Search This Blog

Monday 8 June 2020

ஜல்லிகட்டு

                                                           
                                                            ஜல்லிகட்டு 




மனிதன் என்ற விலங்கு குழுக்களாக வாழ துவங்கிய காலத்திலிருந்தே வேட்டையாடுதல் துவங்கி விட்டதாக மானுடவியல் ஆய்வாளர்களளின் ஆய்வின் முடிவு.அதன் அடிப்படையில் வேட்டையாட, அவனை காக்க அவன் பழக்கிய முதல் விலங்கு, நாய். ''இதுவே மனிதன் முதல் படை'' என தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ள தியேட்டர் பாஸ்கரன் அதற்கான கல்வெட்டு ஆதரங்களை கொடுத்துள்ளார். குழு வாழ்க்கை முறையிலிருந்து அடுத்த பரிணாமானது அரசு அல்லது தலைமை அடிப்படையிலான குழு வாழ்க்கை இங்கு தான் உற்பத்தி முறை துவங்குவதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.உற்பத்தி முறைக்கு முதல் தேவையான காரணி மாடு அதை பழக்கி விவசாய பணிகளுக்கு பயன்படுத்தினான். எதிர் குழுக்களிடமிருந்து தன்னையும் உற்பத்திக்கு பயன்படும் மாடுகளை காத்திட காளைமாடுகளை முட்ட பழக்கி எதிரியை தாக்க கற்று கொடுத்தான்.இப்படி உருவாக்கப்பட்டது தான் ' காளைபடை ' . இந்த காளை படையை அடக்குவது அன்றைய போர் முறையில் உயரிதாக கருதப்படுகிறது. இதை தான் ஆணீறை கவருதல் பெண்டீர் கொள்தல். காளைகளை அடக்கிய போரில் மாண்ட வீரர்களுக்கு நடுகற் சிற்பங்களும், புடை சிற்பங்களும் அதிகமாக குறிப்பாக தென் இந்தியாவில் கிடைக்கிறது (ஆதராம் தென் இந்திய நடுகற்கள் ஆசிரியர் ராமசந்திரன்) .

விஜநகர ஆட்சியாளர்கள் பாண்டிய மன்னில் போர் தொடுத்த போது அரச்சாட்சியை வெற்றி பெற்றாலும் மக்களை வென்று நிலங்களை கையகப்படுத்த விடாமல் தடுத்தது காளை மற்றும் நாய் படைகளே.இதை இரண்டாம் புக்கரின் மனைவி கங்காதேவி எழுதிய மதுரா விஜயத்தில் சிறு குறிப்பு கிடைக்கிறது.இதனால் காளை படையில் உள்ள தொட்டிய கம்பளத்து நாயக்கர் மற்றும் ஒக்கலிய சமூகத்தினரை விஜயநகர அரசு தனது படையுடன் அழைத்து வந்து தமிழகத்தில் உள்ள காளை படைகளை தோற்கடித்து நிலங்களை கைப்பற்றியது.இந்த வெற்றியை இன்றும் கம்பளத்தார்ஒக்கலிக்கர் சலகெருது விழாவாகவும் எருது ஓட்டுதல் எருது கட்டுதல் நடத்துகிறார்கள் என்பது நுண்ணிய வரலாறு.(ஆதாரம் = கம்பளத்து நாயக்கர் சமூக வரலாறு ஆசிரிய பேரா.முத்தையா காந்திக்கிராம பல்கலைகழகம்) இதனால் தெழுங்கு பேசும் தொட்டிய நாயக்கர்களில் எத்திராவுலு என்ற பெயர்கள் வைத்திருப்பதை காண முடிகிறது. இம்மக்கள் குடியிருக்கும் இடம் மரிக்குண்டு மரித்தூர் மரிக்குடி என்றும் உள்ளது. மரி என்பது தொழுவம் என்று பொருள் . (இன்றும் கரூர் மாவட்டத்தில் நடக்கும் எருது விரட்டில் அதிகம் பெண்கள் கலந்து போர் வீரனை போல ஓடி வருவதை பார்க்கலாம்.அரசுகளின் வளர்ச்சி கிராமங்கள் வரை வளர்ந்ததால் நாய் காளை படைகளின் தேவை அற்றதானது.அரசுக்கு காளை நாய்களை விட பலமான உயரமான யானை படைகள் வந்தது.அடுத்து வேகமாக ஓடக்கூடிய குதிரை படை.இதனால் காளை படையாக இருந்து காவல் காத்த காளைகள் ஊர் பொது வெளி உள்ள கோயிலில் கட்டப்பட்டதும்,மக்களிடம் ஊடுரிவி உள்ள பிராமணியத்தால் காளை படை காளை 'கோயில் காளை' யாக பெயர் மாறியது.இந்த காளைப்படைகளின் எச்சமே பூம்பூம் மாடு என தனது ஆய்வில் சொல்லுகிறார் வனத்துறை உயர் அலுவலர் அரவரசன். ஆக மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு,எருது விரட்டு இவைகள் மானுடம் சார்ந்த வரலாற்றினை தோற்றி இருக்கிற

1 comment:

  1. The Casino Directory | JtmHub
    The Casino Directory is a complete directory for https://febcasino.com/review/merit-casino/ casino and sportsbook operators in Ireland and Portugal. Jtm's febcasino comprehensive directory 바카라 사이트 provides you www.jtmhub.com with 토토 more than 150

    ReplyDelete

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...