Search This Blog

Monday 17 June 2019

அரசியல்வாதிகாக வாழ்ந்து பாருங்கள் ,

                                                       எழுத்தாளர்களே
                             அரசியல்வாதிகாக வாழ்ந்து பாருங்கள் ,
                ************************************************************
''அரசியல் என்றாலே சாக்கடை, இதில் அரசியல் இருக்கிறது அரசியல் செய்கிறார்கள், அரசியலில் எல்லாம் சககசம், அரசியல்வாதியின்னா முன்னபின்ன இருப்பாங்க, அவர்களைக் கண்டும் காணாமல் போகனும்'' இப்படியாக அரசியலுக்கு அப்பாற்பட்டு நிற்பவர்களுடன் அரசியல் அமைப்பினரும் சேர்ந்து பேசத்துவங்கி பல்லாண்டுகளாகிவிட்டது. இதனால் அரசியல் என்பது திருட்டுதனத்திற்கு சொந்தமானது என்பதை மக்கள் உள்வாங்கி உலக மக்களின் வரலாறாகி, இன்று மரபுக்கூறுபோல் ஆகிவிட்டது. ஆனால் இந்தத்திருட்டு முதலாளித்துவத்தைக் கட்டிக்காக்க நம்முடன் வாழும், வாழ்ந்த அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் சகிப்பு தன்மையை கட்டிக்காத்தார்கள் என்பதே பொதுவாழ்வில் வாழும், வாழ்ந்த இந்த அரசியல்வாதிகளிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.
வளர்ந்த கட்சி என்றால் தலைவனை அவ்வளவு எளிதாக தொண்டர்கள் அனுகிட முடியாது. சாமானியத்தொண்டர்களுக்கு, ஒப்பந்தச்சாலை (பைபாஸ் ரோடு) முதலாளிகள் போல் அனுகுசாலை அமைத்துக்கொடுத்து அவர்களை அப்படியே ஓரம்கட்டி அரவணைத்துக் கொண்டுசெல்வார்கள். ஆனால் இதில் வளரும் கட்சியாக இருந்தால் இப்படி அனுகுசாலை அமைப்பது பெரும் சவாலானது. இருக்கும் இருந்தால் கட்சியின் பெரும்பான்மை தொண்டர்களாக இருப்பவர்கள் குடிகாரர்களாகவும் அல்லது குடிகார மனநிலயோடும், அப்பாவியாகவும் தலைவனுக்காக தன்னுரியை நீத்திட தயாரானவனாகவும் எளிதில் உணர்ச்சி பொங்க முடிவெடுப்பவனாகவும் இருப்பார்கள். இவர்களின் உணர்களை உள்வாங்கி அவர்களை அரவணைத்து அல்லது அரவணைப்பது போல் நடித்து அக்கூட்டத்தை கட்டிக்காத்து வளர்த்து அதை வாக்கு வங்கியாக்கிட எடுக்கும் முயற்சியிலே முழு சகிப்புத்தன்மையும் அவர்களின் வெற்றியும் இருக்கும். இதை நுட்பமாக நோக்கினால் மானகெட்ட பொழப்பாகவே புரிந்து கொள்ள முடியும். திராவிட இயக்கம் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் (the dravidiyan moment) எழுதிய பேராசியர் ஹார்டு கிராவேவ் (இவரது போஸ்ட் பி.ஹெச்.டியான நாடார் வரலாறு என்ற ஆய்வு, நூலாக தமிழிலும் வெளிவந்து. தற்போது பேராசியர் பக்தவச்சலப்பாரதி அவர்கள் அதை பிழையற்று மொழி பெயத்தும் புதிய பதிப்பு கண்டுள்ளது இந்தநூல்) அரசியல்வாதிகள் எப்படி தொண்டர்களை அனுகுகிறார்கள் என்பதை ஹார்டு கிராவேவ் திராவிட கழகத்தலைவர்களை ஒரு ஜாட்கா வண்டி ஓட்டுப்வரையும், உப்பு, கீரை விற்பவர்களையும் ஒப்பீடு செய்து அருமையாக விளக்கிச் சொல்லியிருப்பது திரு. விஜயகாந்த் அவர்களுக்கு இது தெரிந்திருந்தால் அவர் வெற்றி பெற்று இருப்பாரோ என்னவோ. ஹார்டு கிராவேவ்வின் ஆய்வின்படி துவாழ்வில் இருப்பவர்கள் பல இடங்களில் சுயமரியாதியயை இழக்கிறார்கள், அதை தாங்கிக்கொள்ளும் பக்குவத்தை மக்களிடமிருந்தே இந்தத் தலைவர்கள் பெற்றுள்ளார்கள் என்பதை விளக்குவார். 
