Search This Blog

Thursday 25 April 2019

நூறு விழுக்காடு வாக்கு


                                                


                                                                          நூறு விழுக்காடு வாக்கு 

Tuesday 23 April 2019

தொல்லியல் பேரா. கா. ராஜன் பேட்டி



                                                  மொழியின் தேவை
                       
                                   

Saturday 20 April 2019

பண்டுவம் என்ற சித்த மருத்துவம் அழிந்த வரலாறு




                                         சித்த மருத்துவம் அழிந்த வரலாறு
                                   Rengaya murugan & Muthunagu nagu

Thursday 18 April 2019

நின்று ஒளிரும் நெருப்பு







 எழுத்தாளர்.முனைவர் பழ.அதியமான் இ.ஒ.ப (I.B.S)
கொடைக்கானல் பன்பலை
வானொலி நிலைய இயக்குனர்
                                                        




    

சுளுந்தீ
நின்று ஒளிரும் நெருப்பு

நூலதிகாரம் நூல் south indian repellion 1800 - 1801




                                             இந்தியாவின் முதல் விடுதலை முழக்கம்

நூலதிகாரம் ;; நூல்;தேடித்திரிவோம்வா

                                                                                    நூலதிகாரம்

பொதுடமையை எதிக்க எத்தனை வடிவம்

  

                             

                                      பொதுடமையை எதிக்க எத்தனை வடிவம்

Saturday 13 April 2019

எது தமிழ் புத்தாண்டு ?





                          எது தமிழ் புத்தாண்டு ?

Friday 12 April 2019

நாட்டு மாடு , ஆடு உண்டா?




                                         நாட்டு மாடு , ஆடு உண்டா?


மரபணு மாற்றமும் பரிணாம வளர்ச்சியும் (jenetic change and mutation)




                             மரபணு மாற்றமும் பரிணாம வளர்ச்சியும் 

                           (jenetical change and mutation and spontaneous mutation)

கல்பாக்கம், கூடாங்குளம் அணுமின் நிலையம் என்றால் ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ தீங்கில்லா திட்டமா?





கல்பாக்கம், கூடாங்குளம் அணுமின் நிலையம் என்றால் ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ தீங்கில்லா திட்டமா?

Wednesday 10 April 2019

அய்யா ஆறுமுகசாமி இறப்பு; தில்லை கோயில் வழக்கும்.






            அய்யா ஆறுமுகசாமி இறப்பு; தில்லை கோயில் வழக்கும்.

மதங்கள் எதை நோக்கி பயணிக்கிறது


   
                                             மதங்கள் எதை நோக்கி பயணிக்கிறது

காடுகளை அழித்தது யார்?


                                                                      

                                         காடுகளை அழித்தது யார்?



 



  
காடு அழிப்பின் துவக்கம்


சுற்றுச்சூழல், காட்டுநெருப்பு (தீ), வனம் காக்கப்படவேண்டும் இது தான் இன்று முகநூல், பத்திரிக்கை, தொலைகாட்சி, தேநீர் கடைகள் என அனைத்து இடங்களில் பேச்சுபொருளாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சூழல் மாற்றம் நிகழ்ந்து விட்டதாக உலகளவில் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழல் காப்போம் என பேசுபவர்கள் கவனிக்க மறுப்பதை நாம் பார்த்தாக வேண்டும்.

                                                                   வனம் என்றால் என்ன 

        பாறை, புல்வெளி, மொட்டைப் பாறை, சோங்கான அடந்த மரம், புல், பூண்டு இவைகள் கூட முளைக்காத பூமி இவைகளெல்லாம் சேர்ந்ததே வனம். இந்த வனத்தை மூன்று அடுக்கலாக மலைவாழ் மக்கள் பிரிக்கிறார்கள். அ. கருங்காடு ஆ. ஒரக்காடு இ. தரைக்காடு . இதை 1893 காலங்களில் பிரிட்டீஷ் ஆட்சியில் core zone, territorial zone, bufferzone என பிரித்தார்கள். 

கருங்காடு ; இங்குதான் விலங்குகள் தங்களது இனப்பெருக்கத்தை துவக்கும். இனப்பெருக்க காலத்தில் கொலை வெறி தாக்குதல் நடத்தும். இதனால் இந்தக் காட்டுக்குள் மலைவாழ் மக்கள் செல்ல மாட்டார்கள். அதே போல் வனத்துறையினரும் அங்கு செல்ல மாட்டார்கள். அந்தக் காட்டினை அப்படியே காக்க வேண்டும் என்பதே வனத்துறை சட்டம் சொல்லுகிறது. 
காடு அழித்து நடப்பட்ட வாட்டில் மரங்களை வெட்டப்பட்ட இடம்

ஒரக்காடு ;  இனப்பெருக்க காலம் முடிந்த பின்பு விலங்குகள் வேட்டையாட உணவு சேகரிக்கும் இடம் ஓரக்காடு.

தரைக்காடு ; இனப்பெருக்கத்திற்கு தகுதியை இழந்த விலங்குகளை மற்ற விலங்குகள் விரட்டி அடிக்கும் அவைகள் தங்கும் இடமே தரைக்காடு. இந்தத் தரைக்காடு மலையின் உயரத்தில் கால் பங்கு இருக்க வேண்டும் என்பதை இந்திய வனச்சட்டம் வழியுறுத்துகிறது. ஆனால் அவை நடைமுறைப்படுத்தவில்லை. 

தனிமனிதர்கள், குழுக்கள் வனத்தை அழித்தார்கள், அழிக்கிறார்கள் என்பதே தற்போதுள்ள சுற்றுசூழல் ஆர்வலர்கள் ? வைக்கும் வாதம். இவர்களால் வனத்தை அழிக்க முடியுமா ? அழித்தார்களா?. வனங்கள் எப்போது அழியத் துவங்கியது.

கிடைத்த வரலாற்று சான்றுகள் அடைப்படையில் ராசராசசோழன், அவனை அடுத்து வந்த ராசேந்திரசோழன் காலத்தில் காடு அழித்து களனியாக்கப்பட்டதாக கல்வெட்டு செய்திகளை ஔவை. துரைச்சாமிபிள்ளையும், பன்மொழி புலவர் அப்பாத்துரையார் சோழ வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் குறிப்பிடும் இடங்கள் எல்லாம் காவிரி படுகை ஓரமே. கோவை மாவட்டத்திலும் சில பகுதிகள் அடங்கும். பாண்டியர் வரலாற்றில் காடுகளை அழித்த வரலாறு மிக சொற்பமாகவே பதிவாகியுள்ளது. பாண்டியர், சோழர் ஆட்சிக்கு அடுத்து வந்த இசுலாமிய ஆட்சியில் ஏற்றுமதி தொடர்பான வரலாற்று குறிப்புகள் உள்ளதே தவிர காடுகள் அழிப்பு இல்லை. இவர்களை அடுத்து தமிழகத்தில் துள்ளிதமாக 306 ஆண்டுகள் ஆண்ட விஜயநகர, நாயக்கர் ஆட்சியில் கருநாடக, ஆந்திர பகுதியிலிருந்து வந்த மக்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்கவும், 1680 ல் துவங்கிய ஆனந்த வருட கடும் பஞ்சத்தை எதிர்கொள்ளவும் மலைகளில் ஓரக்காடுகள் வரை அழித்து பண்ணைகளாக்கினார்கள். இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் பெரும்பகுதி நிலங்கள் தெழுங்கு பேசும் பேரி செட்டி, நாயக்கர் குல மக்களும், கண்டம் பேசும் தேவாங்கு செட்டி, ஒக்கலிய கவுண்டர் குல மக்களுக்கு சொந்தமாக இருப்பதை அறியலாம். நாயக்கர் ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான வனங்கள் விளைநிலமாக்கப்பட்டதால் காடுகளின் பரப்பளவு குறுகியது. 

