Search This Blog

Monday 19 April 2021

வே. ஆனைமுத்து கருத்துக்கள்

 

 

Chandra Mohan 

_ஆனைமுத்து_நினைவுகள்_சொல்லப்படாத_சில_செய்திகள்

 

 

*பொதுவாக பலராலும் சொல்லப்படும் அஞ்சலி குறிப்புகள்:*

 

1) ஆனைமுத்து பெரியார் சிந்தனை தொகுப்புகளின் பதிப்பாசிரியர். அவரது பல்வேறு பேச்சு & எழுத்துகளின் பதிப்பாளர்,

2) பிற்படுத்தப்பட்டவர் இடஒதுக்கீடு போராளி.

 

மத்தியில் மண்டல் கமிஷன் வாயிலாக 27% பிற்படுத்தப்பட்டவர் இட ஒதுக்கீடு கிடைப்பதற்காகவும், தமிழகத்தில் பிற்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீட்டு அளவு மட்டும் 50% வரை உயர பணியாற்றியவர். இவை மிகச்சரியான கருத்துக்களே! காவிப் பாசிச அச்சுறுத்தலுக்கு எதிரான கேடயமாக நமது கைகளில் பெரியார் சிந்தனைகள் தொகுப்பு நூல்களாக இருப்பதற்கு ஆனைமுத்து தான் காரணம். பிற்பட்ட வகுப்பினர் OBC மத்திய வேலை வாய்ப்பு & கல்வியில் குறைந்தபட்ச பங்கு 27% பெறுவதற்கும், தமிழ்நாட்டில் 50% இன்று நிலவுவதற்கும் காத்திரமான பணியை செய்தவர், அய்யா ஆனைமுத்து அவர்கள். இந்தியாவில் பிற்படுத்தப்பட்டவர் உரிமை போராட்ட வரலாறு அவர் பற்றி இல்லாமல் எழுதவே முடியாது.

 

*சொல்லப்படாத சில முக்கிய செய்திகள்:-*

 

1) வன்னியர் விவசாய நிலங்கள் அபகரிப்பு பற்றிய ஆவணம்: 19 ம் நூற்றாண்டின் தமிழகத்தில் வெளியான வேறுசில முக்கியமான ஆவணங்களையும் தோழர். ஆனைமுத்து தொகுத்தார்.

 

19 ம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் ஆட்சியில், பார்ப்பன- வேளாளர் நிலப்பிரபு்களால் விவசாய நிலங்களை இழந்த பல்லாயிரக்கணக்கான வன்னியர் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர் ஆவார். பிரிட்டிஷ் ஆட்சியரிடம் அவரது முறையீடுகள் கடிதங்களாக இருந்தன. விஜயநகர ஆட்சி காலம் மற்றும் நவாப் ஆட்சி காலம் வரை தொண்டை மண்டலத்தில் / காலனிய ஆட்சியின் செங்கல்பட்டு ஜில்லாவில் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட அக்ரஹாரம், வேளாளர்களுக்கு வழங்கப்பட்ட நத்தம் போல, வன்னியர்களுக்கு மன்னர்வீடு ஊர்கள் என முத்திரை பொறிக்கப்பட்ட கற்கள் வைத்து பிரித்து அடையாளப் படுத்தி உள்ளனர். வன்னியர் விவசாயிகள் சாகுபடி செய்த நிலங்களுக்கு அவர்களிடமிருந்தே நேரடியாக வரியும் வசூலிக்கப்பட்டு வந்துள்ளது.