இதே போல் பொதுமக்களை அன்றாட சந்தித்து அவர்களை இயக்குவதும் அவர்களால் இயங்கும் கடைநிலைப்பணியாளர்களான ஹோட்டல் சர்வர், பேரூந்து நடத்துனர், திருவிழாக்காலங்களில் கரகாட்டம், ராசாராணி ஆட்டம் ஆடுபவர்கள், இசைகலைஞர்கள், தற்போதைய நிலையிலிருந்து சொன்னால் கல்யாண வீட்டில் புகைபடம் எடுப்பவர்கள் இவர்களைப்போன்ற சேவைத்தொழில் செய்பவர்கள் அன்றாட அவர்கள் படும்பாட்டை கூர்ந்து பார்த்தால் மன அழுத்தற்கான (stress management) தீர்வை அவர்களிடமிருந்தே பெறலாம். ஆனால் இந்திய அரசும் முதலாளித்துவ சிந்தனையாளர்களும் கூட்டுச்சேர்ந்து சிரிப்புச்சிகிச்சை, மூச்சு பயிற்சி, தியானம் எனச்சொல்லி அதற்கும் புடை சிற்பங்களையும், கல்வெட்டுக் குறிப்புகளையும் எடுத்து நம்மை ஆட்டி வைக்கிறார்கள். இப்படி ஆட்டி வைப்பவர்களே ஆட்சியாளர்களாகவும் இருப்பதால் இடசாரி சிந்தனைகள் சமூகத்தில் இருக்கும் அடிப்படை நம்பிக்கையில் ஊடுருவி புதிய கோட்பாடு போல் நஞ்சை விதைக்கிறார்கள். இப்படிப்பட்ட நஞ்சர்களே சமூகத்தை குறைத்து மதிபிட்டு தங்கள் தற்போதுள்ள சமூகத்தை விட நாங்கள் மேம்பட்டவர்கள் எனக்காட்டியும் கொள்கிறார்கள் அல்லது சமூகத்தை கொல்கிறார்கள்.
சமூகத்தை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் அரசியல்வாதிகளைப்போல் குறைந்தபட்சம் கட்டுப்பட்டது போலாவது நடிக்கப் பழகவேண்டும். இல்லென்றால் சமூகத்தில் அறியப்படும் நபர்களான உங்களை இச்சமூகம் கட்டுப்படுத்தும் வேலையை செய்துவிடும் என்பதற்கு எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களின் செய்தியே சான்று. 
சமூகத்தில் அறியப்படும் நபர்கள் புகை, மது பழக்கத்தைக்கூட பொதுவெளியில் செய்திடும் போது அது பலவித சமூகப் பாதிப்புகளை விளைவிக்கும் என்பதற்கும் பல்லாயிரம் எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. தனி மனித ஒழுக்கத்திற்கு சட்டம் போட்டெல்லாம் தடுக்க இயலாது. இதற்கு மானுடத்தன்மையை வளர்த்துக்கொள்வதே சாலச்சிறந்தது. 
எனது வாழ்க்கையில் நடந்த இரண்டு பெரும் சம்பவங்களே இதற்குச்சான்று. 
சம்பவம் 01; 
நான் 1996 காலங்களில் தினமலரின் நிருபராக பணியாற்றிய போது தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் வேளாண்மை போல் பயிரிட்டிருந்த கஞ்சா செடிகளை மறைந்து இருந்து படங்களை எடுத்தேன். அதை 'அழிக்க முடியாத கஞ்சா மலை' என்ற வால்போஸ்டர் செய்தியாக தினமலர் நிறுவனம் வெளியிட்டது, இந்த செய்தியின் அடிப்படையில் போதை தடுப்புப்பிரிவு காவல்துறை, மய்ய அரசின் கஸ்டம்ஸ், உள்ளூர் காவல் துறை, வனத்துறை ஆகியோர் சுமார் ஒருமாத காலம் முகாம் அமைத்து கஞ்சாவை அழித்தார்கள். கஞ்சா பயிரிட்டிருந்த பலரும் அரசுத்துறையினருக்கு லஞ்சம் கொடுத்திருந்தனர். இருந்தபோதும் கஞ்சா அழிக்கப்பட்டு பலர் மீது வழக்கும் பாய்ந்தது. இதனால் மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள் பூச்சிக்கொள்ளி மருந்தைக் குடித்து உயிரை மாய்த்தார்கள். இதனால் வெகுண்ட வருசநாடு பகுதி மக்கள் கஞ்சா அழிப்பு மற்றும் உயிர் இழப்பிற்கு காரணம் நான் தான் எனக்கருதி என்னை கத்தியா குத்தித் தாக்கினார்கள். எனது டிவிஎஸ் 50 வண்டியை தீயிட்டு கொழுத்தினார்கள். சமூக அமைப்புமுறை அறிந்ததால் இது குறித்து நான் காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை என்பதை எனது நண்பர்கள் அறிவார்கள். 
சம்பவம் 2 // 2012ல் ஜூவியில் நிருபராக பணி செய்த போது திரு.டி.டிவி தினகரனை ஒ.பி.எஸ் தம்பியின் ஆதரவாளர்கள் செருப்பால் தாக்கினார்கள். இதை படம் பிடித்த போது எனது கேரமாவை பிடிங்கி நொறுக்கினார்கள் என்னையும் தாக்கினார்கள். இது குறித்தும் நான் புகார் செய்யவில்லை. புகார் செய்தால் என்ன நடந்து விடும் என்பதை அறிந்த நபர்கள் சாமானியர்கள் மீது புகார் கொடுக்கும் போது அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்ததால் நான் வழக்கு தொடுக்கவில்லை. மிகச்சாதரணமான ஆளான நானே பொதுமக்கள் மீது அக்கரையோடு செயல்படும் போது நாடறிந்த நபர்கள் 'நயத்தக்க நாகரீகமாக' நடந்து கொள்வதே சாலச்சிறந்தது.


No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...