந்த பழக்கம் அண்மைகாலம் வரை காரணம் தெரியாமலே, கிராமங்களில் கடைபிடிக்கப்பட்டு இருந்தது. மிகைபடக் கூறல் எதுவும் இல்லையென்றாலும் கூறியது கூறல் இந்த நாவலில் வருகிறது; அதை தவிர்த்திருக்கலாமோ? சுளுந்தி நாவல் என்ற வரையறையில் வருகிறதா இல்லையா என்பது எனது சிற்றறிவுக்கு புலப்படவில்லை. ஆனால் அருமையான படைப்பு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

 

 

ம் (பகடு)

 

 

முதற்கண் தோழர் முத்துநாகு அவா்களின் கடும் உழைப்பை பாராட்டியே ஆகவேண்டும்! தரவுகளுக்காக தேனீயாய் பறந்திருக்கிறார்!

 

 

கல்வெட்டுகள் ,கட்டிடங்கள், செப்பேடுகள் , ஆண்ட அரசின் ஆவணங்கள் போன்றவற்றின் மூலம் மட்டுமே வரலாற்றை அறிந்து கொண்டிருந்த நமக்கு, ஏடுஏறாத, மக்களின் வாய்மொழிகளில் இருந்தும் மக்கள் வரலாற்றை வழித்து சுரண்டித் தந்திருக்கிறார்! மக்களின், ஜமீன்களின், மதநிறுவனங்களின் வாய்மொழிகளில் ஒளிந்திருக்கும் வரலாறை பிரித்துத் தருவது என்பது கடுமையான அறிவு உழைப்பை உறிஞ்சும் செயல்! இந்த உழைப்பிற்காக தோழரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

 

 

500ஆண்டுகளுக்கு முன் இருந்த பண்டுவம் எனும் மருத்துவத்தீயை, அரசாட்சியை , மக்களின் வாழ்க்கை முறைமையை, சூழலை,தொழில் உறவுகளை இன்றைய இளைஞர்களுக்கு அணையாமல் சுளுந்தீ குச்சியாக கடத்தி தருகிறது தோழர் முத்துநாகுவின் "சுளுந்தீ"!

 

 

அவரவர் அனுபவங்களை பொறுத்து, புத்தகங்கள் படிப்பவரை தரதரவென்று இழுத்து செல்வதும், சுமந்து செல்வதும், தோள்மேல் கைபோட்டு அழைத்துச்செல்வதும் நடக்கும்! ஏற்கனவே பழைய மருத்துவமுறைகளில் நம்பிக்கை இருப்பவர்களை தோழானாக தோள்மேல் கைபோட்டு பன்றிமலை சித்தரிடம் அறிமுகப்படுத்துகிறது சுளுந்தீ! இதுதிறனாய்வு அல்ல; சுளுந்தீயின் ரசிகனாக என் பகடுகளோடு தொடர்புடையவையே! முடிந்தவரை தனது சொந்த கருத்துகளை வலிய திணிக்கவில்லை என்பதும் , நளினமான உவமை,உருவக, இயற்கை வா்ணணை போன்ற அழகியல் பூச்சுகள் இவரது படைப்பிற்கு தேவைப்படவேயில்லை என்பதும் சுளுந்தீயின் சிறப்பு! .

 

 

' பழங்காலத்தில் என்ன பெரிய அறிவியல் இருந்தது?' என்னும் ஆழ்மன பதிவுகள் உள்ளவர்கள் "டமாஸ்கஸ் ஸ்வோர்டு" தயாரிக்க பயன்பட்ட தமிழக எஃகை பற்றி படித்துவிட்டு "சுளுந்தீ"யில் புகுவது சரியான பார்வையை கொடுக்கும்! 108 தனிமங்களை அறிந்த பின்னும் நவீன அறிவியலால் வணிகரீதியில் செய்யமுடியாத இந்த எஃகு நம் பழையஅறிவியல் நுட்பத்தை பறைசாற்றும்! .