 

பிரிட்டிஷ் ஆட்சியில் ரயத்துவாரி முறை கொண்டு வரப்பட்ட போது, ஏற்கெனவே அக்ரஹாரம், நத்தம் பகுதியில் நிலவுடமையாளர்களாக, மிராசுதார்களாக இருந்த பார்ப்பனர், வேளாளர்கள், பாசன வசதிமிக்க நிலங்களில் ரயத்துகளாக (நேரடியாக விவசாயம் செய்தவர்களாக) இருந்த வன்னியர் விவசாயிகளுக்கு நில உரிமை சென்று விடாமல் இருக்க, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்/ பிரதிநிதிகளை தங்கள் கைக்குள் போட்டுக் கொண்ட பார்ப்பன அதிகாரிகள் வழியாக சதிகள் பலவும் செய்து அபகரித்து கொள்கின்றனர். இவற்றை பற்றி, கிராமங்கள், தாலுக்காக்கள் வாரியாக புள்ளிவிவர ரீதியாக வேங்கடாசல நாயகர் முறையீடுகள் செய்கிறார். பார்ப்பனர்கள், தொண்டை மண்டல வேளாளர்கள், ரெட்டி & கம்மாக்கள் என அபகரித்தவர்கள் எவரெவர் எனவும் பட்டியல் தருகிறார்.

 

*பார்ப்பாரும், வேளாளரும் வன்னியரிடம் இருந்து அபகரித்த மன்னவேடு ஊர்கள்* என்பதாக பிரச்சினையை முன்வைக்கிறார். தாங்கள் விவசாயம் செய்த தங்களுக்கு பாரம்பரியமாகச் சொந்தமான நிலங்களின் மீதான உரிமை இழந்து, மிராசுதார்களுக்கு படியாட்களாக/ கொத்தடிமைகளாக மற்றும் பாயாக்காரர்களாக/ ஏஜெண்டுகளாக மாறிவிடும் அவலத்தையும் விவரிக்கிறார்.

இவை பற்றிய அறிக்கைகள் 1880 களுக்கு பிந்தைய காலத்தில் தமிழ் / ஆங்கிலத்தில் ஆவணங்கள் ஆகியுள்ளன. பெரியார், இந்த கடிதங்கள் பற்றி குடி அரசில் எழுதுகிறார். ஆனைமுத்து அய்யா அவர்கள் இதை 80 களில் சிறுசிறு பிரசுரங்களாகவும், 1992 ல் தொகுப்பான ஆவணமாகவும் முன் வைக்கிறார்.

 

"மன்னவேடு ஊர்கள்" வன்னியர் விவசாயிகளின் ஒரு மிக முக்கியமான வாழ்வாதாரப் பிரச்சினை ஆகும். இது சரியான முறையில், இயக்கமாக்கப் பட்டிருந்தால் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு விவசாயிகள் கிளர்ச்சி/ எழுச்சியாக மாறியிருக்கும். பறையர் சமூகம் இழந்த பஞ்சமி நிலப் பிரச்சினைக்கு கொடுக்கப்பட்ட கவனம் கூட இதற்கு தரப்படவில்லை. மன்னவேடு நிலங்கள் பிரச்சினை ஆவணப்படுத்தப் பட்டது. ஆனால், எவராலும் இயக்கமாக கட்டமைக்கப் படவில்லை.

 

பார்ப்பனர் எதிர்ப்பில் பெரியாரோடு குரல் எழுப்பிய திமுக இப்பிரச்சினை பற்றி ஒருபோதும் பேசவில்லை; பேசாது. ஏனெனில், அதுதான் தொண்டை மண்டல வேளாளரின் நலனுக்கானக் கட்சியாகும். 80 களில், வலுவான அரசியல் சக்தியாக எழுந்த பா.ம.கவும் கூட இப் பிரச்சினை குறித்து எதுவும் செய்யவில்லை. பிற்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு அரசியல் தேசிய, மாநில அரசியலில் தீவிரமாக உருவெடுத்த காலத்தில் பா.ம.க தன்னை தனி இடஒதுக்கீடு கோரிக்கைக்குள் உட்படுத்தியதே தவிர, வன்னியர் இழந்து விட்ட மன்னவேடு நிலங்கள் பற்றி எதுவும் பேசவில்லை.

