Search This Blog

Friday 28 June 2019

திமுகவில் தங்கதமிழ் செல்வன் வரவும் அஇஅதிமுகவின் எதிர்காலமும்... ..




                           திமுகவில் தங்கதமிழ் செல்வன் வரவும் அஇஅதிமுகவின் எதிர்காலமும்...



அஇஅதிமுகவின் முன்னால் தேனி மாவட்ட செயலாளராக, மாநிலங்களவை உறுப்பினராக, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பிராக மும்முறை இருந்தவருமான  திரு.தங்கதமிழ்ச்செல்வனை அஇஅதிமுகவிற்குள், உள்ளே விடக்கூடாது என்பது அக்கட்சியின் கூட்டு முடிவு என்பதை விட மான்புமிகு துணைமுதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வத்தின் தனிப்பட்ட முடிவாகவே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. வேறு வழியின்றி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள திரு.தங்கதமிழ்ச்செல்வன் திமுகவிற்குள் புகுந்தார் என்பதாக தெரிகிறது. ஆனால் இதுவுண்மையில்லை என்பது கொங்கு நாட்டிலிருந்து வரும் தகவல்கள் மெய்ப்பிக்கிறது.

அஇஅதிமுக துவங்கிய காலம் முதல் அக்கட்சியிக்கு வாக்கு வங்கியைத் தொடர்ந்து தக்கவைத்துள்ள பகுதி கொங்கு மண்டலம் மட்டுமே. அப்பகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் அஇஅதிமுக வாக்கு விகிதாச்சாரத்தில் சரிவை துவங்கி, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இதன் சரிவு நன்றாகவே வெளிப்பட்டது. இந்த சரிவு அஇதிமுகவின் வீழ்ச்சி என்பதை விட திமுகவின் கொள்கை இறுக்கம் என்றே சொல்ல முடிகிறது. திமுக 1980முதல் சரிவை சந்தித்தது. திரு. ஸ்டாலின் அக்கட்சியின் பொருளாராக இருந்த பொது அவரின் தனிப்பட்ட நடவடிக்கை அல்லது கொள்ளை சமரசத்தால் திமுக மீது கடும் கோபமான பகுதிகளில் ஒன்றான கொங்கு மண்டலத்தை அசைத்து விட்டது என்றே அரசியல் நோக்கர்களின் பார்வையாக உள்ளது.  திரு. ஸ்டாலின் அவர்களின் செயல்பாடு என்பதை விட 1967 முன்பிருந்த நீதிகட்சி தலைவர்களின் நீக்குப்போக்கு நடவடிக்கை என்ற பார்வையாகவும் உள்ளதாகவும் பார்க்கிறார்கள். இதனால் முன்னால் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி போன்றவர்கள் திமுகவை விட்டு போனாலும் வந்த அவரை  மீண்டும் திமுக அரவணைத்து கொள்ளமுடிந்தது. 

இதே நிலைப்பட்டை மாநிலம் முழுவம் எடுக்க பலஅடித்தள வேலைகளை பெரும்முதலாளிகள் மூலமாக அரசர்கள் காலத்தைப்போல பட்டர்கள், குருக்கள் மூலமாக செய்து வந்தனர். இது பெரும் வெற்றியை திமுகவிற்கு நகர்த்தி கொடுத்துள்ளதாகத்தெரிகிறது. 

மதுரை மண்டலத்தைப்பொறுத்தவரை மறவர்கள் திமுவை தங்களது பரமஜூரியாகவே பார்க்க வைத்தது அவர்களின் கடந்த கால சட்ட திட்டங்களில், மய்யமானதான அனைவரும் அர்சகர் ஆகலாம், குல  + சாதி மறுப்பு அங்கீகார சட்டம், சமத்துவபுரம் இவைகளே. இந்த திட்டமும் பன்னாட்டு தாக்கத்தால் நீர்த்து விட்டது. இந்தப்பேச்சை கொள்கைவாதிகள் மட்டுமே பேசிக்கொள்கிறார்கள். இவர்களது பேச்சுகளும் பெரிதாக எடுபடாது என்பதை திமுகவின் தலைமை நன்கு அறிந்தே 'மக்களைத்ப்நாடி' திட்டத்தில் பல தரப்பான நெழிவுகளுடன் நடந்து கொண்டது அதன் தலைமை. 

ஊழலை பொறுத்தவரை மறைந்த பிரதமர் திருமதி இந்திராகாந்தி காலத்தில் பேசப்பட்டதை விட பன்மடங்கு பேசப்பட்ட ஊழல் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல். இந்தக்குற்றச்சாட்டில் உண்மை தன்மையை விட அதை பேசியவர்கள் இயக்கமாக கொண்டு சென்ற குறிப்பாக பொதுவுடமை இயக்கத்தாராலே அவ்வூழல் மக்களிடம் செல்லாக்காசானது என்பது அவர்களின் பேச்சு + எழுத்துக்களிலே தெளிவுபெறுகிறது. இனி வரும் காலங்களில் ஊழலை பற்றி யார் பேசினாலும் சிரிப்பாக பார்க்க ஒவ்வொரு தனிமனிதனையும் உருமாற்றி விட்டார்கள் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல்   குறித்து பேசியவர்கள். இதே போல் ஊழல் குற்றச்சாட்டு மெய்பிக்கப்பட்ட அஇஅதிமுகவின் தலைவியான மறைந்த செல்வி .ஜெயலலிதா மீது பத்திரிக்கைகளும் இதர அரசியல் கட்சி தலைவர்களும் கொண்டுள்ள அபிமானம் இந்தியாவில் எந்த கட்சி மீதும் ஏன் தனிநபர்கள் மீதும் ஊழல் குற்றச்சாடு சுமத்தினாலும் அடுத்த நொடியில் வேறு பேச்சு பேசவேண்டிய நிலையிலே பேசிவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால் திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எடுபடாத நிலையிலே உள்ளது.  

