Search This Blog

Tuesday 30 March 2021

சைலண்ட் சசிக்கலா !? காரணம் என்ன

 

                சைலண்ட் சசிக்கலா !? காரணம் என்ன 

 

        அஇஅதிமுகவை தோற்றுவித்த திரு. எம்.ஜி.ஆர் மறைந்த பின்னர் அக்கட்சி அழிந்துவிடும் என்றார்கள். திமுக என்ற எதிர்ப்பு உணர்வால் கட்டமைக்கப்பட்ட கட்சி அஇஅதிமுக. திமுக உள்ளவரை இதன் ஆயுள் இருக்கும் என்பார்கள். 

  

        ''செல்வி ஜெயலலிதா மறைவிற்கு பின் கட்சி இருக்காது, உடையும், கரையும் அதுவும் சில காலம் மட்டுமே'' என்றார்கள். இதன் மெய்த்தன்மையை உனர்ந்தததால் ''ஜெ -ன், தோழியனா சசிக்கலா, நிழல் தலைவி இருந்தவர் நிஜ தலைவியாக கட்சியினாராளே ஆக்கப்பட்டார்.  


         ஜெ - தமிழக முதல்வராக இருந்த காலத்தில் ''சட்டத்திற்கு புறம்பாக சொத்துக்களை சேர்த்த குற்றச்சாட்டு'' நிருபிக்கப்பட்டது. இதில் ஜெ - இறந்து விட்டதால் அவரது தோழியான இரண்டாம் குற்றவாளியான சசிக்கலா தண்டனை பெற்று விடுதலையானார்.

 

          இவர் சிறை செல்லும் போது ஜெ - ன் கல்லறையில் அவர் சபதம் எடுத்ததாக செய்த பாவனை? அல்லது மெய்யாகவும் இருக்கலாம். இந்த செயல் பலரையும் பலவிதமாக பேச, யூகிக்க வைத்தது. இந்த நிலையில்           சிறைக்கு போன சசிக்கலா அவர்களால் அடையாளம் காணப்பட்ட திரு. பழனிசாமி அவர்களே முதல்வராக நீடித்தார். 

      ஜெ.-குற்றசெயலுக்காக தண்டனை பெற்ற காலங்களில் முதல்வர் பதவியை ஜெ.- மூலம் பெற்ற திரு. பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் கட்சியை கைப்பற்றும் முகாந்தரமாக இருந்தது என்பது  அனைவரும் அறிந்ததே. அவரது நடவடிக்கைக்கு முதலாளிகள் அரசியல் கட்சிகள், பக்கபலமாக இல்லாமல் போனது அவருக்கு அதிஷ்டம் இல்லை என்றே சொல்லாம்.  


          ''சசிக்கலா தண்டனை காலம் முடிந்து விடுதலை பெற்று தமிழகம் வந்த போது அஇஅதிமுகவிற்குள் இவரை உள்ளே விட்ககூடாது'' என திட்டமிடப்பட்டது. இதற்கு முன்னேற்பாடாக ''நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கை, ஜெ - டிரஸ்ட், ஜெ- எம்.ஜி.ஆர் டிரஸ்ட், ஜெயா தொலைக்காட்சி இவைகளை அஇஅதிமுகவின் கட்சி சொத்தாக்கப்படும்'' எனத்தீர்மானம் நிறைவேற்றினார்கள். வழக்கு தொடுக்கப்படும் என தீர்மான சரத்தும் சொன்னது. ஆனால் தற்போதுவரை வழக்கும் தொடுக்கவில்லை அது குறித்து வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக கட்சிக்காக புதிய தொலை காட்சி, பத்திரிக்கைகளை அஇஅதிமுக தலைமை கொண்டு வந்தது, என்றாலும் இதன் சொத்துக்கள் திரு.பன்னீசெல்வத்தின் மகன்கள் பெயரிலும் முதல்வரான திரு.பழனிசாமி பெயரிலும் உள்ளது என சொல்லுகிறார்கள்.

