Search This Blog

Wednesday 13 January 2021

நூல் மதிப்புரை ; தென்னிந்திய கிராம தெய்வங்கள்


 

 

 

                                         நூலதிகாரம்

 


நூல்; தென்னிந்திய கிராம தெய்வங்கள்   

*******************************************

ஆசிரியர்; ஏசு சபை பாதிரியார் ஒயிட்ஹெட் ஹென்றி  

தமிழிலில்; வானதி

வெளியீடு ; சந்தியா பதிப்பகம்

விலை ; 160


 

''மதங்கள் என்ற சொல்லால் அறியப்படும் தத்துவ கோட்பாடுகளை மானுடத்திற்கு கற்பிக்க தோன்றியவை. ஆசிவகம், பாசுபதம், சமணம்., பவுத்தம், சைவம், வைணவம் இப்படியாக உலகத்திலே அதிக தத்துவங்களை தோன்றிய மண் இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமே. இந்தியாவில் இறை நம்பிக்கையில் உள்ள பகுதி தென் இந்தியா கிராமங்கள். அதில் தமிழகத்தின் தென்னகம் என்பதே கூடுதல் கவனப்படுத்தி ஆய்வுகள் செய்திட வேண்டியதாக உள்ளது.'' என்பதை நூலாசிரியர் பாதிரியார் ஒயிட்ஹெட் ஹென்றி  நூலின் துவக்க உரையிலே பதிவிட்டுள்ளார் .

 

 

''கடவுளின் பெயரால்'' என ஏசு சபையினர் சொல்லுவதைப்போல நமது கிராமங்களில் ''நான் பீடி சீகரட், சாராயம், கள் குடிக்கமாட்டேன். இது சாமி குத்தமாகிடும், எங்க குலசாமிக்கு ஆகாது'', 'பறையர், நாவிதர், ஏகாலி, கள்ளர், பள்ளர், ஆசாரி ஊருக்குள் சாமி தங்க விடாது, ஏன் பஞ்சாய்த்து தலைவராக இருக்கக்கூடாது, மஞ்சு விரட்டில் பறையர் மாடு அணைந்தால் சாமி குற்றமாகிடும். அந்த ஊரும் எங்க ஊரும், அவங்க வீடும் எங்க வீடும் தண்ணீர் புண்ணி புழங்கமாட்டோம், அதை மீறி நடந்தால் குலசாமி குற்றமாகிவிடும்' இப்படியாக ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சாதியை நீக்கி வைக்க காரணங்களை அனைத்தும் கிராம தெய்வங்கள் வழியாக கட்டமைக்கப்பட்டிருக்கும். இருப்பினும் இன்று பட்டியல் சாதியினராகக்கருத்தப்படும் பெரும்பாலான சாதியினர் பூசகர்களை கொண்ட பகுதி இந்தியாவாக இருந்தாலும், இன்னும் நடைமுறையில் உள்ள பகுதி தென் தமிழகமே என்றால் மிகையான சொல் அல்ல.

 