 

*பிற்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு வித்திட்டது யார்?*

 

BC இட ஒதுக்கீடு விஷயத்தில், அனைவரும் ஆனைமுத்து அய்யாவின் பங்கை உயர்த்திப் பிடித்த அனைத்து தருணங்களிலும், அவரோ அம்பேத்கரை தான் முன்னிறுத்தி உள்ளார். பின் வருமாறு திரும்பத்திரும்ப சொன்னார் :இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதலாம் வரைவில், [தற்போதைய விதி 16(4) விதி] "எந்தவொரு வகுப்பு / சாதி குடிமக்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யலாம் " என்று தான் பார்ப்பன உறுப்பினர்கள் எழுதி வைத்தனர். அம்பேத்கர் தான், தனது இறுதி வரைவில், "பிற்படுத்தப்பட்ட வகுப்பு குடிமக்களுக்கும் மற்றும் பட்டியல் சாதி & பட்டியல் பழங்குடி மக்களுக்கும்" என்ற சொற்றொடரை உருவாக்கியதோடு, விவாதத்திலும் தெளிவுபடுத்தி அதை நிலைநிறுத்தினார். இந்தவகையில் பார்ப்பனர் சதியை முறியடித்தவர் அம்பேத்காரே! அதைத் தொடர்ந்து, பிற்பட்ட சமூக நிலைகளை ஆய்வு செய்ய 1953ல் காகா கலேல்கர் ஆணையம் அமைக்கவும் போராடியவர் அம்பேத்கர் தான்-- என ஆனைமுத்து அய்யா பல இடங்களிலும் தெளிவுபடுத்தியுள்ளார். "அதற்குப் பிறகு, பிற்பட்டவர் ஒதுக்கீட்டை அமலாக்க, விகிதாச்சார இடப் பங்கீடு பெற நாம் இயக்கம் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். "எனத் தன்னடக்கத்தோடு பதிவு செய்தவர் ஆனைமுத்து அவர்கள்.

 

*தனிநாடு ஏற்படையது அல்ல!*

 

திராவிட இயக்கத்தின் சில பிரிவுகள், தமிழ் தேசிய அமைப்புகள், சில மார்லெ குழுக்கள் தனித் தமிழ்நாடு என்ற அரசியல் வழியில் செயல்பட்ட போதும், ஆனைமுத்து அவர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொண்டாரில்லை. இந்திய அரசியலமைப்பின் எல்லைக்குள், தன்னுரிமை கொண்ட மாநிலங்களின் கூட்டாட்சி என்பதே அவர் நிலைப்பாடு ஆகும். அனைத்து மொழிகளும் ஆட்சி மொழிகள் ஆக்கப்படுவது (மாநில மொழி அந்தந்த மாநிலத்திற்குள் உள்ள நடுவண் அரசு அலுவலகங்களிலும் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.) இந்தியாவை கூட்டாட்சியாக மறுகட்டமைப்பு செய்வதற்கு முதல் அடியெடுப்பு எனக் கருதினார். இரட்டை குடியுரிமை கொண்ட தன்னாட்சி மாநிலம், தனி அரசமைப்புச் சட்டம் என்பதாக, கூட்டமைப்பை மறுகட்டமைப்பு செய்வது அவரது கொள்கையாக இருந்தது.

 

(மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சி - சேலம் 2021 ஏப்ரல் 17 மாலையில் ஏற்பாடு செய்திருந்த அய்யா ஆனைமுத்து நினைவு நிகழ்ச்சியில் பேசிய சில கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறேன்.)