        அஇஅதிமுகவின் கட்சி நெருக்கடியால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை திரு. டி.டி.வி.தினகரன் துவகவேண்டிய தேவை ஏற்பட்டது. தினகரன் துவக்கியுள்ள கட்சியில் சசிக்கலா இணைந்து செயல்பட்டாக வேண்டிய சூழலை வந்தது. அமமுகவில் சசிக்கலா செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

 

      ''இவர் விடுதலையாகி வந்தவுடன் ஜெ -ன் நினைவிடம் திறக்க அனுமதி மறுப்பு, அவர் கருநாடாவிலிருந்து வருவதற்கு அனுமதி சிக்கல். கொரோனோ வைத்து உயிரை எடுக்க திட்டம் என பல தொல்லைகள் வந்தும் சசிக்கலா துணிந்து அரசியல் செய்திட திட்டமிட்டார்'' என்றே அவருடன் தற்போதும் அரசியல் ஆலோசகர்களாக உள்ளவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் பொசுக்கென இவர் அரசியலில் மௌனமானது பலருக்கு காரணம் புரியாத வியப்பு. நடுநிலையானவர்களாக காட்டிக்கொள்ளும் அரசியல் வித்தகர்கள்  ஜெ - நல்லவர் என சொல்ல ஒருவரை கெட்டவர் என சொல்ல ஆள் வேண்டுமே. அதனால் ''அப்பாடா சாமி'' என சொல்லிக்கொண்டார்கள் அப்படியே பேசுகிறார்கள் எழுதுகிறார்கள்.

 

ஏன் சசிக்கலா மௌனமானார்

****************************

       சசிக்கலா அரசியலில் இறங்கினால் ''நான் எதற்காக குற்றவாளியானேன். யாரால் குற்றவாளியாக்கப்பட்டேன். எனக்கு பிள்ளையா குட்டியா நான் ஏன் சொத்து சேர்க்கவேண்டும்.'' என விளக்கும் உரையில் ''அம்மாவிற்காகவே நான் குற்றவாளியாக்கப்பட்டேன்'' என்றும் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தேவை ஏற்படும்.

     கடந்த ஓராண்டிற்கு முன்பு திரு.டி.டி.வி தினகரன் ''நாங்கள் அம்மாவிற்காக (ஜெ) சிறை சென்றோம்'' என பேட்டி கொடுத்தது நினைவில் வைத்து பார்க்க வேண்டியுள்ளது. இந்தப்பேட்டியை ஆங்கில இதழ்கள் தவிர தமிழ் இதழ்கள் சீந்திக்கூடப்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது இருக்கவே தேர்தல் களத்தில் எதிரணியாக யாரை முன்னிருத்துவார் சசிக்கலா?. திமுகவையா அஇஅதிமுகவையா என்றால் அஇஅதிமுகவில் உள்ள பன்னீர்செல்வமே முதல் டார்கெட்டாக இருப்பார். அடுத்து எடப்பாடி. 

         சசிக்கலா வாய் திறந்தால் என்ன நடக்கும் ? ! . அதற்கு இவர்கள் என்ன பதில் சொல்லுவார்கள். இப்படி கூத்தடித்தால் அஇஅதிமுக என்ற கட்சியின் டோட்டல் இமேஜ் மொத்தமாக சிதைந்து சின்னாபின்னமாக மாறும். ''குற்றவாளியான ஜெ -ன் இமேஜ்  - னை தற்போது வரை சசிக்கலாவே சுமந்து வருகிறார். இந்த பிம்பம் உடைபட்டால் அஇஅதிமுக என்ற ஒன்று இருக்காது என்பதில் ஐயமில்லை. ஆகவே ஒரு தேர்தல் பொறுத்தால் திமுக ஆட்சிக்கு வந்து விடும். நமது மீதுள்ள அனைத்தும் மறைந்து மறைந்து விடும்''. என ஆலோசகப் பெருமக்கள் ஆலோசனையை கொட்டியுள்ளார்கள்.இதை திரு.பழனிசாமி, திரு. பன்னீர்செல்வம் தரப்பும் அப்படியே நெடுஞ்சானாக ஏற்றுக்கொண்டதால் சசிக்கலா சைலண்ட் ஆனார்'' என்கிறது தமிழக அரசியல் களம்.

