Search This Blog

Wednesday 12 June 2019

மன்னர் ஆட்சியில் நிலம் யாருக்கு சொந்தம்


                                           மன்னர் ஆட்சியில் நிலம் யாருக்கு சொந்தம்

                                          *****************************************+


திரைப்பட இயக்குனரும் குறிப்பாக பறையர் குலத்தினருக்கான குரலாக அறியப்படும் திரு. இரஞ்சித் அவர்கள் சோழ மன்னன் ராசராசன் காலத்தில் 'ஏழை எளிய மக்களை அல்லது பறையர் குலத்தினர் நிலங்களைப் பறித்து விட்டான். அக்காலத்திலே பெண்அடிமைத்தனம் இருந்தது' என  அவர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியதுடன் காவல் துறை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கூர்ந்து கவனிக்கத்தக்கது வழக்கு தொடுத்தவர்கள் சங்பரிவார்கள் என்பதே கவனப்படுகிறது.

முதலில் மன்னர் ஆட்சியில் நிலங்கள் மக்களுக்கானதாக இருந்ததா?

தமிழகத்தில் விஜயநகர ஆட்சி அமைவதற்கு முன்பே பாண்டிய மன்னர்கள் சோழர்களின் சம்மந்த வழி அரசாகிய வடவர் என்றும் வந்தேறிகள் என்றும் வசவுக்குள்ளாகும் ஹொய்சாளர் என்ற போசாள மன்னர்கள் உதவியுடனும், இலங்கை அரசர்களின் உதவியுடனும் சோழர்களை அழித்தொழிதார்கள்.  இது பொது ஆண்டு 13 - 14.5 வரை என கணக்கிடப்படுகிறது. அந்தக்காலகட்டத்தில் மதுரை, திருச்சி தற்போதைய புதுக்கோட்டை பகுதிகளில் தலைமையிடமாக கொண்டு பாண்டியர்கள் ஆட்சி செய்தார்கள். அப்போதே சோழர் ஆட்சி சிதறி விட்டது என்பது வரலாறு.  பாண்டியர்களுக்கு முன்பே சோழர்களை காடவர், ஹொய்சாளர் சிறிதளவு காக்கதேயர்கள் பிடித்து ஆண்டார்கள் என்பது வரலாறு. இந்த நிலையிலே பாண்டிய மன்னர்களின் வாரிசு சண்டையால் தில்லி சுல்தான் வரை பஞ்சாயத்து போய் அவர்களிடம் ஆட்சியை இழந்து அதை மீட்க விஜயநகரத்தார் காலில் விழுந்து அவர்களின் சூழ்ச்சியால் பாண்டியர் ஆட்சி தனக்கு தானே மூழ்கியது. 


பேராசிரியர்கள் சாதாசிவப்பண்டாரம், நீலகண்ட சாஸ்திரி, சாமிநாத சர்மா, சீனிவாச்சாரி கே.கே.பிள்ளை, பண்மொழிப்புலவர் அப்பாத்துரையார்,  டி.வி மகாலிங்கம், பேராசியர் வின்செண்ட் ஸ்மித், ஆய்வாளர் சார்லஸ் ஆலன் போன்ற போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் அறிஞர்கள் சோழர் வரலாற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்கள். இவர்கள் இருக்க கல்வெட்டு ஆய்வாளர்களான அறிஞர்களான இராமச்சந்திரன், சாந்தலிங்கம், நாகசாமி , தமிழ் இலக்கியத்துடன் வரலாற்றை பொறுத்தாய்வு செய்த பார்த்த தமிழண்ணல் வரிசையில் புலவர் பொ.வேலுச்சாமி, பா.ஜெயக்குமார் போன்றவர்கள் சோழர் கால சமூக வரலாற்றை செப்பனே எழுதியுள்ளார்கள்.

