Search This Blog

Monday 9 December 2019

முதலாளித்துவ அரசியல் முகம்



                 உருவான யூத நாடும், உருவாகத் துடிக்கும் 'இந்து நாடு'ம்

         முதலாளித்துவத்தை கொள்கைபூர்வமாக நம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் அமரும்போது, அது தன்னை என்றென்றும் நிரந்தமாக தக்க வைத்துக் கொள்ள தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்கின்றது.

பெரும்பான்மையான மக்களை இனவாதத்திலும், மதவாதத்திலும், சாதியவாதத்திலும் மூழ்கடிப்பதன் மூலம் அவர்களை அரசியலற்றவர்களாக மாற்றி, தனக்கான கருத்தியல் அடித்தளத்தை பாசிசம் ஏற்படுத்திக் கொள்கின்றது. பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதும், அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில் எந்த வகையான உரிமைகளையும் சிறுபான்மை கோரக்கூடாது என்பதும், அவர்கள் பெரும்பான்மையிடம் மண்டியிட்டு, தனது வாழ்வியல் சார்ந்த உரிமைகள் அனைத்தையும் தியாகம் செய்து விட்டுதான் வாழ வேண்டும், இல்லை என்றால் நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்பதுதான் உலகம் முழுவதும் பெரும்பான்மை என்னும் முதலாளித்துவ சிந்தனையுடை நாடுகள்  கடைபிடிக்கும் வழிமுறை.

                இஸ்ரேல் தன்னை யூத நாடாக அறிவித்துக் கொண்டிருக்கின்றது. அந்த நாட்டின் வலதுசாரி லிகுட் கட்சி அரசாங்கம் “வரலாற்றுரீதியாக இஸ்ரேல் யூதர்களின் தாயக பூமி. எனவே அதன் சுயநிர்ணயத்திற்கு அவர்களுக்கென சில பிரத்யேக உரிமைகள் இருக்கின்றன”  எனக் கூறியுள்ளது.  மொத்தமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 62 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 55 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர். கணிசமான எண்ணிக்கையில் எதிர்ப்பு இருந்தபோதும் வலதுசாரி முதலாளித்துவ அரசாங்கம் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் இஸ்ரேலை யூத நாடாக அறிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த 1948 மே 14 அன்று இஸ்ரேல் உருவானபோது வெளியிட்ட மதம், இனம், பாலினப் பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமூக அரசியல் உரிமைகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அது அப்பட்டமாக மீறியிருக்கின்றது.

இந்த அறிவிப்பால் இனி இஸ்ரேலில் வசிக்கும் யூதர்கள் அல்லாத 20 சதவீதம் மக்களின் உரிமைகள் சட்டப்படியாக  படிப்படியாகப் பறிக்கப்படும். இஸ்ரேலின் அதிகாரப்பூர்வமான அலுவல் மொழியாக இருந்த அரபி அதன் இடத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டு அதன் இடத்தில் ஹீப்ரு மொழி ஆட்சி மற்றும் அலுவல் மொழியாக ஆக்கப்படும். யூதர்களைத் தவிர அங்கு வசிக்கும் அரேபியர்கள் உட்பட பிற இனத்தைச் சேர்ந்த மக்கள் இனி இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவார்கள். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மசோதாவில் இஸ்ரேல் ஜெருசலத்தை தன்னுடைய தலைநகராக அறிவித்துள்ளது. இது தான் பெரும்பான்மையால் கிடைத்த வெற்றி.

              தனக்கு சொந்தமில்லாத ஒரு நாட்டை ஆக்கிரமித்து அதைக் கொஞ்சம் கொஞ்சமாக விலை கொடுத்து வாங்கி, இன்று அந்த மண்ணின் மக்களான அரேபியர்களுக்கு சொந்தமான ஜெருசலத்தை தன்னுடைய தலைநகராக அறிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த வெளிப்படையான சண்டித்தனத்திற்குப் பின் அமெரிக்கா மற்றும் சவுதியி முதலாளிகளின் கரங்கள் உள்ளன.

