Search This Blog

Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Tuesday, 7 March 2023

மலம் அள்ளும் தொழில் எப்படி வந்தது ? ஏன் வந்தது ? யார் கொண்டுவந்தார்கள்?

 

மலம் அள்ளும் தொழில் எப்படி வந்தது ? ஏன் வந்தது ? யார் கொண்டுவந்தார்கள்?

 

https://www.hindutamil.in/.../954712-how-did-you-come-to... 

            தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  பரப்புரையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘அருந்ததியர் சமூகத்தை மையப்படுத்தி மலம் அள்ளும் தொழில் குறித்துப்பேசியதாக’ எழுந்த சர்ச்சை சமூக வளைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறி அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

           சுகாதார துப்புரவு பணியில் மலம் அள்ளும் தொழில் எப்போது துவங்கியது?, குறிப்பிட்ட சமூகங்களை மட்டும் ஏன் இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்? என்ற கேள்விக்கு விடை தேட வைத்துள்ளது இந்த விவாதம்.

 

        மன்னர், பாளையப்பட்டு, ஜமீன் காலத்தில் அரண்மனைகள் தனியாகவும் அல்லது ஊரில் மையப்பகுதியில் அமைந்து பட்டி, ஊர், சேரி, பட்டிணம், நகரம் என்ற அமைப்பில், சாதிவாரியாக தெரு அமைந்திருப்பதும் அதில் தற்போது பட்டியல் குழுக்களாக அறியப்படும் குலத்தினர் பொதுவாக வடபுறத்திலும் சில பகுதிகளில் மேல் புறத்திலும் வீடுகள் அமைந்த சான்றுகள் உள்ளன.

 

        ஆண்டாண்டுகாலமாக மனிதர்கள் கூடும் தின, வார, மாத சந்தை, ஆண்டுக்கு ஒரு முறை கோயில் திருவிழாக்களை மையமாக வைத்து மக்கள் பெரும்திரளாக கூடும் திருச்சந்தையில் கூட துப்புரவுப்பணியாளர்கள் குறித்த தரவுகள் கிடைக்கவில்லை. ஆனால் கோயிகளில் உழவாரப்பணிகளை திருக்கூட்டத்தார் செய்த சான்றுகளே கிடைக்கிறது.  

 


 

         ‘’வேளாண்மை உற்பத்திக்காக பணி அமர்த்தப்பட்ட குழுக்கள் வேளாண்மை நிலம் கைமாறும் போது நிலத்தில் பணி செய்து கொண்டுள்ள மக்களும் நிலத்துடன் விற்ற சான்றுகள் உள்ளன. இதை அடிமை விற்பனை என பேராசிரியர் காளிமுத்து, ஆ.சிவசுப்பிரமணியன் போன்றோர் பதிவிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் துப்புரவு மலம் அள்ளும் தொழிலில் ஈடுபட்ட சான்றேதும் குறிப்பிடவில்லை.

 


‘மழை பெய்தால் தெரியும் வறட்டாம் பீ நாத்தம்’ என்ற பழமொழி குறித்து விளக்கம் பெறுவதற்காக பேராசிரியர் தொ.பரமசிவம் அவர்களிடம் நான் விவாதித்த போது ‘பொதுவாக வெப்பமண்டலப்பகுதியில் மலத்தை தனியாக அள்ளுதல் இருக்காது. அரண்மை பெண்கள் மலம் கழித்திட ‘பீ மந்தை’ என்ற ஒன்று இருந்த வழக்காறு உள்ளது. அதில் கூட மலத்தை அள்ளிட ஆள்கள் இருந்த சான்றுகள் இல்லை. இது பிரிட்டீஷ்காரனின் தேவையால் உருவானது. பிரிட்டீஷார் கொண்டு வந்த சீனிசர்கரை ஆலைக்கு தேவையான கரும்பினை அதிக உற்பத்தி செய்திட உரத்திற்கு காய்ந்த மலத்தை அள்ளிட வைத்தார்கள். இதன் நீட்சி 1975 வரை நீடித்ததை நான் பார்த்துள்ளேன். ஆனாலும் இது குறித்த பெரிதான ஆய்வுகள் வரவில்லை’ எனச்சொன்னார்.