Thursday 25 March 2021

கொரோனா - முதலாளித்துவ அகிலம்

 

                                கொரோனா - முதலாளித்துவ அகிலம்  

'' Coronavirus: 'Double mutant' Covid variant found in India'' - BBC

''இந்தியாவில் மட்டும் கொரோனோ வைரஸ் என்ற உயிர்,  தனது உடற்கூறியலியலில் மரபுக்கூறுருமாற்றம் (mutation) ஏற்பட்டு இருமடங்கு பலம் பெற்றதாக உள்ளது'' என அறிவித்துள்ளது இந்திய சுகாதாரம் அமைச்சகமும் உலக சுகாதார கூட்டமைப்பு.

 

ஏன் இந்த வைரஸ் இந்தியாவில் மட்டும்  மரபுக்கூறுருமாற்றம் செய்தது என்ற அறிவியல்பூர்வமாக விளக்கத்தை இச்செய்தியை வெளியிட்ட பி.பி.சி ஆங்கில ஆன் லைலன் பத்திரிக்கை, உலக சுகாதார நிறுவன வெப்சைட், இந்திய சுகாதார அமைச்சக வெப்சைட்டிலும் இது குறித்த விளக்கம் இல்லை. கேட்டால் ''ஆய்வு தொடர்கிறது'' என்றே சொல்லுவார்கள். அல்லது வேறு ஏதாவது பதில் வரலாம். கேட்க நாதியில்லை என்ற போது பதில் தேவையில்லையே.  

 

முதன் முதலாக இந்த நோய் அறியப்பட்ட சீனம் அடுத்து இத்தாலி. இந்த நாடுகளில் இப்போதைய நிலையை விசாரித்த இந்திய மருத்து ஆய்வக குழுமத்தின் பணியாற்றும் (ICMR) ஆய்வறிஞ நண்பர்கள் 'மத்திய அரசின் இலக்கிய விருது (சகித்த அகதாமி) குழுவினர் தேர்வு செய்த நூல் பட்டியலில் இல்லாத நூலுக்கு விருது கொடுத்தது போலவே எங்கள் பதில் இருக்கும். உண்மையை வெளியிட்டால் நாங்கள் என்ன ஆவோம் எனத்தெரியவில்லை' என்கிறார்கள்.  

 

வைரஸ் உயிரி ஒரு நாளுக்கு பல நூறு முறை தன்னிச்சையாக உடல் மரபுக்கூறு மாற்றத்தை (spontanius mutation) உருவாக்கி, புதிது புதிதாக தகவமைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது அறிவியலர் கண்றிந்த செய்தியே. இந்தச்செய்தியை பிரமாண்டமாக பரப்புவதன் நோக்கம் என்ன ? என்பதை கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் உள்ளவர்கள் வாய்மூடியுள்ளதை பார்க்கும் போது, ''முதலாளிகள் புதிய கோணத்தில் இந்த உலகத்தை மாற்ற திட்டமிட்டுள்ளார்கள்'' அதற்கு அனைத்து அரசியல் கட்சியினரும் துணை போய்கிறார்கள் என்பதை தற்போதைய விடையாக உள்ளது.  

 

பொதுவாக வைரஸ் போன்ற நுண் உயிர்ப்பரவல், ஈரப்பதத்தில் என்பது அறிந்ததே. ''கொரோனோ வைரஸ் உயிரி ஈரப்பதம் அதிகம் உள்ள விந்திய மலை (இமயமலை) அடிவாரப்பகுதி மாநிலங்களில் எவ்வாறு பரவியுள்ளது பரவுகிறது'' என அறிய இந்திய மருத்து ஆய்வக குழுமத்தினருடன் உலகளவில் உள்ள ஆய்வறிஞர்கள் இருமாதம் ஆய்வு மேற்கொண்டனர். இவர்களது ஆய்வறிக்கை கமுக்க அறிக்கையாக (blue statement) அரசிடம் உள்ளது. இவ்வறிக்கையை யார் வெளியிடுவார்கள் என்பது முதலாளிகளுக்கே வெளிச்சம். (அப்பகுதியில் கொரோனோ இல்லை என்பதே அவர்களது அறிக்கை)   

