Search This Blog

Monday 8 June 2020

சீமைகருவேல்மரம் அரசியல்+அறிவியல்




                                       சீமைகருவேல்மரம் அரசியல்+அறிவியல்
                                                       
தோழர்களே நண்பர்களே,தோழர்களே

சீமைகருவேல் (அக்கேசிய ஜூலிபிரா) ''நஞ்சுமரம், நிலத்தடி நீரை உறிஞ்சிவிடும், காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும், உடனே அழிக்காவிட்டால், இந்த நாடே தீங்கில் அழிந்துவிடும்'' என்ற பீதியாக ? ! பரப்பட்ட தகவல் காரணமாக, தகவலின் அறிவியல் உண்மைகளை ஆராயாமல், நீதிமன்றமும் தடை செய்தது. அழிக்க ஆணையிட்டு பல அறிவியல் ? மேதைகளும் அந்த தீர்ப்பை ஆதரித்து டிவி, முகநூலில் பிரச்சாரமே செய்து மக்களை முட்டாக்கினார்கள். தற்போது நீதி மன்ற தீர்ப்பை  நீதி மன்றமே நிறுத்தியுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு என்ன மாதிரி வரும் என்பது பல நூறு ஆயிரம் கேள்வி ?

01. சீமைக்கருவேலை மரங்களை வேரோடு அழித்தால் தான், சமையல் எரிவாயு (கேஸ்) கம்பெனிகளால் கிராமத்திற்குள் இன்னும் புகமுடியும், இந்தியா 70 சதவிகிதம் கிராமங்களால் ஆனது. அங்கே புகாமல், இவர்களுக்கு இலாபம் இல்லை.

02. ரூ 150க்கு துவங்கிய 230 க்கு வாங்கி உபயோகித்த (மீத்தேன் வாய்வு கூண்டு) கேஸ், இன்றைக்கு நேரடி மானியத்தை உங்களுக்கு கொடு்த்து விட்டு அதன் விலையை தள்ளுபடி போக ரூ 570. தள்ளுபடி இல்லாத விலை ரூ 800 க்கு மேல் செல்ல வாய்ப்பு. அப்படி என்றால் 60 கோடி மக்களை இந்த கேஸ் அடுப்பு சென்றால் தான் கேஸ் கம்பெனிகளுக்கு வருமானம்.

03. வெறும் மரத்தை வெட்டி விற்றால் டன்க்கு ரூ 2500, கரியாக மாற்றி வித்தால் ரூ 12000- 14000, அதை ஆக்டிவேட்டு கார்பனாக மற்றி சார்க்கோல்லாக மாற்றி வித்தால் ரூ 25000 - ரூ 75000, . தேங்காய் ஒட்டில் இருந்து இதை ஆக்டிவேட்டு கார்பனாக மற்றி சார்க்கோல்லாக மாற்றி வித்தால் ரூ 1,50,000 - ரூ 1,75,000, இதை 300 மெஸ்க்கு பவுடராக்கி கார்பன் ஆக மாற்றினால் இதைவிட இரண்டு, மூன்று மடங்கு விலை அதிகம். இது மருத்துவ குணத்திற்கும், தண்ணீர் சுத்திகரிப்பிற்கான தொழில் நுட்பத்திற்கும், மற்றும் இது போன்ற பல்வேறு மருத்து பொருள்களுக்கு பயன்படுத முடியும் (ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது), இதை ஏற்றுமதி செய்திடலாம் - டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா என்று கேட்கிறானே அது போல. திரும்பவும் அது உங்களிடம் வரும் வெளிநாட்டில் இருந்து. இதை இந்த தமிழக அரசு செய்யுமா, சீமைக்கருவேல மரத்தை ஒழிக்க புறப்பட்டிருக்கும் நண்பர்களுக்கு இது தெரியுமா, இல்லை வெட்டியவர்கள் யாரும் இதை செய்து அந்த கிராமத்தில் தொழிற்சாலையை ஏற்படுத்தி மதிப்பு கூட்டி வேலை வாய்ப்பை, பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கையில் ஈடு பட்டிருக்கிறார்ள் இல்லை. சீமைக்கருவேலை மரத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்று இவர்கள் சொல்லும் எந்த காரணமும் அறிவியல் முறைப்படி நீருபிக்கவில்லை.  ஆகவே நீதி மன்ற தீர்ப்பை உள்நோக்கம் கற்பிக்க கூடாது என்ற சட்டம் சொல்லுகிறது ஆனால் இந்த தீர்ப்பு எந்த நோக்கம் கொண்டது என்பதை நீதிமன்றமே சொல்லட்டும்.