''சாதிய அடுக்கு முறையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது இருந்தாலும், அரசு சட்டங்களை விட குல தெய்வ சட்டங்கள் இந்திய கிராமங்களை ஆண்டு கொண்டே இருக்கிறது. கிராமங்களில் எளிய சாதியாகக் கருதப்படும், வண்ணார், குயவன், ஆசாரி, பள்ளர், பறையர், சக்கிலியர் பூசாரியாக இருப்பது சமூக ஒற்றுமையைக் காட்டுவது. பறையர் ஒருவரால் கிராம தெய்வங்களுக்கு வெட்டப்படும் இந்த ஆடுகளின் இரத்தமும், சேர்வைக்காரர் சாதியை சேர்ந்த பூசாரியால் ஒரு மண் பானையில் சேகரிக்கப்படுகிறது. இதை காப்புக்காரன் என்ற ஊர் காவல்காரன் இந்த இரத்தத்தை எல்லாம் சாதத்துடன் சேர்த்து சாமிக்கு படைக்கிறார். திருச்சி அருகே உள்ள புள்ளம்பாடியில் பறையர் சமூகத்தை சேர்ந்தவர் கிடா வெட்டுவார். நமக்கான சபையினரை உருவாக்கிட வேண்டும் என முனைப்பு காட்டிய போது தடையாக இருப்பது சிவ நெறியோ, வைணவ கோட்பாடோ இல்லை. இந்த கிராம தெய்வங்கள்'' என்று கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களான இராணுவ அதிகாரிகள் நியமித்த ஏசு சபை பாதிரிமார்கள் கொடுத்த அறிக்கை. இதற்கு மாற்றாக என்ன செய்திடலாம் யோசித்தவர்கள் முதலில் கிராம தெய்வங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென முடிவெடுத்தார்கள். அதன்படி ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்தான் ஏசு சபை மாபெரும் பாதிரியார் ஒயிட்ஹெட் ஹென்றி.  இதை நூல் நூலிடையாக குறிப்பிடாமல் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து எழுதியுள்ள ஜெசூட் பாதிரிமார்களான அபே- துபே, இராபர்ட் டி.நோபிளி போன்றவர்களின் பெருத்த அய்வு குறிப்புகளின் அடிப்படையிலே மேற்குறிப்பிட்டுள்ள பகுதியை எழுதியுள்ளேன்.

  ''கிராம தெய்வங்கள் மூலம் இந்துமதம் வேறூண்ற முடியாது என்பதை அறிந்த கலைஞர் கலைஞர்கள் அவர்கள் கிராம பூசாரிகள் சங்கத்தை துவக்க இந்து முன்னனி இராமகோபலனை தூண்டிவிட்டார்'' என்ற பேச்சும் உண்டு. இது எந்தளவிற்கு மெய்த்தன்மை உடைய செய்தி என்பதை உறுதிபடுத்த முடியவில்லை.

 கிராம தெய்வங்கள் வழிபடடும் மக்கள் சிவனையும் விஷ்னுவையும் சேர்த்து வழிபடுகிறார்கள்

********************************************************************************************

 ''நாம் இன்று இந்து மதம் என்று அழைக்கும் மதமானது, மிக நுண்ணிய தத்துவ ஆராய்ச்சிகள் முதல் மிக எளிமையான இயற்கை வழிபாடு வரை கொண்ட ஒரு மதமாகும். அதே போல திராவிடர்களின் ஆதிமதமானது பிராமணர்களின் தாக்கத்தால் பெரிதும் மாறிவிட்டது. பெரும்பாலான நகர்வாசிகளும், கிராமத்தவர்களும் இன்று தங்கள் கிராம தெய்வங்களையும், பிராமண தெய்வங்களையும் ஒருசேர வழிபடுபவர்களாக இருக்கின்றனர். மலை, காடுகளில் வாழும் சில ஆதிவாசிகள் இன்னமும் இந்த பிராமண தாக்கம் இல்லாமல் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் தங்கள் கிராம தெய்வங்களுடன் சிவனையும் விஷ்ணுவையும் சேர்ந்தே வணங்குகின்றனர். சீனாவில் எப்படி கன்பூசியஸும் தாவோவும் வேறு மதங்களாக பார்க்கப்படாமல் ஒரே மதத்தின் இரு பிரிவுகளாக பார்க்கப் படுகின்றனதோ அது போலவே இதுவும்'' என நூலின் இரண்டாவது அத்தியாங்களில் இந்துமயமான கோட்பாட்டை உலகளவில் உள்ளதோடு ஒப்பீடு செய்துள்ளது.

