''இந்தியாவில் மட்டும் சாதி இருப்பது ஏன்''
''கதை - மனிதன் மனதை பக்குவப்படுத்தும், கட்டுரை பக்குவமான
மனிதனை கலவரபடுத்தும், ஆய்வு நூல் - புரட்சியாளானாக்கும்'' என நூல்களைப்பற்றி சொல்வார்கள்.
அந்த வரிசையில் ''இந்தியாவில் மட்டும் சாதி இருப்பது ஏன்'' என்ற நூல்.
இந்த நூல் திராவிட கழகத்தாரை தவிர வேறு அமைப்புகள் பெரிதாக
பேசப்பட்டதாக தெரியவில்லை.
மன்னர்
ஆட்சிகாலம் தொட்டு இருந்த வர்ணாசரம அமைப்பு, கீழ் தட்டு அதாவது உழைக்கும் மக்களை பெரிதும்
கவனப்படுத்தவில்லை. சாதிய அமைப்பு முறையின் இருக்கத்தை பிரிட்டீஷார் ஆட்சியிலே பிராமணர்களின்
உதவி கொண்டு ஜமீன்கள் துணையோடு கட்டமைத்தனர். அதுவரை இடங்கலை
வலங்கலையாகவே மக்கள் பிரிந்து இருந்தனர். சாதி என்பது சமூக கூறு அதை ஆன்மீகத்துடன்
இணைத்த பெருமை பிரிட்டீஷ் ஆட்சியாளரையே சேரும் என்பதற்கான சுமார் 800 சான்றுகளுடன்
ஆழமாக பதிவிட்டுள்ளார். நூலாசிரியர் இந்தியாவில் சாதி ஏன் இருப்பு கொண்டுள்ளது என்ற
நூலின் தலைப்பை தொட்டுப்பார்க்க முயற்சி எடுத்துள்ளார் ஆனால் முழுமை பெறவில்லை.
இந்த நூலினை சமூக இயக்கவாதிகள் குறிப்பாக தலித் இயக்கத்தினர்
படிக்க வேண்டிய நூலாகவே கருத முடிகிறது. நூல் ஆசிரியர் திரு. கண்ணுப்பிள்ளை, இவர் குஜராத்
அரசின் முன்னால் காவல் துறை இயக்குனராக பணியாற்றியுள்ளார். வெளியீடு அன்னை தமிழ் பதிப்பகம்.
No comments:
Post a Comment