நாயக்கர் ஆட்சிக்கு முன்பு காடுகளை அழிக்காமல் மிளகு மட்டுமே வேளாண்மை செய்யப்பட்டு ஏற்றுமதியானதை இலக்கியம் வரலாறும் சான்று அளிக்கிறது. நாயக்கர் ஆட்சியில் இவை மாற்றம் செய்யப்பட்டு நேரடியாக உண்ணும் வேளாண்மை துவங்கப்பட்டுள்ளதை வரலாறுகள் மெய்பிக்கிறது.

நாயக்கர் ஆட்சியில் தரைக்காடு, ஓரக்காடு அழிக்கப்பட்டது. இவர்களை அடுத்து ஆட்சியை பிடித்தனர் பிரிட்டீஷார். இவர்கள் காலத்தில் 1890ல் மீண்டும் பஞ்சம் அதை தாது வருடப்பஞ்சம் என்றும் பிரமபுத்திரா நதியே காய்ந்ததால் வங்கதேசப்பஞ்சம் என்றும் கூறுவார்கள். இப்பஞ்சம் பல்லாண்டுகள் நீடித்தது. இதனை எதிர்கொள்ள நாயக்கர் ஆட்சியை போல கருங்காடுகளை அழித்து டாடா, ஏ.வி தாமஸ் போன்ற நிறுவனங்களுக்கு சுமார் 40லட்சம் ஹெக்டர் நிலத்தை 999 ஆண்டுகளுக்கு தேயிலை, காப்பி பயிரிட குத்தகைக்கு விட்டுள்ளார்கள். அதன் பின்னர் மிட்டா, மிராசு, ஜமீன்களுக்கும் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டார்கள். ஆக வனங்கள் ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தவர்கள் மக்களின் நிலை அறிந்தே வனங்களை அழித்துள்ளார்கள் என்பதை உணர முடிகிறது. இந்த வன அழிவில் எத்தனை ஆயிரம் மரங்கள் அழிக்கப்பட்டது என்பதை உணர்ந்து புரிந்து கொண்டால் தனி மனிதனாலும் வனத்தை ஒட்டியுள்ள மனித குழுக்கள் வனத்தில் ஒரு சுள்ளியைத்தான் அழிக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

                                                செயற்கை பட்டு

 
         விடுதலை? இந்தியாவில் மறைந்த பிரதமர் திருமதி. இந்திராக்காந்தி ஆட்சியில் விஸ்காஸ் என்ற நிறுவனம் இந்தியாவில் செயற்கை பட்டு (ரேயான்) உற்பத்தியை துவக்க ஒப்பந்தம் போட்டார்கள். இவர்கள் வனத்தை அழித்து வாட்டில், யூக்லிப்டஸ், பைன், சைப்ரஸ்  மரங்கள் நடவு செய்து வெட்டிக்கொள்ள 30 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்ததிட்டத்திற்கு ''இடைபடு காடுகள் திட்டம்' (INTER SPACE FOREST DIVISON) என்ற பெயரிடப்பட்டது. ஏற்கனவே நாயக்கர், பிரிட்டீஷ் ஆட்சியில் காடுகl அழித்ததை விட கூடுதலாக இந்நிறுவனம் காடுகளை அழித்தது. இந்த விஸ்காஸ் நிறுவனம் சாயப்பட்டரைக்களுக்காக வளர்த்து  வெட்டிய மரங்களை சிறுமுகை ஆற்றங்கரையில் சாயம் காய்ச்சி ஆற்றில் விடப்பட்ட கழிவு ஆற்று நீரை பாதிப்படைய வைத்தது. 
 
      பாதிப்பில் கடும் பாதிப்பு என்றால் விஸ்காஸ் செய்த அழிவுதான். '1972ம் ஆண்டுவாக்கில் ரேயான் செயற்கை பட்டு நூல் தயாரிக்க, தோல் பதனிடும் சாய தொழில்சாலைகளுக்கு தேவைக்காக வனத்திற்குள் வாட்டில், பைன், சைப்ரஸ் மரங்களை வளர்த்து வெட்டிட அனுமதி அளித்தது இந்திரா அரசு. தண்ணீர் ஓட்டம் உள்ள ஓடை ஆற்று படுகை புல்வெளிகளில் இந்த மரங்கள் நடவு செய்து வளர்த்து மரம் பெரிதானவுடன் வெட்டினார்கள். இந்த ரேயான் ஆலைக்கழிவால் சிறுமுகை பாதித்தது. 1996ல் தமிழக அரசு ஆலைகளை மூட அரசு  உத்தரவிட்டது. இதனால் கொடைக்கானல், நிலகிரி வனத்திற்குள் வைக்கப்பட்ட மரங்கள் வெட்டாமல் வளர்ந்து பெரியதானது. இந்த மரங்களில் விதைகள் காற்றில் பரவும் தன்மை கொண்டது. இதனால் வனம் முழுக்க பரவி இருந்த புல்வெளிகளில் இவ்விதைகள் முளைத்து புல்வெளிகள் இல்லாமல் செய்து விட்டது. கொடைக்கானலில் பச்சையாக தெரிவது இந்த வாட்டில், யூக்லிப்டஸ், பைன், சைப்ரஸ் மரங்களே. இந்த மரங்கள் முளைத்துள்ள தூர் பகுதியில் புல் முளைக்காமல் இருப்பதையும் மற்ற மரங்கள் இருக்கும் இடங்களில் புல்வெளிகள் உள்ளதையும் அங்கு போனால் பார்க்கலாம்.

                                                  புல்வெளிகளின் தன்மை

        ''புல்வெளிகள் நீர்சதுப்பு தன்மையை பல மாதங்கள் நிலைநிறுத்தும் தன்மை கொண்டவை. ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகை மாதம், மழைக்காலம் முடிந்த பின்பும் கோடை காலத்தில் புற்கள் வேர்பகுதியில் தேக்கி பிடித்து சேமித்து வைத்த நீரினை கசிய செய்திடும். இதனால் கோடையிலும் ஓடைகளில் தண்ணீர் வலிந்து ஓடும். புல்வெளிகளை அழித்ததால் நீர் வரத்து ஓடைகளில் மழை காலம் முடிந்து மாசி மாதத் துவக்கத்திலே வறண்டு விடுகிறது. தமிழகத்தில் ஓர் ஆண்டு முழுவதிலும் அதிகப்பட்டமாக 23நாள்கள் மட்டுமே மழை பெய்திடும். இதன் அளவு சுமார் 850 மி.மீ மட்டுமே. மற்ற நாள்களில் வனத்தில் உள்ள ஓடைகள் வறண்டு போகாமல் காப்பது இந்தப் புல்வெளிகள். புல்வெளிகள் குறைந்ததால் வனவிலங்குகள் இரை தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பிற்குள் நுழைகிறது. ரேயான் சாய நிறுவனங்களுக்காக வைத்துள்ள இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினால் தானாக புல்வெளிகள் உருவாகும் தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே வனவிலங்குள் மட்டும் அல்ல மனிதர்களை காத்திட முடியும்.
                    நீலகிரி

Friday 5 April 2019

பூமிப்போர்


                                                                             


                                                      பூமிப்போர்  


                         




