Search This Blog

Friday 19 June 2020

பூமி போர்




                                                                  பூமி போர்
                                                             ******************



நிலத்தின் மீதன போர் ஆண்டாண்டு காலமாக நடந்தே வருகிறது. இதன் வடிவம் காலம் தோறும் மாறிக்கொண்டே இருக்கும். தற்போது சுகாதாரம் என்ற போர்வையில் உலகளவிய யுத்தத்தை சத்தமில்லாமல் மக்கள் ஒத்துழைப்போடு இரத்தமின்றி நடத்தி வருகிறார்கள்.


12ம் நூற்றாண்டில் இந்திய ஒன்றியத்தில் உள்ள நர்மதை ஆற்றங்கரைக்கு வட தெற்கு பகுதியில் பெரும்பான்மையாக உழுகுடி சமூதாயமான *தாகூர் மற்றும் இராசபுத்திர* குலத்தினர் வாழ்ந்துள்ளனர். தற்போதும் அவர்களே வாழ்கிறார்கள். அப்போது அங்கு சிறு சிறு குழுக்களாக இசுலாமிய ஆட்சியாளர்கள் ஆண்டனர். இங்கு நிலங்கள் அனைத்தும் அரசுடமையாக இருந்தது. தாகூர் குலத்தினரிடம் இருந்த நில குத்தகயை பறித்து இராசபுத்திரர்களிடம் மாற்றுவார்கள். இதே போல் இராசபுத்திரர்களிடமிருந்து தாகூர் குழுக்களுக்கு மாற்றுவார்கள். இதனால் இருகுழுக்களுக்கு இடையே சண்டை போராக மாறி இருகுழுக்களும் வெட்டி செத்தார்கள். ஒரு கட்டத்தில் இரு குலத்தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தில் ஒன்று கூடினார்கள். நிலகுத்தகையை மாற்றம் செய்திடும் போது ஆயிரம் ஐநூறு பேர் மொத்தமாக சேர்ந்து ஈட்டி கத்தி கம்புகளைக் கொண்டு ஆளும் அரசு மீது போர் தொடுத்துள்ளனர். இந்தப் பூமிப்போரின் விளைவுதான் பிரிட்டீசார் கொண்டு வந்த இரயத்வாரி மாண்டேசு திருத்த சட்டம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.


விஜயநகரம் தமிழகத்தில் கால்லூன்றிய காலத்தில் இது போன்ற பூமி போர் உழுகுடிகள் நிகழ்த்தினார்கள். இந்த போரினைச் சமாளிக்க விஜயநகரத்திலிருந்து வந்த மக்களுக்காக தமிழகத்தில் இருந்த காடுமலைகளிய அழித்து குடியேற்றம் நடந்தது. தற்போது மறந்த பூமி போரினைத் சாலை வழியாக, சுகாதாரம் என்ற போர்வையில் தனிமனிதன் உயிரை காப்பதாக துவக்கி வைத்துள்ளது ஆளும் அரசு. இது உலகளவிய நாடகம் யாருக்காக என்றால் இந்த பூமியை சொந்தம் கொண்டாட முதலாளிகள் போடும் கணக்கு என்கிறார்கள். இந்த கணக்கு வெளியே தெரியாமல் இருக்கவே பல வழிகளில் நம்மை திசைமாற்றுவார்கள்.


வளர்ச்சியின் அடிப்படை சாலைகள் தேவைதானே. ? பொதுவான கேள்வி. (அஞ்சாறு காசு சேந்தவுடன் கார் வாங்கிய புதுப்பணக்காரனுக்கு இந்த கேள்வி பொசுகின்ணு வரும் பாறேன் அவனுங்க பேச்சுக்கு பதில் சொன்னால் நம்மள காதக்கருபிடுவாங்க)


இந்திய துணைக்கண்டத்தில் என்னென்ன உற்பத்திகள் செய்யப்படுகிறது. இறக்குமதி ஏற்றுமதி என்னென்ன. இதன் தேவைகள் என்னபதை வைத்தே சாலைகளின் தேவை அல்லது மேம்பாடு குறித்து அளவிடப்படுகிறது. உற்பத்தி செய்ய முடியாத இடத்திற்கு உற்பத்தி செய்திடும் இடத்திலிருந்து முதல் தர உற்பத்தியான உணவு, இரண்டாம் தர உற்பதியான ஆடை, அதன் பின்பு மூன்றாம் தேவையான ஆபரணங்கள் கொண்டு செல்லப்படுவது மனித குலம் தோன்றிய காலம் தொட்டு நடந்தேறி வருகிறது. எடுத்துக்காட்டாக சொன்னால் சீனாவில் உற்பத்தியாகும் பாக்சைட், கெந்தகம், வெடியுப்பு, பூதம் என்ற பாதரசம் இவைகள் இந்தியாவிற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் அதே போல் எரிபொருள், உணவு. இதற்கு தான் கடல் மார்க்கம் ஆகாய மார்க்கம் சாலை மார்கமாக பொருள்களை கொண்டு செல்ல மேம்பாடு தேவைப்படுகிறது.