  

           டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் மீனா ராதகிருஷ்ணன் டிஸ்கானர்டு  பை கிஸ்டரி (Dishonoured by History: "Criminal Tribes" and British Colonial Policy 2010) என்ற ஆய்வு நூலில் ‘’ உப்பு விற்பனை வரி,உப்பு விற்பனை உரிமம் பெற கட்டணம் போன்ற சட்டத்தால் உப்பு வியாபாரம் செய்த குடிகள் கடுமையான பாதிப்பட்டனர். 1871ல் வட இந்தியாவில் கொண்டுவந்த குற்றப்பரம்பர சட்டம் இந்தியா முழுவதற்கும் 1911–14ல் நடைமுறைக்கு வந்தது. குற்றப்பரம்பரை வளையத்தில் சிக்கவைக்கப்பட்ட சாதியினர் அனைவரையும் ஒரு கொட்டடிக்குள் அடைத்து வைக்கப்பட்டனர். இவர்களில் யாரேனும் ஐந்து முறைக்கு மேல் திருட்டுக்குற்றத்தில் ஈடுபட்டால் கொட்டடியில் உள்ள கழிப்பறைய சுத்தம் செய்திடும்  தண்டணை வழங்கப்பட்டது. இப்படி தண்டணை பெற்றவர்களை முதல் வகுப்பு இரயில் பெட்டியில் மட்டும் அமைக்கப்பட்டிருந்த கழிப்பறைகளை சுத்தம் செய்திட பணிக்கப்பட்டனர்’’ என தனது ஆய்வேட்டில் குறிப்பிடும் இவர், குறவர் சமூகம் போன்ற சாதியினரை இப்பணிக்கு பயன்படுத்தியதாக குறிப்பிடுகிறார்.

 

 

ஆனால் மதுரை மேனுவல் நூலினை 1860ல் எழுதிய ஜெ.ஹெச். நெல்சன் குறவர் குடிகள் உப்பு விற்பனையுடன் வெடியுப்பு தயாரித்து வியாபாரம் செய்தனர் என்று பதிவிட்டுள்ளார். 1911 வெளியான பிரான்சிஸ் எழுதிய மதுரை மேனுவல் நூல் மேல்குறிப்பிட்ட குலத்தினரை திருடர்கள் என்றும் சில குழுக்களை அடிமைத்தொழில் தலைமுறை தலைமுறையாக செய்து வருவதாக பதிவிட்டுள்ளார்.

                 

           கிழக்கு இந்தியன் கம்பெனி இந்தியா முழுவதிலும் 1801ல் பாளையப்பட்டுகளிடம் இருந்த நீதி, இராணுவத்தை தடை செய்து, வெடி ஆயுத தடைசட்டம் கொண்டு வந்தனர்.. பாளையப்பட்டு படைகளில் வெடிப்படை வீரர்களாகவும் வெடி தயாரிப்பவர்களாக இருந்தவர்கள் அருந்ததியர், குறவர், காலாடி, பிறமலைகள்ளர், வலையர் போன்ற குழுக்கள் என்பதற்கு இன்றும் சான்று எச்சமாக கொங்கு மண்டலம் மதுரை மண்டல கோயில் திருவிழாக்களில் வெடி வெடிக்கும் உரிமை இவர்களிடம் உள்ளதை கள ஆய்வில் தெரிந்து கொள்ளலாம்.

 

            ‘1801 சட்டத்தின் படி வெடிப்படை வீரர்களை பாளையப்பட்டு தலைவர்கள் கைவிட வேண்டிய சட்ட நெருக்கடியால் படை வீரர்களை பிரிட்டீஷார் எளிதாக சட்ட வளையத்திற்குள் கொண்டுவந்து நகராட்சி துப்புரவு தொழிலுக்கும், இராணுவ குடியிருப்பு, இரயிவே குடியிருப்பு, தேயிலை எஸ்டேட்டுகளில் பிரிட்டீஷார் குடியிருப்புகளில் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனாலும் குற்றப்பரம்பரை சட்டத்தில் இருந்த அனைத்து சாதியினரையும் துப்புரவு தொழிலுக்கு கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது’’.

 

 ‘’இந்தியாவில் ஏற்கனவே சமூக சட்ட நடைமுறையில் இருந்த மனுதர்ம அடிப்படையில் சாதி தோற்ற புனித கதைகளை சான்றாக வைத்து குறிப்பிட்ட சாதிகளை இப்பணிக்கு கொண்டு வந்தனர்’’ என குறிப்பிடுகிறார்’ நார்த்தன் யுனிவர்சிட்டியிலிருந்து தமிழகத்தில் இரட்சன்ய சேனையும் குற்றப்பரம்பரை சட்டமும் என்ற தலைப்பில் ஆய்வு செய்த எமிலி.ஏ.பெர்ரி என்ற ஆய்வாளர். (the salvation army; criminal cartakers 1882-1914) Emily.A.Berry,Northearten university).

         1896ல் பல்லாண்டுகள் குறவர் சாதியினருடன் தங்கி ஆய்வு ஆய்வு செய்த டபியூ.ஜெ.ஹச் (w.j.Hatch) என்ற ஜெசூட் பாதிரியார் (the land pirates in india) அறிக்கையில் (நூலான வந்துள்ளது) உப்பு சட்ட நெருக்கடி  காரணமாக தொழில் இழந்த குழுவினர் வயிற்றுப்பிழைப்பிற்காக திருட்டு குற்றம் செய்திடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதற்கு முன்பு உப்பு, கருவேப்பிலை, இஞ்சி, கூடை முடைதல், அரசர்களுக்கும், படை வீரர்களுக்கும் சாராயம் காய்ச்சி கொடுத்தல், சிறுதானிய வியாபாரம் செய்தவர்கள் தொழிலை விட்டு சாலை கொள்ளையர்களாக உள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

           மெட்ராஸ் மாகாண காவல் துறை தலைவராக 1904ல் இருந்த பாப்பு நாயுடு தனது அறிக்கையில் (நூல்)  (railway thives) தென் இந்தியா முழுவதிலும் இருந்த குறவர் சாதியினரை இரயில்வே கொள்ளையர்கள் எனக்குறிப்பிடுகிறார்.

