Search This Blog

Friday 5 April 2019

பூமிப்போர்


                                                                             


                                                      பூமிப்போர்  


                         




இந்திய ஒன்றியத்தில் உள்ள நர்மதை ஆற்றங்கரைக்கு வட தெற்கு பதியில் பெரும்பான்மையாக உழுகுடி சமூதாயமான தாகூர் மற்றும் ராசபுத்திர குலத்தினர் வாழ்கிறார்கள். 12ம் நூற்றாண்டில் இங்கு நிலங்கள் அனைத்தும் அரசுடமையாக இருந்தது. அப்போது இசுலாமிய ஆட்சியாளர்கள் அங்கு ஆண்டனர். நில குத்தகயை வேறு நபர்களுக்கு மாற்றிட ஆளும் ஆட்சியாளர்கள் முடிவெத்தார்கள். அப்போது ஆயிரம், ஐநூறு பேர் மொத்தமாக சேர்ந்த உழுகுடிகள் ஈட்டி கத்தி கம்புகளைக் கொண்டு ஆளும் அரசுமீது போர் தொடுத்துள்ளனர். இந்தப் பூமிப்போரால் பிரிட்டீசு இந்தியாவில் நிலம் தனி நபர்களுக்கு பட்டா வழங்கும் சட்டம் கொண்டு வர உதவியாதாகவும் வரலாற்று ஆய்வு உண்டு. 

 விஜயநகர ஆட்சியாளர்கள் தமிழகத்தில் கால்லூன்றிய காலத்தில் இது போன்ற பூமி போர் உழுகுடிகள் நிகழ்த்தினார்கள். இந்த போர் நாயக்கர் ஆட்சி முடியும் வரை நீடித்தது. இந்த போரினைச் சமாளிக்க விஜயநகரத்திலிருந்து வந்த மக்களுக்காக தமிழகத்தில் இருந்த காடுமலைகளிய அழித்து குடியேற்றம் செய்தனர். தற்போது மறந்த 'பூமி போரி'னைத் சாலை வழியாக துவக்கி வைத்துள்ளது அரசு. 

வளர்ச்சிக்காக சாலைகளை போடுகிறார்கள் , இந்தியாவில் மக்கள் தொகை படித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுகிறது இவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது அரசின் கடமை தானே என்பது வாதமாக இருக்கிறது.

 இந்திய துணைக்கண்டத்தில் என்ன என்ன உற்பத்திகள் செய்யப்படுகிறது அல்லது இறக்குமதி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் தேவைகள் என்னபதை வைத்தே சாலைகளின் தேவை அல்லது மேம்பாடு குறித்து அளவிடப்படுகிறது. உற்பத்தி செய்ய முடியாத இடத்திற்கு, உற்பத்தி செய்ய முடியும் இடத்திலிருந்து முதல் தர உற்பத்தியான உணவு, இரண்டாம் தர உற்பதியான ஆடை, அதன் பின்பு மூன்றாம் தேவையான ஆபரணங்கள். ஆக சீனாவில் உற்பத்தியாகும் பாக்சைட், கெந்தகம் பூதம் என்ற பாதரசம் இவைகள் இந்தியாவிற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் அதே போல்வே எரிபொருள்களும். இதற்கு தான் கடல் மார்க்கம் ஆகாய மார்க்கம் சாலை மார்கமாக பொருள்களை கொண்டு செல்ல மேம்பாடு தேவைப்படுகிறது.

சில ஆண்டுகளாக 2018 மார்ச் கணக்குப்படி மத்திய இந்தியாவிலும் தென் இந்தியாவிலும் பருத்தி உற்பத்தி 30 விழுக்காடு வரை சரிந்துள்ளது என்பதை மய்ய அரசின் வருடாந்தர புள்ளி விபர அறிக்கை சொல்லுகிறது. அடுத்து மய்ய இந்தியாவில் பெரும் உணவு உற்பத்தியான கோதுமை, பருப்பு நல்ல விளைச்சல் கண்டுள்ளது. மய்ய, மாநில அரசுகளின் சேமிப்பு கிடங்குகளில் இதன் இருப்பு இன்னும் ஐந்தாண்டுகளுக்கு போதுமான அளவுக்கு உள்ளதாகவே இருப்பு அறிக்கை (ஸ்டாக் ரிப்போர்) சொல்லுகிறது. 

