Search This Blog

Thursday, 28 March 2019

பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் சுளுந்தீ (sulunthee novel - tamil)

   
பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் சுளுந்தீ (sulunthee novel - tamil)   
         
                                        (French Institute of Pondicherry (IFP)
           பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் எனது கதையான சுளுந்தீயை 28.02.2019 அன்று மாலையில் அதன் நிறுவன ஆய்வாளர்கள் (post p.h.d and p.h.d RESEARCHER) விமர்ச்சித்து பேசினார்கள். 
                                 

      
                 தேனி மாவட்டம் ஆண்டிபட்டியிலிருந்து சென்ற என்னை அந் நிறுவனத்தின் ஆய்வர் முனைவர் திரு. பகதிசிங் அவர்கள் பாண்டிச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து அழைத்துச்சென்று அந்நிறுவனத்தின் மூத்த ஆய்வர் திரு. கண்ணன் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் என்னிடம் போனில் பேசியிருந்ததால் என்னவோ நெருங்கிய நண்பர் போலேவே உரையாடினார். நூலில் உள்ள தரவுகள் குறித்து ''எத்தனை ஆண்டுகள் தேடினீர்கள், அனைத்தும் புதிய செய்திகள், அதற்காக தேடிய தரவு, தர்கத்திற்காக எடுத்துக்கொண்ட சான்றுகளுக்காக எடுத்துக்கொண்ட காலம் எத்தனை ஆண்டுகள்'' என்ற கேள்வியை பல முறை கேட்டார். நூலில் ஆறு இடங்களில் தொடர்பு இல்லாமல் இருப்பதாகச் சுட்டிக்காட்டியவர் ''பத்தாண்டுகளுக்கு மேல் ஜூனியர் விகடனில் வேலை பார்த்தும் இந்த பிழை வந்தது ஏற்புடையது அல்ல'' என கடுமையாக விமர்சித்தவர், இக்குறைகள் ஏற்புடையதான் என்றது, எனக்கு நிறைவைத் தந்தது. மலை ஐந்து மணிக்கு ஆய்வாளர்கள் 28 பேர் கூடிருந்தார்கள். அதில் ஆறு பேர் பிராஞ்ச் நாட்டைச்சேர்ந்த ஆய்வாளர்கள். சுளுந்தீ கதைக்கான விமர்சன கூட்டம் துவங்கியது. 
               அறிமுக உரையாக ஆய்வர் திரு. கண்ணன் அவர்கள் பேசி என்னை அறிமுகம் செய்து வைத்து நூல் குறித்து பேசினார். ''இந்த நூலில் வந்துள்ள சமூக தரவுகள் அனைத்தும் இன்று சமூகத்தில் அடிதட்டு மக்களாக கருதப்படும் மக்களின் வாழ்வியல் கதையின் காலமான 18ஆம் நூற்றாண்டில் எப்படி இருந்திருக்கும் என்பதை பல்நெடுகாலமாக ஆய்வு செய்து எழுதப்பட்டது. அவரைப் பாராட்டலாம்'' எனப்பேசி என்னைப்பேசிட அழைத்தார். 
                  நூலில் உள்ள தரவுகள் நூலில் உள்ள வெங்கம்பயள் என்ற சொல்லுக்கு நான் சுட்டிக்காட்டிய சேர நாட்டில் உள்ள தரவும், கொடைக்கானல் என்பது சரியாக இருக்காது. கோதை என்பதை ஆங்கிலத்தில் எழுதினாலும் கோடை அல்லது கொடை என எழுதினாலும் ஒரு போலவே இருக்கும். கொடைக்கானலில் உள்ள பழையான கிராமங்களில் சேர மரப்பிற்குறிய வெங்கமேடு உள்ளது. ஊரில் நுழைவுவாயில் சேர மண்ணிற்குறிய தன்மையை இன்னும் இழக்காமல் உள்ளது. தமிழ், தெலுங்கு கன்னட மக்களுக்கும் எளிய எடுத்துக்காட்டு தமிழ் குலத்தினர் காது வளர்ப்பார்கள் வடுக மக்கள் காது வளர்க்க மாட்டார்கள். சுளுந்து மரத்தில் பச்சை குச்சியில் தீ பற்றவைத்தால் மழையிலும் அணையாது இப்படியான கதையில் உள்ளவை குறித்த சான்றுகளை எடுத்து வைத்தேன். சுமார் 2.30 நிமிடம் பேசினேன்.                                                                                 
                                                              
      எனது கதையை 13 ஆய்வாளர்கள் படித்து விமர்சனம் செய்வதாக சொல்லியிருந்தார்கள். யாரும் விமர்சிக்கவில்லை. முனைவர் திரு. பகத்சிங், முனைவர் திரு.கண்ணன் இருவரும் ''கதையின் கதாநாயகனான நாவிதன் ராமனின் மகனான நாவிதன் மாடன், கலகக்காரனாக மாறுவதற்கு இன்னும் 'பல'மான காரணம் சொல்லியிருக்கலாம்'' என்ற விமர்சனத்தை வைத்தார்கள். மற்றவர்கள் கதை களத்தில் தரவுகள் சேகரிக்க சென்ற போது மக்களின் ஒத்துழைப்பு, நடந்து கொண்ட விதம் எப்படி இருந்தது, களத்தில் ஏற்பட்ட சிரமம் குறித்தே வினாவி எனது பதிலை பெற்றவர்கள் 
         'கதை குறித்து எதிர் விமர்சனம் இல்லை, கதையில் வரும் சமூக, வரலாற்று தரவுகளைச் சொல்லிப் பாராட்டினார்கள். நானே நன்றி கூறிட நிகழ்ச்சி முடிவடைந்தது. திரு. கண்ணன் அவர்கள் 'சுளுந்தீ கதை என்பதை விட மிகச்சிறப்பாக சமூக வரலாறு. கதையில் சுட்டிக்காட்டிய சிறுகுறைகளை உடனடியாக திருத்துவோம் எனது வீட்டில் தங்குங்கள்'' என அன்பு காட்டினார். அவரின் மனைவியாரும் ''எங்கள் வீட்டில் தங்குங்கள் சார் கூட வாங்க' என அன்பாகச் சொன்னது பெருமையாக இருந்தது. அவர்களிடம் 15நாள் கழித்து வருவதாக சொல்லி விட்டு கிளம்பினேன்.முனைவர் திரு. பகத்சிங் அவர்கள் இரவு உணவு வழங்கி, பாண்டிச்சேரியிலிருந்து மதுரைக்கு பேருந்தில் செல்ல உடனடியாக ஏற்பாடு செய்து உதவினார்என்னை அழைத்து அன்பு செழுத்தி, பெருமைப்படுத்திய பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவன ஆய்வுப்பணியாளர் அனைவருக்கும் மிக்க நன்றி.

2 comments:

  1. எழுத்து நடை நன்று மாமா.

    ReplyDelete
  2. விகடனின் சிறந்த நூலாக தேர்வானதிற்கும் & மேன்மேலும் சிறந்த படைப்புகளை படைப்பதற்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

  நூலதிகாரம் நூல் முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு ஆசிரியர் ; தி. சுப்பிரமணியன் வெளியீடு ; அடையாளம்   ‘முந்தி பிறந்தவன் நா...