          இப்படியாக பிரிட்டீஷ் ஆட்சியில் தொழில் வர்த்தகத்தை சில குழுக்களுக்காக கொடுத்து தமிழகத்தில் வியாபார குடிகளாகவும் போர் குடிகளாகவும் போர் துணைக்குடிகளாகளாக இருந்த சாதியினரை மலம் அள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதே வரலாறு.

 

Wednesday, 17 March 2021

திருக்கோயில் பூசாரி ஆகமுடியாது என்றால் பரிசாக்கர் மட்டும் எப்படி கிடைக்கும்

  

*திருக்கோயில் பூசாரி ஆகமுடியாது ! 

கஞ்சி காய்ச்சும் (பரிசாக்கர்) பணி மட்டும் கிடைக்குமா?- நீதி மன்ற விளையாட்டு

****************************************************************************************

               

              இந்திய அரசியல் சாசனம் குலங்களை (ஜாதி) ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் அடிப்படையிலே திமுக அரசால் கொண்டு வரப்பட்ட 'அனைவரும் அர்சர்களாகலாம்' என்ற சட்டத்தை எதிர்த்து சைவத்தின் அடையாளமான தில்லை திருக்கோயில் பூசாரிகளின் கூட்டமைப்பு வழக்கு தொடுத்தது. சுமார் 30 ஆண்டுகள் நடந்த வழக்கில் தில்லி உச்ச நீதிமன்றம் 'இந்தியாவில் சாதிய அடுக்குநிலை ஏற்புடையதே. அதனடிப்படையிலும், சைவ ஆகம விதிகளின்படியும் ஆகம விதிகளை கற்றறிந்த பார்ப்னர்கள் மட்டுமே பூசை செய்திட முடியும்' எனத் தீர்ப்புச்சொல்லி வழக்கினை முடித்து வைத்தது. இந்தத் தீர்ப்பே சட்ட வடிவமாக மாறிது. இதை மாற்ற மக்கள் மன்றங்களால் மட்டுமே இயலும்.

 

                 வைணவ சைவ மடப்பள்ளிகளில் மந்திரம் ஓதி கடவுளுக்கு சமைத்து கடவுள் உண்பதற்கான உணவை (நைவத்தியம்) சமைத்திடும் மடப்பள்ளிப் பணியாளர்களுக்கு திருக்கோயில்களில் அவர்களுக்கு பெயர் பரிசாக்கர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பணியுடன், நைவைத்திய உணவினை எடுப்பவர், உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதியுடன் குலத்தகுதியாக பொதுவெளியில் அழைக்கப்படும் ஐயர் என்ற 'பார்ப்பனர்' மட்டுமே என தமிழக அரசின் கீழ் இயங்கும் இந்து அறநிலைத்துறை அறிவித்திருந்திருந்தது.

 

                      இந்தப்பதவிகள் கடந்த காலங்களில் தலைமுறை தலைமுறையாக மடப்பள்ளியில் பணியாற்றும் பூசாரிகளே (ஐயர்) சமையல் செய்து வந்தனர். இவர்களது சமையளான நைவைத்தியம் மட்டுமே கடவுளுக்கு உணவாகப்படைக்கப்படும். இந்த உணவினை பட்டுத்துணியால் மூடி, பிறர் பார்க்காதவாறு பூசாரி எடுத்து போவார். அவருக்கு முன் கோடாங்கி, அல்லது சிறிய பம்பை போன்ற இசைக்கருவியை ஒரு ஐயர் இசைத்து செல்ல திருக்கோயில் திருமேனி இருக்கும் கருவரைக்கு இந்த உணவு எடுத்து செல்லப்படும். திரையால் மூடி இருக்கும் திருமேனிக்கடவுள் திருச்சிலைக்கு இந்த உணவு படைக்கப்படும். இது தான் ஒரு கால பூசை முதல் இராக்கால பூசை எனச்சொல்லும் செயல்கள். 

 

              இந்தச்சமையல் வைணவ, சைவ திருக்கோயில்களுக்கும் வேறுபாடு உண்டு. கோயிலுக்கு கோயில் வேறுபாடும் உண்டு. *வெஞ்சணம்* என்ற சொல் தென் தமிழகத்தில் புழக்கசொல். இந்த வெஞ்சணம் வைணவ திருக்கோயில்களில் கடவுளுக்காக நைவத்தியமாக படைக்கப்படும் உணவு. இதை தயாரிக்க இதற்கு மந்திரம் சொல்ல தனியான ஐயர் இருப்பார்.