 

 

சிப்பிநூல் ஆடைகளை பற்றி தெரிந்து கொள்வதும், பழைய நுட்பங்களை தரும் "சுளுந்தீ"யை பகடிசெய்யாமல் புரிந்து கொள்ள உதவும்! (மஸில் என்றால் சிப்பி; பண்டைய மஸ்லின் ஒருவகை சிப்பியில் இருந்து எடுக்கப்பட்ட நூல்! இன்று இருக்கும் மஸ்லின் வேறு) சிப்பி உமிழும் சிலந்திவலை போன்ற உறுதியான நூலில் ஆடைநெய்ய அறிந்தவர்கள் இன்று உலகத்திலேயே ஓரிருவர்தான்! இந்தவகை ஆடை தொழிலும் நம் கடற்கரையில் செழித்தோங்கிய ஒன்று!

 

 

மேற்குலகம் மனித சிறுநீரை துணி துவைக்க பயன்படுத்திக்கொண்டிருந்த போது நாம் வெள்ளாவி வைக்க கற்றுக்கொண்டிருந்தோம்! இன்றைய நீராவி சலவை முறையின் முன்னோடி அது! இப்படி நிறைய தொழில்கள் குறித்த நுணுக்கங்களை குறுகத்தரித்த குறளாக நாவலெங்கும் தெளித்திருக்கிறார்!

 

 

மருத்துவமும் இதற்கு விதிவிலக்கல்ல; அந்தந்த தலைமுறைக்கான சிறந்த மருத்துவ அறிவியல் இருக்கவே செய்யும்!இதையே நாவலிலும் முகநூலிலும் வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்!

சுளுந்தீயில் தோழர் திரு.முத்துநாகுவின் உழைப்பை உணர, உள்வாங்க அவர் எடுத்திருக்கும் அத்தனை அவதாரங்களையும் நாமும் எடுக்க வேண்டி இருக்கிறது!

 

 

1)காட்டு வாசியாக;

ஆதவன் நுழையாத அடர்காடுகள் என்றாலே நமது படைப்பாளிகளுக்கு எங்கிருந்துதான் குளுமையும், தென்றலும் வந்து தொலையுமோ தெரிவது இல்லை! திரு.முத்துநாகுவின் படைப்பில் கருங்காட்டின் புழுக்கம் உள்ளது உள்ளபடியே பகடுவாக(அனுபவம்) பதிவு செய்யப்பட்டு நமக்கும் வியர்க்கவைக்கிறது!

மலையடிவார கிராமங்களுக்கே உரித்தான வெய்யில்விழும் காலஅளவை சொல்லி நாவலின் உண்மைதன்மையை , அரண்மனை அமைவிடத்தை அழகாக ஒருவரியில் சொல்லுகிறது!

 

 

காடுகளில் வெறும் கண்களை நம்பி மட்டும் நடமாடிவிட முடியாது! விலங்குகளின் வீச்சம் (நெடி) , விலங்குகள் நடக்கும்போது இலைகள் எழுப்பும் ஒலியை வைத்து அவை என்ன விலங்குகள், எந்த பருவத்தில் உள்ள விலங்குகள் என்பதை அறிந்து வைத்திருப்பர் கானுறை மக்கள்! அதை சினைப்புலி(மேப்படியானும் இப்படி வாசனையை தரும்) வெளியிடும் புனுகு போன்ற வாசனையை நுகரும் இராமன் மற்றும் பளியரின் மூலமாக அழகாக சொல்லியிருப்பார்! இது போன்ற நுட்பங்கள் ஆசிரியர் காட்டுக்குள் தொல்குடியினரோடு அலைந்த அலைச்சலை நமக்கு உரைக்கிறது!