இதையெல்லாம் அறிந்து, தெளிந்த தொண்டு நிறுவனம் போல் செயல்படும் திமுகவின் தலைமை பலமான மாற்றுக்கட்சி தலைவர்களை வளைக்க பலவண்ணங்களில் செயல்பட்டு அடுத்த தேர்தலில் குறைந்த 200 ச.ம. உறுப்பினர் என்ற இலக்கை நோக்கி தனது பயணத்தை துவக்கி விட்டது. இப்பயணத்தை பெரும் கேடுகள் வந்து தடுத்தாலே தவிர மற்றவகையில் அதை நிறுத்த இயலாது என்று அடித்து சொல்லுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதன் நீட்சியாகவே திரு. தங்கத்தமிழ்செல்வன் திமுகவிற்கு போனார். திரு. செந்தில்பாலாஜிக்கு போலவே இவருக்கும் தேனி மாவட்ட செயலாளர் பதவி வழங்க இருக்கிறது என்று தெளிவாக விளக்குகிறார்கள் கட்சியின் உள்ளமைப்பிற்கு மூலையாக உள்ளவர்கள். 

அடுத்த இலக்கு திருநெல்வேலி, இராமநாதபுரச்சீமையும். அதற்கான பேச்சுவார்த்தைகள் ஒரு மடத்தின் தலைவர் மூலமாக அமெரிக்க நாட்டில் நடந்து முடிந்ததாம். இதன் வெளிப்பாடு மெல்ல மெல்ல வெளிவரலாம். 

அஇஅதிமுகவைப்பொறுத்தவரை முதலமைச்சரான திரு. பழனிச்சாமி கட்சியை தக்கவைக்க அவரது சாதிக்காரரும் சொந்தக்காரருமான ஒரு ஆளுனர் மற்றும் அட்ரணி சென்டல் மூலமாக நங்கூரமாக நிலைகொண்டுள்ளார். இவரது செல்வாக்கு கட்சியை தக்க வைக்க முடியுமா என இந்தியா அரசின் உளவு மற்றும் தொண்டு நிறுவன அரசியல் ஆய்வு நிறுவனங்கள் கொடுத்த ஆய்வறிக்கையில் முதல்வர் திரு. பழனிச்சாமிக்கு ஆரவாரமான மக்கள் பலமில்லை என்றாலும்  துணை முதல்வர்  திரு. ஓ. பன்னீசெல்வத்தை விட அதிகமாக இவருக்கு செல்வாக்கு இருப்பதாக தகவல் கொடுத்துள்ளார்கள். இந்த செல்வாக்கினை வைத்து  அவரை தொடர்ந்து ஆட்சியில் அமரவைத்து எம்.ஜி.ஆரின் இறுதி காலத்தில் மண்டைக்காட்டு கலவரம் மூலம் காலூண்றியது போல் மறுகாலூண்ற முடிவெடுத்துள்ளது ஆளும் பா.ஜ. இது எந்தளவுக்கு அவர்களுக்கு சாதகம் என்பதை விட அவர்களின் நோக்கு தமிழகத்தில் பண்பாட்டு தளத்தில் நுழைந்தால் தங்களது செல்வாக்கு அழிக்க முடியாத சக்தியாக அசுரபலத்துடன் நிலைத்திடும் என்ற கணக்கிலே கிராம பூசாரிகள் சங்கத்தில் துவங்கி, ஆருட மய்யங்களில் (ஜோசியம் சாதகம்) பெண்கள் அழகு நிலையம் வரை தங்களது கால்களை அகலப்பரப்புவதன் மூலம் இன்னும் பத்தாண்டுகளில் அவர்களின் இலக்கை எட்டி விடுவார்கள் என்பதை தெளிவுபடுகிறது. அப்போது அஇஅதிமுக என்ற அமைப்பை கபளிகரம் செய்வார்கள் என்பது அய்யமில்லை என்றே சொல்லுகிறார்கள் சமூகவரசியல் பார்வையாளர்கள். 

சேர் ஆட்டோவுக்கு அனுமதி மறுக்கும் அரசு தொலைகாட்சி நிறுவனம் நடத்த விண்ணப்பித்த மாயத்தில் ரிசர் வங்கியின் ஆலோசனையும் வங்கி கடனும் தனியார் முதலாளிகள் குறிப்பாக பண்யா +  பஜாஜ் குழுமத்தினர்கள் மூலம் குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதுடன் அவர்களின் நிறுவங்கள் விளம்பரமும் கொடுக்க 'கட்டாய'அறிவுரை வழங்கி வருகிறது ஆண்ட ஆளும் பா.ஜ. இதன் மூலம் நாடெங்கும் தங்களது கொள்கைகளை பண்பாட்டு தளத்தில் நிலைநிறுத்திடும் பணியில் வெற்றி கண்டுள்ளார்கள். இந்த வெற்றியை அரசியல் ரீதியாக தக்க வைக்க அவர்களுக்கு காலம் இடம் கொடுக்கும் என்பதில் கருத்து மாறுபாடு இருக்காது என விவாதிக்கிறார்கள் அரசியல் கள ஆய்வாளர்கள்.
இதைனை வைத்துப்பார்க்கும் போது திமுக என்ற அமைப்பு இருக்கும் ஆனால் அதுவும் 'நீர்கரைசலா'க தனது கொள்கைகளை அமுலாக்கம் செய்திடும் என்பதை வாக்கு அரசியலை நம்பியுள்ளவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.


      

      

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...