           அமெரிக்காவிற்கு எந்த அதிபர் வந்தாலும் இஸ்ரேலை ஆதரிப்பது, அதற்குத் தேவையான பண உதவியையும் ஆயுத உதவியையும் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். இதன் அடிப்படையில்தான் டிரம்ப் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை தாம் அங்கீகரிப்பதாக கூறியிருந்தார். முதலாளித்துவத்தை ஏற்பதால் உலக நாட்டாமை அங்கீகாரத்தை உலக முதலாளித்துவ சிந்தனையுடைய நாடுகள் வழங்கியுள்ள தைரியத்தில்தான் இன்று இஸ்ரேல் ஜெருசலத்தை ஜ.நா.வின் கட்டுப்பாட்டை மீறி தன்னுடைய தலைநகராக அறிவிக்கச் செய்திருக்கின்றது.

          இஸ்ரேலுக்கு அமெரிக்கா செய்யும் இந்த உதவி என்பது இஸ்ரேலை தங்கள் கைகளில் வைத்துக் கொள்வதற்காகவும், அதன் மூலம் தனக்கு எதிராக செயல்படும் ஈரான் உட்பட பல எண்ணெய் வள நாடுகளை அச்சுறுத்தவும்தான்.

               நாடற்ற யூதர்கள் பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து இன்று தனக்கென ஒரு யூத நாட்டை அறிவித்து இருக்கின்றார்கள். இதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி இஸ்ரேல் அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இஸ்ரேலில் அரேபிய மக்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது நிச்சயமாக உலகம் முழுவதும் வாழும் யூதர்களின் உரிமைகள் பறிக்கப்படாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. அதைப் பற்றி வலதுசாரி பாசிச லிகுட் கட்சி அரசு கவலைப்பட்டதற்கான அறிவிப்புகள் அதன் வெப்சைட்டைல் காணவில்லை.


              இஸ்ரேலை யூத நாடாக அறிவித்ததன் மூலம் யூதர்களைத் தவிர மற்றவர்கள் நிம்மதியாக அங்கே வாழமுடியாது என்பதை இஸ்ரேல் மறைமுகமாக தற்போது பிரகடனப்படுத்தி இருக்கின்றது. அந்நாட்டின் பிரதமரான நெதன்யாஹுவினுக்கும், நம் நாட்டு மோடிக்கும் மிக நெருக்கமான ஒற்றுமை உள்ளது. இருவருமே முதலாளித்துவத்தின் ஆதரவான மனநிலையோடு ஆட்சியைக் கைப்பற்றிவர்கள்.

        மோடியும், நெதன்யாஹுவும் ஒன்றுபடும் புள்ளி என்பது முஸ்லிம் எதிர்ப்புதான். யூதர்களின் முதலாளித்துவத்தை நிலைநாட்ட யூத நாடு கட்டமைக்கப்படுகின்றது என்றால், இங்கே பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை நிலை நாட்ட இந்து நாட்டை கட்டமைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

             மனதளவில் தன்னை ஒரு யூதனாகவும், பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்ட இந்துவாகவும் இருக்கும் ஒருவன் தன் சக மனிதனை இனத்தைக் காரணம் காட்டியும், மதத்தைக் காரணம் காட்டியும்,சாதியைக் காரணம் காட்டியும் ஒழித்துக் கட்டும் மனநிலைக்கு இயல்பாகவே வந்தடைகின்றான். பாலஸ்தீன முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்ற யூத வெறியும், இந்திய முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்ற பார்ப்பன இந்துமத வெறியும் தனக்கான கருத்தியலை தான் உருவாக்கி வைத்திருக்கும் புராண புரட்டுகளில் இருந்தே உருவாக்கிக் கொள்கின்றன.
           
             நவீன கால முதலாளித்துவம் மக்களாச்சி என்ற மாய வார்த்தையை கேலிப்பொருளாக்கப்பட்டது பொதுவுடமைக்கான புரட்சி நடந்த நாடுகளிலே இதன் தாக்கத்தின் அளவீட்டை நாம் பார்க்க முடியும்.