 

 

2)ஆநிரை மேய்ப்பனாக;

கிடைமாடுகள் வளர்போரிடம் சற்றுநேரம் பேசினால் போதும்! கால்நடை மருத்துவமனைக்கே போகாமல், ஒவ்வொரு இடையருமே டாக்டராக இருப்பதை உணரமுடியும்! மூங்கில் இலை,தும்பைச் சாறு, கற்றாழை, குண்டுமணிச்செடி,துத்தி,மூங்கில் இலை,பூண்டு ,வேம்பு போன்ற தாவரங்கள் மூலம் அவா்கள் கால்நடைகளுக்கு பண்டுவம் பார்ப்பது வியக்க வைக்கும்! வயிறுஉப்பி மேவு எடுக்காத கால்நடைகளின் நாவை இழுத்து குறிப்பிட்ட இரத்தக்குழாயை குத்தி, இரத்தத்தை சிறிது பிதுக்கி எடுத்தபின் கால்நடைகள் இரை எடுப்பது நமக்கு வியப்பளிக்கும்! இன்றும் இத்தகைய தாத்தாக்கள் தமிழகமெங்கும் இருக்கின்றனர்! நாவலில் வரும் இடையர் பாத்திரங்கள் மூலமாகவும், ராமன், சித்தர் மூலமாகவும் இயன்றஅளவு கால்நடை மருத்துவத்தை பதிவு செய்துள்ளார்! எவ்வளவு நாட்கள் இடையர்களுடன் செலவழித்தாரோ ஆசிரியருக்கே வெளிச்சம். கன்றுபோடாமல் மாடில் பால்கறக்கும் முறையாக சித்தர் குரலில் தோழர் சொல்வது பிறருக்கு நம்ப முடியாததாக இருக்கும்; எங்கள் தோட்டத்தில் உண்மையில் நடந்த நிகழ்வு இது; பேறுகாலத்தில் தன்மகளை இரத்தப்போக்கில் இழந்த வயதான பெண்(பாட்டி), தனது பேத்திக்கு தாய் (பாட்டி)பால்கொடுத்து வளர்த்திருக்கிறார்!இது நடந்தது வெறும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு! இப்படி எனக்கு வியப்பாய் இருந்த பலவற்றிற்கு வெளிச்சம் அளித்திருக்கிறார் ஆசிரியர்!

 

 

3)பண்டுவனாக;

பண்டுவம் என்பது இயற்கையானது அல்ல; செடிகளை அப்படியே எடுத்து பிழிந்து கொடுப்பது அல்ல!உலோகமும்,அலோகமும் பயன்படுத்தி, அதில் மூலிகைச் சாரமிறங்கி, செயற்கையாக பலபடிநிலைகளை கொண்டவையே பண்டுவ முறை மருந்துகள்! அதுபோலவே, பண்டுவ உலோக,அலோக மருந்துகளின் பெரும்பகுதி வாழ்வாங்கு வாழ்பவர்களுக்கானதும் அல்ல! இரண்டாம் யுத்தகாலத்தில் வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட நவீன மருந்துகளைப் போன்றது! பக்கவிளைவுகள் உண்டென்றாலும் அது உடனடியாக போர்வீரர்களை களத்தில் நிற்க வைக்கும்! போர்வீரர்களுக்கு வயதாகி சாக வாய்க்காது என்பதால் பக்கவிளைவுகளை கண்டுகொள்ள வேண்டியது இல்லை! பண்டுவம் போர்வீரர்களுக்கான பண்டைய அறிவியல் மருத்துவம் அல்லது இன்றைய ICUவில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு ஒப்பானது போலும்! தாவரங்கள் , பாறை தாதுக்கள் , உயிரினங்கள் போன்றவற்றை பயன்படுத்தி, அதே சித்தர்கள் தயாரித்த பிற மருந்துகள் பெரும்பாலும்,வயதான காலத்தில் பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத , போர்ச்சாவு அடைய தேவையில்லாத பொதுமக்களுக்கான மருந்துகள் போலும்!

