சோழ வரலாறுகள் எழுதப்படவேண்டும்
கஜினி
முகமதுவின்வடக்குப் பிரதேச தொடர் படையெடுப்புகளின்
காலகட்டத்தில்தான் ராஜேந்திர சோழனின் கங்கைப்படையெடுப்பும் நடந்தது .அப்போது
கத்தியவாரை (குஜராத்) ஆண்டு வந்த சோலங்கி
மீது
கஜினி
முகமது
படையெடுத்த
அதே
கால
கட்டத்தில்
தான்,
தெற்கே
சோழ
நாட்டிலிருந்து
இராசேந்திர
சோழன்
வங்காளத்தின்
மீது
படையெடுத்தார்
.
இது
குறித்து ஒரு விரிவான விவாதம்
சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் பொன்னியின் செல்வன்
எனும் மடலாடல் குழுவில் நடைபெற்றது
நினைவிருக்கிறது .
நமது
வரலாறு இன்றுவரை சரியான முறையில் ஆதாரத்துடன்
நிறுவப்படவில்லை என்ற ஆதங்கம் பலருக்கும்
உண்டு .
கி.பி 1019'ல் இராஜேந்திரனின்
படை கங்கையை நோக்கி தனது
படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரிக் கரையில் இராஜேந்திர சோழன்
கங்கை நோக்கிய தன் படைகளின்
படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றார் எனக்கூறப்பட்டது .ஆனால் தற்போது அவர்கோதாவரிக் கரையின் வடக்குப்பகுத்திக்கும் சென்று போரிட்டது
இப்போது லண்டனில் கிடைத்த சில ஆவணங்கள்
மூலம் வந்துள்ளது .
கங்கைகொண்ட
சோழன், கங்கைகொண்ட சோழீச்சரம், கங்கைகொண்ட சோழபுரம் இவைகள் குறித்து முழுமையான
ஆய்வு நூல் ஒன்றை எழுதி
முடித்திருக்கிறார் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன். இதற்காக மலேசியா, இலங்கை,
இந்தோனேசியா, கம்போடியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றவருக்கு, லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில்
2 அரிய ஒளிப்படங்கள் கிடைத்தன.இதைப்பற்றிய
கட்டுரை ஒன்று இன்றைய தமிழ்
இந்துவில் வெளிவந்துள்ளது .அதை நண்பர்களின் வாசிப்பிற்கு நன்றியுடன் பகிர்கிறேன் .அண்ணாமலை சுகுமாரன்
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:
-குள. சண்முகசுந்தரம்
ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:
-குள. சண்முகசுந்தரம்
முதலாம்
ராஜேந்திர சோழன் வங்காள படையெடுப்பின்போது
கோதாவரி ஆற்றின் தென்கரை யோடு
திரும்பிவிட்டான் என்பதே இதுநாள் வரை
வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று. ஆனால், வட
கரைக்கும் சென்று போரிட்டான் என்பதற்கான
ஆவணம் தற்போது லண்டனில் உள்ள
பிரிட்டிஷ் நூலகத்தில் கிடைத்திருக்கிறது.
கங்கைகொண்ட
சோழன், கங்கைகொண்ட சோழீச்சரம், கங்கைகொண்ட சோழபுரம் இவை கள் குறித்து
முழுமையான ஆய்வு நூல் ஒன்றை
எழுதி முடித்திருக் கிறார் வரலாற்று ஆய்வாளர்
குடவாயில் பாலசுப்ரமணியன். இதற்காக மலேசியா, இலங்கை,
இந்தோனேசியா, கம்போடியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக் குச் சென்றவருக்கு, லண்டனில்
உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் 2 அரிய ஒளிப்படங்கள் கிடைத்தன.
அதுகுறித்த
விவரங்களை ‘தி இந்து’விடம்
பகிர்ந்து கொண்ட குடவாயில் பாலசுப்ரமணியன்
கூறியதாவது:
ராஜேந்திரனின்
படைகள் வங்கப் போரை வெற்றிகரமாக
முடித்துவிட்டு, அதன் அடையாளமாக கங்கை
நீரை எடுத்துக்கொண்டு கோதாவரி நதிக்கரைக்கு வந்தன.