இந்திய ஒன்றியத்தில் உள்ள நர்மதை ஆற்றங்கரைக்கு வட தெற்கு பதியில் பெரும்பான்மையாக உழுகுடி சமூதாயமான தாகூர் மற்றும் ராசபுத்திர குலத்தினர் வாழ்கிறார்கள். 12ம் நூற்றாண்டில் இங்கு நிலங்கள் அனைத்தும் அரசுடமையாக இருந்தது. அப்போது இசுலாமிய ஆட்சியாளர்கள் அங்கு ஆண்டனர். நில குத்தகயை வேறு நபர்களுக்கு மாற்றிட ஆளும் ஆட்சியாளர்கள் முடிவெத்தார்கள். அப்போது ஆயிரம், ஐநூறு பேர் மொத்தமாக சேர்ந்த உழுகுடிகள் ஈட்டி கத்தி கம்புகளைக் கொண்டு ஆளும் அரசுமீது போர் தொடுத்துள்ளனர். இந்தப் பூமிப்போரால் பிரிட்டீசு இந்தியாவில் நிலம் தனி நபர்களுக்கு பட்டா வழங்கும் சட்டம் கொண்டு வர உதவியாதாகவும் வரலாற்று ஆய்வு உண்டு. 

 விஜயநகர ஆட்சியாளர்கள் தமிழகத்தில் கால்லூன்றிய காலத்தில் இது போன்ற பூமி போர் உழுகுடிகள் நிகழ்த்தினார்கள். இந்த போர் நாயக்கர் ஆட்சி முடியும் வரை நீடித்தது. இந்த போரினைச் சமாளிக்க விஜயநகரத்திலிருந்து வந்த மக்களுக்காக தமிழகத்தில் இருந்த காடுமலைகளிய அழித்து குடியேற்றம் செய்தனர். தற்போது மறந்த 'பூமி போரி'னைத் சாலை வழியாக துவக்கி வைத்துள்ளது அரசு. 

வளர்ச்சிக்காக சாலைகளை போடுகிறார்கள் , இந்தியாவில் மக்கள் தொகை படித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுகிறது இவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது அரசின் கடமை தானே என்பது வாதமாக இருக்கிறது.

 இந்திய துணைக்கண்டத்தில் என்ன என்ன உற்பத்திகள் செய்யப்படுகிறது அல்லது இறக்குமதி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் தேவைகள் என்னபதை வைத்தே சாலைகளின் தேவை அல்லது மேம்பாடு குறித்து அளவிடப்படுகிறது. உற்பத்தி செய்ய முடியாத இடத்திற்கு, உற்பத்தி செய்ய முடியும் இடத்திலிருந்து முதல் தர உற்பத்தியான உணவு, இரண்டாம் தர உற்பதியான ஆடை, அதன் பின்பு மூன்றாம் தேவையான ஆபரணங்கள். ஆக சீனாவில் உற்பத்தியாகும் பாக்சைட், கெந்தகம் பூதம் என்ற பாதரசம் இவைகள் இந்தியாவிற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் அதே போல்வே எரிபொருள்களும். இதற்கு தான் கடல் மார்க்கம் ஆகாய மார்க்கம் சாலை மார்கமாக பொருள்களை கொண்டு செல்ல மேம்பாடு தேவைப்படுகிறது.

சில ஆண்டுகளாக 2018 மார்ச் கணக்குப்படி மத்திய இந்தியாவிலும் தென் இந்தியாவிலும் பருத்தி உற்பத்தி 30 விழுக்காடு வரை சரிந்துள்ளது என்பதை மய்ய அரசின் வருடாந்தர புள்ளி விபர அறிக்கை சொல்லுகிறது. அடுத்து மய்ய இந்தியாவில் பெரும் உணவு உற்பத்தியான கோதுமை, பருப்பு நல்ல விளைச்சல் கண்டுள்ளது. மய்ய, மாநில அரசுகளின் சேமிப்பு கிடங்குகளில் இதன் இருப்பு இன்னும் ஐந்தாண்டுகளுக்கு போதுமான அளவுக்கு உள்ளதாகவே இருப்பு அறிக்கை (ஸ்டாக் ரிப்போர்) சொல்லுகிறது. 

உணவின் இரண்டாம் தர தேவையான உணவு சக்கரை. இது தேவையான உற்பத்தி இருந்தாலும் காட் (gat) ஒப்பந்த அடிப்படையில் இறக்குமதி செய்ய வேண்டிய நிர்பந்தத்தால் உள்நாட்டு உற்பத்தி தேக்க நிலை ஏற்பட்டது. இதனால் கருப்பு பயிரிட்ட உழுகுடிகளுக்கு நிலுவை தொகை சிக்கலை உருவாக்கி அவர்களை வேறு வேளாண்மை உற்பத்திக்கு அரசே மடை மாற்றம் செய்து வருகிறது.

இரண்டாம் தர உணவு தேவையில் முக்கிய இடம் தருவது எண்ணை. இதன் உற்பத்தியில் வட கிழக்கு இந்தியாவில் போதுமான கடலை, தக்காணத்தில் எள் விளைந்தது. இதற்கு விலை கிடைக்கக்கூடாது என்பதை விட உலக முதலாளிகளின் மருந்துகளை மானுட சமுத்திரத்தில் விற்று பிழைக்க இந்தியவை ஆளும் காட் முதலாளித்துவர அரசுகள் நஞ்சுகளான உணவு? எண்ணைகளை அனுமதித்தது. இந்த நஞ்சு எண்ணை விவாபர துவக்கம் இருபது ஆண்டுகளுக்கு முன்பே துவக்கப்பட்டு இன்று வெற்றிகரமாக விற்கப்படுகிறது. அதனால் தான் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) இல்லாத எண்ணை என விற்பனை செய்ய முடிகிறது. இந்த கொலஸ்ட்ரால் இல்லாத எண்ணை என்பது ஐக்கிய நாடு சபையில் கடுமையாக எச்சரிக்கப்படும் கடுகு எண்ணையில் தேவையான எண்ணையில் வாசனை திரவியத்தை உற்றி காய்ச்சி. நல்லெண்ணையும், விளக்கு எண்ணையும், தேங்காய் எண்ணையும் ஒன்றே. தேவை வாசனை மட்டுமே. இதைத்தானே விற்பனை செய்கிறார்கள். இதனால் தான் அனைத்து நோய்களும் என்பதை அறிவியல் உலகம் அறிந்திருந்தும் அதை மருத்துவ வியாபாரத்திற்காக அனுமதிக்கிறார்கள். இவை உடல் ஆரோகியத்திற்கு கெடுதியானது என்றால் பிரதமராக இருப்பவர்களே புழுத்துப்போன யோகா மூலம் கொழுப்பை கரைக்க முடியும் எனப்பிரச்சாரம் செய்கிறார்கள். கடுகு, பனை எண்ணைகள் உடலுக்கு 100% கெடுதி என, இத்துப்போன உலக சுகதார மய்யம் கூட 13 ஆண்டுகளுக்கு முன்பு அறிக்கை கொடுத்தது. அதையும் மீறி நாங்கள் கொழுப்பு இல்லாத எண்ணை தருகிறோம் என அடிமுட்டாலான படித்த சமூகத்தை நம்ப வைத்தது. பள்ளிகூடம் போகாமலே உடல் நடலத்தோடு இருந்த உழுகுடிகள் மீதும் இவர்களின் அடிமுட்டால்தனத்தை ஏவி உழுகுடி, உழைப்பாளிகளையும் நோயாளியாக்கி விட்டார்கள். தற்போது விற்பனையில் உள்ள தேங்காய் எண்ணை 50 விழுக்காடு பெட்ரோல் என்பது விசாரித்துப்பார்தால் நமக்கு தலை சுற்றுகிறது. 