 

 

தாவரங்களில் இருந்து குறிப்பிட்ட நோயிற்கான, குறிப்பிட்ட பகுதிப்பொருளை பிரித்துக் கொடுக்கவும் பண்டுவர்கள் அறிந்திருந்தனர்! இன்று "நேச்சுரல் புராடக்ஸ்" என்ற தனி வேதியல் பிரிவே அதற்கு உண்டு! இந்த பிரிவை படித்திருந்ததாலும், என்வீட்டு பெரியவர்கள் மருத்துவதுறையில் இருந்ததாலும், ஆசிரியரின் உழைப்பை, முன்னோர்களின் அறிவியலை சுளுந்தீயில் உணர முடிகிறது! கிராவிமெட்ரிக் , வாலைவடித்தல் போன்ற முறைகளில் தான் சித்தர்களும் அக்காலத்திலேயே செயற்கை மருந்துகளை உருவாக்கி கொடுத்துள்ளனர் என்பதை சுளுந்தீயில் காணமுடிகிறது! நேரடியாக உண்டால் கடும் விளைவுகளை உண்டாக்கும் கந்தகம் ,பாதரசம்(பூதம்) மற்றும், இதர கன உலோகங்கள் போன்றவற்றை மூலிகைகளின் சாறில் இருக்கும் அமிலங்கள், காரங்கள், அல்கலாய்டுகள் , பீனால் டிரைவேட்டிவ்கள் மூலம் உண்ணத்தகுந்த மருந்தாக பக்குவப்படுத்தி தந்துள்ளனர் என்பதை நாவலில் உணர முடிகிறது! இன்றும் zincக்கும், அயோடினும் , வெள்ளி, குரோமியமும் நோயெதிர்ப்பு மருந்துகளில் ஆற்றும் பணியை நாம் கணலாம்! அதனால் சித்தர்களை ஏதோ முட்டாள்களாக பார்க்காமல், அக்காலத்தில் இருந்த சட்டி, பானை , துணிகளைக் கொண்டே வாலைவடித்தல், பஸ்பமாக்கள் (கிராவிமெட்ரிக்), நேனோ டெக்னாலஜி (பல முறை நுணுக்கி சலித்தல்) போன்றவற்றின் மூலம் மருந்துகளை தயாரித்த "chemist"களாக பார்ப்பதே பொருந்தும்! அதையே தோழரும் வலியுறுத்துகிறார்! பண்டுவத்தை ஏற்றுக்கொண்டு ,அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதே நமது அவாவும்! பிரண்டைஉப்பு , சீந்தில் சர்க்கரை , கடல்பாசி பஸ்பம்( இது அயோடின் கொண்டது! ஆண்டிபயாடிக் குணமுள்ள புண்ணாற்றி! டின்ஞ்சர் அயோடினே!) போன்ற மருந்துகள் எல்லாம் சாதாரண கத்துக்குட்டிகள் செய்வதென்றால் சித்தர்களின் பிரமாண்டத்தை உணர முடிகிறதல்லவா? ஒப்பீட்டளவில் அன்றைய சித்தன் இன்றைய நவீன விஞ்ஞானியாவான்! பழங்கால புரட்சியாளர்கள் மொத்தமும் இன்றைய மதவாதிகளின் கைகளில் தேவதூதர்களாக சிக்கி கதறுவதைப் போல, வெற்றுக் கூச்சல் பழமை விரும்பிகளாலும் , அரைகுறை அறிவியலை தெரிந்து கொண்டு மொத்த மரபையும் புறந்தள்ளும் நவீன விஞ்ஞானிகளாலும் புரிந்து கொள்ள முடியாதவர்கள் பண்டுவ சித்தர்கள்! சுளுந்தீயில் இராமன் பண்டுவன் மூலம் சித்தர் வெளிப்படுத்தும் மருந்துதயாரிப்புகள் மீட்டுஎடுக்கப்பட்டு, தேவைக்கு வளர்க்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவேண்டும்! வழக்கொழிந்த பண்டுவத்தை, ஆசிரியர் நாவலில் அறிமுகபடுத்துவதற்கே எத்தனை உழைத்திருக்கிறார் என்பதை நாவலை படித்துப்பார்த்தால் உணர முடிகிறது!