இவர்களின் நூல்களில் தனிப்பட்ட நபர்களுக்கு நிலம் இருந்தற்கான சான்றுகள் மிகக்குறைவாகவே குறிப்பிட்டுள்ளனர். காவிரி படுகையில் அமைந்த சோழ மணலம் முழுக்க முழுக்க காவிரி ஆற்றை வடகரை தென்கரையாகப்பிரித்தே நிலங்களில் உற்பத்தி செய்துள்ளதை குறிப்பிட்டுள்ளனர்இக்கரைகளில் வைணவத்தளங்களை விட சைவத்தளங்களுக்கே பிரம்மதேயம், சதுர்வேதி மங்கலம், மங்கலம், குடிமங்கலம், அக்ரகாரம், பிராமணச்சேரி என நிலங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலமும் அவர்களுக்கு நிரந்தரமாக வைக்க அனுமதியில்லை என்பதை கல்வெட்டுகளில் குறிப்பு உள்ளதை அறிஞர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். இந்த நிலங்களில் உழுதிடும் உழுகுடிகள் குத்தகை கொடுப்பதை வைத்தே நில உழவடை தீர்மானிக்கப்படுவதாக இருந்தது என்பதற்கு ''குடிநீக்கம், குடி மூழ்கி'' என்ற சொற்கள் இருந்தது என ஆய்வாளர்கள் விளம்புகிறார்கள்.  ஆக நிலங்கள் அனைத்தும் மன்னன் அல்லது பொதுவுடமை என்றே  சொல்லமுடியும் நிலையிலே நில உடமை அமைப்பு இருந்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது. இதனால் தான் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்த விஜயநகர ஆட்சியாளர்கள் முதன் முதலில் நிர்மானித்த பாளையப்பட்டு முறை தஞ்சை மண்டலத்தில் உருவாக்கவில்லை. காரணம் அங்கு ஏற்கனவே பாளையபட்டு தன்மையுடன் மடங்கள் குறிப்பாக சைவ மடங்கள் செயல்பட்டு வந்தன என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுக்காட்டுகிறார் புலவர் பொ.வேலுச்சாமி தனது நிலம் சாதி கோவில் நூலில். இவர்களைப்போலவே பிரெஞ்சு ஆய்வாளர் திரு. ஸ்டீபன் அவர்கள் தனது ஆய்வு கட்டுரைகள் பலவற்றில் குறிப்பிடுகிறார்.  இதை வைத்துப்பார்க்கும் போது நிலங்களை குறிப்பிட்ட குலத்தினரிடமிருந்து அபகரிப்பது என்பது சிற்சில நடந்தேறி இருக்கலாமே தவிர மொத்தமாக நடந்தேறி இருக்குமா என்பது அய்யப்பாடாகவே உள்ளது. இது குறித்து இன்னும் ஆய்வுகள் தேவைப்படுகிறது.

விஜயநகர ஆட்சியின் போதே தில்லி சுல்தான் பிரதிநிதிகள் ஆட்சியும் அதனை அடுத்து போன்ஸ்லே அதாவது மாரட்டிய மன்னன் சிவாஜி ஆட்சியும் தஞ்சையில் வந்தது. பிரிட்டீஸ் ஆட்சியில் எப்படி இசுலாமியர், சீக்கிய படைப்பிரிவுகள் தனித்தனியாக இருந்ததோ அதைப்போலவே போன்ஸ்லே ஆட்சியில் பறையர் குலப்படைகள் இருந்ததை திரு. ஸ்டீபன் சான்றோடு பதிவிட்டுள்ளார். ஆக பறையர் குலத்தினர் வேளாண் குடிகள் என்பதை விட படைப்பிரிவினராக இருந்திருந்தனர். அல்லது சோழர் பிரதிநிதிகளை எதிர்க்க போன்ஸ்லே மன்னர்கள் இப்படி ஒரு படைப்பிரிவை உருவாக்கி இருக்கலாம், படை மறவர்களாக இருந்ததால் அல்லது வேறு ஏதாதது காரணம் இருக்கலாம் என ஸ்டீபன் தனது கருத்தை வைக்கிறார். 

அடுத்து செஞ்சியை ஒட்டியுள்ள பகுதிகளில் பாணர் என்ற பிரிவு ஆட்சியில் இருந்ததற்கான சான்றுகள் பல நூறு கிடைக்கிறது, இவர்கள் பறையர் குலத்தினராக இருக்கலாம் என ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். இவர்கள் ஏன் ஆட்சி அதிகாரத்தை இழந்தார்கள் என்பதை திரு. இராஞ்சித் போன்றவர்களும், ஆய்வாளர்களுமே விளக்க வேண்டும். அரசு என்பது உற்பத்தி முறையை பெருக்க என்னென்ன வழிமுறைகள் இருக்கோ அனைத்தையும் செய்தாக வேண்டும் என்பதே உற்பத்தி விதி. இந்த விதியில் கூடுதலாக மீறல்கள் நடந்திருக்கும் சில இடங்களில் குறைவாக நடந்திருக்கும். மீறல் கூடும் போது அண்டை நாட்டு படையெடுப்பிற்கு மக்கள் உதவியிருப்பார்கள் இப்படி உதவியதாலே பல சாம்ராஸ்சியங்கள் ஆண்ட இடங்களுக்கு போக்கு வழி கூட இருக்கிறது என்பது நிகழ்கால வரலாறு. 