04. சீமைக்கருவேல இலைகளுக்கு ஒரு தனி குணம் இருக்கிறது, அது Anti microbial and Anto bacterial property இருக்கிறது இதன் காரணமாக பேக்ட்ரீயா, மைக்ரோப்ஸ் வராமல் இருக்கிறது. அதன் மூலம் உணவுப்பொருள்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்கு பாதுகாப்பு பிரிசெர்வேட்டிவாக, இராசாயண பொருள்களுக்கு பதில் இதை உபயோகித்தால் அதன் மூலம் ஏற்றுமதி வருமானம், பொருளாதாரம் பெருகும், வேலை வாய்ப்பு கிடைக்கும்.

05. சீமைக்கருவேலை மரத்தின் இலைகள் மூலம் ஒளிரக்கூடிய பெயிண்ட் உற்பத்தி செய்ய முடியும்.இந்த ஆய்வினை சிவகாசி மெப்கோ கல்லூரி ஆராய்ச்சி மாணவி ஒருவர் அப்துல்காலாமிடம் நீருபித்துள்ளார்.

06. சீமைக்கருவேல் மரங்களின் காய்களில் இருந்து விலங்குகளுக்கு சத்தான உணவுப்பொருள்களை உற்பத்தி செய்ய முடிகிறது. சீமைக்கருவேல் காய் நெத்து இவைகளை சாப்பிடும் ஆடு நல்ல சத்தாக வளர்கிறது கறவை மாடுகள் பால் அதிகம் கறக்கிறது ,தீவன பற்றாக்குறையை சீமைக்கருவேல் காய் நெத்து குறைக்கிறது.

07. சீமைக்கருவேல் மரத்தில் இருந்து பிர்க்கெட் போட்டு, அதை எரி பொருளாக மாற்றும் தொழில் நுட்பம், அதன் மூலம் இன்றைக்கு அதன் எரிசக்தி திறன் அதிகரித்து மின்சாரம் உற்பத்தி பண்ணும் திறன் உள்ள இந்த சீமைக்கருவேல் மரங்களை அதிகமான குஜராத்தி கம்பெனிகள், வட இந்திய கம்பெனிகள், இதை மதிப்பு கூட்டி, மின்சாரம் தயாரிப்பதற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார்கள். (அதானி குழுமத்திடன் சோலார் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கவே சீமை கருவேல் மரங்கள் அழிக்கபட்டன என்ற செய்தியை மறுத்திடவும் முடியவில்லை)

08.தமிழ்நாட்டில் சும்மார் 12,620 பஞ்சாயத்துகள் உள்ளன. அப்படியென்றால் சீமைக்கருவேலை மரத்தை வெட்டி அதன் மூலம் கமார் 12,620 மெகா வாட் மின்சாரத்தை நம்மால் எளிதில் மின் உற்பத்தி செய்ய இயலும். இதன் மூலம் நம் மாநிலத்திற்கு தேவையான மின்சாரத்தை தயாரிப்பது மட்டும் அல்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் மின்சாரம் அளிக்க முடியும். இதன் உற்பத்தி செலவு ரூ 2.50 முதல் ரூ 4.20 - மின்சாரத்தை விற்பனை விலை ரூ 6 முதல் ரூ 10 வரை அரசிற்கும் தனியாருக்கும் விற்பனை செய்யலாம். ஒரு மணி நேரத்திற்கு தேவைப்படும் எரி பொருள் 1000 கிலோ. ஒரு நாளுக்கான உறபத்தி செலவு ரூ 60,000,ஒரு நாளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 18000 யூனிட்கள்,மின்சார விற்பனை விலை ரூ.7 விதம் ஒரு நாளிற்கு ரூ.126000 வருமானம்.ஒரு நாளில் கிடைக்கும் நிகர லாபம் ஒரு நாளிற்கு ரூ. 66000.ஒரு வருடத்திற்கு கிடைக்கும் லாபம் (330 நாள்) ரூ. 2,17,80,000.முதலீட்டை திரும்ப பெரும் கால அளவு 20 ந்தனையும் செய்ய வேண்டுமென்றால் அதற்கு அறிவார்ந்த அரசு வேண்டும். அதன் மூலம், சீமைக்கருவேலம் பல் வேறு பயன்பாட்டிற்கு வரும். இதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயரும், வேலை வாய்ப்பு பெருகும்.