 கிராம தெய்வ வழிபாட்டின் முக்கிய கூறுகள்

**********************************************

 ''சிவனும் விஷ்ணுவும் இயற்கையின் சக்தியின் வடிவங்கள். சிவன் அழிவின் சக்தியாகவும், மரணத்தின் வழியே கிடைக்கும் வாழ்வின் வடிவாக இருக்கிறார். விஷ்ணு காத்தலின் சக்தியாகவும் , மோட்சம் அடைவதற்கான வழியாகவும் இருக்கிறார். இந்த கடவுள்கள் பிரபஞ்ச சக்தியின் வடிவங்களாக இருக்கிறார்கள். கிராம தெய்வங்களோ கிராம வாழ்வின் அடையாளங்கள். அவர்கள் பிரபஞ்ச சக்திகளோடு அல்லாமல் கிராம வாழ்வின் நிதர்சனங்களான காலரா, பெரியம்மை, கால்நடை நோய்களுடன் தொடர்புடையவர்கள்.''  இதை தமிழர்களின் தொன்மம் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆய்வறிஞர் தொ.பரமசிவன் பேசும் போதெல்லாம் சொல்லி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கிராம தெய்வங்கள் வாழ்வியல் நிதர்சம் காப்பவை

**************************************************

வன்முறையாலோ, இயற்கையாக இல்லாமலோ இறந்து போனவர்கள், பெரும் சக்தி உடையவர்களாய் கருதப்பட்டவர்கள், சில இடங்களில் குற்றம் புரிந்தவர்கள் கூட, அவர்கள் ஆண்களோ, பெண்களோ, சிறுவர்களோ , சிறுமிகளோ வழிபடப்படுகின்றனர். இந்தக்கடவுள்கள் பல நூற்றாண்டுகளாய் வழிபடப்பட்டு வந்தாலும் , இதில் சிலர் சமீப காலங்களை சேர்ந்தவர்கள். சிலர் கொலை இயற்கையாக இறக்காதவர்கள் சக்தி உடையவர்களாக கருதப்படக் காரணம் அவர்களின் நினைவுகள் அதிகம் பெண்கள் பிள்ளைப்பேற்றின் போது இறந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

 பிள்ளைப் பேறின் போது இறந்தவர்களுக்கு சுமைதாங்கிக்கல் என்ற நினைவுக்கல் காரணம் என்பதை ஆய்வு செய்தலில் நுணுக்கமான செய்தி, ''பேறுகாலத்தில் இறப்பது என்பது வம்சம் விருத்தி அடையாமல் போய் விடும் நிகழ்வு. இந்த நிகழ்வு தொடராமல் இருக்க இறந்தவர் வரும் சந்ததியினரை காக்க தெய்வமாக நடுகல் நடுவது. அத்துடன் பேறுகாலம் பார்க்கும் மருத்துவச்சி இவரது இறப்பிற்கு ஒரு காரணம் என்பதை குறிக்கும் குறியீடு எங்கிறார்கள்.  

 நல்ல பாம்பினை கிராமத்தில் அடிப்பதில்லை ஏன்.

*******************************************************

ஒரு இராஜ நாகம் காசர்கோடு பகுதியில் உள்ள பள்ளி வகுப்பறைகளுக்கு வந்து செல்லும். யாரும் அதைக் கொல்வதற்கு முயல்வதில்லை. மாறாக அதற்கு தினமும் பால் வைக்கப்படுகிறது. பல நகரங்களிலும், கிராமங்களிலும் பெரிய மரங்களின் கீழே நாகங்களின் சிலைகள் - இரு நாகங்கள் பிணைந்து இருப்பது போன்று உள்ளவை உள்ளது. இதன் தன்மை பொருள் சரியாக பிடிபடவில்லை'' என குறிப்பிடுகிறது நூல்.