 

கட்சிகளும் கொரோனோவும்

             தற்போது நடைபெறும் 2021ம் ஆண்டிற்கான தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் திரு. விஜயகாந்த் அவர்களின் தே.மு.தி.க, திரு. டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்பட சில கட்சியினர் தனித்து களம் காண்கிறார்கள். தே.மு.தி.க கட்சி துவக்கியதே தி.மு.க அசைன்மெண்ட் என்பது அரசியல் உள்வட்டார செய்தி அறிந்தவர்கள் ஒத்துக்கொண்டது (மாற்றுக்கருத்து பல நூறு உண்டு). இக்கட்சியின் தலைவியான திருமதி பிரேமலதா அவர்களின் உடன்பிறந்தவருக்கு கொரோனோ தொற்று இருப்பதற்காக இப்பெண்மணி தேர்தல் பரப்புரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

           

               அரசியல் கட்சி துவக்க இருந்தார் நடிகர் திரு இரஜினிகாந்த். இவர் கட்சி துவக்கும் முன் ''உங்களது பேச்சு அறிக்கை அனைத்தும் திமுக காங்கிரஸ் கட்சியினை குறி வைத்து தாக்கவேண்டும்'' என்பதே பா.ஜ கட்சியின்மேலிடம்  இவருக்கு கொடுத்த அசைன்மெண்ட். இதற்கு அவர் மறுத்து விட்டாராம். சில மாதங்களுக்கு முன் படப்பிப்பில் இருந்த இவருக்கு கொரோனோ தொற்று என்று பரப்பியதுடன் படப்பிடிப்பை நிறுத்தினார்கள். இவரை விடுவிக்க பெரும் தொகையை வசூலித்து விட்டே அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் ? என்ற தகவல் நமக்கு அதிரிச்சியை தரவில்லை. இவர் பணத்தை கொடுக்க மறுத்திருந்தால் கட்டாயம் அவர் கொல்லப்பட்டிருப்பார் என்பதை என்பது மெய்யிலும் மெய்.

 

கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பரப்பப்பட்ட, கொரோனோ வைரஸ் குறித்த வீடியோ அனைத்தும் செட்டப்செய்யப்பட்டது என்பதை எத்தனை பேர் அறிந்திருப்போம். இந்த வீடியோக்களை  யார் அனுப்பியது என்பதை விசாரித்ததில் அனைத்தில் விஹெபி என முதல்கட்ட தகவல்கள் வருகிறது. இது எந்தளவிற்கு மெய் என்பது போகப்போககத்தான் தெரியும்.

 

தொடர் பரப்புரையின் நோக்கம் எதை நோக்கி.

        புதிய கண்டுபிடிப்புகள் அனைத்தும் உலக முழுவதற்கும் ஒன்றானதாக ஆக்குவது. எடுத்துக்காட்டாக ஒரே ஒரு சோப், உலகம் முழுவதும் பல மொழிகளில் அச்சிடப்பட்டு விற்கப்படும். வரும் காலத்தில் ஒரே ஒரு மொழியில் இருக்க வேண்டும் என என உலகமுதலாளிகள் முடிவெடுத்து விட்டார்கள். ஒற்றைத் தன்மையுடயை வியாபார உலகரசு உருவாக்கத்தை நோக்கி கொரோனோ என்ற நோய் பரப்பல் மூலம் நகர்த்தப்படுகிறது.

