Search This Blog

Saturday 30 November 2019

நூலதிகாரம் நூல்; உலராக்கண்ணீர்


                                                                           நூலதிகாரம்


நூல்; உலராக்கண்ணீர்

ஆசிரியர்; ஜனகப்பியா

பதிப்பகம் ; புலம்

விலை;100

வணக்கம் நண்பர்களே தோழர்களே,

வட இந்தியாவில் உள்ள பழங்குடி மக்கள் மீது பிரிட்டீஷ் இந்தியா முதல் இன்றைய காலம் வரை, பழங்குடியினர் தீவிர பொதுவுடமை ஆதரவாளர்கள் என்று எளிதாக சொல்லி நம் மக்கள் மீது நமது இராணுவம் தொடுக்கும் போரும் அதன் எதிர்வினையாக அம்மக்கள் கையாளும் விதத்தை ''வணக்கம் பஸ்தார், இந்தியாவில் இயங்கும் தீவிரவாத இயங்கங்கள், காலனி ஆட்சியில் வேளாண்குடிகளின் எழுச்சி, போன்ற நூல்கள் அறிமுகப்படித்திருந்தாலும் இன்றைய நிலை குறித்த தகவல்களை எளிய நடையில் எழுதப்பட்ட நூல் 'உலராக்கண்ணீர்'

பழங்குடி மக்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கு தான் வளமான மண்ணும், தாது பொருள்களும் பூமிக்குள் இருக்கும் என்பதை பிரிட்டீஷ்காரன் கண்டு கொண்டு, பூமிக்கு அடியில் இருக்கும் பொருள்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் என்ற பிரிடீஷ் இராணியார் கொண்டு வந்த சட்டத்தை இன்றும் நடைமுறைப்படுத்தி அம்மக்களை வெளியேற்றி அங்கு சுரங்கம் அமைத்து, உலகத்தேவைக்கான கனிம வள கேந்திரமாக இந்தியாவை சுரண்டினான். அதன் தொடர்ச்சியாக இந்திய அரசு அதிபயங்கர வேகத்தில் சுரண்டுகிறது என்பதை ஆதரத்துடன் விளக்குகிறார் நூலாசிரியர். 

பழங்குடிமக்கள் ஏன் ஆயுதபாணிகளாக மாறுகிறார்கள். அவர்கள் ஏன் தீவிர பொதுவுடமை அமைப்பினருக்கு ஆதரவளிக்கிறார்கள். அல்லது அச்சூழல் ஏன் ஏற்படுகிறது என்பதை தெளிவு படுத்தியுள்ள ஆசிரியர், மக்களின் எழுச்சிகர போராட்டங்களை தீவிர பொதுவுடமை அமைப்புகள் தங்களது துப்பாக்கிக்கு கிடைத்த வெற்றியாக கொண்டுகிறது என்ற குற்றச்சாட்டையும் வைக்கிறார். 

வேந்தாந்தா,ஸிண்டால்,மிட்டல் போன்ற நிறுவனங்களுக்கு, பழங்குடியினர் வாழும் பல்லாயிரக்கணக்கான ஹெக்டர் நிலங்களை தானமாக வழங்கி அம்மக்களை அடிமைகளாக்கி வருகிறது இந்திய அரசு. ஆனால் இந்த மக்களுக்கு இன்று வரை மூன்று விழுக்காடு நிலத்தை மட்டுமே பட்டா வழங்கியுள்ளது. இந்த மக்களே மண்ணின் பூர்வீக குடிகள் என்பதை மறந்து

வளச்சி என்ற பெயரில் உலகத்தின் தேவைக்கும் இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக மாற்றுவது தான் நாட்டுப்பற்றா?, இலஞ்ச ஒழிப்புத்துறையில் கையும் களவுமாக பிடிபட்டு கிலோக்கணக்கில் தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்ட தேசாஸ் மன்னித்தது, சுவிஸ் வங்கியில் பல்லாயிரம் கோடி பதிக்கி வைத்ததுள்ளதை அறிந்த பின்பு நாம் சும்மா இருந்து வாக்கு ஜனநாயத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள நம்மை போகிற போக்கில் வைத்து வாசகனை நறுக்கென மண்டையில் கொட்டி சிந்திக்க வைக்கிறார்.