சீமைகருவேல் மரத்தால் தீமை என்பது புளியமரத்தின் (புளிய மரத்தில் 28 நாள் தொடந்து படுத்திருந்தால் கட்டாயம் தோல் மற்றும் மூட்டு வலி வரும்) தீமையை விட அதிகம் என்பதை அறிய, சீமைகருவேல் விறகினால் மின்சாரம் தயாரித்தால் பூமி சூடாகும் என்பதை ஏற்றால் அனல் மின்சாரம் தயாரிக்கப்படும் நிலக்கரியால் பூமி வெப்பமாவதை தடுக்க வழி சொல்லி விட்டு இதை எதிர்க்கலாம். (ஆக நமது அரசின் கலப்பு பொருளாதர கொள்ளைதான், இந்த சிக்கலுக்கு காரணம்.ஆக நமக்கு பொருளதார கொள்கை என்பதை பற்றி தெரிந்து கொள்ளாத வரை இப்படியான சிக்கலை சந்தித்து கொண்டே இருப்போம் என்பது மட்டும் உறுதி)

சீமைக்கருவேல் மரங்கள் அதிகமாக உள்ள பகுதி பழைய ஒன்றுபட்ட இராமநாதபுர மாவட்டமும், திருநெல்வேலியில் உள்ள புறநகர் தாலுகா, பழைய மதுரை மாவட்டமான திண்டுக்கலில் குறைவாகவும், மதுரை புறநகர் பகுதியான மேலூர், பேரையூர் தலுகா, மற்றும் திருமங்கலத்தை அடுத்துள்ள கல்லிக்குடி ஒன்றியப்பகுதி மட்டுமே .இந்த பகுதியில் 1898 அரசு பசலி பதிவின் படி தரிசு, மானாவாரி எனவும்,கண்மாய் அருகில் உள்ள கிணறுகளில் ஒரு போக சாகுபடி நடதுள்ளதாகவும் இருந்துள்ளதை வருவாய்துறை பதிவுகள் தெரிவிக்கிறது. அப்படியானால் இந்த பகுதியில் முன்னால் முதல்வர் காமராசர் கொண்டு வந்த சீமைக்கருவேல் மரத்தை அழித்து என்ன பயிரிட முடியும் என அரசு சொல்லுவதை விட நீதிமன்றமும் திரு.வைகோவும் சொல்லுவார்களா? (பலநூறு நீதி மன்ற தீர்ப்புகள் நடைமுறை படுத்தாமல் கிடப்பில் உள்ளதும் பல நூறு கண்டம்ட் அப் கோர்ட் ஆன தீர்ப்புகள் உள்ளன.இவைகளுக்கெல்லாம் இந்த நீதி மன்ற சிவப்பு விளக்கினை சுற்றி சழன்று தீர்ப்பை நடைமுறைப்படுத்தவரவில்லை ? என கேட்க தெருவிற்கு வரவில்லை ஆனால் சீமைகருவேல் மரத்திற்கு மட்டும் வந்தது / இது பற்றி கருத்து சொல்ல நமக்கு துப்பில்லை என்பதை மறந்து விடதீர்கள் தோழார்களே)

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...