        எண்ணெய் வளத்தை கொண்டுள்ள நாடுகளில் முதலாளித்து அல்லது காட் ஒப்பந்த முதலாளிகள் அனுக்கிரக்கத்தோடு தனது ராணுவ அத்துமீறல் மூலம் கொள்ளையடிக்கும் அமெரிக்காவும், பாலஸ்தீனத்தின் அப்பாவி முஸ்லிம் மக்களை அமெரிக்க ஆயுதங்களின் மூலம் வேட்டையாடும் இஸ்ரேலும் தான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வந்த தேவதூதுவன்களாக தங்களை அறிவித்துக் கொள்வதை ஐக்கிய  நாடுகள் சபையில் கூட விவாதிக்கப்படவில்லை என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். இப்படிப்பட்ட நாடுகளுடன் இந்தியாவும் கரம்கோர்த்துள்ளது. மதரீதியான கொலைகளை நடத்துவதிலும் சரி, வளங்களைக் கைப்பற்ற படுகொலைகள் புரிவதிலும் சரி, அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும், இந்தியாவுக்கும் பெரிய வேறுபாடெல்லாம் கிடையாது.  இந்தியாவில் வளங்களை உலக நாடுகளின் தேவைக்கான உற்பத்தி கேந்திரமாக மாற்றவே தற்போது வான்வெளியில் சிக்கலில்லாமல் செல்லும் வானூர்திகளைப்போல தரையில் வாகணங்கள் போக சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுகிறது. விரிவாக்கம் ஆகாத சாலையில் இன்னும் 100 ஆண்டுகளுக்கு வாகண நெரிசல் அற்ற நிலையில் போகலாம். ஆனால் எதன் தேவைகருதி இவ்வளவு விரிவாக்கம் நடக்கிறது என்பதை யாரும் விரிவாக அலசி ஆராயாமல் வளர்ச்சி என்ற நோக்கில் மனநிறைவு கொண்டு நம்மை ஆதரிக்க வைத்துள்ளது  முதலாளிவத்துவத்தின் தூண்கலான ஊடகமும் பத்திரிக்கைகளும் என்பதே ஆழமான பார்வை. 

             இஸ்ரேல் இன்று தன்னை வெளிப்படையாக யூத நாடாக அறிவித்துக் கொண்டது போல இந்தியாவும் தன்னை நாளை இந்து நாடாக அறிவித்துக் கொள்ள பாரதீய கட்சியின் புறத்தலைவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பேசி மக்கள் மனங்களில் வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றிபெற்றுள்ளார்கள். இது அரசியலாக சட்டமாக வெளியிட வெகுநாள் இல்லை என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இன்று இஸ்லாமிய மக்கள் மீதும், தலித் மக்கள் மீதும் மாட்டுக்கறியை தின்கின்றார்கள் என்று பார்ப்பன அஜென்டாவை வைத்து தாக்கும் சங்பரிவார கும்பல்கள் அனைத்தும் தம் மனதில் ''இந்தியா ஒரு இந்துநாடு'' என்று உறுதியாக நம்பிக்கையின் விதைப்பின் அறுவடை செயல்களே. அந்த நம்பிக்கை தான் அவர்களுக்கு முஸ்லிகளையும், தலித்துகளையும் குறிவைத்துத் தாக்கும் உத்வேகத்தை அளிக்கின்றது. "மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா ‘இந்து பாகிஸ்தானாக’ மாறிவிடும்" என்றார் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் ஒருவனான சசிதரூர். இது பொய்யல்ல. அதற்கான செயல்திட்டங்கள் காவிக் கூட்டத்தாரிடன் ஒப்படைக்கப்பட்டதன் விளைவு தான் மாடு குறித்த தாக்குதல். இந்த தாக்குதலில் பெரிதான எதிர்வினை இல்லாதது அவர்களின் செயல் திட்டத்திற்கான வெற்றியும் அவர்கள் செயல்பட இடவெளியும் கிடைத்துள்ளது என்பதை மறுக்க இயலாத நிலையிலே நாம் உள்ளோம்.