 

பொதுவுடமை அகிலம் கட்ட நினைத்த பொதுவுடமை கட்சியினரை முதலாளித்துவ அரசால் அழித்தொழிக்கப்பட்டது. தற்போது மருத்துவத்துறையின் உதவியுடன் *முதலாளித்துவ அகிலம்* கட்டப்பட்டு வருகிறது. இந்த அகிலம் 999 ஆண்டுகள் ஒப்பந்தம் போல பலமானதாக இருக்கும். இவர்களின் கீழுள்ள அடிமைகளான நாம் கொல்லப்பட்டதற்கான தடையம் கூட இருக்காது என்பது மட்டும் மெய்.  

 

25.03.2021

 

 

 

 

Wednesday 24 March 2021

கொரோனோ பித்தலாட்டத்தின் அடுத்த இலக்கு !

 

                          கொரோனோ பித்தலாட்டத்தின் அடுத்த இலக்கு !

                          *********************************************************

கொரோனே என்ற நோய் தொற்று இல்லை என்பதற்கு மைய சான்றாக பார்க்கப்படுவது கொரோனே நோய் தாக்கி இறந்தவர்களாக அறிவிக்கப்பட்டவர்களின் உடலினை இதுவரை எந்த நாட்டிலும் உடற்கூறாய்வு செய்திடவில்லை. இதற்கான காரணத்தை எந்த நாடும் அறிவிக்கவில்லை. இதை கேள்வி கேட்க எந்த அமைப்போ, அறிவியல் கட்சிகளோ முன்வரவில்லை. உலகளவில் நடத்தப்படும் இந்த பித்தலாட்ட பரப்புரையின் இலக்கு என்ன. இப்பரப்புரையினால் ஓராண்டு காலமாக நடந்தது என்ன?.

 

உலகளவில் ஏற்றுமதி இறக்குமதி என்பது முடங்கிவிட்டது. அடிப்படை தேவையான உணவு உற்பத்தி பொருள்கள் மட்டுமே இறக்குமதி ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டது. உள்ளூர் ஏற்றுமதி இறக்குமதியும் இதே நிலை. துணி உற்பத்தி ஆலைகள் அதனை சார்ந்த தொழில்கள் முடங்கி விட்டது. வழுத்தது வாழும் என்ற நிலையில் சுமார் 60% தொழில்கள் உள்ளது. ஏரிபொருள் விற்பனை படு மந்தமாக உள்ளது. தொடர்வண்டி போக்குவரத்தில் (Rail) உள்ளூர் வண்டிகள் இயக்கப்படவில்லை என்பதை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. சென்னை, மும்பை கல்கொத்தா, மீரட் போன்ற தொழில் நகரங்களில் இரயில் வருமானம் 73% என அறிக்கை சொல்லுகிறது.  

 




பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் அதனை சார்ந்த தொழிலாளர்கள், பணியாளர்கள் முடங்கிக்கிடக்கிறார்கள். பள்ளி பிள்ளைகளை ஏற்றி இறக்கும் வாகனத் தொழில் முழுமையாக முடங்கி விட்டது. இதனால் அதன் சார்ந்த உற்பத்தித் தொழில், விற்பனைகள் கால் பங்காக உள்ளதாக அரசின் கமுக்க புள்ளி (blue statistics) விபரத்தை அறிந்த உயர்நிலை (இ.ஆ.ப) அலுவர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

பள்ளி மாணவர்கள் தங்களது தொழிலை 30 % செய்வதாகவும். மீதமுள்ள 70% பிள்ளைக்அளின் பெற்றோரின் குலத்தொழில்கள் அழிந்ததால் கிடைத்த பணியை செய்கிறார்கள். இதனால் தற்போது அடிமை நிலை தென்படத்துவங்கியுள்ளது என தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் ஆய்வறிக்கையை அறிந்தவர்கள் பகிர்கிறார்கள். இந்த ஆய்வறிக்கையில் சமூக இழி தொழிலாக கருத்தப்படும் தொழில் செய்பவர்களின் பிள்ளைகள் மட்டுமே பெரும்பாலும் குலத்தொழிலில் ஈடுபவதாக சொல்லுவதை கவனித்தாகவேண்டுயுள்ளது.  