தனது படைகளை அங்கிருந்து வரவேற்ற
ராஜேந்திரன், அவர்களை அழைத்துக்கொண்டு தற்போது
ஒடிசா என்று அழைக்கப்படும் ‘ஒட்டர
தேயம்’ மீது படையெடுத்து அங்கிருந்த
மன்னர்களையும் வீழ்த்தினான்.
இதனை
ஒடிசா மாநிலம் மகேந்திரகிரி மலை
மீது அமைந்துள்ள யுதிஷ்டிரர் மற்றும் குந்திதேவி கோயில்களில்
உள்ள கல்வெட்டுச் சான்றுகள் மெய்பிக்கின்றன. யுதிஷ்டிரர் கோயில் கருவறையின் நிலைவாயிலுக்கு
மேலாகக் காணப்படும் கல்வெட்டில் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பதிவுகள் உள்ளன. அதில், ‘ராஜேந்திர
சோழன் தன்னுடைய தோள் வலிமையால் விமலாதித்தனையும்,
மலைநாட்டு அரசர்களையும், கலிங்க அரசனையும் வென்று
மகேந்திரமலை உச்சியில் விஜயஸ்தம்பத்தை நாட்டினான்’ என்று குறிப்பு உள்ளது.
இக்கல்வெட்டுக்குக் கீழே, வரை கோட்டு
வடிவில், அமர்ந்த நிலையில் புலியின்
ஊருவமும் 2 மீன்களின் உருவங்களும் சோழர் இலச்சினையாகக் காணப்பெறுகின்றன.
அருகில்
உள்ள குந்தி கோயில் வளாகத்தில்
மூன்று நான்கு துண்டு களாகக்
கிடக்கும் கல்வெட்டில், மகேந்திர கிரியில் விஜயஸ்தம்பம் நாட்டிய குறிப்பும், ஒடிசா
மன்னனின் பட்டத்து யானையைக் கொன்ற ராஜேந்திரனின் தலைமை
தளபதி (மகாநாயகன்) ராஜேந்திர சோழ பல்லவரையனான ராஜராஜ
மாராயன் என்பானுக்கு மகேந்திர கிரீஸ்வரத்தில் வீர அங்குசம் பரிசாக
அளிக்கப்பெற்றதும், ‘விட்டி வீரண மல்லன்’
என்ற விருது அளிக்கப்பெற்றதும் குறிப்புகளாகக்
காணப்படுகின்றன.
இந்தத் தகவல்கள் எதுவும் நம் வசம் இல்லை. ஆனால், பிரிட்டிஷ் நூலகத்தில் ‘இந்தியன் கலெக் ஷன்ஸ்’ என்ற பிரிவில் இந்தத் தகவல்களை ஒளிப்பட ஆவணங்களாக வைத்திருக்கிறார்கள். இந்த ஆவணத்தின் மூலம், ராஜேந்திரன் கோதாவரி ஆற்றின் தென் கரையோடு திரும்பவில்லை; வடகரைக்கும் சென்று போரிட்டான் என்பது உறுதியாகிறது.நூலகத்தில் இன்னொரு முக்கியமான ஒளிப்படத்தையும் பார்த்தேன்.ராஜேந்திரன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் சிவன் கோயிலின் கிழக்கு இரண்டாவது கோபுரம் தற்போது மொட்டைக் கோபுரமாக உள்ளது. ஆனால், 19-ம் நூற்றாண்டில் இது மூன்று நிலைகளைக்கொண்ட முழுமை பெற்ற கோபுரமாக இருந்துள்ளது. இதன் அரிய ஒளிப்படமும் அருங்காட்சியகத்தில் எனக்குக் கிடைத்தது. இந்த ஒளிப்படங்களை பிரிட்டிஷ் நூலகத்தின் சிறப்பு அனுமதியுடன் நகல் எடுத்து வந் துள்ளேன். இவ்வாறு குடவாயில் பாலசுப்ரமணியன் கூறினார்.
No comments:
Post a Comment