உற்பத்தி இல்லாமலமே உற்பத்தி செய்யப்படும் எண்ணையினை காட் ஒப்பந்த முதலாளிகள் குழாய் மூலம் கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்து தொடர் வண்டிகள் மூலம் எளிதாகவும் கட்டணக்குறைவாகவும் நாடு முழுக்க அடைகிறது. இப்படி இருக்க எட்டு வழிச்சாலை விரிவாக்க திட்டத்தின் இலக்கு என்ன ?. பிரிட்டீசு இந்தியாவில் வி. பில் என்ற புவியியல் நிபுனரால் எழுதப்பட்ட 'எக்கானிமி ஆப் இந்தியா' என்ற நூலிலை கையில் எடுத்துள்ளது உலக வங்கி (இது உலக முதலாளிகளாக இயக்கப்படும் தனியார் வங்கி). அந்த நூலில் தக்காணம் முழுக்க வைரம் வைடூரியம், மரகதம், வெள்ளை நிற சலவைக்கல், சுண்ணாம்புக்கல் உள்ளது என குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. இந்த கனிமங்களை சுரண்டலுக்குதான் இந்தியாவை ஆளும் காட் ஒப்பந்த அரசுகள் ஒற்றை பாதையிலிருந்து எட்டுப்பாதையாக மாற்றுகிறது. 

 வி. பில் தனது குறிப்பில் இந்தியாவில் இருப்பு பாதை (ரயில்வே) போடப்பட்டதால் உணவு மற்றும் இரண்டாம் தர சமூக தேவைப் பொருள்கள் விலை இந்திய ஒன்றியம் முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளது. இருந்தாலும் ஜபல்பூர், காந்த மலைப்பகுதியில் இரும்புகாக தாது வெட்டி எடுத்தால் சுற்றுச்சூழல் கெட்டு விடும் என இவரின் அறிவுரையை ஏற்ற அரசு இரும்பு தாதுவை வெட்டி எடுப்பதை நிறுத்தியது. ஆங்கிலேய அரசுக்கு இருந்த அக்கரை கூட சுதேதி பித்தால்லாடம் பேசும் காட் முதலாளி அரசுகளுக்கு இல்லையே. இதை அம்பலப்படுத்த வேண்டிய கட்சிகள் எங்கே.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பத்திர பதிவு நடைமுறையை மய்ய அரசு மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டது. அதை ஆதரித்து பல வணிக பத்திரிக்கைகள் குறிப்பாக இந்தியன் எக்னாமி என்ற பத்திரிக்கை தூக்கி வைத்து எழுதியது. இந்த அரசாணை அடிப்படையிலே செல்வி.ஜெயலலிதா நில மதிப்பீட்டு தொகையை அதாவது மார்கெட் விலையை விட அரசு மதிப்பு கூடுதலாக இருக்க வகை செய்யும் வகையில் அரசு ஆணை வெளியிட்டார். இதன் நோக்கத்தை அப்போதே என் போன்றோர் நில கையெட்டுப்பு சட்டத்தை இந்த அரசு கொண்டு வரப்போகிறது என் ஏழுதினோம் பேசினோம் அது நடந்து விட்டது. தற்போது எட்டு வழிச்சாலைக்காக அமைசரவை கூடி கைப்பமிட்ட அரசாணை 106 விதியில் வெளியிட்டுள்ளார்கள். இந்த விதியின்படி அரசாங்கம் நிலம் கையப்படுத்தினால் அதை எதிர்த்து நீதி மன்ற தடையாணை பெற முடியாது வழக்காடலாம். 

                     தெற்காசியவில் குறிப்பாக தென் தமிழகத்தில் பொது ஆண்டிற்கு பின்பு 10ஆம் நூற்றாண்டில் பெருத்த கடல் கொந்தளிப்பும் (சுனாமி) பெரும் நிலநடுக்கமும் ஏற்பட்டது. இதன் காரணத்தை தற்போது ஆய்விடும் புவியியல் வள்ளுனர்கள் பூமியின் சமநிலைத்தன்மை என அறிதியிட்டுள்ளார்கள். உலக மக்கள் அனைவரையும் நுகர்வு கலாச்சாரத்தில் தள்ளி விட்டுள்ளது காட் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தந்திற்கு சீனா, ரஷ்யா போன்ற பொதுவுடமை நாடுகளே இரையாகி விட்டது. பூமியினை அதிகளவில் கனிமத்திற்காக புண்ணாக்கிய நாடு சீனா என்கிறது உலக பொருளதார அறிக்கை. நுகர்விலிருந்து விடுபட நாம் விழிப்புணர்வை செய்திட்டாலே பூமிப்பந்தினைக்காப்பாற்ற இயலும். இவைகளை இந்த பாரளுமன்ற மக்களாட்சி காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது நமது அறிவுடமை.  










Thursday 4 April 2019

நூலதிகாரம் ; நூல் ; இந்திய பழக்க வழக்கங்களும் பண்பாடும்


                     
                                                                                         நூலதிகாரம்
                           

                         இந்திய பழக்க வழக்கங்களும் பண்பாடும்

காசுமீர்கள் உருவாக வேண்டுமா ?


                                      காசுமீர்கள் உருவாக வேண்டுமா ? 


நூலதிகாரம் நூல் ; பள்ளுபாட்டு ஆய்வு


                                                



நூல் ; பள்ளுபாட்டு ஆய்வு
தொகுபாசிரியர் ஏர். மகாராசன்
பதிப்பகம் ; ஆதி , 9994880005, விலை உரூபா - 60

தமிழகத்தில் துள்ளிதமாக 306 ஆண்டுகள் ஆண்ட விஜயநகர நாயகர் ஆட்சியில் இசுலாமிய, கிறித்தவ தெலுங்கு, சமற்கிருத இலக்கியம், அங்கொன்றும் இங்கொன்றுமாக சைவ வைணவ இலக்கியங்கள் வளர்ந்தது. ஆனால் தமிழ் இலக்கியம் சுத்தமாக 'இல்லை' என்ற சொல்லை நீக்கியதே பள்ளு இலக்கியம். இந்த இலக்கியம் கருப்பொருளாக மன்னனைப் பாடவில்லை. மக்களுக்கு உணவு கொடுத்த உழுகுடியான வேளாண் பெருமக்களை கதை மாந்தர்களாக்கி பாடியுள்ளது.

பள்ளு இலக்கியத்தை ஆய்வு செய்து பேராசிரியர் முனைவர் கேசவன் உள்பட பலரும் எழுதியுள்ளார்கள். ஆனால் பேராசிரியர் அல்லாத சமூக ஆசிரியரான பொதுவுடமை சித்தாந்ததை தமிழ் மண்ணில் இலக்கிய வடிவமாக கொடுத்த வானமாமலை அவர்கள் ''சரஸ்வதி'' என்ற இதழில் பள்ளுப்பாடலை பத்துக்கும் மேல் பட்ட தலைப்புகளில் நுண்மான் நுலைபுலமாக ஆய்வு செய்து வடித்துள்ளார். இந்த கட்டுரைகள் இதழிலே முடங்கிக் கிடந்ததை நூல் வடிவமாக்கி வானமாமலைக்கு புகழாரம் சூட்டியுள்ளார் என்பதை விட தமிழுக்கும் அதன் நிலத்தையும் பெருமைப்படுத்தி இருக்கிறார் தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு பள்ளிப் பள்ளி ஆசிரியர் முனைவர் ஏர். மகாராசன். இவர் பள்ளியில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் பங்குடன், பத்துக்கு மேல்பட்ட நூல்களை எழுதி நம் போன்ற 'சமூக' மாணவர்களை உருவாக்கி வலம் வருகிறார்.