                                                   (நன்றி தினத்தந்தி)



 

                    திருக்கடவுள்களுக்கு படைக்கும் நைவைத்திய உணவினை சமைக்கப் பயன்படும் அடுப்பு, விறகு, தண்ணீர் அனைத்தும் ஒவ்வொரு முறை சமைக்கும் போதும் ஆச்சார விதிகள் கடைபிடிக்கப்படும். கடவுள் அருகே நின்று பூசை செய்திடும் பூசாரியை விட மடப்பள்ளி சமையலர் (பூசாரி) பதவி உயர்ந்ததாகக் கருத்தப்படுகிறது. இதனால் திருக்கோயில் பூசாரிகளுக்குள் போட்டி பொறாமைகள் பலவேளைகளில் சண்டை அடிதடி ஏற்படும். இக்குழப்பத்தால் இந்து அறநிலையத்துறை திருக்கோயில் பணியாளர்கள் பரம்பரை பரம்பரையாக இருந்த பூசாரி பதவிகள் தவிர, மற்ற பணியிடங்களை அறிவிப்பு ஆணை வெளியிட்டு பூர்த்தி செய்துவருகிறது. இருப்பினும் இந்திய நீதிமன்ற ஆணை சட்ட வடிவம் பெற்றதால் அனைவரும் பூசாரியாக முடியாமல் போய்விட்டது.

 

                தற்போது மடப்பள்ளி சமையளர் பதவிக்கு பார்ப்பனர் குலத்தினர் மட்டுமே விண்ணபிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டதை  எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கினை ஏற்றுக்கொண்ட நீதிமன்றத்திடம், 'பணியிட பூர்த்திடு செய்திடும் ஆணையை திருப்ப பெற்றுக்கொண்ட' தாக இந்து அறநிலையத்துறையினர் உறுதிமொழிப்பத்திரம் (அபிடாவிட்) தாக்கல் செய்தனர். ஆனால் வழக்கில் குறிப்பிட்டுள்ள குலம் தொடபாக எதுவும் குறிப்பிடவில்லை. இதையும் நீதி சொல்லும் பணியாளர் (நீதி அரசர்) எந்த கேள்வியும் கேட்காமல் வழக்கை முடித்து வைப்பதாக அறிவிக்கிறார். இனி ஓசையில்லாமல் அந்தப்பணி பூர்த்தி செய்திட வாய்ப்புள்ளது. இதில் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது 'சில திருக்கோயில் மடப்பள்ளிகளில் கோயிலுக்கு திருநீர் (தண்ணீர்) சுமக்கும் பணியாளர் பதவியான மஞ்சனக்காரர்கள் சமையல் செய்ததாக பிரிட்டீஷ் மிலிட்டரி கேப்டனாக இருந்து சென்னை மாகான தலைமை நில அளவை அதிகாரியாக இருந்த மெக்கன்சி தொகுத்த தென்னிந்திய திருக்கோயிற்_சாசனங்கள்  என்ற நூல் தெரிவிக்கிறது.

 

                                                        படம் உதவி வினவு


 

Saturday, 11 May 2019

Wednesday, 10 April 2019

அய்யா ஆறுமுகசாமி இறப்பு; தில்லை கோயில் வழக்கும்.






            அய்யா ஆறுமுகசாமி இறப்பு; தில்லை கோயில் வழக்கும்.

மதங்கள் எதை நோக்கி பயணிக்கிறது


   
                                             மதங்கள் எதை நோக்கி பயணிக்கிறது

Thursday, 28 March 2019

குல சாமி


                                                                     குல சாமி

                                                                        
Add caption


         குலசாமி என்பது தங்களது பாரம்பரித்தை பண்பாட்டைக் காப்பதாகவே பலரும் முடிவு செய்து அதற்கான முனைப்பு காட்டுவதை பார்க்கலாம்.  

           
திருமணமாவதற்கு முன்பு தம்பதியினர் மண்டுக்கருப்பு என்ற சாமிக்கு கருமாதிக்கு செய்வது போல் சாமிக்கு எண்ணை & அரப்பு வைத்து குளிப்பாட்டி விட்டு திருமணம் முடிக்கும் சடங்கு



    ''குலசாமிகள் நம் குலத்தைக் காப்பவர்கள் // வாழ்ந்த முன்னோர்கள் // குலத்தினைக் காத்தவர்கள்' என நினைப்பதிலே தத்துவத் தடுமாற்றம் உள்ளதை பார்க்கலாம். இதை மறுபரிசீலனை செய்திடவே சமூக ஆய்வாளர்கள் மறுப்பது வியப்பாகவும் உள்ளது.