 

 

ஆனால், தோழர் எழுதியிருக்கும் மருந்துகள் விவரணைகள், செய்முறைகள், நுணுக்கங்கள் நோயாளிகளின் நேரடி பயன்பாட்டிற்கு போதுமானவையா என்பது ஐயமே. இதற்கே பல ஆண்டுகள் உழைப்பை அவர் செலுத்தியிருப்பார் என்றால், நாம் இன்னும் காலத்தில் பின்னோக்கி சென்று முழுமைக்காக ஆராய எத்தனை ஆண்டுகள் வேண்டும்? அத்தகைய ஆய்வுகள் தனிமனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது! ஆனால், காலத்தின் தேவையிது! பண்டுவத்தை மீட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரும் மொத்த பொறுப்பையும் தோழர்.முத்துநாகு அவர்களின் தோள்மேல் ஏற்றுவது பொறுப்பற்ற செயல்! மருத்துவ மரபை மீட்க , அறிவியல் நிரூபணம் செய்ய மரபின் மேல் மையலுள்ள தொழில்முறை வல்லுநர்களின் பெரும் கூட்டுஉழைப்பும், அரசின் ஆதரவும், பெரும் பொருளுதவியும் தேவை! இந்த அவா ஆசிரியரின் அடிமனதில் உறைந்திருப்பதை உணரமுடிகிறது!.

 

 

கஞ்சா, சாராயம் போன்றவற்றை வெறும் போதைப்பொருளாக தள்ளி வைத்து இருப்பவர்களுக்கு, நமது பாட்டிகளின் மகப்பேறின் போது வலிநிவாரணியாகவும் , தூய்மைபடுத்தியாகவும் (சானிட்டைசர்) பயன்பட்டது பலருக்கும் தெரியாது!

 

 

4) வேதியல் மாணவனாக;

சோடியம் குளோரைடு எனும் உப்பை வறுத்து சமையலுக்கு பயன்படுத்தச் சொல்வார் என் தாத்தா!(எனக்கு அந்த உப்பும் கிடையாது)! உப்பானது அதிக நேரம் அதிக சூட்டில் இருக்கும் போது அதிலிருந்து குளோரின் வாயு வெடித்து விடுபட்டு வாயுவாக போய்விடும்! மீதமிருப்பது சோடியம்! இது மக்னீசியம் போல விசித்திரமான ஒரு தனிமம்! நீரினுள் போட்டால் வெடிக்கும்! எப்பொழுதும் ஏதாவது ஹைட்ரோகார்பனான எண்ணெய்யின் உள்ளேயே இருக்க வேண்டும்! சோடியத்தை துளியூண்டு பஞ்சினுள் அல்லது, பன்னாடையினுள் எடுத்து சொட்டுநீரை விட்டு தீப்பற்ற வைக்க முடியும்! வெடியாகவும் , தீப்பெட்டி போலவும் பயன்பட்டதால் உப்பை காய்ச்சுவது பன்னெடுங்காலம் முன்பே தடை செய்யப்பட்டு விட்டது அரசர்களால்! சோடியத்தை இன்றைய "டைம்" பாம் போல பயன்படுத்தி எதிராளிகளின் வைக்கோல், தட்டு ,கடலை பொட்டு போர்களை, குடிசைகளை, விளைந்து காய்ந்த பயிர்களை எரித்து சேதம் உண்டாக்கியதால் சோடியத்திற்கு இந்த தடை! ஏனென்னால், அரசனுக்கும் இது வரிவசூலை பாதிக்கும்! இந்த பழங்காலமுறையை தோழர் முத்துநாகு அழகாக தன் கதைமாந்தர்கள் மூலம் விவரிப்பார்! மீதியை நாவலில் படியுங்கள்! இப்படிப்பட்ட தரவுகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன உள்ளே! கிணற்று ஆசாரிகளுக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த உப்புக்காய்ச்சும் முறை தெரிந்தே வந்திருக்கிறது!