''சங்க இலக்கியமான புறாநானூறு, சிலப்பதிகாரம், சமற்கிருத தழுவல் இலக்கியமான அறியப்படும் கம்பன் எழுதிய இராமாயாணம் தவிரத்து உழவனை பாடிய தமிழ் இலக்கியம் முக்கூடல் பள்ளு மட்டுமே. பள்ளுப் பாடல் முழுக்க முழுக்க உழு குடிகளான வேளாண்மை சமூகத்தை மையமாக வைத்து பாடப்பட்ட இலக்கியம்.

பாண்டிய மண்டலமாக அறியப்படும் மதுரை நாயக்கர் எல்லையில் உள்ள திருநெல்வேலி அதில் சீவலப்பேரியே இதன் களம். வேளாண்குடிகளான உழைக்கும் குலமாக இன்றுவரை அறியப்படும் பள்ளர் குலத்தினரே இந்த பள்ளு இலக்கியத்தின் கதாநாயகர்கள்.

பள்ளு இலக்கியம் உருவாக காரணமாக அமைந்தது, 'நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சத்தாலும் ஆட்சியில் பார்ப்பன, பிள்ளை, முதலி ஆதிகம் அதிகமானதாலும் மன்னனை பாடிய புலவர்கள் மக்களை தேடிப்போனார்கள் அவர்களைப் பாடினார்கள். அதிலும் பண்ணை முதலாளியை பாடவில்லை பண்ணையில் வேலை பார்த்த பள்ளனையும், பள்ளியும் பெருமையாக பாடியுள்ளது பள்ளு இலக்கியம். இந்த இலக்கியம் கூத்து வடிவமாக மக்களிடம் செல்வாக்கு அடைந்தது. அதனை எதிர்த்துள்ளது நாயக்கர் அரசு. ஆனாலும் மக்களிடம் இந்த கூத்து வடித்தின் செல்வக்கை குறைக்க முடியாமல் போனதால் இதை வைணவ தளங்களான சீரங்கம், திருகோட்டியூர், சீவிலிபுத்தூரில் பாடி ஆடிட ஆட்சியாளர் மனம் போன போக்கில் கம்பன் எழுதிய இராமாயாணம் போல் பள்ளுப் பாடலைத் தழுவி குருகூர் பள்ளு கோயில் ஒழுகு என மாற்றி எழுதியுள்ளனர்' என வானமாமலை குறிப்பிடுவத அச்சுப் பிசுகாமல் தந்துள்ளார் ஏர். மகாராசான்.

'பள்ளுப்பாட்டின் வளர்ச்சி என்ற கட்டுரையில் பட்டியல் குலத்தினர் கோயில் நுழைவுக்கான ''கரு'' இந்த பள்ளுப்பாடல் என்றால் மிகையாது. சீரங்கத்தில் பள்ளுப்பாடலுக்கு எதிர்பு கிளம்ப சீரங்க பெருமானே அரயர் (நடன மாதர்) என்பவதை பள்ளனிடமும் பள்ளியிடமும் பாடல் கற்றுவரச் சொன்னதாகவும் அதை கற்று வந்த அரயர் சீரங்க பெருமாள் முன் ஆடியதாகவும் கோயில் ஒழுகு சொல்லுகிறது. இதை தனது ஆய்வில் கோயில் நுழைவு போராட்டம் என்பது பிரிட்டீஷ் இந்தியாவுக்கு முன்பே நடந்திருக்கிறது அது தான் பள்ளுப்பாடல்' என விவரிக்கிறார்.

சோழர் ஆட்சி திராவிட நாடுகள் தாண்டி வளர்ந்த போது இடங்கலை வலங்கலை பிரச்சனை நீடித்தது. இதன் நீட்சியாக விஜயநகர ஆட்சியில் தொடர்ந்தது. இது இருக்க வைணவ சைவ மார்க்க சண்டையும் சோழர் கால ஆட்சியில் போல் நடந்தது. வைணவ சைவ சண்டைகளில் உழு குடிகள் எப்படியெல்லாம் சீப்பாட்டார்கள் என்பதை நூல் விவரிக்கிறது.

'பள்ளு இலக்கியத்தில் அரசின் பண்ணையாள் (முதலாளி) ஏச்சு பேச்சாக ஏளமாக உள்ளதை அருமையாக சுட்டிக்காட்டி படிப்பவர்களை பொதுவுடமை சித்தாந்த சிந்தனையை நம் மூளைக்குள் முனைப்பு காட்டுக்கிறார் ஆசிரியர் . முதலாளிகளை நகையாடுவதை கிராமங்களில் இன்றும் கோயில் விழாக்களில் போடப்படும் ராசா ராணி ஆட்டத்தில் 'ராசா வேடமிட்டவர் தோட்ட முதலாளியாகவும், உழவனாக கோமாளி வேசமிட்டவரும் சிறுகதையாடல் வைத்து பாடலோடு வசனம் இருக்கும் அதில் முதலாளியைப்பார்த்து ''ஏ மாப்பிள்ளை, ஏலே தோட்டகார வெண்ணை உனக்கென்ன பிறங்கையை கட்டிக்கிட்டு வரப்பில போவ ... குனிஞ்சு வேலை செய்தாத்தாண்டா விளையும்' என்றும் நாட்டாமையை 'ஏ மாப்பிள நாட்டாமை லூசு நாட்டாமை செவுட்டு பயலே' இப்படியான வசனங்களை கோமாளி பேசுவார். இந்த வசனங்கள் பள்ளுப்பாட்டின் நீட்சியாகவே கிராமிய கலைகளை ஆய்வு செய்த மறைந்த நாட்டுப்புறவியல் பாடகர் பேரா.குணசேகரன் குறிப்பிடுவார்.

அறுபத்தி ஐந்து பக்கத்தில் சமூகத்தின் தேவையை அறிந்து பள்ளுப் பாடலின் ஆழத்தை வழங்கி தமிழை தமிழ் சமூகத்தை செழுமைப் படுத்தியுள்ளது இந்த நூல். நல் பணியை செய்த திரு. ஏர். மகாராசனை எனது ஆசான் தமிழ்குடிமகன் சொல்லில் வாழ்த்துவதென்றால் 'பெரும்பேராசிரியர்', வாழ்க எம்மான் வையகத்தே என வாழ்த்துவோம்.