சில ஆண்டுகளாக மத்திய இந்தியாவிலும் தென் இந்தியாவிலும் பருத்தி உற்பத்தி 30 விழுக்காடு வரை சரிந்துள்ளது என்பதை மைய அரசின் வருடாந்தர புள்ளி விபர அறிக்கை சொல்லுகிறது. அடுத்து மைய இந்தியாவில் பெரும்பான்மை உணவு உற்பத்தியான கோதுமை, பருப்பு நல்ல விளைச்சல் கண்டுள்ளது. மய்ய, மாநில அரசுகளின் சேமிப்பு கிடங்குகளில் இதன் இருப்பு இன்னும் ஐந்தாண்டுகளுக்கு போதுமான அளவுக்கு உள்ளதாகவே ஸ்டாக் ரிப்போர்ட் சொல்லுகிறது. அடுத்து உணவின் இரண்டாம் தர தேவையாகக் கணக்கிடப்படும் சக்கரை தேவையான உற்பத்தி இருந்தாலும் காட் ஒப்பந்த அடிப்படையில் இறக்குமதி செய்ய வேண்டிய நிர்பந்தத்தால் உள்நாட்டு உற்பத்தி தேக்க நிலை ஏற்பட்டது. (இதே போல்தான் அரிசு கோதுமை பருப்பு வகைகளும் இறக்குமதி ஏற்றுமதி செய்தாக வேண்டும் இது தான் காட்) இதனால் கரும்பு பயிரிட்ட உழுகுடிகளுக்கு நிலுவை தொகை சிக்கலை உருவாக்கி அவர்களை வேறு வேளாண்மை உற்பத்திக்கு அரசே மடை மாற்றம் செய்தது.


இரண்டாம்தர உணவு எண்ணை என கணக்கிட்டுள்ளார்கள். இதன் உற்பத்தியில் வட கிழக்கு இந்தியாவில் போதுமான கடலை, தக்காணத்தில் எள் விளைந்தது. இதற்கு விலை கிடைக்கக்கூடாது என்பதை விட உலக முதலாளிகளின் மருந்துகளை மானுட சமுத்திரத்தில் விற்று பிழைக்க இந்தியவை ஆளும் காட் முதலாளித்துவ அரசுகள் நஞ்சுகளான உணவு? எண்ணைகளை அனுமதித்தது. அதன் துவக்கம் இருபது ஆண்டுகளுக்கு முன்பே துவக்கப்பட்டு இன்று வெற்றிகரமாக விண்ணில் பறகிறது. பெட்ரோலின் உபரி உற்பதியான எண்ணையிலிருந்து எண்ணைகள் தயாரிக்கப்படுகிறது. (இது குறித்து பல செய்திகள் வந்து விட்டன) உற்பத்தியில்லாமலே எண்ணையா? ஆம். என்ன வகை எண்ணை தேவையோ அதற்கேற்றால் போல் வாசனை திரவியத்தை உற்றி அதை விற்பனை செய்கிறார்கள்.

'உனது ஆரோகியத்திற்கு நான் பொறுப்பு'' என பிரதமராக இருப்பவர்களே புழுத்துப்போன யோகா மூலம் கொழுப்பை கரைக்க பிரச்சாரம் செய்கிறார்கள். கடுகு, பனை எண்ணைகள் உடலுக்கு 100% கெடுதி என, இத்துப்போன உலக சுகதார மையம் கூட 13 ஆண்டுகளுக்கு முன்பு அறிக்கை கொடுத்தது. அதையும் மீறி ''நாங்கள் கொழுப்பு இல்லாத எண்ணை தருகிறோம்'' என அடிமுட்டாலான படித்த சமூகத்தை நம்ப வைத்து படிக்காமல் நல்லா இருந்த உழுகுடிகள் மீதும் இவர்களின் அடிமுட்டால் தனத்தை ஏவி உழுகுடிகளையும் உழைப்பாளிகளையும் நோயாளியாக்கி விட்டார்கள்.