        இவர்களின் வாதப்படி '' குறிப்பிட்ட சாதியை மட்டும் குறிப்பதல்ல குலம். பல குலத்தினர் ஒன்றாக ஒரு குல தெய்வத்தை வணங்குகிறார்களே. அதன் அடிப்படையில் பார்த்தால் குலம் என்பது வேறு '' என்றும் திருக்குறலில் கூட குலம் சொல் வருகிறது. கீதை, பெரிய புராணம் போன்ற நூல்களிலும் வைணவப்பெரியவர் ராமநுசர் போன்றவர்களும் குலம் குறித்து பதிவிட்டுள்ளார்கள். இதை பிடித்துக்கொண்டு அப்படியே பார்ப்பது என்னவிதத்தில் நியாயம் என்பதே நமது மறுகேள்விக்கானதாக உள்ளது. 

        மாமன் மைத்துன் உறவு முறைக்காக, திருமண உறவிற்காக ஒரு குலத்தினுள் பல உள்பிரிவுகள் தேவை அதன் அடிப்படையில் குலங்களுக்குள் உள்பிரிவுகள் தோன்றியிருக்க வாய்ப்புள்ளது. காலப்போக்கில் தனித்தனி குலங்களாகவே குலங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது. நடப்பில் உள்ள அமைப்பு முறையில் பல குலத்தினர் ஒரு குலசாமியை வணங்குவார்கள். அவர்கள் அனைவரும் ஒரு குலத்தினர் எனக் கணக்கிடுவது சரியாக புலனப்பார்வையாக இருக்குமா? என்பது தெரியவில்லை.    

        குலசாமிகள் ஒரு குலத்திற்கு அதாவது சாதிக்கு சொந்தமானது. சில கோயில்களில் பல குலத்தினரும் ஒரு சாமியை வழிபடுவார்கள். ஒரு குலசாமியை பல குலத்தினர் வழிபடும் போது ஏன் பல குலத்தினராக பிரிந்து கிடக்கிறார்கள். அவர்கள் ஒருங்கிணையாமல் புறமணம் புரியாமல் அகமணம் புரிகிறார்கள். இந்தக் கேள்விக்கு தொ.பரமசிவம் ''துடியான சாமி // நம்மைக் காத்த முன்னோர்கள். சமூகம் தனது தொன்மங்களை படிமங்களை சேகரித்து வைத்துள்ளது அதனை வெளிப்படுத்த ஒரு நாளே குல சாமி கும்பிடு '' என்றப் பதிலை வைக்கிறார். அவரை சார்ந்து அல்லது அவரை ஒத்த சிந்தனையாளர்களானவர்கள் தமிழ் தேசிய சிந்தனையோடு குலசாமி வழிப்பாட்டை பார்க்கிறார்கள். 
 
                  குலசாமி வழிபாடு செய்திட மாசிக்களறி அல்லது மாசிக்கும்பிடு, சிவராத்திரி அன்று தங்களது குலத்தினர் அனைவரும் கூடுகிறார்கள். இதன் மூலம் தங்கள் உறவுகளின் ''முறைகளை''யும் தங்களது குலத்தினர் யார் யார் என்பதை அடையாளம் செய்து மறுகூர் செய்து கொண்டு குலத்திற்குள்ளே இயங்க அதன் இறுக்கத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதை போதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவையே'' இதை உடைக்க பேராசிரியர் நெடுஞ்செழியன், ஏர்.மகாராசன் போன்ற சமூக ஆய்வாளப் பெருமக்கள் எழுதிய நூல்களிலும் சரியான விளக்கம் இல்லை.
 
                 பிறந்த குழந்தைக்கு குலசாமி கோயிலில் மொட்டை போட்டு குலசாமி பெயரை முதல் பெயராக வைப்பது என்பது தங்களது குலத்தைக் காக்கவும் கூர் செய்திடவுமே இவை காலம்காலமாக பயன்பட்டுள்ளது என்பது அறிந்த தகவல்தான்.

            பெருந்தெய்வ கோயில்களில் பூசகர்களாக உள்ள பார்பனர்கள் தங்களது சொந்த வேண்டுதலுக்கு இவர்கள் பணியில் உள்ள கோயில் சாமியை விட குலதெய்வத்திற்கு முன்னுரிமை கொடுத்து வணங்குவார்கள். இது ரிக்வேதகாலத்திலிருந்து தொடர்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். 1866 காலங்களில் மைசூரில் தங்கி பிராமணர்கள் குறித்து ஆய்வு செய்த ஏசு சபை பாதிரியார் ஏ.ஜே. அபேதுபே Hindu manners, customs and ceremonies என்ற நூலினை எழுதினார். இதில் வேதத்தில் குறிப்பிட்ட பழக்க வழக்கங்களை இன்றும் பார்ப்பனர்கள் கடைபிடிப்பது வியப்பாக உள்ளது என்றும், குலதெய்வ வழிப்பாட்டை முன்னிருத்துபவர்கள் பார்பனர்கள் என்றும், குலதெய்வ குற்றத்திற்கும் முன்னோர் வழிபாட்டிற்கும் முன்னுரிமை கட்டாயம் தருகிறார்கள் / தரவேண்டும் என வேண்டுகிறார்கள் என தனது ஆய்வில் பெயர் பேட்டியுன் கொடுத்துள்ளார்.