 இன்றும் கிராமங்களில் பல குடும்பத்தினர் நல்ல பாம்பினை அடிக்கமாட்டார்கள் என்பது ஆய்விற்குறியது. இத்துடன் பாசுபதநாதர் கை தண்டையிலும், சிவன் கழுத்திலும், பெருமாள் படுக்கையாகவும், சணம அல்லது ஆசீக படுக்கையிலும் நல்ல பாம்பு குறியீடு இருப்பது ஆய்விற்குறியதுடன் நம்மஊர் பாம்பாட்டிகளும் ஆய்விற்குறியவர்களே.

 மதுரையில் மட்டுமல்ல வட தமிழகத்திலும் மீனாட்சியும் மதுரை வீரனும்

**************************************************************************

''தேவனாம்பட்டினத்தில் (கடலூர்) உள்ள மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்றிருந்தேன். கடலோரத்தில் உள்ள மணல்திட்டு ஒன்றில் இந்த கோயில் உள்ளது. இங்கே கட்டடம் என்று எதுவும் இல்லை. 20க்கு 12 அடியில் ஒரு இடத்தில் மூன்று பக்கங்களிலும் களிமண் சிற்பங்கள் இருக்கின்றன. கடலை நோக்கிய மேற்குப்புறத்தில் எந்த சிற்பமும் இல்லை. கோயிலின் கிழக்குப்புறத்தில் கடலை நோக்கியபடி இரண்டு களிமண் சிற்பங்கள், ஆணும் பெண்ணும், பழைய பூமாலைகளை அணிந்தவாறு நடுவில் அமர்ந்திருக்கிறார்கள். இந்த சிலைகள் ஒரு அடி உயரத்தில் இருக்கின்றன. இவர்களுக்கு இரு புறமும் ஏழு கன்னியர்களின் களிமண் சிற்பங்கள் உள்ளன. இவர்களுக்கு முன்னும் பின்னும் இவர்களுக்கு பாதுகாவலாகவும், இவர்களின் துணையாகவும் பல ஆண்களின் சிற்பங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு கன்னியரின் சிற்பங்களின் அருகே ஒரு பெரிய மீன் பெரிய கண்களோடு, தன் வாயைத் திறந்தபடி இருக்கிறது. இந்த மீன்களின் மேலும் ஒரு ஆண், பெண் சிற்பங்கள் இருக்கின்றன. இந்த கோயிலின் பூசாரி, இந்த பெண்தான் மீனாட்சி என்றும், ஆணின் பெயர் மதுரைவீரன் என்றும் கூறினார். இந்த மீன்களின் அருகிலும் ஆண் பாதுகாவர்களின் சிற்பங்கள் உள்ளன. கோயிலின் வடக்கு மற்றும் கடலூர் அருகில் தேவனாம்பட்டியில் மீனாட்சி , மதுரை வீரனுக்கு கோயில் உள்ளது. மீனாட்சியும், மதுரை வீரனும் அமர்ந்திருக்கும் இந்த மீனின் பெயரை உள்ளை என்று கோயிலில் இருந்தவர்கள் கூறினர். தென்னாற்காட்டு மாவட்ட நீதிமன்றத்தில் இருக்கும் மொழிபெயர்ப்பாளர் என்னிடம் இந்த மீனின் பெயரை *உள்ளான்* என்று கூறினார். இவைகளெல்லாம் இன்னும் நமது ஆய்வாளர் தோண்டி துருவி ஆய்வு செய்திட வேண்டியவை என்பதை மறுக்க இயலாது.

 