மலேயா நாட்டில் பெரும்முதலாளிகள் கையில் உள்ள நிலத்தில் பல லட்சம் ஹெக்டர் நிலத்தில் பயிரிடப்பட்ட இரப்பர் காபி இவைகள் அழிக்கப்பட்டது. அதில் என்ன செய்வது என யோசித்தவர்கள் உலக முதலாளிகளை கைக்குள் போட்டு கொண்ட அந்த முதலாளிகள் கொன்றைபனைமரங்கள் நடவு செய்தார்கள். இம் மரத்தின்பழத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணையே பாம் (palm) எண்னை. ''இவ் எண்னை உடல் நலத்திற்கு முழு கேடானது. கடுகு எண்ணையை விட கேடானது'' என ஆய்வறிக்கை சொல்கிறது. அப்படியிருந்தும் எதற்காக இந்திய ஒன்றியம் அனுமதிக்கிறது.  IMA டாக்டர்கள் கையாப்பம் இட்டால் தான் இந்த எண்ணையை விற்பனை செய்ய முடியும். இவர்கள் தங்களது Ethicசை மறந்து, மறைத்து கையப்பமிடுகிறார்கள்.


பிரிட்டீஷ் ஆட்சியில் உலகத்தின் உற்பத்தி கேந்திரமாக இந்திய ஒன்றியத்தை ஆக்கினார்கள். அதனால் தான் எள் விளைந்த இடத்தில் நெல்லும் தென்னையும் விளைவைத்தார்கள். எள்ளிற்கு பதிலாக மணிலாவிலிருந்து கடலை கொண்டு வந்து நமது வேளாண்மையை மாற்றியதுடன் உணவு சங்கிலியை உடைத்தார்கள். நல்லெண்ணை என்பது என்ன ? என கேட்டும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். உலகத்தின் தேவைக்கும் சக்கரையையும் பருத்தியையும் இந்தியாவில் உற்பத்தி செய்ததன் விளைவாக  நமது உணவு தேவை என்ன என்பது என்ன என்பதை தீர்மானிகிற பொறுப்பினை உலக சுகாதர மையத்திடம் ஒப்படை செய்து விட்டோம். பிரிட்டீசுக்காரர்கள் கொண்டு வந்த கடலை எண்ணையை பிரிட்டீசுகார்கள் வாழும் இங்கிலாந்து தடையுள்ளது என்பதை நாம் மறந்து விட்டோம்.


உற்பத்தி இல்லாமல் காட் ஒப்பந்த இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் குழாய் மூலம் எண்ணைகள் கொண்டு செல்லப்படுகிறது, கொண்டு வரப்படுகிறது. தொடர் வண்டிகள் மூலம் சரக்கு எளிதாகவும் கட்டணக்குறைவாகவும் கொண்டு செல்ல முடிகிறது. அப்படி இருக்க இந்த சாலை விரிவாக்க திட்டத்தின் இலக்கு என்ன ?.


பிரிட்டீசு இந்தியாவில் வி. பில் என்ற புவியியல் நிபுனரால் எழுதப்பட்ட 'எக்கானிமி ஆப் இந்தியா' என்ற நூலிலை கையில் எடுத்துள்ளது உலக வங்கி (இது உலக முதலாளிகளாக இயக்கப்படும் தனியார் வங்கி). அந்த நூலில் தக்காணம் முழுக்க வைரம் வைடூரியம், மரகதம், வெள்ளை நிற சலவைக்கல், சுண்ணாம்புக்கல் உள்ளது என குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. இதே போல் மதுரை, சேலம், திண்டுக்கல் ரங்கமலை பகுதியில் உள்ள கனிமங்களை சுரண்டலுக்குதான் இந்தியாவை ஆளும் காட் ஒப்பந்த அரசுகள் ஒற்றை பாதையிலிருந்து எட்டுப்பாதையாக மாற்றுகிறது. அதே போல் உலத்தின் உள்ளாடை தேவைக்கு தமிழகத்தில் உள்ள திருப்பூர் தான் உற்பத்தி மையம். இதனால் ஏற்படும் கடும் கழிவுக்கேடு இன்னும் அதிகரிக்கும். இதன் எதிர்ப்புகளை முறியடிக்க பல வகையில் திட்டமிட்டு தற்போது சுகாதாரம் என்ற போர்வையில் களமாடுகிறார்கள்.  


வி. பில் தனது குறிப்பில் இந்தியாவில் இருப்பு பாதை (ரயில்வே) போடப்பட்டதால் உணவு மற்றும் இரண்டாம் தர சமூக தேவைப் பொருள்கள் விலை இந்திய ஒன்றியம் முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளது. இருந்தாலும் ஜபல்பூர் , காந்த மலைப்பகுதியில் இரும்புகாக தாது வெட்டி எடுத்தால் சுற்றுச்சூழல் கெட்டு விடும் என இவரின் அறிவுரையை ஏற்ற பிரிட்டீஷ் அரசு கூட இரும்பு தாதுவை வெட்டி எடுப்பதை நிறுத்தியது.

பம்மாத்து ஆங்கிலேய அரசுக்கு இருந்த அக்கரை கூட சுதேதி பித்தால்லாடம் பேசும் காட் முதலாளி அரசுகளுக்கு இல்லையே.

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...