Wednesday 3 April 2019

'ஊழல் வதம்' எடுபடுமா?#



                                                           'ஊழல் வதம்' எடுபடுமா?#

நூலாயுதம் ; நூல் ; தமிழர் மானுடவியல்


                                                 
                                             நூலாயுதம்

Tuesday 2 April 2019

போடுங்கம்மா ஓட்டு ..... போடுங்கய்யா ஓட்டு

               
                                      'மக்களாட்சி' என்ற  மந்திரச்சொல்
                                     
                           போடுங்கம்மா ஓட்டு ..... போடுங்கய்யா ஓட்டு            


வணக்கம் 
                                         
தில்லி பாரளுமன்றம்


             
 மக்களாட்சி தத்துவம் என்ற மந்திரச்சொல்லால் ''ஓட்டுப்போடலேன்னா செத்ததுக்கு அர்த்தமாப்பா'' என்று சொல்லி ஆன்மீக வாக்காக பரவியிட, வாக்கு சாவடியில் வரிசை நின்று வாக்களித்தார்கள் மக்கள். ஒரு கட்டத்தில் வாக்கு போடுவதால் எதுவும் நடக்கவில்லை என்ற கசப்பு & வெறுப்பாக மாற பலரையும் ஓட்டுச்சாவடியை குட்டிச்சுராகப் பார்க்க வைத்தது. இதனால் அரசியல் கட்சியும் முதலாளிகளும் சேர்ந்து ''வாக்கு சாவடிக்கு வராத மக்களை புரட்சியாளர்கள் அதாவது நக்சல்பாரிகள் கையில் எடுத்தார்கள் என்றால் அனைவருக்கும் சிக்கல் வரும்' என்ற ஆலோசனையை சொன்னார்கள். முதலாளிகளுக்கு பயம் வந்தால் முதலில் அவர்கள் எடுக்கும் ஆயுதம், சாப்பாடு. அதற்கும் மயங்கவில்லை என்றால் பணமாக கொடுப்பது, அதற்கும் அசரவில்லை என்றால் நேரடியாக பேச்சுவார்த்தைக்கு போவது. இதில் பெரும்பாலான மக்கள் அசைந்து விடுவார்கள். பணம் காசுக்கு ஆசைப்படாத மக்களும் 'சரி நாட்டுக்கு வந்தது நமக்கும் ஓட்டப்போடுவோம்' என முடிவெடுத்து வாக்களித்து வந்தார்கள். இதில் மக்கள் பழக்க அடிமையானர்கள் என்பதை விட காவல்துறை இன்னும் பல துறைகளின் நெருக்கடியால் வாக்கு சதவிகிதத்தை தக்கவைத்து மக்களாட்சி தத்துவம் என்ற மானை விரட்டி வந்தார்கள். இந்த மான் மாயமான் என பல்லித்தது. இந்த இடைவெளியில் அரசு எந்திரத்தில் மாற்றம் கொண்டுவர நினைக்கும் குழுக்கள் ஓட்டுப்போடாதே புரட்சி செய் ஆயுதம் ஏந்து எனப்பிரச்சாரம் செய்தனர். இதன் பலன் இந்திய துணைக்கண்டத்தில் வடபகுதியில் எடுப்பட்டது. 

வாக்களிக்க விளம்பரம்

        இந்த காலகட்டத்தில் அண்டை நாடு என்பதை விட ஆன்மீக நாடாகவும் இந்து நாடாகவு அறிப்பட்ட நேபாளத்தில் மன்னர் ஆட்சியை எதிர்த்து மாவோ பொதுவுடமை சிந்தனையாளர்கள் பல்நெடுங்காலமாக போராடி வந்தவர்கள். கைக்கு ஓரளவு வெற்றி கிடைத்தது. (இதில் இந்திய அரசும், இந்தியாவில் இயங்கும் பொதுவுடமைக்கட்சியின் உள்குத்துக்கள் தனி கதை). இந்த மாவோ குழுக்களின் வெற்றி இந்தியாவில் பரவிடக்கூடாது என்பதற்காக ஆலோசனையில் மூழ்கி கண்டுபிடித்தது தான் வாக்கு பெட்டியில் ஒட்டி வந்த நோட்டா. 

    வாக்களிக்காதவர்கள் அரசு எந்திரத்தின் மீது கொண்ட கோபமே இவர்கள் மாவோ குழுக்கள் பக்கள் போய்விடுவார்கள் என்பதால் இவர்கள் கோபத்தை தனிக்க நோட்டோ என்பதை கண்டறிந்து நடைமுறைப்படுத்தினார்கள். ஒரு தொகுதியில் நோட்டோ வெற்றி பெற்றால்  அந்தப்பகுதியில் ஐ.ஏ.எஸ் அதிகாரி தான் சட்ட மன்ற, பாரளுமன்ற உறுப்பினர் என அறியாத கூட்டம்  அதிலும் வாக்களித்து தனது அதிமேதாவிதனத்தை நிறுவியது நிறுவி வருகிறது.   

       

                 மன்னர் ஆட்சியை மக்களாட்சியாக கட்டமைத்த பிரிட்டீஷாரும் இந்திய முதலாளிகளும்


பிரிட்டீஷார் ஆட்சியில் 1920ல் பொது தேர்தல் நடந்தது. அப்போது இங்கிலாந்தை ஆண்ட அரச பிரதிநிதிகளே இந்திய பாரளுமன்றத்திற்கு தலைவர். இந்தியாவில் தேர்தெடுக்கப்பட்ட பாரளுமன்ற, சட்டசபை உறுப்பினர்கள் விவாதத்தை தீர்மானிப்பதும், அவர்களின் தீர்மானத்தை அரச மாளிகையே தீர்மானித்தது. இதை மக்களாட்சி என்று இந்திய மக்களிடம் விதைத்தார்கள்.

         பிரிட்டீஷ் ஆட்சியில் பெரும்பாலான நிலங்கள் பாளையக்காரர்கள், ஜமீன், மிட்டா, மிராஷ்களுக்கு மட்டுமே சொந்தம். சில பகுதியில் உழுபவனுக்கு வழங்கப்பட்ட நிலம் இனாம், ஜாரி என்ற வகைப்பாட்டில் பிரித்தளித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அப்போது நடந்த ஆட்சியை பிரிட்டீஷ் ஆட்சி என்றும் வரலாறு சொல்லுகிறது. சரியாகச் சொன்னால் பிரிட்டீஷ் மன்னருக்கு இயக்கிய இங்கிலாந்து பிரிவியூ கவுன்சிலுக்கு கீழ் நடந்த நாயக்கர் ஆட்சியின் எச்சம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அந்த ஆட்சியை மக்களாட்சி என்று வரலாறு பதிவிட்டுள்ளது.

             மன்னர் அவர்களுக்கு கீழ் இயங்கும் பாரளுமன்றம், அவர்களுக்கு கீழ் நாயக்கர், மறவர், வன்னியர், கவுண்டர் ஜமீன்கள், இதர சாதிகளில் குறிப்பாக முதலியார், பிள்ளை, சில இடங்களில் சொற்ப எண்ணிக்கையில் பார்ப்பனர்கள், நாடார்கள் மிட்டா, மிராசு, பட்டக்காரர் என மூன்றடுக்கு ஆட்சி முறையை மக்களாட்சி என்று இன்றும் நம்புவோர்கள் உண்டு. இந்த திரைமறை பொம்மலாட்ட மக்களாட்சியில் எல்லோரும் வாக்களிக்க தகுதியானவர்கள் இல்லை. பட்டாதாரிகள் அதாவது நில உடமையாளர்கள் மட்டுமே. இன்னும் கொச்சையாகச் சொன்னால் அரசுக்கு வரி செலுத்துபவர் மட்டுமே. இதில் பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது.