                   விஜயநகர, நாயக்கர் ஆட்சி காலத்தில் குலநீக்கச்சட்டம் (ஜாதியை விட்டு) கடுமையாக அமுலாக்கம் செய்யப்பட்டதற்கான சான்றுகள் பல நூறு உள்ளது. ''குலம் மாறி திருமணம் முடித்தால், உறவு மாறி திருமணம் முடித்தால் குலநீக்கம் செய்வார்கள். குலநீக்கம் செய்தவர்களுக்கு உழுவதற்கு நிலம் கிடைக்காது. இதனால் குலசாமியை அக்காலத்தில் கட்டாயம் தேடவேண்டிய தேவை இருந்தது. இன்றைய சூழலில் அதற்கான தேவை
குலசாமி வழிப்பாட்டிற்கு போல் பெருந்தெய்வ வழிபாட்டிற்கு கோட்டை என்ற விதை எடுத்துச்செல்லும் நிகழ்வு.


என்ன என்பதை சமூக அறிஞர்கள், மானுட ஆய்வாளப் பெருமக்களே விளக்கம் கொடுக்க வேண்டும்.

           குலசாமி இல்லாத குலங்கள் நாயக்கர் அரசில் உருவாக்கப்பட்ட அங்காள பரமேசுவரியையும், காமாட்சியம்மனையும் வணங்கினார்கள். வணங்கியும்                              வருகிறார்கள். பெரும்பான்மை தமிழ் குடிகள் வணங்கும் இக்கோயிலில் இன்றும் தெலுங்கில் பாட்டுப்படிப்பதைக் கேட்டகலாம். இது ஒருவகையில் சமூக ஒற்றுமை என்று எடுத்துக்கொள்வதில் தவறில்லை ஆனால் தத்துவத்தடுமாற்றத்தை உணர முடிகிறது.

      தென்காசிக்கும் கரிவலநல்லூருக்கும் இடைப்பட்ட ஊர்களில் தெலுங்கு பேசும் யாதவர்களின் குலதெய்வத்தை அங்குள்ள கொண்டையங்கோட்டை மறவர்கள் குலதெய்வமாக வணங்குகிறார்கள்.

               இன்றை சூழலில் குல ஆதிக்கம் என்பதை விட குலத்தை வைத்தே பல அரசியல் கட்சிகள் இயங்குகிறது. இப்படி இயங்குவதன் மூலம் குல ஒற்றுமையை ஏற்படுத்தி பிற குலத்தினர் மீது வன்மத்தை பூசி, வாக்கு வங்கியை தக்கவைக்க முடியும் இதைத்தானே பல அரசியல் கட்சிகள் செய்து வருகிறது. இதனால் அரசியல் கட்சியினர் குலசாமி வழிபாட்டை தனது தொண்டாக செய்து வருவதை ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ளவேண்டிய காலமிது. அதற்காக பெருந்தெய்வ வழிபாட்டை ஆதரிப்பதாக பொருள் இல்லை. சிறுதெய்வ வழிபாடே காலப்போக்கில் பெருந்தெய்வ வழிபாடாக மாறியுள்ளது என்பதற்கு தொண்டை தஞ்சை மண்டலத்தில் உள்ள திரௌபதி தீபாச்சம்மன் வழிபாடும், தென்பகுதியில் வள்ளியூர், சீவப்பேரி சுடலைமாடனும் என்பதை மறந்து விடவேண்டாம். சுடலை மடனும் சிவனும் ஒன்று என்ற ஆய்வும் உள்ளது. சிறுதெய்வங்கள் பெருந்தெய்வத்தின் தன்மை அல்லது தொன்மங்களை சுமந்து இருப்பதை கூர்ந்து கவனித்தால் புலப்படும்.

           
                         குலசாமி ஆய்வுகளை வெகுசனப்படுத்தும் போது (when ever publish the in camera statement ..... ) போது கட்டாயம் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தியது என்பது காலக்கண்ணாடி. பெருந்தெய்வ வழிபாட்டினை எதிர்ப்பற்காக குலதெய்வ வழிப்பாட்டை ஆதரிப்பது என்பது நல்ல பண்பல்ல. ஆய்வு செய்துவது வேறு அதை கடைபிடிக்க சொல்லுவது என்பது வேறு. ஆனால் குலதெய்வ அல்லது பண்பாட்டு ஆய்வாளர்கள் தங்களது ஆய்வினை அப்படியே கடைபிடிக்க சொல்லுவதாக இருப்பதால் குல ஆதிக்கம் அதிகரித்து குல வேறுபாடு மேலும் மேலும் வழுப்படும் என்பது ஐயமில்லை. 