வழிபாட்டு மரபு - கோயில்கள் , சின்னங்கள் , பூசாரிகள் , திருவிழாக்கள்

***********************************************************************

 நூலின் பத்தாவது அத்தியாத்தில் ''காலரா அம்மன் என்ற தெய்வம் வண்ணானின் அன்னையாக கருதப்படுகிறாள். எனவே ஊர் வண்ணான் பூசாரியாக இருக்கிறார். மகனாலேயே அன்னையின் கோபத்தைத் தணிக்க முடியும் என்பது நம்பிக்கை. கலாரா வண்ணர்களின் தெய்வம். இதனால் வண்ணார்களே அந்த வீட்டிற்கு சென்று வேப்ப இலை வைத்து துணிகளை எடுத்து வருகிறான். அவன் வேப்பிலை வைத்தால் இறப்பு நடக்காது என்பது நம்பிக்கை. பத்து ஆண்டுகள் வரை அம்மனுக்கு கூல் காய்ச்சிடும் இடம் ஊரில் உள்ள வண்ணார் வீடுகளே. இந்த சங்கிலி எங்கு அறுந்தது என்பதை சாதிய மேலாதிக்கவாதிகளுக்கே வெளிச்சம். இருப்பினும் இந்த சம்பிரதாயங்கள் நாயக்கர் ஆட்சியின் போது வந்தது என்ற ஆய்வினை புறம் தள்ளிவிட முடியவில்லை.

 சூலம் ( தெலுங்கில் ஈட்டி என்று பொருள் )

************************************************

ஈட்டி = தெலுங்கு // தமிழ் - சூலாயுதம். தமிழர் கடவுள் கையில் வேல்கம்பும்  சூலாயுதமும், தெலுங்கு சாமிகள் கையில ஈட்டியும் இருக்கும் என்ற நுண்ணிய செய்தியை பதிவிட்டுள்ளார்.

 ஊர் அமைக்கும் முறை

************************

 தெலுங்கு நாட்டில் ஒரு கிராமத்தை தோற்றுவிக்கும் போது நடுவில் நடப்படும் 'பொத்துராயீ ' என்றழைக்கப்படும். கிராமத்தை தோற்றுவிக்கும் முன் பெத்துராயி என்ற கல் ஊண்டப்படும். என்பதை குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர். கிராமங்களில் புதிதாக குடியிருப்பு உருவானதை முப்பது ஆண்டுகளுக்கு முன் பார்த்துள்ளேன். ஊர் மத்தியில் கல் ஊடுவார்கள் கல்லினை ஊண்டுபவர் பூசாரி, ஆசாரி, வள்ளுவனும் (பறையர்). இவர்கள் வாண் சாத்திரத்தை கணக்கிட்டு மின்னல் இடி தாக்காமல் இருக்கும் இடம் என்பதை அறிந்த பின்பே கல் நடுவதாக சொன்னார்கள். பளியர், காணிகள் குடியிருக்கப்போகும் இடத்தில் மோந்து பார்த்து கடவுள் நடமாட்டம் இருப்பதாக நம்பிய பின்னே குடியேறுவார்கள் என்பது ஆய்வில் கண்ட உண்மை.

 இரத்தப்பலி

******************

இரத்தத்தை சேர்த்துக் கொள்வது ஆப்பிரிக்காவின் கருப்பர் இன மக்களிடம், நட்பின் அடையாளமாக காணப்படுகிறது. மம்பெட்டு மக்கள் , தங்கள் கைகளில் சிறு வெட்டுக்கள் போட்டுக் கொண்டு , ஒருவர் மாற்றி ஒருவர் அந்த ரத்தத்தை குடிக்கிறார்கள். உன்யோர நாட்டில் அந்த ரத்தத்தில் காபி கொட்டைகளை நனைத்து சாப்பிடுகிறார்கள். சண்டெ மக்கள் , இரண்டு சிறு கத்திகளால் ஒருவரின் ரத்தத்தை எடுத்து இன்னொருவரின் வெட்டுக்காயத்தில் தடவுகின்றனர். காங்கோ மக்களிடம் இது போன்ற ஒரு சடங்கில் பங்கு பெற்ற திரு. வார்ட் கூறுகிறார் " முதலில் எங்கள் வலது கையின் , முட்டிக்கு கீழே , தசையில் ஒரு சிறு வெட்டுக்காயம் ஏற்படுத்தப்பட்டது. அதில் வந்த ரத்தத்தின் மேல் சடங்கை நடத்துபவர் கொஞ்சம் சுண்ணாம்பும் , பொட்டசும் தடவி , நாங்கள் இருவரும் இனி ரத்த பந்தம் உள்ளவர்கள் என்று கூறி, இருவர் கைகளையும் ரத்தம் வரும் இடத்தில , சேர்த்து உரசுகிறார். அத்துடன் நாங்கள் ரத்த பந்தமுள்ள சகோதரர்கள் என்றும் , எங்கள் நலன் எங்கள் ரத்தம் போல் என்கிறார்கள். நமது  ஊரில் இரத்தப்பலி கொடுப்பது குறித்த ஆய்வுகள் இன்னும் மேம்பாடாக இல்லை என்பது இந்த நூலின் மூலம் புலப்படுகிறது.