வரலாற்றை படிக்கும் போது தான் புதிய வரலாறு படைக்க முடியும். படிப்பதிலே குறைபாடும் அதை கொண்டு செல்வதில் பேராபத்தும் இருக்கும் போது புரட்சிக்கு பதிலாக புழுதிதான் பறக்கும் அதை திரைத்துறையினர் செய்து வருகிறார்கள். காரணம் இவர்கள் முதலாளிகள் கைப்பாவைகள் என்பதை நாடு அறிவும்.
 

பெண்கள்

பிரிட்டீஷ் ஆட்சியின் முடிந்த பின்னர் தான் தேவதாசி முறை முழுமையாக முடிவுக்கு வருகிறது. அதுவரை  தேவதாசி முறை என்பது சமூக மரபாக இருந்துள்ளது. இந்துஸ்தானிலிருந்து தக்கானம் அதாவது தமிழகத்தின் புதுக்கோட்டை அருகில் உள்ள குடுமியான்மலையில் மிகப்பெரிய நாட்டியப்பள்ளியிருந்ததாக கல்வெட்டு ஆய்வாளர் திரு. சாந்தலிங்கம் தனது குடுமியான்மலை நூலில் குறிப்பிடுகிறார்.  அதே போல் பிரிட்டீஷ் ஆய்வாளராகன இ.கிளமெண்ட் என்ற ஆய்வாளர் இந்தியக்கோவிகளை ஆய்வு செய்து அனைத்து கோயில்களிலும் தேவதாசிகள் ஆடல்கலையில் வல்லவர்களாகவும் ஆசிரியர்களாகவும் திருமறை அறிந்தவர்களாகவும்  இருக்கிறார்கள் என்பதை 1889ல் எழுதிய இந்திய சிற்பக்கலையில் நாட்டியம் என்ற நூலில் குறிப்பிடுகிறார். பிரிட்டீஷ் இந்தியாவில் தொல்லியல் துறையில் பணி செய்த கோபிநாத் ராவ் என்ற அறிஞர் எழுதிய இந்திய கோயில் சிற்பங்களும் நாட்டியமும் என்ற மூன்று வாலியூம் நூலில் சிலப்பதிகாரம் முன்பிருந்தே நாட்டியம் இருந்துள்ளது. இது கூத்து மற்றும் சதிராட்டமாகவும் மக்கள் கலையாகவும் இருந்துள்ளது என குறிப்பிடுகிறார். பேராசிரியர் சன்னாசி மற்றும் ஆ.சு போன்றவர்கள் தேவதாசிகள் பணி செய்திடும் கோயில் சிவ ஆலமாக இருந்தால் சூலமும் வைணவ ஆலயமாக இருந்தால் சங்கு சக்கரமும் மார்பு கால்களில் அச்சுபதித்துள்ள மரபு இருந்ததை சான்றுரைத்து அடிமை முறை இருந்தது என்பதை சாடுகிறார்கள். 

பேராசிரியர் அழகர்சாமி தனது ஆய்வு நூலில் தேவதாசிகளின் ஆளுமையையும், அவர்கள் இந்த நாட்டிற்கு செய்த தொண்டு குறித்து குறிப்பிட்டுள்ளார். பாண்டிச்சேரி அரசின் சின்னமே தேவதாசியை குறிப்பிடுவதாக ஆய்வாளர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளதை வைத்துப்பார்கும் போது சதிராட்ட மரபு என்ற பரதநாட்டியம் கலைவளர்ப்பிற்காகவும் கலைக்கானதாகவே இருந்துள்ளது. அதில் குறைபாடுகள் இருந்துள்ளது ஆய்வுதானே தானே முற்றிலும் பிழையானதாக கருத முடியுமா எனத்தெரியவில்லை. பிழையானதென்றால் அன்றைய கலைக்கூடாராமன கோயில்களைப்போலவே இன்றைய திரைத்துறையில் பெண்ணகள் உள்ளனர் அல்லது பெண்களை வைத்து சதிராட்டாமாக ஆடுகிறார்கள் என்பதை மறுக்க இயலுமா என்பது அவர்களுக்கே வெளிச்சம். 

முடிவுரை

திரு.இரஞ்சித் அவர்கள் மீது  வழக்கு தொடுத்தவர்களும் சகித்த அகதாமி விருது எழுத்தாளர் பேராசிரியர் பெருமாள் முருகன் மீது வழக்கு தொடுத்தவர்களும் ஒரே அமைப்பினரே. இதில்உள்குத்து இருப்பதாகவே விபரம் அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள். காலம் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் எதிர்பார்ப்போம்.


No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...