                                                                             கோவிலுக்கு ரெட்டை சேவல் காணிக்கை     

சுளுந்தில் தீயை பற்ற வைத்த கன்னிவாடி அரண்மனை




               சுளுந்தில் தீயை பற்ற வைத்த கன்னிவாடி அரண்மனை


  • கன்னிவாடி அரண்மனை எனது ''சுளுந்தீ'' பெருங்கதைக்களத்தை தூக்கி நிறுத்திய இடம். மதுரை நாயக்கர் அரசின் படைத்தளம் இயங்கிய தளம். இதனால் நாயக்கர் அரசியலில் வைகை ஆற்றுக்கு வடக்கே தனி அதிகாரமையமாக கன்னிவாடி செயல்பட்டது.
  •  
  •             பிரிட்டீஷ் ஆட்சியை எதிர்த்த கட்டபொம்மன், ஊமத்துரை, மருது சகோதர்களுக்கு அடைக்களம் கொடுத்த குற்றத்திற்காக முதலில் காவுவாங்கப்பட்டது கன்னிவாடி பாளையப்பட்டு. இதன் சொத்துக்கள் அனைத்தையும் கையகப்படுத்திய பிரிட்டீஷ் அரசு, ஏசு சபையினருக்கு தானமாக வழங்கியது. அரண்மனையார் (ஜமீன்) குடியிருந்த அரண்மனையும் பொது ஏலத்திற்கு விட்டனர். இதனால் அரண்மனை இருந்தும் அதில் வசிக்க முடியாமல் தனது முன்னோர்கள் கட்டிய அங்காள பரமேஸ்வரி கோயிலில் தங்கி இருந்தார் கடைசி அரண்மனையாரான அப்பயநாயக்கர். அக்கோயிலும் ஏலம் எடுக்கப்பட்ட வரைபட எல்லையில் போனதால் அதையும் இழந்தார். ஏலம் எடுத்தவர்கள் அரண்மனையும் கோயிலையும் தரைமட்டமாக்கினார்கள். அதில் உள்ள அனைத்துக் கோப்புகளும் மண்ணோடு மண்ணாகிப்போனது.
  •  
  • மறைந்த முதல்வர் ம.கோ.இராமச்சந்த்திரன் (எம்.ஜி.ஆர்) அவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தில் எம்.எல்.ஏவாக இருந்த காலத்தில் திண்டுக்கல் வந்தவர், அப்பயநாயக்கரின் கதையை தெரிந்து இவரை சந்தித்தித்துள்ளார். ''உங்களுக்கு நிதி அளிக்கவும் சுதந்தர போராட்ட தியாகிக்கான ஊதியம் வழங்கிட உதவுவதாக'' சொல்லியுள்ளார். இக்கருத்தை தனது நான் ஏன் பிறந்தேன் என்ற சுயசரிதை நூலில் பதிவிட்டுள்ளார். ம.கோ.இராவிடம் இதை மறுத்த அப்பயநாயக்கர் ''அரண்மனையார் கொடுத்து பழக்கப்பட்டவர்கள்  யாரிடமும் கை நீட்டி வாங்க மாட்டார்கள்'' எனச்சொல்ல ''உங்கள் கதையையாவது சொல்லுங்கள் சினிமாவாக எடுக்கிறேன். அதன் மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக தங்களுக்கு வழங்குகிறேன்'' என்றும் கேட்டுள்ளார் ம.கோ.இரா. ''சினிமா வேண்டுமானால் எடுங்கள் நிதியை ஏழை மக்களுக்கு வழங்குங்கள்'' என்று சொல்லியுள்ளார் அப்பயநாயக்கர். இப்படிப்பட்ட குணம் கொண்டவரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடன் இதழுக்காக பேட்டி எடுக்கப்போனேன். அந்தச்சந்திப்பு தான் ''சுளுந்தீ'' என்ற கதைக்கு நெருப்பு மூட்டியது.
  •  
  •             இருக்க இடமில்லாமல் கோவிலில் தங்கி இருந்தார். அன்றாட வயிற்றை கழுவ (ஜீவனம்) அடுத்தவர் கையேந்தாமல் தான் கற்ற சாதகம் (ஜோசியம்) மூலம் கிடைக்கும் வருமானத்தில் வயிற்றைக் கழுவினார். அவரிடம் ம.கோ.இரா உதவுவதாக சொன்னதை கேட்டவுடன் ''அரண்மனையார் என்பது தனிப்பட்ட அதிகார பதவி அல்ல மக்களின் தலைவர். மக்கள் சொத்துக்களை காப்பவன். இப்படித்தான் நான் அரண்மனை பட்டம் ஏற்பத்தற்கு முன்பு எனது வாத்தியார் வள்ளுவன் பெரிய கருப்பணன், புலவன் பெரிய குப்புச்சாமி (இவர் குறிப்பிடுவது இன்று பறையர் குலத்தினராக அரசு அடையாளப்படுத்தியுள்ளது என்பதை கூர்ந்து ஆய்வுக்குறியது). ஆகியோர் எனக்கு பாடம் நடத்தி சொல்லிக்கொடுத்தார்கள். மக்கள் சொத்தைக் காத்தவன் கஞ்சிக்கு இல்லாமல் செத்தான். இருக்க இடமில்லாமல் கிடக்கிறான் என்ற அவச்சொல், அவகீர்த்தியை நான் கையேந்தி வாங்குவதன் மூலம் எனது முன்னோர்களுக்கு வந்து விடும். இதனால் ம.கோ.இரா மட்டுமல்ல பிறர் செய்திட வந்த உதவியை மறுத்தேன். நான் 'மநு தர்மத்தை மதித்து அரசாட்சி செய்வேன்' என பட்டம் ஏற்றவன். எனது சிறுவயதிலே சொத்துக்கள் பெரும்பகுதியை பிரிட்டீஷார் கையப்படுத்தினார்கள். எனது முன்னோர்கள் பிரிட்டீஷாரை எதிர்த்தது இந்த மக்களுக்கு தெரியவில்லை என்பது அவர்கள் குற்றம் இல்லை'' என பேட்டிகொடுத்தார். 
  •  
  •           அவருக்கு நான் வாங்கிச்சென்ற பிஸ்கட் பாக்கெட்டை கொடுத்தேன். அதை வாங்க மறுத்து, கோவில் கிணற்றில் தண்ணீரை இறைத்து, ஒரு குவளையில் எடுத்து வந்து 'இதை மட்டுமே இந்த அரண்மனையார் கொடுக்கும் நிலையில் உள்ளேன்'' என நீட்டினார். இதுவே அவரின் தன்மானத்தின் அளவுகோள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