 

நகரத்தில் உணவு விடுதி (hotel) நடத்தியவர்கள் பெரும்பாலும் மூடிவிட்டனர். பெரும் முதலாளிகள் மட்டுமே நடத்துகிறார்கள். மூடிய உணவு விடுதிகள் கிராமங்களில் முளைத்துள்ளது. பல்லாயிரம் தொழிலாளர்களை காத்த விடுதி தொழில் முடக்கம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஐயமில்லை. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த நோயினை சொல்லியே முடக்குவார்கள். மொத்தத்தில் இனி *முதலாளி - தொழிலாளி* என்ற இரண்டு இலக்கு மட்டுமே இனி இருக்கும் என்பது உறுதியாக நம்பலாம்.

Tuesday 23 March 2021

சாகித்ய அக்காதமி இரகசியம் Nainar M Ananthapuri

 

                            சாகித்ய அக்காதமி இரகசியம் - Nainar M Ananthapuri
************************************************************************************
 
எந்த இரகசியத்தையும் எவ்வளவு காலத்திற்கும் பாதுகாக்கும் மன உறுதி எனக்குண்டு. குடும்பம் தொடர்பானதும் அல்லாததுமான பல இரகசியங்களை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மனதுக்குள் உறையப் போட்டிருக்கிறேன். ஓராண்டுக்கும் மேலாக இந்த நிமிடம்வரை இந்த இரகசியத்தையும் இரகசியமாகவே வைத்திருந்தேன். சமீபத்தில் வந்த சில பதிவுகளும் செய்திகளும் இதெல்லாம் பெரிய இரகசியம் அல்ல என்பதை உணர்த்தியதால் இப்போது வெளிப்படுத்துகிறேன். மன்னிக்கவும்.
 
2020 ஆம் ஆண்டு சாகித்ய அக்காதமி விருது வழங்குவதற்கான எழுத்தாளர்களின் பட்டியலொன்று (Ground list) தயாரிப்பதற்கான ஒரு வாய்ப்பு எனக்கும் தரப்பட்டது. மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.
 
ழுத்தாளர்கள் எழுத்துலகில் தடம் பதித்தவர்களாக இருக்கவேண்டும்; ஆண்-பெண் இருபாலரும் இருக்க வேண்டும்;நாவல், சிறுகதை, கவிதை, விமரிசனம் என எல்லாத் துறைகள் சார்ந்த எழுத்தாளர்களும் உட்பட வேண்டும்; புனைவில் புதுமையைக் கையாள்பவர்களாக இருக்கவேண்டும்...என்றிவ்வாறு எனக்குள் சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு படைப்பாளிகளையும் படைப்புகளையும் தேடினேன். யாருடைய உதவியையும் நாடவில்லை...இரகசியம் என்பதால்.
 
பதினைந்து எழுத்தாளர் நூல்களின் பட்டியல் தயாரானது. இதனைப் பத்தாகச் சுருக்கினேன். எந்தவிதமான வேண்டுதல் வேண்டாமையும் காட்டவில்லை என்பது உண்மை.
 
பெருமாள்முருகன், இமையம், சல்மா, இரா முருகன், யுவன் சந்திரசேகர், அழகிய பெரியவன் இவர்களெல்லாம் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். நான் வகுத்த விதிமுறைகளிலிருந்து சற்று விலகி இன்னொருவரையும் சேர்த்துக் கொண்டேன்... திரு. இரா. முத்துநாகு.
முத்துநாகுவின் சுளுந்தீ, இருள் மூடிக்கிடந்த ஒரு காலகட்ட வரலாற்றின், பண்பாட்டின் மீது ஒளிவீசுவதாக இருந்தது. எனக்குள் அசாந்தத்தின் ஓர் அலையை எழுப்பியது. அற்புதமான ஒரு படைப்பாகவே தோன்றியது. பத்து பேருடைய பட்டியலில் முத்துநாகுவை முதலில் வைத்தேன்.
 
பட்டியலில் இடம்பெற்ற பலரையும் நேரடியாகவும் அல்லாமலும் அறிவேன். ஆனால் முத்துநாகு எனக்கு முற்றிலும் புதியவராகவே இருந்தார் என்பதும் உண்மை மட்டுமே.

