Search This Blog

Friday 30 August 2019

சுளுந்தீ நாவல் ; வரலாற்றின் மீதான சிறப்பான பதிவுகளை தரவுகளின் அடிப்படையில் பேசுகிறது .

                                         சுளுந்தீ நாவல் மதிப்பீடு 
 M M Deen

சமீபத்தில் வந்த #பாக்சிங்ஹிட் நாவல் சுளுந்தீ என்றால் மிகையல்ல. இன்றைய நுட்பமான வாசகர்கள் கவனத்தில் நிற்கும் நாவல். அடர்த்தியான சொல்லாடல்களால் ஒரு காலகட்டத்தின் பன்முகத்தை அப்படி #ஏவி யாகப் (திரைக்குறும்படமாக) போட்டுக் காட்டுகிறார்.

#சுவெங்கடேசனின் #காவல்கோட்டம், #பூமணியின் #அஞ்ஞாடி வரிசையில் தன்னையும் நிலைநிறுத்திக் கொள்கிறது. உடைந்து போன நாயக்க ஜமீன்களின் மிச்சமான வாழ்க்கையை மையப்படுத்திப் பேசுகிறது. கன்னிவாடி ஜமீன் சிதிலமடைந்து கிடக்கிறது. அங்கு கடைசி வாரிசாக இருக்கும் #அய்யப்பநாயக்கரிடம் பேட்டி காணச்சென்ற போது அரும்பிய கதை என்கிறார் நாவலாசிரியர்.

#அழகுமுத்துக்கோன் வாழ்ந்த கட்டாலங்குளம் ஜமீனைப் பார்க்கச் சென்றது ஞாபகத்தில் வருகிறது. அந்த சிதிலமடைந்த அரண்மனையில் #சின்னச்சாமிசேர்வை ஜமீனின் கடைசி வாரிசு வாழ்ந்து வருகிறார். ஜமீனாக இருந்தற்கான அடையாளமாக ஒரு கொற்றக்குடை, சில துருப்பிடித்த வாள்கள், சில பாத்திரங்கள் டிரங் பெட்டிகள் மட்டுமே எஞ்சியிருந்தன.

#தொப, #முல்லை.ச. முருகன்,, நான் எனது இளவல் மேத்தா எனச்.சென்றோம். திரும்புகையில் எங்கள் கண்கள் கலங்கியது மட்டும்தான் மிச்சமாக இருந்தது. அது போலவே, இரு நூற்றாண்டுகளுக்கு முன்னான வாழ்வை அங்குலம் அங்குலமாக தீட்டி எழுத்தில் வடித்துள்ளார். இத்தனை அடர்த்தி அசாத்தியமானது. மிக அதிகமாக சித்த மருத்துவ குணபாடங்களை பேசுகிறது நாவல். எந்த இடத்திலும் வரலாற்றின் மேலான சிறப்பான பதிவுகளை தகுதியான தரவுகளின் அடிப்படையில் பேசுகிறார்.

பொடவு, கிணிங்கிட்டி, சாட்டல், குலவிலக்கம், புடம், மர்மஸ்தான சவரம், வாகட விபரம், குணபாட நூல்கள், என புதிய சங்கதிகளை விலாவாரியாகப் பேசுகிறார். முதன்முதலில் இட்டலியை ரெட்டிமார்கள் விற்றார்கள் என்பதில் வியப்பு இருப்பினும் இட்லி தமிழ் நிலத்தின் பண்டைய உணவு என்பது எனது எண்ணம். சொல்லியுள்ள விதம் சிறப்பாக உள்ளது. வண்டுகட்டி ஒற்றை இட்லி அவித்து சாப்பிடும் வழக்கம் குறித்து நானே அறிந்திருக்கிறேன்.

பண்டுவர்கள் குறித்து எனது நண்பர் சொல்லிய நெல்லை செய்திகள் நாவலில் இல்லை. அதுவும் சரியானதுதான். அவையெல்லாம் பிந்தைய காலத்து செய்திகள் தாம். நேற்று #பேராவேமாணிக்கம் அய்யாவுடன் பேசிய போது அவர் நாவிதர்கள் அனைத்து சடங்குளையும் முன்னின்று செய்தவர்கள். அவர்களுக்கு மரபான அனைத்து சடங்குகளிலும் முன்னுரிமை உண்டு என்றார். அதுவும் பிந்தைய கால நிகழ்வுகள்தான். ஆயினும் இந்த நாவல் தேனி மாவட்டத்தை அப்போதைய மதுரை மாவட்டத்தில் நிகழ்வன.

கன்னிவாடியைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் மலைகளும் ஆறுகளும், பொடங்குகளும், ஓடைகளும் மரங்களும், சீவசந்துகளும் நாவல் முழுக்க நிறைந்து இருக்கிறது. எது குறித்தும் அனைத்து விபரங்களையும் முன் வைக்கும் வேளையில் நாவல் ஆய்வேடாக மாறி விடுகிறது. மற்றபடி இப்படி ஒரு நாவலை அதுவும் முதல் நாவலாக எழுதியுள்ளமை அவரின் மேன்மைத்துவத்தை தெளிவாகக் கட்டியம் கூறுகிறது.

நாவலில் அந்தக் காலத்து சிரைத்த தலைகளைப் பற்றிப் பேசுவது கூட வியப்பாக இருக்கிறது. நீண்ட கால முயற்சி, வாசிப்பு, பயணம் என கடும் தவத்தோடு எழுதி இருக்கிறார். #பாலாகருப்பசாமி சொல்லியபடி பேசிக் கொண்டே போகலாம். அது நிறைவுராது. இந்த நாவல் தமிழ்ப் புதின வரலாற்றில் முக்கியமான நாவல். பெரும் விருதுகளையும், பட்டங்களையும் நாவலாசிரியருக்கு வாங்கிக் கொடுக்கும் என்று தீர்க்கமாக நம்புகிறேன்.
நன்றி நாவலை வாசிக்கத் தந்த பேரா. #கண்ணாகருப்பையா சார் அவர்களுக்கு.
வாழ்த்துக்கள் #இரா. #முத்துநாகு சார்.

1 comment:

  1. அருமையான மதிப்புரை. நன்றி சார் திரு M M Deen

    ReplyDelete

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...