  •             கோபமாக இருந்தவர், நம்மை அழைத்து அரண்மனை அருகில் உள்ள ஒரு மாடத்தைக்காட்டி இது என்னவெனக்கேட்டார். சிறுகோவில் போல் தெரிந்ததால் 'கோவில்' என்றோம். ''கோவில் இல்லை அரண்மனையார்களின் சவரம் செய்திடும் நாவித மாடம்'' எனச் சொல்ல விக்கிப்போனோம். நாவிதம் செய்திடவே மாடம் அமைத்து வாழ்ந்த எனக்கு யாரிடமாவது கை நீட்ட மனம் வருமா ? என, எதிர் கேள்வி வைத்தார். நம்மிடம் அவருக்கான பதில் இல்லாமல் மௌனமானோம். 





  • ஆனந்த விகடன் பத்திரிக்கை மூலம் கிடைத்த அவரின் நட்பில் சுளுந்தீ பெருங்கதைக்களத்தில் நான் சேகரித்த தகவல்களை அவ்வப்போது சொல்லி பதில் கேட்டேன். (நான் அவரைச் சந்திக்க துவங்கிய போது அவருக்கு எழுபத்தி ஒன்பது வயது ) மறுப்பதை மறுத்து, பல அரண்மனை ரகசியங்களை மறுக்காமல் சொல்லி, அரண்மனையாருக்கு நாவிதர்களின் பங்கு என்ன என்னபதை சொல்லி உதவினார்.
  •  
  • சுளுந்தீ 2018 டிசம்பரில் அச்சேறுவதற்கு முன் முன்வடிவத்தை (டம்மி) எடுத்துக்கொண்டு அவரைச் சந்திக்க அவரின் உறவினரும் சில்வார்பட்டி நாட்டாமையும் பேராசியர் முனைவர் மனோகரனுடன் போனேன். அவரால் என்னை முழுமையாக நினைவுபடுத்தி அசைபோட முடியவில்லை. நான், அவரை, அரண்மனையை எடுத்த படங்களை அவருக்கு கொடுத்த பின்பு ஓரளவுக்கு நினைவு வந்தது. நூல் வந்த பின்னால் அவரிடம் கொடுக்கலாம் முடிவு செய்திருந்தோம். ஆனால் அவர் 14.02.2019 அன்று மாலை மறைந்து விட்டார்.
  •  
  •  
  • அவருக்கு மரியாதை செழுத்தி விட்டு, சுளுந்தீ நாவலை 'தளுகை''யாக அவரது உடலில் வைத்தோம். அட்டைப்படத்தில் அரண்மனையின் படத்தைப் பார்த்த அவரது உறவினர்கள் ''வாழ்ந்த இடம் சுவடு இல்லாமல் போனது' எனத் தெலுங்கில் சொல்லி அழுத அழுகையை நம் காதுகளில் வலியாக ஒலித்தது.அவரின் நினைவுகளோடு கிளம்பினோம்.

முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

  நூலதிகாரம் நூல் முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு ஆசிரியர் ; தி. சுப்பிரமணியன் வெளியீடு ; அடையாளம்   ‘முந்தி பிறந்தவன் நா...