 
இப்போது இறுதிச் சுற்றுக்கு வந்த ஐந்து எழுத்தாளர்களின் பட்டியலைப் பார்த்தேன். எனது கணிப்பில் முதலில் வந்தவர் இறுதிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில்கூட வரவில்லை என்பது வருத்தத்தைத் தந்தது. ஒரு சிறந்த படைப்பைத் தேர்ந்தெடுக்கும் தகுதியற்றவன் ஆகிவிட்டேனே என்ற வருத்தம்...எனது 'ஜட்ஜ்மென்ட்' தவறாகிவிட்டதே என்ற வருத்தம்.
எல்லா ரசனைகளும் ஒரேபோல் இருக்கவேண்டுமென்றில்லையே என அமைதிகொள்கிறேன்.

Wednesday 17 March 2021

திருக்கோயில் பூசாரி ஆகமுடியாது என்றால் பரிசாக்கர் மட்டும் எப்படி கிடைக்கும்

  

*திருக்கோயில் பூசாரி ஆகமுடியாது ! 

கஞ்சி காய்ச்சும் (பரிசாக்கர்) பணி மட்டும் கிடைக்குமா?- நீதி மன்ற விளையாட்டு

****************************************************************************************

               

              இந்திய அரசியல் சாசனம் குலங்களை (ஜாதி) ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் அடிப்படையிலே திமுக அரசால் கொண்டு வரப்பட்ட 'அனைவரும் அர்சர்களாகலாம்' என்ற சட்டத்தை எதிர்த்து சைவத்தின் அடையாளமான தில்லை திருக்கோயில் பூசாரிகளின் கூட்டமைப்பு வழக்கு தொடுத்தது. சுமார் 30 ஆண்டுகள் நடந்த வழக்கில் தில்லி உச்ச நீதிமன்றம் 'இந்தியாவில் சாதிய அடுக்குநிலை ஏற்புடையதே. அதனடிப்படையிலும், சைவ ஆகம விதிகளின்படியும் ஆகம விதிகளை கற்றறிந்த பார்ப்னர்கள் மட்டுமே பூசை செய்திட முடியும்' எனத் தீர்ப்புச்சொல்லி வழக்கினை முடித்து வைத்தது. இந்தத் தீர்ப்பே சட்ட வடிவமாக மாறிது. இதை மாற்ற மக்கள் மன்றங்களால் மட்டுமே இயலும்.

 

                 வைணவ சைவ மடப்பள்ளிகளில் மந்திரம் ஓதி கடவுளுக்கு சமைத்து கடவுள் உண்பதற்கான உணவை (நைவத்தியம்) சமைத்திடும் மடப்பள்ளிப் பணியாளர்களுக்கு திருக்கோயில்களில் அவர்களுக்கு பெயர் பரிசாக்கர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பணியுடன், நைவைத்திய உணவினை எடுப்பவர், உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதியுடன் குலத்தகுதியாக பொதுவெளியில் அழைக்கப்படும் ஐயர் என்ற 'பார்ப்பனர்' மட்டுமே என தமிழக அரசின் கீழ் இயங்கும் இந்து அறநிலைத்துறை அறிவித்திருந்திருந்தது.

 

                      இந்தப்பதவிகள் கடந்த காலங்களில் தலைமுறை தலைமுறையாக மடப்பள்ளியில் பணியாற்றும் பூசாரிகளே (ஐயர்) சமையல் செய்து வந்தனர். இவர்களது சமையளான நைவைத்தியம் மட்டுமே கடவுளுக்கு உணவாகப்படைக்கப்படும். இந்த உணவினை பட்டுத்துணியால் மூடி, பிறர் பார்க்காதவாறு பூசாரி எடுத்து போவார். அவருக்கு முன் கோடாங்கி, அல்லது சிறிய பம்பை போன்ற இசைக்கருவியை ஒரு ஐயர் இசைத்து செல்ல திருக்கோயில் திருமேனி இருக்கும் கருவரைக்கு இந்த உணவு எடுத்து செல்லப்படும். திரையால் மூடி இருக்கும் திருமேனிக்கடவுள் திருச்சிலைக்கு இந்த உணவு படைக்கப்படும். இது தான் ஒரு கால பூசை முதல் இராக்கால பூசை எனச்சொல்லும் செயல்கள். 