எங்களுக்கு இந்தமுறையில் பாறைஉடைத்து, வற்றாத கிணறுவெட்டிய கிணத்துஆசாரியின் சொத்துப்பிரச்சனையில் தலையிட்டு, அது இரட்டை கொலையில் முடிந்தது!.

 

 

5)சூழலியலாளராக;

இருவேறு இனங்களுக்கு இடையில் நெகிழ்வு நிலம் தேவைப்படுவது போலவே(ஒசூர்,பாலக்காடு..) , வனங்களுக்கும்,விவசாய நிலங்களுக்கும் கூட ஒரு நெகிழ்வு நிலம்( buffer zone) பேணப்பட்டு வந்திருக்கிறது! இது கானுயிர்களுக்கும் , கால்நடைகளுக்கும் பொதுவான பகுதி! இந்த buffer zone பகுதியின் இன்றியமையாமையை தோழரைப் போல விவரித்தவர் யாருமில்லை! இன்னும் தெரிய சுளுந்தீயில் நோக்குக!

 

 

6)வரலாற்று ஆய்வாளராக;

விஜயநகரமன்னர்களை ஏதோ இந்துமத காவலர்களைப் போலவும், வேதிமதத்தவரை அண்டவிடாத எல்லைச்சாமிகள் போலவும் பீற்றி திரிபவர்களை கையறுநிலையில் நிறுத்துகிறது நாவல்! நாவலின் காலகட்டத்தில் எப்படி, எதற்காக புறமதங்கள் உள்ளே நுழைந்தன என்பதை பட்டவர்த்தனமாக தோலுரிக்கும் அதேவேளையில் புத்தமும் சமணமும் அழிக்கப்பட்ட விதத்தையும் பேசுகிறது! கோடங்கி, பூம்பூம் மாட்டுக்காரன் போன்றோர் எப்படி மன்னர்களுக்கு வேவுஊழியம் செய்தனர் என்பதையும் நாசூக்காக சொல்லிச்செல்கிறது சுளுந்தீ! நான் சொல்லி இருப்பது கொசுறே!

 

 

7)தாவரவியல் மாணவனாக, விலங்கியல் மாணவனாக;

தாவரங்களையும், விலங்குகளையும் வெறுமனே மனப்பாடம் செய்வதல்ல படிப்பு! அவற்றை அன்றாட வாழ்வில் உணவுக்காகவும், மருந்துக்காகவும் எப்படி பயன்படுத்துவது, அவற்றில் ஏற்படும் நோய்களை எப்படி போக்குவது என்பதை அறிவதே படிப்பு என நாவலை படிக்கும்போது உரைக்கிறது! மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ,தாவரங்களுக்கும், பறவைகளுக்கும் இடையே ஒரு உள்ளார்ந்த பன்னெடுங்கால உறவு இருப்பதை படிக்கும் போது உணர முடிகிறது!,

 

 

😎நிலத்தடி நீரை கண்டுபிடிக்கும் நீரோட்டக்காரனாக, மடாதிபதியாகராவுத்தனாக, முனைவனாக, நாத்திகனாக ,ஆத்திகனாக, வெட்டியானாக, வேர்சொல் காணும் அறிஞராக, பண்டுவனாக, சலவை தொழிலாளியாக, நாவிதராக, பஞ்ச காலம் போன்ற கடினமான சூழ்நிலையிலும் உயிர் பிழைக்கும் வித்தை(Man vs wild) தெரிந்த வித்தகராக நாவலில் வரும் அத்தனை பேரும் அண்ணன் முத்துநாகுவே எனும் போது வியப்பாக இருக்கிறது.