 முடிவாக குறிப்பு;

********************

கிறிஸ்துவ மதம் இந்த கிராமங்களில் வளர வேண்டும் எனில் இந்த வழிபாடுகளை நாம் எதிர்கொள்ள வேண்டும். தெலுங்கு நாட்டில் கிறிஸ்துவ மதத்தை தழுவிய தீண்டாமை சாதியினர் தங்கள் ஊரின் கோயிலை இடித்ததும் நடந்தது. மதமாற்றங்களை  மதமாற்றத்தை தடுப்பது கிராம தெய்வ நம்பிக்கைகளே என பதிவிட்டுள்ள நூலாசிரியர் ''தீண்டாமை சாதியினர் ஒரு காலத்தில் பிராமணர்களுடன் சமத்துவத்திற்கு போராடினார்கள் என்று தெரிகிறது. பெரும் திரளான சூத்திர மக்கள் இந்த வழிபாடுகளில் ஈடுபடுவது, எப்படி பாமர மக்களும் பூசாரிகளாக முடியும் என்பதை காட்டுகிறது. இருண்ட இடத்தில் ஒரு சிறு விளக்கு போல, இந்த விழாக்கள் சமத்துவத்தை போதிக்கின்றன. நீண்ட பல நூற்றாண்டுகளின் சாதிய அடக்குமுறைகளுக்கு பின்னும் தீண்டத்தகாதவர்கள் எப்படி பூசாரிகளாவோ (அ) கிடாவெட்டும் (அ) கோயில் பணியாளர்களாவோ இருக்கிறார்கள். ? இது ஆய்விற்குறியதே. என தனது ஆய்வறிக்கையை அனுப்பியுள்ளதை நாம் மீண்டும் ஆய்விற்குற்படுத்தினால் பல சாதிய சங்கங்களும் அதன் அரசியல் எழுச்சியும் கேள்விகளுக்கு உள்ளாகும் போது பல மெய்த்தன்மைகள் வெளிவரும். வரவேண்டும். இந்தியா சாதியால் கட்டமைக்கப்பட்ட நாடு இதில் சாதிய ஒற்றுமை முதல் தேவை. அதனை சீர்செய்திட முதலில் துவக்க வேண்டிய இடம் பண்பாட்டு தளமாக இருக்கும் என நாட்டார் ஆய்வுப்புலத்தில் ஆய்வில் இருந்த மறைந்த பேராசிரியர் தொ.பரமசிவன், ஆய்வில் உள்ள பக்தவச்சலபாரதி, அ.க.பெருமாள், ஓ.முத்தையா, சிற்பி பாலசுப்பிரமணியன் போன்ற அறிஞர்கள்  வழிவுறுத்துவதை சமூக செயபாட்டு இயக்கங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமோ எனத்தோன்றுகிறது.  

ஒன்னரை ஆண்டுகள் கழித்தாவது சிறந்த நல்ல நூலினை மொழி பெயர்த்த வானதி அவர்களுக்கும், நூலினை வெளியிட்ட சந்தியா பதிப்பகத்தாரும் பாரட்டுக்குறியவர்களே.  

 

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...