 

              இந்தச்சமையல் வைணவ, சைவ திருக்கோயில்களுக்கும் வேறுபாடு உண்டு. கோயிலுக்கு கோயில் வேறுபாடும் உண்டு. *வெஞ்சணம்* என்ற சொல் தென் தமிழகத்தில் புழக்கசொல். இந்த வெஞ்சணம் வைணவ திருக்கோயில்களில் கடவுளுக்காக நைவத்தியமாக படைக்கப்படும் உணவு. இதை தயாரிக்க இதற்கு மந்திரம் சொல்ல தனியான ஐயர் இருப்பார்.

                                                   (நன்றி தினத்தந்தி)



 

                    திருக்கடவுள்களுக்கு படைக்கும் நைவைத்திய உணவினை சமைக்கப் பயன்படும் அடுப்பு, விறகு, தண்ணீர் அனைத்தும் ஒவ்வொரு முறை சமைக்கும் போதும் ஆச்சார விதிகள் கடைபிடிக்கப்படும். கடவுள் அருகே நின்று பூசை செய்திடும் பூசாரியை விட மடப்பள்ளி சமையலர் (பூசாரி) பதவி உயர்ந்ததாகக் கருத்தப்படுகிறது. இதனால் திருக்கோயில் பூசாரிகளுக்குள் போட்டி பொறாமைகள் பலவேளைகளில் சண்டை அடிதடி ஏற்படும். இக்குழப்பத்தால் இந்து அறநிலையத்துறை திருக்கோயில் பணியாளர்கள் பரம்பரை பரம்பரையாக இருந்த பூசாரி பதவிகள் தவிர, மற்ற பணியிடங்களை அறிவிப்பு ஆணை வெளியிட்டு பூர்த்தி செய்துவருகிறது. இருப்பினும் இந்திய நீதிமன்ற ஆணை சட்ட வடிவம் பெற்றதால் அனைவரும் பூசாரியாக முடியாமல் போய்விட்டது.

 

                தற்போது மடப்பள்ளி சமையளர் பதவிக்கு பார்ப்பனர் குலத்தினர் மட்டுமே விண்ணபிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டதை  எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கினை ஏற்றுக்கொண்ட நீதிமன்றத்திடம், 'பணியிட பூர்த்திடு செய்திடும் ஆணையை திருப்ப பெற்றுக்கொண்ட' தாக இந்து அறநிலையத்துறையினர் உறுதிமொழிப்பத்திரம் (அபிடாவிட்) தாக்கல் செய்தனர். ஆனால் வழக்கில் குறிப்பிட்டுள்ள குலம் தொடபாக எதுவும் குறிப்பிடவில்லை. இதையும் நீதி சொல்லும் பணியாளர் (நீதி அரசர்) எந்த கேள்வியும் கேட்காமல் வழக்கை முடித்து வைப்பதாக அறிவிக்கிறார். இனி ஓசையில்லாமல் அந்தப்பணி பூர்த்தி செய்திட வாய்ப்புள்ளது. இதில் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது 'சில திருக்கோயில் மடப்பள்ளிகளில் கோயிலுக்கு திருநீர் (தண்ணீர்) சுமக்கும் பணியாளர் பதவியான மஞ்சனக்காரர்கள் சமையல் செய்ததாக பிரிட்டீஷ் மிலிட்டரி கேப்டனாக இருந்து சென்னை மாகான தலைமை நில அளவை அதிகாரியாக இருந்த மெக்கன்சி தொகுத்த தென்னிந்திய திருக்கோயிற்_சாசனங்கள்  என்ற நூல் தெரிவிக்கிறது.

 

                                                        படம் உதவி வினவு


 

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...