                         பருத்தி உற்பத்தியை பெருக்க கிடைத்த நிலம்  வாக்குரிமையை தந்தது

            பிரிட்டீஷ் ஆட்சியில் காலத்தில் ஏற்பட்ட தொழில் மயமாக்கத்திற்கு குறிப்பாக துணி உற்பத்திக்கு தேவையான பஞ்சினை உலகத்திற்கே உற்பத்தி செய்திட நெருக்கடி என்பதை விட வியாபாரத்தில் லாபம் சம்பாதிக்க முடிவெடுத்தது பிரிட்டீஷ் அரசு, பஞ்சுக்கொள்கையை விரிவுபடுத்தியது. ஆனால் நில குத்தகைதாரர்களான பாளையக்காரர்கள், மிட்டா மிராசுகள் உழுபவனிடம் நில குத்தகையை வாங்குவதில் கவனம் செலுத்தினார்களே தவிர உற்பத்தியை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாளையக்காரர்கள், மிட்டா மிராசுகளிடமிருந்த நிலங்களை கையகப்படுத்தி நிலத்தில் கூலிகளாக குத்தகைதாரர்களாக இருந்த வேளாண் குடிகளுக்கு பஞ்சமி ஜாரி நிலம், கள்ளர் ஜாரி நிலம் என பிரித்து வழங்கினார்கள். இதன் மூலம் வாக்களிக்கும் உரிமையை பல குலதினர் பெற்றனர். இதன் மூலம் சில பட்டியல் குலத்தினரும், பிற குலத்தினரும் வாக்குரிமை பெற்று தங்களது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நிலை நாட்டினார்கள்.

                   ஒருவழியாக இந்தியா சுதந்தரம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட 1952ல் நடந்த தேர்தலில் 18 வயதிலிருந்த வாக்களிக்கும் வயதை 21 ஆக உயர்த்தி ஆண் பெண் இருவருக்கும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்களிக்கும் உரிமை என்பது நெல்லுச்சோறு சாப்பிட்டால் பெருமை என்பது போல தங்களது பிறவிப்பயனாக கருதிய மக்கள் அனைவரும் மௌன மகிழ்சியாக வாக்களித்து இன்புற்றார்கள். எதற்காக...., வரும் காலத்தில் எல்லோருக்கும் நிலம் கிடைக்கும் என்ற நட்பாசையால்.
இந்தியா சுதந்தரம் அடைந்து 1974 வரை பெருவாரியான நிலங்கள் மிட்டா மிராசு, பாளையக்காரர், ஜமீன்தார்களிடமே இருந்தது. நிலத்தின் மேல் மக்கள் போர் தொடுத்தார்கள் வட இந்தியாவில். வேறு வழியில்லாமல் நில உச்சரவம்பு மற்றும் மன்னர் மானியம் ஒழிப்பு சட்டம் கொண்டு வந்தார்கள். (இந்த சட்ட முன் வடிவத்திற்கு வாக்களிக்காமல் கழிப்பறையில் பம்மிய திராவிட முன்னேற்ற கட்சி உறுப்பினரின் வீர ?வரலாறு உண்டு.)  

நில உச்ச வரம்பு சட்டம் கடும் எதிர்ப்பிற்கிடையில் நிறைவேற்றினார்கள். இச்சட்டத்தை கடுமையாக எதிர்த்தவர்கள் இன்றை பாரதீய ஜனதா கட்சியாக அறிப்படும் அன்றைய ஜன சங்கத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சட்டம் கேரள மாநிலத்தில் ஓரளவிற்கு ஒரளவிற்கு பரவலாக்கப்பட்டது. தமிழகத்தில் பரவாயில்லை என்று சொல்லாம்.

             இச்சட்டத்தில் நில உச்ச வரம்புக்கு உள் சட்ட வழி வகை செய்தது. கம்பெனி, மற்றும் டிரஸ்ட், சொசைட்டி பிரிவுகள் மூலம் 240 ஏர்ஸ் (2.40) வரை வைத்துக்கொள்ளலாம். தனி நபர் 12.4 ஏர்ஸ் நிலம் வைத்திருக்க சட்டம் வகை செய்தாலும் கரும்பு பயிறிட்டிருந்தால் 25 ஏக்கர் வரை தனி நபர் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கியது. இதை பொதுவுடமைக் கட்சியினரே ஆதரித்தது கூர்ந்து கவனிக்கத்தக்கது. இன்றும் நில உச்சவரம்பு சட்டம் நடைமுறையில் உள்ளது. வருமான வரி கணக்கிற்கு மட்டும் ரைடு வரும் மய்ய அரசு அதிகாரிகள் நில உச்சவரம்பிற்கு ஏன் வரமறுக்கிறார்கள் என்பதை கேட்டால் நமக்கு அறிவு உண்டு எனப்பொருள். 

             இந்தியாளவில் நில உச்சவரம்புச் சட்டம் முழுமையாக அமுல் படுத்தவில்லை என இந்திய அரசால் இயக்கப்படும் ஏக்தா பரிசத் போன்ற அமைப்புகள் ஒடிசா, பீகார், இன்றைய சட்டீசுக்கர், மகாராசுட்டம் போன்ற மாநிலத்தில் நிலமற்ற மக்களை ஒன்று திரட்டி தில்லி வரை 500 மைல் நடைபயணம் மேற்கொண்டது. ஆனால் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாத மய்ய அரசு சத்தமில்லாமல் கடந்த ஆண்டும் இந்தியா முழுவதும் உள்ள நில உச்சவரம்பு சட்ட அமுலாக்க அலுவலங்களை மூட உத்தரவிட அனைத்து மாநில அரசுகள் இதனை நைசாக மூடிவிட்டது. 

            அனைத்து உழுகுடி அல்லது வேளாண்மை கூலிகளாக உள்ள அனைவருக்கும் குறைந்தபட்டம் இரண்டு ஏக்கர் நிலமாவது கிடைத்த பின்னர் இந்த அலுவலங்களை மூடி இருக்கலாம் எனக்கோரிக்கை வைக்கக்கூட அரசியல் கட்சிகளில் குறிப்பாக பொதுவுடமை கட்சியினர் கூட கோரிக்கை வைக்கவில்லை என்பதே வியப்பிலும் வியப்பு. இந்த ஏக்தா பரிசத் அமைப்பு மக்களைத்திரட்ட கோரிக்கை பேரணி நடத்த அரசே உதவியது. காரணம் மக்கள் சட்டத்தை கையில் எடுத்து முதலாளிகள் நிலத்தை கையக்கப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும், இந்த மக்களை மவோ பொதுவுடமை அமைப்பினரிடமிருந்து அன்னிப்படுத்தவுமே என்ற பார்வையை மறுதளித்த இயலாது.   

                                                       
                                                                             வாக்களிப்பது எதற்காக    




                     இந்தியாவில் நேரடியாக வாக்களிக்கும் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் இருக்க, இவர்கள் வாக்களித்து குடியரசு தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் என்ற பதவியினரை தேர்ந்தெடுக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுத்த அரசு சரியாக செயல்படுகிறதா என கண்காணிக்க உருவாக்கப்பட்டதே இந்த இந்த சட்டம். அப்படியானால் மாநில ஆளுனரை ஏன் தேர்ந்தெடுக்காம்ல நியமிக்கிறார்கள் ஏன் என யாராது சிந்தித்து கேட்டதுண்டா. கேட்க மறுக்கும் ஒவ்வொரு வாக்காளனும் இந்த அரசமைப்பு சரி என ஒத்துக்கொண்டவன் அல்லது 'ஊருக்கானது நமக்கு' என ஆளோட்டாளாக வரிசையில் நின்று வாக்களிப்பவன் என்று தானே பொருள் கொள்ள முடிகிறது. இதில் நாம் எந்த ரகம் என்பது என்பதை நாமே தெளிந்து கொள்ளவேண்டிய காலம் கட்டாயம்.   

               இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட இந்திய சட்டங்கள் சுதரந்தரம் வாங்கிய குறைந்தது 25 ஆண்டுகள் கழித்தாவது முழுமையாக நடைமுறைப்படுத்தி உள்ளார்களா? என கேள்வி கேட்க வேண்டாம், நாம் யாரிடமாவது விவாதித்தது உண்டா?. காரணம் இந்திய அமைப்பு முறை சரியாக இருக்கிறது என நம்பி அல்லது பொதுப்புத்தியில் வாக்களிக்கிறோம் என்றே பொருள் கொள்ளவேண்டியதாகவுள்ளது.   

பண்ணையாளாக கஞ்சிக்கு வேலை செய்திடும் கூலி தொழிலாளி
            இந்தியா விடுதலை அடைந்து 1974 வரையிலும் பெருவாரியான நிலங்கள் மிட்டா மிராஷ் பாளையக்காரர்கள் வசமிருந்தது. கோயில் மடங்களும் இதில் அடக்கம். இந்த நிலத்தில் உழுது கப்பம் கட்டிய வரும் மக்களுக்கு இதுநாள் வரை இந்திய அரசு நிலம் கொடுக்க முன்வரவில்லையே. மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் தனிப்பட்ட முயற்சியால் நிலமற்றவர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலத்தை வழங்க முயற்சி எடுக்கப்பட்டது. அரசு அலுவர்களின் சாதி ஆதிக்கத்தாலும், உள்ளூர் ஆதிக்க சாதியினரின் தலையீட்டாலும் உரிய பயனாளிகளுக்கு போய் சேரவில்லை, அப்படியே பயனாளியாக இருந்தவகள் பெரும்பாலனாவர்களின் பெயர் பொய்யானவை என இந்திய அரசின் ஆடிட்டிங் ரிப்போர்ட் அறிக்கை சொல்லுகிறது. 

     சுதந்தரம் அடைந்தவுடன் வேளாண் கூலிகளுக்கு நிலம் கிடைக்க அன்னாதான திட்டமாக தனிப்பட்ட முயற்சியாக பூதான இயக்கம் மூலம் கிடைத்த நிலங்கள் இன்று ஆதிக்க சாதிகளின் கைகளில் உள்ளது என்பது வெட்டவெளிச்சம். நிலத்தில் கூலியாளாக தலைமுறை தலைமுறையாக பணிசெய்திடும் நபர்களுக்கு நிலம் கிடைக்கும் என ஒவ்வொரு ஐந்தாண்டும் வாக்களிக்கும் மனநிலையை நம்மிடம் விதைத்தவர்கள் யார் ? என்ற சிந்தனை நமக்கு வரவில்லையே ஏன். 

                                                       தேர்தல் அலுவர்கள் யார் ?          

நேற்று வரை நம்மிடம் கையூட்டு வாங்கிய விஏஓ, ஆர் ஐ, தாசிதார், நமது கண்ணுக்கு தெரியாமல் கமிசனை மட்டும் வாங்கும் ஆர்டிஓ, டிஆஒ ,கலெக்டர், (இதில் விதிவிலக்கான அலுவர்களும் இருக்கிறார்கள்) இவர்கள் தேர்தல் விதிமுறை வந்தவுடன் எப்படி உத்தமராகப் பார்க்கப்படுகிறார்கள். இந்த உத்தமர்கள், 'சட்டத்தை மீறும் நபர்கள் என கைகாட்டினால் அவர்களை சுட்டுத்தள்ள, மொட்டியில் தட்ட நேற்று வரை லஞ்சத்தைத் தவிர வேறு எதுவும் வாழ்க்கையில் அறிந்திடாத சாலையில் உன்னையும் என்னையும் வழி மறிக்கும் இவர்களை உத்தமர்கள் என பார்க்க வைக்கும் மந்திரசக்தி எது என என்றாது நாம் யோசித்தது உண்டா ? இந்த அதிகாரிகளை ஆளுனர்களாக நியமிக்கும் கூத்து தனிக்கதை. 

லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட அரசு அலுவலர்கள்


                  இந்தியாவில் சாதிகளின் இருப்பு என்பது நேற்று இன்று தோன்றியதல்ல. அதன் பெருமை சிறுமைகளை பேசுவது ஆய்விற்காக இருக்கவேண்டுமே தவிர பொதுவெளியில் பேச அனுமதித்தது யார். இப்படி பெருமை பேசி மற்ற இனக்குழுக்களை இழிவு செய்திட வேண்டிய தேவை என்ன இருக்கிறது. தேர்தலுக்கும் இதற்கும் தொடர்பு இல்லாதது போல் தோற்றமளிக்கும். ஆனால் ஆழத்தொடர்புடையது என்பதை நாம் உள்வாங்க மறுக்கும் வசியமை வைத்தவர்கள் யார். 

             உழுவபவனுக்கு நிலம் சொந்தம் என்ற கோரிக்கை கோட்பாடாக மாறும் போது இக்கோரிக்கையைத் திசை திருப்பி தொழில் மயக்கொள்கைக்குள் நம்மை இழுத்து சென்ற சக்தி எனது என்பதை நாம் ஏன் சிந்திக்கவில்லை.

             வனத்தின் உள்ள கனிம வளங்களை, மரத்தையும் கொள்ளையடிக்க வனத்திற்கும் மக்களுக்குமான உறவினை முறித்து 1883ல் பிரிட்டீஷ் இந்திய வனச் சட்டம் கொண்டு வந்தார்கள். இன்னும் இச்சட்டத்தை இன்னும் அப்படியே கடைபிடிக்கிறோம். 
காட்டுக்குள் வாழும் குடிகள் இடம் கொடைக்கானல்

         தற்போது முளைத்துள்ள புதிய ரக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளின் பிரச்சாரத்தால் ''பட்டா இல்லாமல் வனத்திற்குள் வாழும் மக்களை அப்புறப்படுத்தலாம்'' என்று நீதி மன்றம்  கொழுத்துப்போன தீர்ப்பை வழங்கியுள்ளது. வனத்திற்கும் மக்களுக்கான உறவால் பாதிக்கப்படுவது யார்?  வனநிலங்களை 999 ஆண்டுகளுக்கு குத்தைக்கு எடுத்து வனத்தை அழித்து இரண்டாம் தர உற்பத்தியான தேயிலை, பாக்கு, பயிட்டதை இன்னும் அழிக்காமல் காக்கும் சக்தி எது என நாம் என்றாவது சிந்தித்தது உண்டா?.


நுகர்வின் வெளிப்பாடு


              தனிநபர்களின் தேவையை விட வாங்கிக்குவிக்கும் நுகர்வு கலாச்சாரத்தை நம்மூலைக்குள் திணித்து அது மரபுக்கூறாக மாறிவிட்டது என்பதை உணர்த்தாக சுற்றுச்சூழல் காவலர்கள் யாருக்காக குரல் கொடுக்கிறார்கள் இவர்களை இயக்குவது யார் ?. என்பதை நாம் யோசிக்கவே இல்லையே. வண்ண வண்ண நிறத்தில் ஆடை அணியும் நுகர்வு கலாச்சாரத்தால் தானே வனம் அழித்து சாயம் காய்ச்ச மரம் வளர்த்து அதையும் வெட்டினார்கள். இதனால் தானே சாயப்பட்டரை வளர்ந்தது. இந்தச் சாயப்பட்டரையும் உலகத்திற்கே உற்பத்தி கேந்திரமாக இந்தியாவின் தமிழகத்தில் மட்டும் உள்ளது ஏனென நம்மை பேசாமல் இருக்க வைக்கும் சதி எது?.  
பயிற்சியில் ஈடுபடும் மாவோ பொதுவுடமை கட்சியினர்
 
சாயக்கழிவாக ஓடும் நொய்யல் ஆறு

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...