உணவின் இரண்டாம் தர தேவையான உணவு சக்கரை. இது தேவையான உற்பத்தி இருந்தாலும் காட் (gat) ஒப்பந்த அடிப்படையில் இறக்குமதி செய்ய வேண்டிய நிர்பந்தத்தால் உள்நாட்டு உற்பத்தி தேக்க நிலை ஏற்பட்டது. இதனால் கருப்பு பயிரிட்ட உழுகுடிகளுக்கு நிலுவை தொகை சிக்கலை உருவாக்கி அவர்களை வேறு வேளாண்மை உற்பத்திக்கு அரசே மடை மாற்றம் செய்து வருகிறது.

இரண்டாம் தர உணவு தேவையில் முக்கிய இடம் தருவது எண்ணை. இதன் உற்பத்தியில் வட கிழக்கு இந்தியாவில் போதுமான கடலை, தக்காணத்தில் எள் விளைந்தது. இதற்கு விலை கிடைக்கக்கூடாது என்பதை விட உலக முதலாளிகளின் மருந்துகளை மானுட சமுத்திரத்தில் விற்று பிழைக்க இந்தியவை ஆளும் காட் முதலாளித்துவர அரசுகள் நஞ்சுகளான உணவு? எண்ணைகளை அனுமதித்தது. இந்த நஞ்சு எண்ணை விவாபர துவக்கம் இருபது ஆண்டுகளுக்கு முன்பே துவக்கப்பட்டு இன்று வெற்றிகரமாக விற்கப்படுகிறது. அதனால் தான் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) இல்லாத எண்ணை என விற்பனை செய்ய முடிகிறது. இந்த கொலஸ்ட்ரால் இல்லாத எண்ணை என்பது ஐக்கிய நாடு சபையில் கடுமையாக எச்சரிக்கப்படும் கடுகு எண்ணையில் தேவையான எண்ணையில் வாசனை திரவியத்தை உற்றி காய்ச்சி. நல்லெண்ணையும், விளக்கு எண்ணையும், தேங்காய் எண்ணையும் ஒன்றே. தேவை வாசனை மட்டுமே. இதைத்தானே விற்பனை செய்கிறார்கள். இதனால் தான் அனைத்து நோய்களும் என்பதை அறிவியல் உலகம் அறிந்திருந்தும் அதை மருத்துவ வியாபாரத்திற்காக அனுமதிக்கிறார்கள். இவை உடல் ஆரோகியத்திற்கு கெடுதியானது என்றால் பிரதமராக இருப்பவர்களே புழுத்துப்போன யோகா மூலம் கொழுப்பை கரைக்க முடியும் எனப்பிரச்சாரம் செய்கிறார்கள். கடுகு, பனை எண்ணைகள் உடலுக்கு 100% கெடுதி என, இத்துப்போன உலக சுகதார மய்யம் கூட 13 ஆண்டுகளுக்கு முன்பு அறிக்கை கொடுத்தது. அதையும் மீறி நாங்கள் கொழுப்பு இல்லாத எண்ணை தருகிறோம் என அடிமுட்டாலான படித்த சமூகத்தை நம்ப வைத்தது. பள்ளிகூடம் போகாமலே உடல் நடலத்தோடு இருந்த உழுகுடிகள் மீதும் இவர்களின் அடிமுட்டால்தனத்தை ஏவி உழுகுடி, உழைப்பாளிகளையும் நோயாளியாக்கி விட்டார்கள். தற்போது விற்பனையில் உள்ள தேங்காய் எண்ணை 50 விழுக்காடு பெட்ரோல் என்பது விசாரித்துப்பார்தால் நமக்கு தலை சுற்றுகிறது. 

