*கரமிதா*
**************
**************
இஸ்லாத்தில் பத்தாம் நூற்றண்டில்
கரமிதா என்ற இறை மறுப்பாளா்கள் இருந்தாா்கள். அவா்கள் சிந்து மற்றும்
ஆப்கானை ஒட்டியுள்ள பஞ்சாப்பிலும் வாழ்தாா்கள். இறைவன் இல்லை எனப்
பரப்புரை செய்து வந்தார்கள். இவர்கள் கருத்துக்கு மக்கள் ஆதரவு இருந்ததால்
*ஹஜருல் அஸ்வத்* என்ற பிஸ்லாத்தின் நம்பிக்கையான கருப்புக் கல்லை
தூக்கி 'எங்கடா இருக்கான் *அபாபீல்கள்* என மலையில் தூக்கி
வீசியுள்ளாா்கள். இருபது ஆண்கள் கரமிதா பிடியில் ஆட்சி இருந்துள்ளது.
அப்போது மக்காவில் கபத்துல்லாவின்
திரைச் சீலை கிழித்து கதவுகளை உடைத்தனர். தற்போது சாத்தான் இருப்பதாக கல்
கொண்டு எறிகிறார்களே அதைத்தான் தூக்கி மலையிலிருந்து
வீசினார்கள். சில காலம் கரமிதாக்களின் ஆட்சி குழு குழுவாக நடந்தது.
மன்னராக பதவி ஏற்ற கஜினி அவர்கள் இந்தக் கரமிதாக்களை ஓடுக்கி
விரட்டினார். கரமிதாக்களின் வழுவிழந்ததால் சிந்து நதிக்கரையில் ஆண்ட பாா்ப்பன மன்னன் *அனந்பால்* ஆதரவினால் இவர்கள் சிந்துவில் அடைக்கலம் புகுந்தார்கள். சிந்துவில் இருந்தபடியே இறைமறுப்பை பரப்பினாா்கள். இவா்கள்
பரப்புரைக்கு சோமதாதபுர சிவ ஆலயத்தின் நிதி பயன்படுத்தப்பட்டது. இந்த நிதியை வைத்து படை திரட்டினார்கள் கரமிதாக்கள். இது அறிந்த மன்னர் கஜினி படையெடுத்து வந்து சோமநாத சிவ ஆலயத்தின் மீது தாக்குதல்
நடத்தினார்.
சான்று ; *இந்திவை ஆண்ட முஸ்லீம் மன்னா்கள்* ஆசிரியர் ; தாழை மதியவன் . தாழை பதிப்பகம்
சான்று ; *இந்திவை ஆண்ட முஸ்லீம் மன்னா்கள்* ஆசிரியர் ; தாழை மதியவன் . தாழை பதிப்பகம்
No comments:
Post a Comment