              உலகத்தில் எங்கிலும் முதலாளித்துவ மனநிலை வெற்றிபெற்று கோலோச்சி வருகின்றதோ அங்கெல்லாம் மக்களின் மனங்களில் இன, மத, சாதிய வாத்ததால் கூறுபோட்டு முதலாளித்துவ எதிப்பு போராட்டத்திற்கான அணி சேர்க்கையை திட்டமிட்டு தடுத்து வருகின்றது.

          உலகின் பல தலைவர்கள் பல அரசியல் கட்சிகள் உலக வங்கி என்ற காட் ஒப்பந்த மொதலாளிகளின் தனியார் வங்கியின் மூலையால் செயல்படுபவர்கள். இவர்கள் தங்களின் முதலாளித்துவ முகத்தை வளர்ச்சி என்னும் முகமூடியால் மறைத்து வைத்துள்ளார்கள். அதையே மக்களையும் சொல்ல வைத்து விட்டார்கள். சாமானிய மக்களின் இரத்தத்தை பணமாக மாற்றி, முதலாளிகளின் பாக்கெட்டுகளில் சேர்ப்பதும், அப்படி தங்களுடைய ரத்தம் உறிஞ்ச‌ப்படுவதை எதிர்த்து, பாட்டாளி வர்க்கம் போராடத் தயாராகும் போது அவர்களுக்குள் இன, மத, சாதி தூண்டிவிட்டு அவர்களுக்கிடையிலான ஒருங்கிணைவை சீர்குலைப்பதும்தான் இந்த முதலாளித்துவத்தின் வேலை. அதற்கான பணியை பல தொண்டு நிறுவனங்கள் இயக்கப்படுகிறது. அவர்கள் எ.ஸ், எஸ்.டி மக்களுக்காக பாடுபவர்களாக காட்டி அவர்களை இதர மக்களிடமிருந்து பிரிப்பது மட்டுமே இவர்களின் பிரதான வேலை. பொத்தாம் பொதுவாகப்பார்த்தால் இவர்களின் செயல்பாட்டினை குறை சொல்ல இயலாது.

           எடுத்துக்காட்டாக சொன்னால் எஸ்.டி எஸ்.சி வழக்குகளில் இருவர்கள் செயல்பாடு அரசை நம்பாமல் அவர்கள் வைத்துள்ள வழக்கறிஞர்களை நம்பை வைப்பார்கள். ஆனால் கடையில் அரசாங்க நீதிபதியின் தீர்ப்பைத்தான் அனைவரும் ஏற்றாக வேண்டும் என்ற இறுதி வடிவத்தை நமது மூலையில் சிந்திக்காதபடி எஸ். டி எஸ்.சி மக்களை தனிகுழுவாக இயக்கி இதர குழுக்களிடமிருந்து பிரித்து முதலாளித்துவத்தை நோக்கி நகத்தி கொண்டு சேர்ப்பார்கள். இது தான் முதலாளித்துவத்தின் சக்திகளின் வேலை. இவர்களுக்கு பணம் வழங்குவது போர்டு, இராக்பில்லர் போன்ற முதலாளித்துவ நிறுவனமும், பொதுவுடமை சிந்தாந்தத்தை கருவருக்க வேண்டும் என்று தன்னை பிரக்கடப்படுத்திய ரோமன் கத்தோலிக்க நிறுவனமும் என்பதை நாம் மறக்க வைப்பதில் ஆளும் அரசுகள் கவனமாக இருக்கும்.