 

சுடுகாட்டுக்கு தீச்சட்டி சுமக்கும் பழக்கம் கூட தீப்பெட்டி இல்லாத காரணத்தால் வந்தது தான்! காரணம் தெரியாமல் இன்னமும் இழவு வீட்டு வாசலில் தீ போட்டு , சுடுகாடு வரையிலும் தீச்சட்டி தூக்குறோம் பொணத்த எரிக்க சாங்கியம் என்ற பெயரில்.

 

 

எங்கள் கோவை பக்கம் சில வில்லங்கமான ஆட்களை முசுடு அல்லது முசுறு என்பர்! முசுறு என்றால் மரத்தின் இலையில் கூடு கட்டி வாழும் சுளுக்கை செவ்வெறும்பு என்பது இந்த நாவலை படித்த பின்புதான் தெரிந்தது! அதேபோல "வெங்கம் பய " என்பதின் பொருளும் இந்த நாவலை படித்த பின்பு தான் தெரிந்தது. கிளியோபாட்ரா இறந்தபின் அவரது பிணத்தை புணர்ந்தனர் என்ற அதிர்ச்சியின் நீட்சி நம் நிலத்திலும் நடந்திருப்பது ஆச்சரியமே.

 

 

சில புத்தகங்கள் நம்விரலை நமக்கு தெரியாமலே பக்கங்களை திருப்ப வைக்கும். மரபு வழியில் தீப்பெட்டியோ , லைட்டரோ இல்லாத காலத்தில், கோயில் குண்ட குழியிலிருந்தோ, மடம் அல்லது, அரண்மனையிலிருந்தோ, அடுப்பெரிக்க வீடுவரை அணையாமல் பந்தம் போல கொண்டுவர சுளுந்தீ குச்சியை பயன்படுத்துவார்கள். சுளுந்தீ குச்சியில் இருக்கும் எண்ணெய்பசை தீயை அணையவிடாது. அய்யகோ! தமிழனுக்கு தீயை உண்டாக்க தெரியலையா? என குமுறக்கூடாது . கடசக்கட்டை (கடைசல் கட்டை), உப்புக்கசடு (சோடியம்) , ஆடி(லென்ஸ்)னுதீயை உற்பத்தி செய்ய முடிஞ்சாலும் செய்வது ராஜகுற்றம்! ஏனா, இரவில் ஒருகுலத்துக்காரன், மறுகுலத்துக்காரனோட விளைஞ்ச (காய்ஞ்ச) வெள்ளாமையிலும், போர்களிலும் (வைக்கோல், சோளத்தட்டு, பயிறு, கடலத்தொலி) வீடுகளிலும் தீயை வச்சுடுவாங்க பழி தீர்க்க! பறிகொடுத்தவனுக்கு மட்டுமில்ல; அரசனுக்கும் வரிவருமானம் போயிடும் இதனால்! அதனால , காலையில கஞ்சி வச்சா பொழுதுழுக கங்குவை சுத்தமா அணைச்சிடணும்! பொழுது விழுந்ததும் யாருக்கும் தீயின் கங்கை இரவல் தரமாட்டார்கள். அந்த பழக்கம் அண்மைகாலம் வரை காரணம் தெரியாமலே, கிராமங்களில் கடைபிடிக்கப்பட்டு இருந்தது. மிகைபடக் கூறல் எதுவும் இல்லையென்றாலும் கூறியது கூறல் இந்த நாவலில் வருகிறது; அதை தவிர்த்திருக்கலாமோ? சுளுந்தி நாவல் என்ற வரையறையில் வருகிறதா இல்லையா என்பது எனது சிற்றறிவுக்கு புலப்படவில்லை. ஆனால் அருமையான படைப்பு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

 

 

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...