 

 

Thursday 15 April 2021

கல்வி மாற்றம் செய்திடும் கொரோனா

  

                 

                  கல்வி மாற்றம் செய்திடும் கொரோனா                                                     

 

                   இணைய வழிப்பாடம் மட்டுமே கல்வியில்

                   ------------------------------------------------------------------------

           பல நாடுகளில் இணையவழியாக பாடங்கள் அனைத்தும் என ஆணை பிறக்கப்பட்டு பாடம் நடத்த ஆசிரியர்கள் தேர்வு உலகளவிய (சர்வதேச டெண்டர்) ஏலம் கோரப்பட்டு ஆசிரியர் தேர்வுகள் நடந்து வருகிறது. பல நாடுகளில் ஐந்தாம் வகுப்பு வரை இணைய வழியாக மட்டுமே பாடம் நடத்தப்படுகிறது. இதை எதிர்கொளவதாக வேண்டாமா என்பதை எந்த அரசியல் கட்சியும் (கொள்கை இல்லை என்ற கட்சிகள் வாய் திறக்கத்தேவையில்லை) தங்களது கொள்கை முடிவினை அறிவிக்கவில்லை. இதனை வைத்துப் பார்க்கும் இவர்கள் இணையவழி பாடம் நடத்தும் கொள்கையை ஏற்றுக்கொண்டார்கள் என்றே பொருள்.

 

தேர்வுகள் இருக்காது மாற்றாக நுழைவு தேர்வு மட்டுமே?

--------------------------------------------------------------------------------------------------------

   

கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளித்தேர்வுகள் நடத்தப்படவில்லை. நடந்த தேர்வுகள் அனைத்தும் திருத்தம் செய்யாமலே அனைவரும் தேர்ச்சி என அறிவித்தார்கள். கல்லூரி தேர்வுகளும் பெயரளவிற்கு நடந்தேறின. நடந்தவைகளில் செயற்கையான அறிவினை வைத்து (ARTIFICIAL INTELLIGENCE) தேர்வுத்தாள்கள் திருத்தப்பட்டதில் நன்றாக எழுதிய மாணாக்கர்கள் தேர்வில் தவறியவர்களாக கணக்கிடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியதாக கருத்துக்கள் வந்துள்ளது. 

 

        இதில் அதிர என்ன இருக்கிறது தேர்வு எழுதும் முறையிலே அவர்கள் சொன்ன ஓசை குறியீடுகள் இருந்தால் மதிப்பெண் கணக்கிடப்படாது. அப்படி என்றால் புற ஒசை உள்ளே புகாத குளிரூட்டப்பட்ட அறை வைத்துள்ள முதலாளிமார் வீட்டுப்பிள்ளைகள் அந்த அறையில் ஓசையின்றி எழுதுவார்கள். அவர்கள் மட்டுமே தேர்வாயிருப்பார்கள் என்பதைக் கூடவா கணக்கிடமுடியவில்லை. இதனடிப்படையில் பார்த்தால் சாமான்ய வீட்டுப்பிள்ளைகள் படிக்கவேண்டாம் என நேரடியாகச்சொல்லாமல் இப்படி செயற்கை அறிவியல் அறிவினைக்கொண்டு அறிவு எனக்கணக்கிட்டு அழித்தொழிப்பு நடத்துகிறார்கள் என்பதை நாம் புலப்படுத்த தவறிவிட்டோமா? என்ற கேள்வி எழுகிறது. 

      

       இறுதியாக தெரிவது இனி தேர்வுகள் நடத்தமாட்டார்கள். ''நுழைவுத்தேர்வு மட்டும் நாங்கள் நடத்துவோம். நீங்கள் பள்ளியில் படிக்க வேண்டிய தேவையில்லை எங்கு வேண்டுமானாலும் படித்துக்கொள்ளுங்கள்'' என ஒன்றிய அரசின் தேர்வு (UPSC) போல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவே நம்பமுடிகிறது.

 

கொரோனோ தடுப்பூசி பித்தலாட்டம்?