               அதே போல் தனி நாடு கோரிக்கைகளில் வர்க போராட்டமாக இல்லாமல் இனக்குழுக்களுடன் மோதல்களை உருவாக்கி அதன் மூலம் போராட்டத்தை தடுத்த வரலாறுகள் பல உள்ளன. தமிழகத்தில் தனி நாடு கேட்பதற்கான அமைப்பில் தற்போது முன்னனி வைப்பவர்களின் செயல்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக திராவிடத்தால் வீழ்ந்தோம்' குறுநூலே பாமக மாநாட்டில் வாசிக்குமுகமாக எழுதப்பட்டதே. குணாவின் நூல்களைத் தொடக்கத்தில் 'ஆய்வரண்' எனும் கிறித்துவத்தன்னார்வ வக்குழுவே வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

             மத சட்டங்களைக்கொண்ட நாடுகள்  எந்த வகையிலும் அந்த மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற உதவவில்லையோ, அதே போல யூத நாடு என்பதுவும் எந்த வகையிலும் யூத மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற நிச்சயம் உதவப் போவதில்லை. இந்த அறிவிப்பு இன்னும் மூர்க்கத்தனமாக பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கான யூதப் பெருமுதலாளிகளின் திட்டமே அன்றி வேறல்ல. இதன் பின்புலத்தில் இருந்து ‘இந்து நாடு’ என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும், பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவும் செயல்படும் காவிக் கும்பலின் யோக்கியதையைப் புரிந்துகொண்டு அதை முறியடிக்க நாம் போராட ? வேண்டும்.

தகவல் ஒத்துழைப்பு
உடுமலை வரலாற்று மையம்

சமூகமும் அரசியலும்


                                                             சகிப்பு தன்மை


               இந்த நாட்டில் பறப்பய, பள்ளப்பய, சக்கிலிசய பய என அடிமைகளை உருவாக்கி வைத்து விட்டு அவர்கள் கொஞ்சம் படித்து பதவிகளில் வந்தவுடன் 'பாருடா இவங்கள் ஆடுற அட்டத்தை' என சொல்லுவதை நாம் சகிப்பு தன்மையாக எடுத்துக் கொண்டோம்,ஏன் என்றால் சொன்னாவன் பிற்படுத்தப்பட்டவன். கேட்ட நாமும் பிற்படுத்தப்பட்டவனர்கள். அறிவு சமூகத்தை சார்ந்த நபர்களாக காட்டிக் கொள்ளும் நாம் முதலாளித்துவ இந்துத்துவ சிந்தனையாளர்களுக்கு எதிர்ப்பை காட்டி இருந்தால் அவர்கள் மட்டுமல்லாது அல்லா, ஏசு, நானக், இராமன் பெயரால் ஆடும் நபர்கள் அடங்கி இருப்பார்கள்.

ஏதோ இஸ்லாமியர்கள் மட்டும் இந்திய துணை கண்டத்தில் அச்சத்தில் இருப்பதாக அறிவு சார் வட்டம் கொதிக்கிது.அவர்கள் கொதிப்பை ஏற்றுக் கொள்வோம். அவர்களுட்ம கைகோர்ப்போம்.அதற்கு முன்பு சிறிய கேள்வி

01. இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இன்று நாம் காட்டும் அடக்கு முறைக்கு அவர்கள் எழுச்சி காட்டாமல் இருப்பதற்கு சகிப்பு தன்மை என்று பொருள் கொள்வோமா? .இதை நாம் ஏற்றுக்கொள்வதாக இருந்தால் இஸ்லாமியர்களோ அல்லது அறிவு சார் வட்டம் சொல்லும் 'சகிப்பு தன்மை அற்ற நாடு ' என்பது வெற்று கூச்சல் தானா.

02. பணம் இருப்பவனுக்கு ஒரு கல்வி பணம் அற்றவனுக்கு ஒரு கல்வி இதை ஏற்றுக் கொள்கிறோம் இதற்கு பெயர் சகிப்பு தன்மையா ?
03. நில உச்ச வரம்பு சட்டத்தில் தனி மனிதன் 12.5 ஸடாண்டர்டு ஏக்கர் நிலம் மட்டும் தான் வைத்திருக்க வேண்டும் இதை இன்று வரை நடை முறை படுத்தவில்லையே இதை ஏற்றுக் கொள்வதும் சகிப்பு தன்மை ? இப்படியே எத்தனையை பட்டியல் இடுவது.