மவோ பழங்குடி இனமக்கள் வீட்டிளே சாராயம் காய்ச்சி குடிக்கும் பழங்கம் கொண்டவர்கள். இச்சாராயத்தை தடைபொருளாக்கி அம்மக்களை குற்றவாளியாக்கியது பிரிட்டீஷ் இந்தியா. அதே வேலை இந்திய அரசும் செய்கிறது. மறைந்த பிரதரமர் நேரு அவர்கள் பிரதரமராக பதவி ஏற்றபோது பிரிட்டீஷ் இராணியில் ஒப்புதல் பெறாமல் இந்திய கொடியை ஏற்றிய செய்தியை பலரும் மறந்திருப்போம் அதை நினைவுபடுத்தி பழங்குடிமக்களுக்கு நேரு அவர்கள் கொடுத்த வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி தூக்கி ஏறிந்தது முதல் இந்திய பொதுவுடமை கட்சி (மார்சிஸ்ட்) பழங்குடி மக்களுக்கு செய்த பிழை குறித்து விரிவாக விவாதத்தை எடுத்து வைக்கிறது. 

பழங்குடி மக்கள் தங்களது குடும்ப மற்றும் கொடை விழக்களில் தங்களை வென்ற மன்னனின் அட்டுழியத்தை பாடலாக பாடி வருவது இன்றும் உள்ளது என்பது அம்மக்கள் எப்படி மரபு சார் வாழ்க்கையில் உள்ளனர் என்பதை தெளிவுபடுத்துகிறது நூல்.  பூஞ்சி பழங்குடி மக்கள் தங்களது எல்லை தாண்டி விறகு எடுப்பதில்லை. அப்படி விறகு எடுத்தால் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக தெண்டம் வசூலிப்பார்கள்  போன்ற செய்திகள், மோவா மக்கள் வீட்டில் பேசுவது அவர்களது மோவா மொழி ஆனால் புழக்கத்தில் உள்ளது அந்த மாநிலமொழி, பாடத்திட்டத்திலோ இந்தி. இப்படியான மொழி சிக்கலால் பழங்குடி மக்கள் பள்ளிக்கு வந்தும் மொழி புரியாமல் இடைநிற்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை அரசு கவனிக்கவில்லை என்பதை தனது களஆய்வில் தெளிவு படுத்துகிறார் நூலாசிரியர். 

மாகாபாரத்தம் ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என கால முடிவுக்கு வந்துள்ளது இந்திய வரலாற்றுக்கழகம். இந்த நூலில் குறிப்பிடும் ''பில்'' இனமக்கள் இன்னும் அப்படியே உள்ளனர் என்பதை தெள்ளதெளிவுபடுத்துகிறது நூல். நாயக் என்ற சொல் இந்த மக்களின் தலைவனாகவும் பூசாரியாகவும் இருக்கும் பெயர் என்பது நம்ம ஊர் வலாற்றோடு ஊடுறுவியுள்ளதை தெளிவுபடுத்துகிறது.

இந்தியாவிலே அதிக மக்கள் தொகை கொண்ட பழங்குடி சந்தாலா இனம். அவர்கள் வீரம் செறிந்தவர்கள். ஆங்கிலேயர்களை பல முறை சிறைப்படுத்தி விரட்டி அடித்துள்ளனர். அங்கிருந்த ஜமீன்தார்களிடம் வரி வசூல் செய்து ஆச்சி செய்தனர் இந்த மக்கள். பிரிட்டீஷாரை எதித்து கிளர்ச்சி செய்த முண்டா மக்கள் என்கிற பழங்குடி மக்களிடம்உள்ள வீர வரலாற்றை பறைசாட்டுகிறது. இப்படி இருந்தும் இவர்களை பிரிட்டீஷார் துப்பாக்கி இரவைகளால் ஒடுக்கப்பட்டு புலம் பெயர்ந்தாலும் இன்னும் தங்களது மொழியை பேணிகாத்து வருகிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும் என்பதற்காக நூலாசிரியர் பதிவு செய்துள்ளார் என்றே நோக்க தோணுகிறது.     

இந்த நூலினை வாசிக்கும் போதிலிருந்து ''ஆயிரம் காலம் அடிமையென்னாறாயே....' மக்கள் அதிகாரம் படகர் கோவன் அவர்களிடன் பாடல் மனதிற்குள்ளே ஓடிக்கொண்டே இருந்தது. அந்தளவுக்கு சமூகத்தின் மீது அக்கரையுடன் அவர்களின் வலியினை பதிவு செய்த நூல். வரும் காலம் இந்த மக்களின் கண்ணீர் காய்ந்திட வேண்டும் என்ற அக்கரையோடு நாமும் உணர்வு கொள்வோம். உறுதி ஏற்போம்.

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...