----------------------------------------------------------------------

உலகளவில் அறிந்த எழுத்தாளர் பா. இராகவன் போன்றவர்கள் ''தடுப்பு ஊசி போட்டாலும் வரும். தனிமையில் இருந்தாலும் வரும், இடைவெளி விட்டு வாழ்ந்தாலும் வரும், லாக்டவுனிலும் வரும், ஆனாலும் தனிமையில் இருங்கள்'' என கீதை பிரசங்கம் போலவே செய்து வருகிறார்கள். இதை சங்பரிவார் மூளையை மறைத்து வைத்து கருஞ்சிவப்பு ஆடை அணியும் பொதுவுடமை கட்சி, திராவிடர் கழகத்தாரும் அப்படியே ஏற்று பரப்புரை செய்திடும் தல்கவல்கள் வாட்ஸ் - அப், முகநூல் குழுக்களில் வருவதைப்பார்க்க முடிகிறது. இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். எதற்காக இப்பரப்புரை இதன் பயன் என்ன ? இலக்கு என்ன?.

 

சித்த மருத்துவம் ஆயுள்வேதம் கொரோனோ குறித்து என்ன சொல்லுகிறது

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

''ஆயுள் வேதம் சித்த மருத்துவம் மனிதர்களுக்கு வரும் 4444 நோய்களில், கொரோனோ என்ற நோயின் அறிகுறிகள் குறித்து தோஷம் என ஆயுள் வேத மருத்துவத்துறையும், பித்த சன்னி என சித்த மருத்துவத்துறையும் அறிக்கை கொடுத்துடன் அதற்கான மருத்துகள் உள்ளதையும் அரசுக்கு அறிக்கையாக கொடுத்துள்ளது. இதை கமுக்கமாகவே வைத்துள்ளது அரசு. இக்கமுக்கத்தை இத்துறையினர் பொதுவெளியில் பேசினால் வேலை போகும் அல்லது சிறை கிடைக்கும் என்பது ஐயமில்லை.  

 

 

ஐம்பது விழுக்காடு மக்கள் போதும் அதிலும் மரபு அறிந்தவர்கள் கூடாது

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

உலக மக்கள் தொகையில் 50 % போதும் என முதலாளிகளின் உலகம் முடிவெடுத்துள்ளது. இந்த 50 % என்பது மரபு அறிவை வைத்துள்ள எந்த உயிரும் இனி இவ்வுலக மண்ணில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் ''மரபினை எதிர்க்கும் அல்லது மரபு என்பது எனக்கு தெரியாது என்று சொல்லும் மானுடன் மட்டுமே இருக்க வேண்டும்'' என முடிவெடுத்துள்ளது. இப்படியான மானுட உயிர்கள் மட்டுமே முதலாளிகள் உலகம் சொன்னதை செய்திடும். அதை நோக்கிய தற்போது கொரோனோ நகர்வு நடக்கிறது. இனி கொரோனோ என்பதை எதிப்பவர்கள் கொல்லப்படுவார்கள் என்பது மட்டும் மெய்.    

 

Monday 12 April 2021

மாட்டுக்கறி

 

                            மாடு

மாடு அரசியல் பா. கொண்டு புதிய சட்டத்தால் இன்று விவாதப்பொருளாகி விட்டது. இதன் வரலாற்றை சற்று பின் நோக்கி பார்ப்போம்.

ஔரங்கசீப் தில்லி சுல்தானாக (மன்னன்) ஆட்சி செய்த போது போபால் நகரில் உள்ள சைவ மடமான காசி மடத்தை சேர்ந்த சாமியார்கள் 1000 காசுகளுடன் சென்று சுல்தான் ஔரங்கசீ அவர்களை வணங்கி ''மாடுகள் குறைந்து விட்டது ஆகவே மாட்டினை கறிக்காக கொள்ளுவதை குறைக்க ஆவண செய்திட'' வேண்டினார்கள். இந்த கோரிக்கை ஏற்ற ஔரங்கசீப் மாடுகள் கறிக்காக வெட்டுவதை குறைப்பதாக ஆணையிட்டார்.