இஸ்லாமும் கிறித்துவமும் இந்துவும் சீக்கியனும் கத்தும் சகிப்பு தன்மை என்பது முதலாளித்துவத்துக்கு அதாவது அவரவர் நம்பிக்கைகளை சமூக சட்டங்களாக இருப்பது சிதைந்து விடக்கூடாது என்பதற்காக மத சாயத்துடன் கத்தும் வெற்று கூச்சல்.

Sunday 1 December 2019

வெளிநாட்டில் மணல் அள்ளினால் அந்த நாட்டில் சூற்றுச்சூழல் கேடதா?


வெளிநாட்டில் மணல் அள்ளினால் அந்த நாட்டில் சூற்றுச்சூழல் கேடதா

''தமிழகத்தில் அரசு அனுமதிக்கப்பட்ட கட்டிங்களுக்கு ஒரு நாளுக்கு தேவையான மணல் அளவு 25ஆயிரம் லோடு அதாவது 7.5 லட்சம் யூனிட்.
தமிழகம் முழுவதிலும் அரசு அனுமதி வழங்கியுள்ள 220 மணல் குவாரிகளில் நாள் ஒன்றிற்கு குறைந்தது 16 லட்சம் யூனிட் மணல் அள்ளப்படுகிறது.இந்த மணல் எங்கு செல்கிறது.ஒரு நாளுக்கு தலா 30 ஆயிரம் யூனிட் கார்நாடகா,ஆந்திரா,கேரள மாநிலங்களுக்கு செல்கிறது.மாநிலம் விட்டு மாநிலத்திற்கு மணல் கொண்டு செல்ல மணல் அள்ளப்படும் மாவட்டத்தின் கலெகடர் தலைமையில் உள்ள சுற்றுச்சூழல் கமிட்டி அனுமதி வழங்கியதன் அடிப்படையில் அமைச்சரவை ஒப்புதல் தரும்.நேரடியாக அமைச்சரவை மட்டும் அனுமதித்து விட முடியாது.மாநிலம் தாண்டி செல்லும் மணல் அந்த மாநிலத்தின் அரசு பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.தமிழக அரசு கடந்த ஐந்தாண்டுகளாக வெளி மாநிலங்களுக்கு மணல்,கற்கள்,செங்கல் இவைகளை கொண்டு செல்ல அனுமதி வழங்கவில்லை.

ஆனால் மாலத்தீவு, ஆப்கானிஸ்தான்,பலுகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள் வழியாகவே கப்பல்களில் மணல் செல்கிறது.கிரானைட் குவாரி முறைகேடுகளை ஆய்வு செய்த சகாயம் குழுவினர் தூத்துக்குடி துறைமுகத்தில் மணலும் கடத்தப்படுவதை அப்போது அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.ஆனால் குவாரி பூதம் இருக்க இன்னொரு பூதத்தை அவிழித்து விடுகிறார் சகாயம் என இந்த தகவலை கமுக்கமாக அமுக்கி விட்டனர். அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்தலை தடுத்தாலே இறக்குமதி தேவையில்லை

இறக்குமதி என்பது அறிவுலக பூசாரிகள் நம்மை திசை திரும்பி காட்டுக்குள் ஓட்டி விடும் முகாந்தரமே. வெளிநாட்டில் மணல் அள்ளினால் அந்த நாட்டில் சூற்றுச்சூழல் கேடதா? என்ன சிந்தனை? நீதி மன்றங்கள் உலக வங்கிகளின் கிளைகளாக ஆக்கப்பட்டு இருபது ஆண்டுகளாக்கி விட்டது. இந்துவா என்பது உலக வங்கியின் பொருளாதார கிளைதான் அவர்களுக்கு மறைமுகமாக பல 'இந்து'க்கள் ஆடுவார்கள். ஆடுகிறார்கள்.

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...