உற்பத்தி இல்லாமலமே உற்பத்தி செய்யப்படும் எண்ணையினை காட் ஒப்பந்த முதலாளிகள் குழாய் மூலம் கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்து தொடர் வண்டிகள் மூலம் எளிதாகவும் கட்டணக்குறைவாகவும் நாடு முழுக்க அடைகிறது. இப்படி இருக்க எட்டு வழிச்சாலை விரிவாக்க திட்டத்தின் இலக்கு என்ன ?. பிரிட்டீசு இந்தியாவில் வி. பில் என்ற புவியியல் நிபுனரால் எழுதப்பட்ட 'எக்கானிமி ஆப் இந்தியா' என்ற நூலிலை கையில் எடுத்துள்ளது உலக வங்கி (இது உலக முதலாளிகளாக இயக்கப்படும் தனியார் வங்கி). அந்த நூலில் தக்காணம் முழுக்க வைரம் வைடூரியம், மரகதம், வெள்ளை நிற சலவைக்கல், சுண்ணாம்புக்கல் உள்ளது என குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. இந்த கனிமங்களை சுரண்டலுக்குதான் இந்தியாவை ஆளும் காட் ஒப்பந்த அரசுகள் ஒற்றை பாதையிலிருந்து எட்டுப்பாதையாக மாற்றுகிறது. 

 வி. பில் தனது குறிப்பில் இந்தியாவில் இருப்பு பாதை (ரயில்வே) போடப்பட்டதால் உணவு மற்றும் இரண்டாம் தர சமூக தேவைப் பொருள்கள் விலை இந்திய ஒன்றியம் முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளது. இருந்தாலும் ஜபல்பூர், காந்த மலைப்பகுதியில் இரும்புகாக தாது வெட்டி எடுத்தால் சுற்றுச்சூழல் கெட்டு விடும் என இவரின் அறிவுரையை ஏற்ற அரசு இரும்பு தாதுவை வெட்டி எடுப்பதை நிறுத்தியது. ஆங்கிலேய அரசுக்கு இருந்த அக்கரை கூட சுதேதி பித்தால்லாடம் பேசும் காட் முதலாளி அரசுகளுக்கு இல்லையே. இதை அம்பலப்படுத்த வேண்டிய கட்சிகள் எங்கே.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பத்திர பதிவு நடைமுறையை மய்ய அரசு மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டது. அதை ஆதரித்து பல வணிக பத்திரிக்கைகள் குறிப்பாக இந்தியன் எக்னாமி என்ற பத்திரிக்கை தூக்கி வைத்து எழுதியது. இந்த அரசாணை அடிப்படையிலே செல்வி.ஜெயலலிதா நில மதிப்பீட்டு தொகையை அதாவது மார்கெட் விலையை விட அரசு மதிப்பு கூடுதலாக இருக்க வகை செய்யும் வகையில் அரசு ஆணை வெளியிட்டார். இதன் நோக்கத்தை அப்போதே என் போன்றோர் நில கையெட்டுப்பு சட்டத்தை இந்த அரசு கொண்டு வரப்போகிறது என் ஏழுதினோம் பேசினோம் அது நடந்து விட்டது. தற்போது எட்டு வழிச்சாலைக்காக அமைசரவை கூடி கைப்பமிட்ட அரசாணை 106 விதியில் வெளியிட்டுள்ளார்கள். இந்த விதியின்படி அரசாங்கம் நிலம் கையப்படுத்தினால் அதை எதிர்த்து நீதி மன்ற தடையாணை பெற முடியாது வழக்காடலாம். 

                     தெற்காசியவில் குறிப்பாக தென் தமிழகத்தில் பொது ஆண்டிற்கு பின்பு 10ஆம் நூற்றாண்டில் பெருத்த கடல் கொந்தளிப்பும் (சுனாமி) பெரும் நிலநடுக்கமும் ஏற்பட்டது. இதன் காரணத்தை தற்போது ஆய்விடும் புவியியல் வள்ளுனர்கள் பூமியின் சமநிலைத்தன்மை என அறிதியிட்டுள்ளார்கள். உலக மக்கள் அனைவரையும் நுகர்வு கலாச்சாரத்தில் தள்ளி விட்டுள்ளது காட் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தந்திற்கு சீனா, ரஷ்யா போன்ற பொதுவுடமை நாடுகளே இரையாகி விட்டது. பூமியினை அதிகளவில் கனிமத்திற்காக புண்ணாக்கிய நாடு சீனா என்கிறது உலக பொருளதார அறிக்கை. நுகர்விலிருந்து விடுபட நாம் விழிப்புணர்வை செய்திட்டாலே பூமிப்பந்தினைக்காப்பாற்ற இயலும். இவைகளை இந்த பாரளுமன்ற மக்களாட்சி காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது நமது அறிவுடமை.  










No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...