அதற்கடுத்து பிரிட்டீஷ் இந்தியாவில் கறிக்காக மாடுகள் கொல்லைப்படுவது குறித்து இங்கிலாந்து பாரளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை. பிரிட்டீஷ் இந்தியாவில் திரு. பாலகங்காதரத்திலகர் மாடுகளைக் காக்க வேண்டித்தான் முதன் முதலாக கொல்கத்தாவில் போராட்டம் நடத்தினார். இதுவும் விடுதலைப்போராட்டமாக வரலாற்றாக உள்ளது. சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் - ல் இருந்த சனாதனவாதிகள் மாட்டு அரசியலை தொடர்ந்து கையிலெடுத்து வந்தார்கள். இதன் தொடர்ச்சியாகவே பசுவதை சட்டம் காங்கிரஸ் அரசாங்கத்தால் 1968ல் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் ''மாநில அரசு விருப்பப்பட்டால் நிறைவேற்றலாம்'' என சரத்து உள்ளது.

 

தற்போது விலங்குகள் நல அமைப்பு (பீட்டா), ''விலங்குகள் வதைக்கப்படுவதாக'' 1994ல் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் ''யானைகளை வனத்திற்குள் மரங்கள் தூக்கிட, பிச்சை எடுக்க பயன்படுத்தக்கூடாது'' என தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். இந்த தீர்ப்பின் பின்னனியில் ''கனரக வாகன உற்பத்தியாளர்கள் இருந்தார்கள்'' என்ற விமர்சனத்தை மறுப்பதற்கில்லை. தற்போது யானைகள் தூக்கிய மரக்கட்டைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்படுவதை பார்க்கும் போது தீர்ப்பில் ''உள் நோக்கம் இல்லை'' என்பதை நம்பும்படியாக இல்லை.

அதே போல் வேட்டையாடுவது மனித குலத்தின் பண்பு. இதை வனச்சட்டம் ஒற்றை சட்டத்தால் தடுத்து விட்டார்கள். இங்கிருந்து தான் பசுவதை சட்டம் அமுலுக்கு வந்தது. இன்று சங்பரிவார் அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் பார்க்க மறுத்தவை எனலாம்.

 

வனத்திற்குள் சென்று விலங்குகளை துப்பாக்கியால் சுட்டு கொன்று சிரித்து ரசிப்பது என்பது வேறு, பாரம்பரிய வேட்டை கருவிகளை கொண்டு வேட்டையாடிய விலங்குகளை உணவுக்காக வேட்டையாடுவது வேறு. சுட்டு எக்காலமிடுவதற்கும் உணவிற்கு வேட்டையாடுதற்கும் உள்ள வேறுபாடுகள் அறியாத ''சமூக''? அறிஞர்களிடம் என்ன பேசிட இயலும். உணவுக்கு விலங்குகளை கொலை செய்வதும் கொலை வெறியை வளர்ப்பதற்கும் வேறுபாடு தெரியாத கூட்டமாகவே இன்றைய சுற்றுச்சூழல் பார்வையாளர்கள் என அடையாளம்காட்டப்படுபவர்கள்.

.

இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 2004ம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தின்படி, ''பிள்ளையார் என்ற விநாயகர் மீது சிறு கழித்ததாக கட்டமைக்கப்பட்ட கரட்டானை (ஓணான்) அடித்தால் கூட 2000ரூ தண்டம். கட்டவில்லை என்றால் ஆறு மாத காலம் சிறைத்தண்டணை. கரட்டானுக்கே தண்டத்தொகை இவ்வளவு என்றால் மற்ற விலங்குகளுக்கு சொத்தை விற்று கட்ட வேண்டும், பணம் இல்லாதவர்கள் வாழ்நாள் முழுக்க சிறையில் கழிக்க வேண்டும்.

 

அரசின் கமுக்க கூட்டாளிகளான விலங்கு நல வாரியத்தினர் தொடுத்த வழக்கில் ''வித்தை கூடாரங்களில் (சர்கஸ்) வன விலங்குகளை (அதென்ன வன விலங்கு) வித்தை காட்டவும், விளையாட்டுக்காகவும் பயன்படுத்தக்கூடாது'' என்ற தீர்ப்பு வழங்கியது நீதி மன்றம். வித்தை கூடாரங்களில் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளை கண்டு இரசித்தவர்கள் தொலைகாட்சி பெட்டியில் இனி பார்க்க மட்டுமே முடியும்.

 

இதன் தொடர்ச்சியான வழக்காக ''இந்தியாவில் 27 % குறைவாக வனம் இருக்கிறது வனம் & சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் வனத்தை மேம்பாடு செய்ய வேண்டும்'' என வழக்கு தொடர்ந்தார்கள். ''வனத்தில் 99 ஆண்டு குத்தகை நிலங்கள் மற்றும் வருடாந்தர குத்தகை நிலங்களை, குத்தகை காலம் முடிந்த பின்பு குத்தகைக்கு விடக்கூடாது. அந்த நிலங்களை வனங்களாக மாற்ற வேண்டும். காட்டுக்குள் வாழும் பழங்குடி மக்களை விருப்பத்திற்கு ஏற்ப வெளியேற்ற வேண்டும்'' என தீர்ப்புச் சொன்னார்கள். இந்த வழக்கில் / தீர்ப்பில் 999 ஆண்டுகால டாடா மற்றும் .வி.தாமஸ் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள (தேயிலை,காபி) சுமார் 5லட்சம் ஹெக்டர் நிலங்கள் குறித்து நீதி மன்றமும் வழக்கு தொடுத்தவர்களும் எச்சில் விழுங்கிட கூட வாய் திறக்கவில்லை / அசைக்கவில்லை. இந்த வழக்கில் வனத்தை மேம்பாடு செய்து விலங்குகளை வாழும் இடமாக மாற்ற வேண்டும் என்பதே தீர்ப்பில் சாரம்சம். இந்த தீர்ப்பை வைத்து தான் சுற்றுச்சூழலை மேம்படுத்துங்கள் என்று  வளர்ந்த நாட்டுகளான அறியப்படும் நாட்டினரின் மீத்தேன் பயன்பாடுக்கு ஈடாக அவர்கள் நமக்கு நமக்கு ஆண்டு தோறும் கோடி கோடியாக அள்ளிக் கொடுக்கிறார்கள்.

பசுவதை

வேட்டை சமூகமாக இருந்த மனிதன் உற்பத்தி சமூகமாக மாறியதும், வேளாண்மை உற்பத்திக்கு பயன்படுத்த முடியும் என கணித்த விலங்குகளை காட்டுக்குளே தேர்வு செய்தான். அவை நாய் (ஓநாய்), மாடு (காட்டு மாடு), புள்ளி மான், (சருகு மான், சம்பார் மான், கவுரி மான்), கோழி (கானக்கோழி) முதலியன. மனிதன் வேளாண்மைக்கு தகுந்தது என பலநூறாண்டுகள் ஆய்வில் தேர்தெடுத்த விலங்குகள் மீது தான், வளர்ந்த சமூகம் எனச் சொல்லிக்கொள்ளும் நாம் தொடர்ந்து தனது ஆளுமை என்ற பெயரில் தாக்குதல் நடத்துகிறோம். (அடைப்புக்குள் இருக்கும் விலங்குகள் மனிதன் அன்பிற்கு கட்டுபடாதவை) பண்டை சமூகம் கண்டெடுத்தை போல் ஏதாவது ஒரு விலங்கையாவது வளர்ந்த சமூகமான இன்று அறிமுகம் செய்யவில்லையே.

வேட்டையாட ஓடி திரிந்த சமூகம் இன்று குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டாலும் பரவயில்லை நோயாளி சமூகமாக மாற்றி விட்டனர். பசுவதை என்பது நேற்று இன்றல்ல பல்நெடுங்காலமாக செய்த முயற்சியால் இன்று வெற்றி பெற்றுள்ளார்கள். மாடு விசயத்தில் சனதானவாதிகள் தொடர்ந்து முயற்சித்து வருவார்கள், வந்தார்கள் அதனால் வெற்றி பெற்றார்கள்.

 

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...